< איכה 5 >
זכר יהוה מה היה לנו הביט (הביטה) וראה את חרפתנו | 1 |
௧யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.
נחלתנו נהפכה לזרים בתינו לנכרים | 2 |
௨எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது.
יתומים היינו אין (ואין) אב אמתינו כאלמנות | 3 |
௩திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
מימינו בכסף שתינו עצינו במחיר יבאו | 4 |
௪எங்கள் தண்ணீரைப் பணத்திற்கு வாங்கிக்குடிக்கிறோம்; எங்களுக்கு விறகு விலைக்கிரயமாக வருகிறது.
על צוארנו נרדפנו יגענו לא (ולא) הונח לנו | 5 |
௫பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை.
מצרים נתנו יד אשור לשבע לחם | 6 |
௬உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம்.
אבתינו חטאו אינם (ואינם) אנחנו (ואנחנו) עונתיהם סבלנו | 7 |
௭எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.
עבדים משלו בנו פרק אין מידם | 8 |
௮அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை.
בנפשנו נביא לחמנו מפני חרב המדבר | 9 |
௯வனாந்திரத்தில் இருக்கிறவர்களின் பட்டயத்தினால், எங்களுடைய உயிரைப் பணயம்வைத்து ஆகாரத்தைத் தேடுகிறோம்.
עורנו כתנור נכמרו מפני זלעפות רעב | 10 |
௧0பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது.
נשים בציון ענו בתלת בערי יהודה | 11 |
௧௧சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள்.
שרים בידם נתלו פני זקנים לא נהדרו | 12 |
௧௨தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; முதியோர்கள் மதிக்கப்படவில்லை.
בחורים טחון נשאו ונערים בעץ כשלו | 13 |
௧௩வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள்.
זקנים משער שבתו בחורים מנגינתם | 14 |
௧௪முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர்கள் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோனது.
שבת משוש לבנו נהפך לאבל מחלנו | 15 |
௧௫எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது; எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது.
נפלה עטרת ראשנו אוי נא לנו כי חטאנו | 16 |
௧௬எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே.
על זה היה דוה לבנו--על אלה חשכו עינינו | 17 |
௧௭அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது; அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின.
על הר ציון ששמם שועלים הלכו בו | 18 |
௧௮பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
אתה יהוה לעולם תשב כסאך לדור ודור | 19 |
௧௯யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
למה לנצח תשכחנו תעזבנו לארך ימים | 20 |
௨0தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன?
השיבנו יהוה אליך ונשוב (ונשובה) חדש ימינו כקדם | 21 |
௨௧யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; ஆரம்பநாட்களிலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
כי אם מאס מאסתנו קצפת עלינו עד מאד | 22 |
௨௨எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்மேல் கடுங்கோபமாக இருக்கிறீரே!