< Aroma 7 >

1 Atĩrĩrĩ, ariũ na aarĩ a Ithe witũ (nĩgũkorwo ndĩraaria na inyuĩ mũrĩ andũ arĩa mooĩ watho), kaĩ mũtooĩ atĩ watho wathaga mũndũ o rĩrĩa arĩ muoyo?
பிரியமானவர்களே, மோசேயின் சட்டத்தைப் பற்றித் தெரிந்த உங்களுடனேயே நான் பேசுகிறேன். ஒரு மனிதன் உயிரோடிருக்கும் வரைக்குமே மோசேயின் சட்டம் அவன்மேல் அதிகாரம் செலுத்துகிறதென்று உங்களுக்குத் தெரியாதா?
2 Nĩ ũndũ mũtũmia ũrĩ na mũthuuri aikaraga ohanĩtio na mũthuuriwe nĩ watho ihinda rĩrĩa rĩothe mũthuuriwe arĩ muoyo; no mũthuuriwe angĩkua-rĩ, mũtumia ũcio ti muohe nĩ watho ũcio wa ũhiki.
உதாரணமாக, திருமணமான ஒரு பெண், அவளுடைய கணவன் உயிரோடிருக்கும் வரைக்குமே, சட்டத்தினால் அவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்தால், அவள் அந்தத் திருமணச் சட்டத்திலிருந்து விடுபடுகிறாள்.
3 Tondũ mũtumia ũcio angĩhikĩra mũndũ ũngĩ rĩrĩa mũthuuriwe arĩ muoyo, atuĩkaga mũtharia. No mũthuuriwe angĩkua, mũtumia ũcio ti muohe nĩ watho ũcio, na ndangĩtuĩka gĩtharia o na angĩhikio nĩ mũndũ ũngĩ.
எனவே, தன் கணவன் உயிருடன் இருக்கையில் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் ஒரு விபசாரி என்றே சொல்லப்படுவாள். ஆனால், அவளுடைய கணவன் இறந்து விட்டால், அவள் சட்டத்திலிருந்து விடுபடுவாள். அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தாலும் அவள் விபசாரியல்ல.
4 Nĩ ũndũ ũcio, ariũ na aarĩ a Ithe witũ, o na inyuĩ nĩmwakuire ũhoro-inĩ wa watho nĩ ũndũ wa mwĩrĩ wa Kristũ, nĩguo mũtuĩke a mũndũ ũngĩ, o we ũrĩa wariũkirio akiuma kũrĩ arĩa akuũ, nĩgeetha tũciaragĩre Ngai maciaro.
ஆகவே, பிரியமானவர்களே, நீங்கள் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் மூலமாக மோசேயின் சட்டத்திற்கு மரித்தீர்கள். இப்பொழுது, நீங்கள் மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவருக்கே உரியவர்களானீர்கள் இதன்மூலம் நாம் இறைவனுக்குக் கனியை விளைவிக்கிறவர்களாய் இருக்கிறோம்.
5 Nĩgũkorwo hĩndĩ ĩrĩa twathagwo nĩ mwĩrĩ ũyũ wa mehia-rĩ, merirĩria ma mehia marĩa maarahũragwo nĩ watho nĩmarutaga wĩra thĩinĩ wa mĩĩrĩ iitũ, magaciaragĩra gĩkuũ maciaro.
நம்முடைய மனித இயல்பின்படியே நாம் வாழ்ந்தபொழுது, மோசேயின் சட்டத்தினாலே தூண்டிவிடப்பட்ட பாவ ஆசைகள் நம்முடைய உடல்களில் செயலாற்றியது. எனவே நம்மிலிருந்து மரணத்திற்கேதுவான கனி பிறப்பிக்கப்பட்டது.
6 No rĩu, nĩtuohoretwo tũkoima watho-inĩ, tondũ nĩtũkuĩte ũhoro-inĩ ũrĩa watuohete nĩgeetha tũtungatage na mũtungatĩre mwerũ wa Roho, no ti mũtungatĩre ũrĩa mũkũrũ wa watho ũrĩa mwandĩke.
ஆனால், நாம் முந்தி நம்மைக் கட்டி வைத்திருந்த மோசேயின் சட்டத்திற்கு மரித்தபடியால், இப்பொழுது அதிலிருந்து விடுதலை அடைந்திருக்கிறோம். ஆகவே எழுதப்பட்ட பழைய முறைமையின்படி அவைகளுக்குக் கீழ்ப்படிவதை விட்டு, ஆவியானவரின் புதிய வழியின்படியே நாம் இறைவனுக்கு ஊழியம் செய்கிறோம்.
7 Rĩu rĩ, tũkiuge atĩa? Watho ũkĩrĩ wĩhia? Aca ti ũguo! Ti-itherũ tiga nĩ ũndũ wa watho ndingĩamenyire wĩhia nĩ kĩĩ. Nĩgũkorwo ndingĩamenyire ũhoro wa gũcumĩkĩra korwo watho ndwoigĩte, “Ndũkanacumĩkĩre kĩndũ kĩene.”
அப்படியானால் என்ன சொல்லுவோம்? மோசேயின் சட்டம் பாவமுள்ளது என்று சொல்லலாமா? நிச்சயமாக அல்ல, மோசேயின் சட்டம் இல்லாதிருந்தால், பாவம் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்திருக்காது. “பிறருக்குரியவற்றில் ஆசைகொள்ளாதே” என்று மோசேயின் சட்டம் சொல்லியிருக்காவிட்டால், பிறருக்குரியவற்றில் ஆசைகொள்வது பாவம் என்றே நான் அறியாதிருந்திருப்பேன்.
8 No wĩhia, tondũ wa kuona kamweke karĩa kaaheanĩtwo nĩ rĩathani rĩu, ũgĩtũma ngĩe na merirĩria ma mĩthemba yothe thĩinĩ wakwa. Nĩgũkorwo hatarĩ watho, wĩhia nĩ mũkuũ.
ஆனால் கட்டளையின் மூலமாகக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தி, பாவம் எல்லா விதமான ஆசைகளையும் என்னில் தூண்டிவிட்டது. ஏனெனில் மோசேயின் சட்டம் இல்லாமல் பாவம் செத்ததாயிருக்கிறது.
9 Kũrĩ hĩndĩ niĩ ndaarĩ muoyo itanamenya watho; no hĩndĩ ĩrĩa rĩathani rĩokire, wĩhia ũkĩgĩa muoyo na niĩ ngĩkua.
முன்பு நான் மோசேயின் சட்டம் இல்லாமல் உயிருள்ளவனாய் இருந்தேன். ஆனால் கட்டளை வந்தபொழுது, பாவத்திற்கு உயிர்வந்தது. நானோ செத்தவனானேன்.
10 Ngĩmenya atĩ rĩathani o rĩu rĩarĩ rĩa gũtũma mũndũ atũũre muoyo-rĩ, norĩo rĩarehire gĩkuũ.
வாழ்வளிப்பதற்காகவே கொடுக்கப்பட்ட கட்டளை, உண்மையில் எனக்கு மரணத்தைக் கொண்டு வந்ததையே நான் கண்டேன்.
11 Nĩgũkorwo rĩrĩa wĩhia wonire kamweke karĩa kaaheanĩtwo nĩ rĩathani rĩu-rĩ, nĩ kũũheenia waheenirie, na ũkĩnjũraga narĩo.
ஏனெனில் பாவம், கட்டளையின் மூலமாகக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தி, என்னை ஏமாற்றி, கட்டளையின் மூலமாக என்னை மரணத்திற்குட்படுத்தியது.
12 Nĩ ũndũ ũcio-rĩ, watho nĩ mũtheru, o na rĩathani no rĩtheru, na nĩ rĩa kĩhooto na nĩ rĩega.
எனவே மோசேயின் சட்டம் பரிசுத்தமானதே. கட்டளையும்கூட பரிசுத்தமானதாகவும், நியாயமானதாகவும், நல்லதாகவுமே இருக்கிறது.
13 Kaĩ ũndũ ũcio mwega ũgĩcookete gũtuĩka gĩkuũ harĩ niĩ? Gũtikanatuĩke ũguo! No nĩgeetha wĩhia ũkũũrĩkane atĩ nĩ wĩhia, nĩwarehire gĩkuũ thĩinĩ wakwa na ũndũ wa kũhũthĩra ũndũ ũcio mwega, nĩguo wĩhia ũtuĩke wĩhia kũna.
அப்படியானால் நன்மையான அந்த மோசேயின் சட்டமே எனக்கு மரணமாயிற்றோ? இல்லவே இல்லை. பாவத்தைப் பாவம் என எடுத்துக்காட்டுவதற்காக இருந்த, நன்மையான மோசேயின் சட்டத்தின் மூலமாகவே, பாவம் எனக்கு மரணத்தீர்ப்பை ஏற்படுத்தியது. எனவே கட்டளையின் மூலமாக பாவம் முழுமையாகவே பாவம் என வெளிப்படுத்துகிறது.
14 Nĩtũũĩ atĩ watho uumanĩte na Roho; no niĩ ndĩ mũndũ ũrĩ na mwĩrĩ wendetio agatuĩka ngombo ya wĩhia.
மோசேயின் சட்டம் ஆவிக்குரியது என்பதை நாம் அறிவோம்; நானோ மாம்ச இயல்புடையவன், பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன்.
15 Ndimenyaga maũndũ marĩa njĩkaga. Nĩgũkorwo ũrĩa nyendaga gwĩka tiguo njĩkaga, no ũndũ ũrĩa thũire nĩguo njĩkaga.
நான் செய்கிறதையே என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் செய்ய விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
16 O na ingĩtuĩka njĩkaga ũrĩa itekwenda gwĩka-rĩ, nĩnjĩtĩkĩrĩte atĩ watho nĩ mwega.
நான் செய்ய விரும்பாததையே செய்வேனாகில், மோசேயின் சட்டம் நல்லது என்று நான் என் உள்ளத்தில் ஒத்துக்கொள்கிறேன்.
17 Tondũ ũcio nĩngũũranĩte atĩ ti niĩ mwene njĩkaga maũndũ macio, no nĩ wĩhia ũrĩa ũtũũraga thĩinĩ wakwa wĩkaga ũguo.
எனவே, உண்மையில் நான் வெறுக்கிறதையே செய்கிறது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே இதைச் செய்கிறது.
18 Nĩnjũũĩ atĩ gũtirĩ ũndũ mwega ũtũũraga thĩinĩ wakwa, ũguo nĩ kuuga thĩinĩ wa mwĩrĩ ũyũ wakwa wĩhagia. Nĩgũkorwo nĩndĩriragĩria gwĩka wega, no hinya wa gwĩka ũguo nĩguo itarĩ.
என்னில், அதாவது என் மாம்ச இயல்பில், உண்மையாக நன்மை எதுவுமே குடிகொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரிகிறது. ஏனெனில், நன்மைசெய்ய வேண்டுமென்ற ஆசை என்னில் இருந்துங்கூட, அதை என்னால் செய்துமுடிக்க இயலாதிருக்கிறதே.
19 Nĩgũkorwo wega ũrĩa nyendaga gwĩka tiguo njĩkaga, no ũũru ũrĩa itendaga gwĩka nĩguo thiiaga na mbere gwĩka.
நான் செய்ய விரும்புகிற நன்மையை நான் செய்வதில்லை; அதற்குப் பதிலாக, நான் செய்யவிரும்பாத தீமையையே தொடர்ந்து செய்கிறேன்.
20 Na rĩrĩ, ingĩkorwo nĩnjĩkaga ũrĩa itekwenda gwĩka-rĩ, ti niĩ mwene njĩkaga maũndũ macio, no nĩ wĩhia ũrĩa ũtũũraga thĩinĩ wakwa wĩkaga ũguo.
நான் செய்ய விரும்பாததை நானே செய்தால், அப்படிச் செய்தது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே அதைச் செய்கிறது.
21 Ũndũ ũyũ nĩũtũmaga nyone atĩ watho ũyũ nĩguo ũrutaga wĩra thĩinĩ wakwa: Rĩrĩa ngwenda gwĩka wega-rĩ, ũũru ũkoragwo o hamwe na niĩ.
நான் நன்மைசெய்ய வேண்டுமென்றே விரும்புகிறேன். ஆனால் தீமையையே செய்யும் ஒரு சட்டம் என்னில் இயங்குகிறதை நான் காண்கிறேன்.
22 Nĩgũkorwo ngoro-inĩ yakwa thĩinĩ, nĩngenagĩra watho wa Ngai;
என்னுடைய உள்ளான உள்ளத்திலே நான் இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியடைகிறேன்.
23 no nĩnyonaga watho ũngĩ ũkĩruta wĩra thĩinĩ wa ciĩga cia mwĩrĩ wakwa, ũkarehaga mbaara, na ũkarũaga na watho wa meciiria makwa, na ũkandua mũndũ muohe nĩ watho wa wĩhia ũrĩa ũrutaga wĩra thĩinĩ wa ciĩga ciakwa.
ஆனால் என் உடலின் உறுப்புக்களிலோ இன்னொரு சட்டம் இயங்குகிறதைக் காண்கிறேன். அது என் உள்ளத்தில் இயங்கும் சட்டத்திற்கு எதிராகப் போராடி ஈடுபட்டு, என் உடல் உறுப்புகளில் இயங்குகின்ற பாவத்திற்கு என்னை அடிமைப்படுத்துகிறது.
24 Kaĩ niĩ ndĩkĩrĩ mũndũ mũthĩĩnĩku-ĩ! Nũũ ũkũũhonokia harĩ mwĩrĩ ũyũ wa gĩkuũ?
நான் பரிதாபகரமான மனிதன்! மரணத்துக்கே என்னை கொண்டுசெல்லுகின்ற இந்த உடலில் இருந்து யார்தான் என்னைத் தப்புவிப்பார்?
25 Nĩndacookeria Ngai ngaatho nĩ ũndũ wa Jesũ Kristũ Mwathani witũ! Nĩ ũndũ ũcio-rĩ, niĩ mwene thĩinĩ wa meciiria makwa ndĩ ngombo ya watho wa Ngai, no ha ũhoro wa mwĩrĩ ũyũ wa wĩhia, niĩ ndĩ ngombo ya watho wa wĩhia.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் எனக்கு விடுதலை கொடுக்கிற இறைவனுக்கு நன்றி! நானோ என் உள்ளத்திலே இறைவனுடைய சட்டத்துக்கு அடிமையாயிருக்கிறேன். ஆனால் என்னுடைய மாம்ச இயல்பிலோ பாவத்திற்கே அடிமையாயிருக்கிறேன்.

< Aroma 7 >