< Kũguũrĩrio 2 >
1 “Kũrĩ mũraika wa Kanitha wa Efeso, mwandĩkĩre atĩrĩ: Ici nĩcio ciugo cia ũrĩa ũnyiitĩte njata icio mũgwanja na guoko gwake kwa ũrĩo, ũrĩa ũthiiagĩra mĩtĩ-inĩ ĩyo mũgwanja ya thahabu ya kũigĩrĩra matawa.
“எபேசு பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைக் கட்டுப்படுத்துகிறவரும், ஏழு தங்க குத்துவிளக்குகளின் நடுவே நடப்பவருமாகிய நான் சொல்லும் வார்த்தைகள் என்னவென்றால்:
2 Nĩnjũũĩ ciĩko ciaku, o na wĩra waku mũritũ, o na ũkirĩrĩria waku. Nĩnjũũĩ atĩ ndũngĩkirĩrĩria andũ arĩa aaganu, na atĩ andũ arĩa moigaga nĩ atũmwo no ti atũmwo nĩwamageririe, na ũkĩmenya atĩ nĩ a maheeni.
நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன், உனது கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் நான் அறிந்திருக்கிறேன். தீயவரை உன்னால் சகிக்க முடியாதிருக்கிறாய். அப்போஸ்தலர் அல்லாதிருந்தும் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லிக்கொள்பவர்களை நீ சோதித்து, அவர்கள் பொய்யான அப்போஸ்தலர் என்பதை நீ கண்டு கொண்டாய் என்பதையும், நான் அறிந்திருக்கிறேன்.
3 Nĩũkirĩrĩirie na ũkomĩrĩria mathĩĩna nĩ ũndũ wa rĩĩtwa rĩakwa, na ndũrĩ wanoga.
நீ விடாமல் முயற்சித்து, என்னுடைய பெயருக்காக பாடுகளை அனுபவித்தாய். நீ சலித்துப்போகவே இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.
4 No rĩrĩ, ũndũ ũrĩa ngũgũcuukĩra nĩ atĩrĩ: Nĩwatigire gũikara na wendani ũrĩa warĩ naguo mbere.
ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: உனது ஆரம்பகால அன்பை நீ கைவிட்டு விட்டாய்.
5 Ririkana kũrĩa uumĩte ũkagũa! Wĩrire ũcooke wĩke maũndũ marĩa wekaga mbere. Waga kwĩrira, nĩngũũka kũrĩ we na njeherie mũtĩ waku wa kũigĩrĩra tawa kuuma handũ haguo.
நீ எப்பேற்பட்ட உயரத்திலிருந்து விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார். நீ மனந்திரும்பு. நீ ஆரம்பத்தில் செய்த செயல்களைத் திரும்பவும் செய். நீ மனந்திரும்பாவிட்டால், நான் உன்னிடத்தில் வந்து, உன்னுடைய விளக்குத்தாங்கியை அதன் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன்.
6 No rĩrĩ, ũrĩ na ũndũ ũmwe mwega: Wee nĩũthũire ciĩko cia andũ arĩa metagwo Anikolai, iria o na niĩ thũire.
ஆனால் உன்னில் பாராட்டுதலுக்குரியது ஒன்று உண்டு: நிக்கொலாயரின் செயல்களை நீ வெறுக்கிறாய், அவர்களின் செயல்களை நானும் வெறுக்கிறேன்.
7 Ũrĩa ũrĩ gũtũ-rĩ, nĩakĩigue ũrĩa Roho areera makanitha. Ũrĩa wa gũtoorania-rĩ, nĩngamwĩtĩkĩria kũrĩa maciaro ma mũtĩ wa muoyo, ũrĩa ũrĩ mũgũnda-inĩ wa Ngai wa gĩkeno.
பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்களுக்கு நான் ஜீவ மரத்திலிருந்து பழத்தைச் சாப்பிடும் உரிமையைக் கொடுப்பேன். இந்த மரம் இறைவனுடைய சொர்க்கத்தில் இருக்கிறது.
8 “Kũrĩ mũraika wa kanitha wa Simurina, mwandĩkĩre atĩrĩ: Ici nĩcio ciugo cia ũrĩa wa Mbere na nowe wa Kũrĩkĩrĩria, ũrĩa wakuire na agĩcooka akĩriũka.
“சிமிர்னா பட்டணத்திலிருக்கிற திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: தொடக்கமும் முடிவுமாயிருக்கிற, இறந்து மீண்டும் உயிர்பெற்றவருடைய வார்த்தைகள் என்னவென்றால்:
9 Nĩnjũũĩ mĩnyamaro yaku na ũthĩĩni waku, no ũrĩ gĩtonga! Nĩnjũũĩ ũrĩa ũrumagwo nĩ arĩa moigaga atĩ nĩ Ayahudi no ti Ayahudi, no nĩ thunagogi ya Shaitani.
உன்னுடைய துன்பங்களையும், வறுமையையும் நான் அறிந்திருக்கிறேன் ஆனால், நீ செல்வந்தனாய் இருக்கிறாய்! தாங்கள் யூதரல்லாதவராயிருந்தும் யூதரென்று சொல்லிக்கொள்கிறவர்கள் உனக்கு விரோதமாய் அவதூறு பேசுவதையும் நான் அறிவேன். ஆனால், அவர்கள் சாத்தானின் சபையைச் சேர்ந்தவர்கள்.
10 Ndũkae gwĩtigĩra maũndũ marĩa ũkiriĩ gũthĩĩnio namo. Ngũmwĩra atĩrĩ, mũcukani nĩarĩikia amwe anyu njeera nĩguo amũgerie, na mũnyamario handũ ha mĩthenya ikũmi. Wee ikaraga ũrĩ mwĩhokeku, o nginya gũkua, na nĩngũkũhe thũmbĩ ya muoyo.
உனக்கு வரப்போகிற துன்பத்தைக் குறித்து பயப்படாதே. உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சாத்தான் சிறையில் போடுவான். நீங்கள் பத்து நாட்கள் துன்பத்தை அனுபவிப்பீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மரிக்கும்வரை உண்மையுள்ளவனாய் இரு. அப்போது நான் உனக்கு ஜீவகிரீடத்தைக் கொடுப்பேன்.
11 Ũrĩa ũrĩ gũtũ-rĩ, nĩakĩigue ũrĩa Roho areera makanitha. Ũrĩa wa gũtoorania-rĩ, ndakahutio o na hanini nĩ gĩkuũ kĩrĩa gĩa keerĩ.
பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்கள் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.
12 “Kũrĩ mũraika wa kanitha wa Perigamo mwandĩkĩre atĩrĩ: Ici nĩcio ciugo cia ũrĩa ũrĩ na rũhiũ rũũgĩ mĩena yeerĩ.
“பெர்கமு பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருக்கிறவரின் வார்த்தைகள் இவையே:
13 Atĩrĩrĩ, nĩnjũũĩ kũrĩa ũtũũraga, o kũu Shaitani arĩ na gĩtĩ kĩa ũnene. No ũtũũrĩte ũrĩ o mwĩhokeku harĩ niĩ. Wee ndũigana gũkaana wĩtĩkio ũrĩa warĩ naguo thĩinĩ wakwa, o na matukũ-inĩ ma Antipa, mũira wakwa mwĩhokeku, ũrĩa woragĩirwo itũũra-inĩ rĩanyu inene, o kũu Shaitani atũũraga.
நீ வாழுகின்ற இடத்தை நான் அறிந்திருக்கிறேன். அங்குதான் சாத்தானின் அரியணை இருக்கிறது. ஆனால், நீ என்னுடைய பெயருக்கு உண்மையுள்ளவனாய் நிலைத்திருக்கிறாய். நீ என்னில் வைத்த விசுவாசத்தைக் கைவிட்டுவிடவில்லை. என்னுடைய உண்மையுள்ள சாட்சியாகிய அந்திப்பா உங்களுடைய பட்டணத்தில், தான் கொல்லப்பட்ட நாட்களிலும், விசுவாசத்தைக் கைவிடவில்லை. அங்குதான் சாத்தான் குடியிருக்கிறான்.
14 No rĩrĩ, ndĩ na maũndũ matarĩ maingĩ ngũgũcuukĩra: atĩrĩ, ũrĩ na andũ kũu marũmĩtie ũrutani wa Balamu, ũrĩa warutire Balaki kũheenereria andũ a Isiraeli mehie na ũndũ wa kũrĩa irio irutĩirwo mĩhianano, o na mahũũrage ũmaraya.
ஆனால், நான் உன்னில் சில குறைகளைக் காண்கிறேன்: இஸ்ரயேலரை விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவை சாப்பிடச் செய்து, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து பாவத்திற்குள் விழசெய்த பாலாக் அரசனுக்குப் புத்தி சொன்ன பிலேயாமுடைய போதனைகளைக் கைக்கொள்கிறவர்கள் உன் நடுவே இருக்கிறார்கள்.
15 O na ningĩ no ũrĩ na andũ amwe marũmĩtie ũrutani wa andũ arĩa metagwo Anikolai.
அவ்விதமாகவே, நிக்கொலாயரின் போதனையைக் கைக்கொள்கிறவர்கள் சிலரும் உன் நடுவே இருக்கிறார்கள்.
16 Nĩ ũndũ ũcio, kĩĩrire! Waga gwĩka ũguo, nĩngũũka kũrĩ we ica ikuhĩ, hũũrane nao na rũhiũ rũrũ rũrĩ kanua gakwa.
ஆகவே, நீ மனந்திரும்பு! இல்லாவிட்டால், நான் விரைவில் உன்னிடத்தில் வந்து, என்னுடைய வாயின் வாளினாலே அவர்களுக்கு எதிராய் போராடுவேன்.
17 Ũrĩa ũrĩ gũtũ-rĩ, nĩakĩigue ũrĩa Roho areera makanitha. Ũrĩa ũgaatoorania-rĩ, nĩngamũhe mana mamwe marĩa mahithe. O na ningĩ nĩngamũhe ihiga rĩerũ rĩandĩkĩtwo rĩĩtwa rĩerũ, na gũtarĩ ũngĩ ũrĩũĩ o tiga ũcio ũkaamũkĩra ihiga rĩu.
பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்களுக்கு நான் மறைக்கப்பட்ட மன்னாவைக் கொடுப்பேன். அத்துடன் நான் அவர்களுக்கு புதுப்பெயர் எழுதப்பட்டிருக்கும் ஒரு வெள்ளைக் கல்லைக் கொடுப்பேன். அந்தக் கல்லைப் பெற்றுக்கொள்கிறவர்கள் மாத்திரமே அந்தப் பெயரை அறிவார்கள்.
18 “Kũrĩ mũraika wa kanitha wa Thuatira, mwandĩkĩre atĩrĩ: Ici nĩcio ciugo cia Mũrũ wa Ngai, ũrĩa ũrĩ na maitho matariĩ ta rũrĩrĩmbĩ rwa mwaki, na magũrũ make matariĩ ta gĩcango kĩrĩa gĩkumuthe gĩgathera.
“தியத்தீரா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் கண்கள் இருக்கிறவரும், துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போல் பாதங்கள் இருக்கிற இறைவனுடைய மகனின் வார்த்தைகள் இவையே:
19 Nĩnjũũĩ ciĩko ciaku, na ngamenya wendani waku, na wĩtĩkio waku, na ũtungata waku, na ũkirĩrĩria waku, o na ngamenya atĩ ciĩko ciaku cia kũrigĩrĩria nĩikĩrĩte iria cia mbere.
உன்னுடைய செயல்கள், அன்பு, விசுவாசம், நீ எனக்குச் செய்யும் ஊழியம், உன்னுடைய விடாமுயற்சி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன். நீ ஆரம்பத்தில் செய்ததைவிட இப்போது அதிகமாய் ஊழியம் செய்கிறதையும் நான் அறிந்திருக்கிறேன்.
20 No rĩrĩ, ũndũ ngũgũcuukĩra no atĩrĩ, atĩ nĩũkirĩrĩirie mũndũ-wa-nja ũcio wĩtagwo Jezebeli, ũcio wĩtuaga mũnabii. Nĩ ũndũ wa ũrutani wake, nĩahĩtithagia ndungata ciakwa ihũũrage ũmaraya, na irĩĩage irio iria irutĩirwo mĩhianano.
ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: தன்னுடைய போதனையினாலே என்னுடைய ஊழியர்களைத் தவறாய் வழிநடத்தி, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து, விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவைச் சாப்பிடும்படியும் செய்து தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்கிற யேசபேல் என்ற அந்தப் பெண்ணை நீ அனுமதிக்கிறாய்.
21 Nĩndĩmũheete ihinda rĩa kwĩrira ũmaraya ũcio wake, no nĩaregete.
அவள் தன்னுடைய முறைகேடான பாலுறவுகளிலிருந்து மனந்திரும்புகிறதற்கு அவளுக்குக் கால அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவளோ மனந்திரும்ப விரும்பவில்லை.
22 Nĩ ũndũ ũcio ngũmũikia gĩtanda-inĩ kĩa mĩnyamaro, na ndũme arĩa matharagia nake manyamare mũno, tiga no meririre matigane na mĩthiĩre yake.
ஆகவே நான் அவளை நோயுடன் படுக்கையில் கிடக்கச் செய்வேன். அவளோடு விபசாரம் செய்கிறவர்கள், அவளுடைய வழிகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களையும் மகா உபத்திரவம் அடையச் செய்வேன்.
23 Nĩngooraga ciana ciake. Namo makanitha mothe nĩmakamenya atĩ nĩ niĩ thuthuuragia ngoro na meciiria, na nĩngarĩha o mũndũ wanyu kũringana na ciĩko ciake.
நான் அவளுடைய பிள்ளைகளை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது இருதயங்களையும், மனங்களையும் ஆராய்கிறவர் நானே என்றும், உங்கள் ஒவ்வொருவருடைய செயல்களுக்கும் ஏற்றவிதமாக, நான் உங்களுக்குப் பதில் செய்கிறவர் என்றும் எல்லா திருச்சபைகளும் அறிந்துகொள்ளும்.
24 Na rĩu inyuĩ arĩa mũrĩ kũu Thuatira, o inyuĩ mũtarũmĩtie ũrutani wake, na mũtarĩ mwamenya maũndũ marĩa marikĩru ma hitho cia Shaitani, ta ũguo andũ acio moigaga, inyuĩ ngũmwĩra atĩrĩ (no ndirĩ na mũrigo ũngĩ ngũmũigĩrĩra):
அவளுடைய போதனைகளைக் கைக்கொள்ளாமல், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்கிற காரியங்களை கற்றுக்கொள்ளமல் தியத்தீரா பட்டணத்திலிருக்கிற மற்றவர்களாகிய ‘உங்களுக்கு நான் கட்டளையிடுவதாவது நான் வரும்வரை, உங்களிடமிருப்பதை பற்றிப்பிடித்துக் கொண்டவர்களாய் மாத்திரம் இருங்கள்.
25 Ikaragai mũrũmĩtie O maũndũ marĩa mũrĩ namo o nginya rĩrĩa ngooka.
உங்கள்மேல் இதைத்தவிர நான் வேறு எந்தப் பாரத்தையும் சுமத்தமாட்டேன்.’
26 Nake ũrĩa ũgaatoorania na ahingagie wendi wakwa nginya mũthia-rĩ, nĩngamũhe wathani aathage ndũrĩrĩ:
வெற்றி பெறுகிறவர்களாய் முடிவுவரை என்னுடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு நான் என் பிதாவினிடமிருந்து அதிகாரம் பெற்றதுபோலவே, நான் நாடுகளின்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
27 ‘Nake nĩagaciathaga na rũthanju rwa kĩgera; agaacimemenda o ta ũrĩa nyũngũ ya rĩũmba ĩmemendagwo,’ o ta ũrĩa niĩ heetwo wathani uumĩte kũrĩ Baba.
‘அவர் நாடுகளை இரும்புச் செங்கோலால் ஆளுகை செய்வார். அவர்களை மண்பாண்டங்களைப்போல நொறுக்கிப்போடுவார்’ என்ற வாக்குத்தத்தத்தின்படி,
28 Na ningĩ nĩngamũhe njata ĩrĩa ya rũciinĩ.
நான் அவர்களுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன்.
29 Ũrĩa ũrĩ gũtũ-rĩ, nĩakĩigue ũrĩa Roho areera makanitha.
பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.