< בראשית 10 >

ואלה תולדת בני נח שם חם ויפת ויולדו להם בנים אחר המבול 1
பெருவெள்ளத்திற்கு பிறகு நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களுக்கு, பிறந்த மகன்களின் வம்சவரலாறு.
בני יפת--גמר ומגוג ומדי ויון ותבל ומשך ותירס 2
யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
ובני גמר--אשכנז וריפת ותגרמה 3
கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
ובני יון אלישה ותרשיש כתים ודדנים 4
யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம்.
מאלה נפרדו איי הגוים בארצתם איש ללשנו--למשפחתם בגויהם 5
இவர்களிலிருந்து கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வம்சங்களின்படியே, அவரவருக்குரிய சொந்த மொழிகளுடன், தங்கள் பிரதேசங்களுக்குள் பரவினார்கள்.
ובני חם--כוש ומצרים ופוט וכנען 6
காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
ובני כוש--סבא וחוילה וסבתה ורעמה וסבתכא ובני רעמה שבא ודדן 7
கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா. ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
וכוש ילד את נמרד הוא החל להיות גבר בארץ 8
கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
הוא היה גבר ציד לפני יהוה על כן יאמר כנמרד גבור ציד לפני יהוה 9
அவன் யெகோவாவின் பார்வையில் மிகவும் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாய் இருந்தான்; அதனால்தான், “யெகோவா முன்னிலையில் வலிமையுள்ள வேட்டைக்காரன் நிம்ரோதைப்போல்” என்ற வழக்கச்சொல் உண்டாயிற்று.
ותהי ראשית ממלכתו בבל וארך ואכד וכלנה בארץ שנער 10
சிநெயார் நாட்டிலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகிய இடங்களே அவனுடைய அரசாட்சியின் முக்கிய இடங்களாயிருந்தன.
מן הארץ ההוא יצא אשור ויבן את נינוה ואת רחבת עיר ואת כלח 11
அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத் ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான்.
ואת רסן בין נינוה ובין כלח--הוא העיר הגדלה 12
நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம்.
ומצרים ילד את לודים ואת ענמים ואת להבים--ואת נפתחים 13
மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
ואת פתרסים ואת כסלחים אשר יצאו משם פלשתים--ואת כפתרים 14
பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
וכנען ילד את צידן בכרו--ואת חת 15
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
ואת היבוסי ואת האמרי ואת הגרגשי 16
எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
ואת החוי ואת הערקי ואת הסיני 17
ஏவியர், அர்கீயர், சீனியர்,
ואת הארודי ואת הצמרי ואת החמתי ואחר נפצו משפחות הכנעני 18
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர்.
ויהי גבול הכנעני מצידן--באכה גררה עד עזה באכה סדמה ועמרה ואדמה וצבים--עד לשע 19
கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், பின்பு சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் பரந்திருந்தது.
אלה בני חם למשפחתם ללשנתם בארצתם בגויהם 20
அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும், தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்கள் இவர்களே.
ולשם ילד גם הוא אבי כל בני עבר--אחי יפת הגדול 21
சேமுக்கு மகன்கள் பிறந்தார்கள், அவனுடைய மூத்த சகோதரன் யாப்பேத்; சேம் ஏபேரின் மகன்கள் எல்லாருக்கும் முற்பிதாவாய் இருந்தான்.
בני שם עילם ואשור וארפכשד ולוד וארם 22
சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.
ובני ארם--עוץ וחול וגתר ומש 23
ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.
וארפכשד ילד את שלח ושלח ילד את עבר 24
அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
ולעבר ילד שני בנים שם האחד פלג כי בימיו נפלגה הארץ ושם אחיו יקטן 25
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில், அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர்; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
ויקטן ילד את אלמודד ואת שלף ואת חצרמות ואת ירח 26
யொக்தான் என்பவன், அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,
ואת הדורם ואת אוזל ואת דקלה 27
அதோராம், ஊசால், திக்லா,
ואת עובל ואת אבימאל ואת שבא 28
ஓபால், அபிமாயேல், சேபா,
ואת אופר ואת חוילה ואת יובב כל אלה בני יקטן 29
ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
ויהי מושבם ממשא באכה ספרה הר הקדם 30
இவர்கள் குடியிருந்த பிரதேசம் மேசாவிலிருந்து, கிழக்கு மலைப் பகுதியிலுள்ள செப்பார்வரை பரவியிருந்தது.
אלה בני שם למשפחתם ללשנתם בארצתם לגויהם 31
அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும் தங்கள் பிரதேசங்களிலும் நாடுகளிலும் வாழ்ந்த சேமுடைய சந்ததியினர் இவர்களே.
אלה משפחת בני נח לתולדתם בגויהם ומאלה נפרדו הגוים בארץ--אחר המבול 32
தங்கள் நாடுகளிலுள்ள நோவாவுடைய மகன்களின் வழிவந்த குடும்பவாரியான வம்சங்களின் சந்ததிகள் இவையே. இவர்களிலிருந்தே பெருவெள்ளத்திற்கு பிறகு பூமியெங்கும் நாடுகள் பரவின.

< בראשית 10 >