< איוב 5 >
קרא-נא היש עונך ואל-מי מקדשים תפנה | 1 |
௧“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
כי-לאויל יהרג-כעש ופתה תמית קנאה | 2 |
௨கோபம் மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.
אני-ראיתי אויל משריש ואקוב נוהו פתאם | 3 |
௩மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.
ירחקו בניו מישע וידכאו בשער ואין מציל | 4 |
௪அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
אשר קצירו רעב יאכל--ואל-מצנים יקחהו ושאף צמים חילם | 5 |
௫பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான்.
כי לא-יצא מעפר און ומאדמה לא-יצמח עמל | 6 |
௬தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
כי-אדם לעמל יולד ובני-רשף יגביהו עוף | 7 |
௭தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
אולם--אני אדרש אל-אל ואל-אלהים אשים דברתי | 8 |
௮ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன்.
עשה גדלות ואין חקר נפלאות עד-אין מספר | 9 |
௯ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
הנתן מטר על-פני-ארץ ושלח מים על-פני חוצות | 10 |
௧0தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.
לשום שפלים למרום וקדרים שגבו ישע | 11 |
௧௧அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
מפר מחשבות ערומים ולא-תעשנה ידיהם תשיה | 12 |
௧௨தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.
לכד חכמים בערמם ועצת נפתלים נמהרה | 13 |
௧௩அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும்.
יומם יפגשו-חשך וכלילה ימששו בצהרים | 14 |
௧௪அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.
וישע מחרב מפיהם ומיד חזק אביון | 15 |
௧௫ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார்.
ותהי לדל תקוה ועלתה קפצה פיה | 16 |
௧௬அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
הנה אשרי אנוש יוכחנו אלוה ומוסר שדי אל-תמאס | 17 |
௧௭இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
כי הוא יכאיב ויחבש ימחץ וידו תרפינה | 18 |
௧௮அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
בשש צרות יצילך ובשבע לא-יגע בך רע | 19 |
௧௯ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
ברעב פדך ממות ובמלחמה מידי חרב | 20 |
௨0பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார்.
בשוט לשון תחבא ולא-תירא משד כי יבוא | 21 |
௨௧நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
לשד ולכפן תשחק ומחית הארץ אל-תירא | 22 |
௨௨அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள்.
כי עם-אבני השדה בריתך וחית השדה השלמה-לך | 23 |
௨௩வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும்.
וידעת כי-שלום אהלך ופקדת נוך ולא תחטא | 24 |
௨௪உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
וידעת כי-רב זרעך וצאצאיך כעשב הארץ | 25 |
௨௫உம்முடைய சந்ததி பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
תבוא בכלח אלי-קבר כעלות גדיש בעתו | 26 |
௨௬தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
הנה-זאת חקרנוה כן-היא שמענה ואתה דע-לך | 27 |
௨௭இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.