< איוב 18 >
௧அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
עד-אנה תשימון קנצי למלין תבינו ואחר נדבר | 2 |
௨“நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
מדוע נחשבנו כבהמה נטמינו בעיניכם | 3 |
௩நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?
טרף נפשו באפו הלמענך תעזב ארץ ויעתק-צור ממקמו | 4 |
௪கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?
גם אור רשעים ידעך ולא-יגה שביב אשו | 5 |
௫துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
אור חשך באהלו ונרו עליו ידעך | 6 |
௬அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
יצרו צעדי אונו ותשליכהו עצתו | 7 |
௭அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.
כי-שלח ברשת ברגליו ועל-שבכה יתהלך | 8 |
௮அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
יאחז בעקב פח יחזק עליו צמים | 9 |
௯கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
טמון בארץ חבלו ומלכדתו עלי נתיב | 10 |
௧0அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
סביב בעתהו בלהות והפיצהו לרגליו | 11 |
௧௧சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.
יהי-רעב אנו ואיד נכון לצלעו | 12 |
௧௨அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.
יאכל בדי עורו יאכל בדיו בכור מות | 13 |
௧௩அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும்.
ינתק מאהלו מבטחו ותצעדהו למלך בלהות | 14 |
௧௪அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும்.
תשכון באהלו מבלי-לו יזרה על-נוהו גפרית | 15 |
௧௫அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும்.
מתחת שרשיו יבשו וממעל ימל קצירו | 16 |
௧௬கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.
זכרו-אבד מני-ארץ ולא-שם לו על-פני-חוץ | 17 |
௧௭அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.
יהדפהו מאור אל-חשך ומתבל ינדהו | 18 |
௧௮அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
לא נין לו ולא-נכד בעמו ואין שריד במגוריו | 19 |
௧௯அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை.
על-יומו נשמו אחרנים וקדמנים אחזו שער | 20 |
௨0அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல, கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள்.
אך-אלה משכנות עול וזה מקום לא-ידע-אל | 21 |
௨௧அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.