< איוב 8 >
௧அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
עד-אן תמלל-אלה ורוח כביר אמרי-פיך | 2 |
௨“நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?
האל יעות משפט ואם-שדי יעות-צדק | 3 |
௩தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ?
אם-בניך חטאו-לו וישלחם ביד-פשעם | 4 |
௪உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும் அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
אם-אתה תשחר אל-אל ואל-שדי תתחנן | 5 |
௫நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்து,
אם-זך וישר אתה כי-עתה יעיר עליך ושלם נות צדקך | 6 |
௬சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார்.
והיה ראשיתך מצער ואחריתך ישגה מאד | 7 |
௭உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
כי-שאל-נא לדר רישון וכונן לחקר אבותם | 8 |
௮ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.
כי-תמול אנחנו ולא נדע כי צל ימינו עלי-ארץ | 9 |
௯நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
הלא-הם יורוך יאמרו לך ומלבם יוצאו מלים | 10 |
௧0அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?
היגאה-גמא בלא בצה ישגה-אחו בלי-מים | 11 |
௧௧சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
עדנו באבו לא יקטף ולפני כל-חציר ייבש | 12 |
௧௨அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைவிட சீக்கிரமாக வாடிப்போகும் அல்லவோ?
כן--ארחות כל-שכחי אל ותקות חנף תאבד | 13 |
௧௩தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும்.
אשר-יקוט כסלו ובית עכביש מבטחו | 14 |
௧௪அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும்.
ישען על-ביתו ולא יעמד יחזיק בו ולא יקום | 15 |
௧௫ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது.
רטב הוא לפני-שמש ועל גנתו ינקתו תצא | 16 |
௧௬வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்;
על-גל שרשיו יסבכו בית אבנים יחזה | 17 |
௧௭அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
אם-יבלענו ממקמו וכחש בו לא ראיתיך | 18 |
௧௮அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும்.
הן-הוא משוש דרכו ומעפר אחר יצמחו | 19 |
௧௯இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள்.
הן-אל לא ימאס-תם ולא-יחזיק ביד-מרעים | 20 |
௨0இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
עד-ימלה שחוק פיך ושפתיך תרועה | 21 |
௨௧இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
שנאיך ילבשו-בשת ואהל רשעים איננו | 22 |
௨௨உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும்” என்றான்.