< איוב 4 >
ויען אליפז התימני ויאמר | 1 |
௧அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:
הנסה דבר אליך תלאה ועצר במלין מי יוכל | 2 |
௨நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
הנה יסרת רבים וידים רפות תחזק | 3 |
௩இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர்.
כושל יקימון מליך וברכים כרעות תאמץ | 4 |
௪விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர், தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
כי עתה תבוא אליך ותלא תגע עדיך ותבהל | 5 |
௫இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
הלא יראתך כסלתך תקותך ותם דרכיך | 6 |
௬உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ?
זכר-נא--מי הוא נקי אבד ואיפה ישרים נכחדו | 7 |
௭குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? இதை நினைத்துப்பாரும்.
כאשר ראיתי חרשי און וזרעי עמל יקצרהו | 8 |
௮நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
מנשמת אלוה יאבדו ומרוח אפו יכלו | 9 |
௯தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
שאגת אריה וקול שחל ושני כפירים נתעו | 10 |
௧0சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும்.
ליש אבד מבלי-טרף ובני לביא יתפרדו | 11 |
௧௧கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், பாலசிங்கங்கள் சிதறிப்போகும்.
ואלי דבר יגנב ותקח אזני שמץ מנהו | 12 |
௧௨இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது.
בשעפים מחזינות לילה בנפל תרדמה על-אנשים | 13 |
௧௩மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
פחד קראני ורעדה ורב עצמותי הפחיד | 14 |
௧௪பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கியது.
ורוח על-פני יחלף תסמר שערת בשרי | 15 |
௧௫அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் முடிகள் சிலிர்த்தது.
יעמד ולא אכיר מראהו-- תמונה לנגד עיני דממה וקול אשמע | 16 |
௧௬அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
האנוש מאלוה יצדק אם מעשהו יטהר-גבר | 17 |
௧௭மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ?
הן בעבדיו לא יאמין ובמלאכיו ישים תהלה | 18 |
௧௮கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே,
אף שכני בתי-חמר--אשר-בעפר יסודם ידכאום לפני-עש | 19 |
௧௯புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
מבקר לערב יכתו מבלי משים לנצח יאבדו | 20 |
௨0காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நிலையான அழிவை அடைகிறார்கள்.
הלא-נסע יתרם בם ימותו ולא בחכמה | 21 |
௨௧அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.