< Thaburi 64 >

1 Thaburi ya Daudi Wee Ngai, igua mũgambo wakwa ngĩkwĩra mateta makwa; gitĩra muoyo wakwa harĩ kwĩhĩtĩrwo nĩ thũ.
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்; பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
2 Kĩĩhithe kuuma kũrĩ ndundu ya andũ arĩa aaganu, ũũhithe kuuma kũrĩ inegene rĩa mũingĩ ũrĩa wĩkaga ũũru.
கொடியவர்களின் சதியிலிருந்தும், ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும்.
3 Manooraga nĩmĩ ciao ta hiũ cia njora, na makaaria ciugo njũru itariĩ ta mĩguĩ ĩrĩ ũrũrũ.
அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்; தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள்.
4 Mehithagĩra mũndũ ũtehĩtie makamũratha na mĩguĩ; mamũrathaga o rĩmwe mategwĩtigĩra.
அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்; அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள்.
5 Momanagĩrĩria magĩthugunda mĩbango mĩũru, meranaga ũrĩa mekũhitha mĩtego yao; mooragia atĩrĩ, “Nũũ ũngĩmĩona?”
தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்; தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்; “நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள்.
6 Mathugundaga maũndũ matarĩ ma kĩhooto, makoiga atĩrĩ, “Kaĩ nĩtũbangĩte mũbango mwagĩrĩru-ĩ!” Ti-itherũ meciiria ma mũndũ na ngoro yake itingĩtuĩrĩka.
அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து, “நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள். நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை.
7 No rĩrĩ, Ngai nĩekũmaratha na mĩguĩ yake, amathece o rĩmwe.
ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்; உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள்.
8 Akaamarehithĩria mwanangĩko nĩ ũndũ wa ciugo njũru iria maaragia na tũnua twao; andũ arĩa othe makamoona makaamanyũrũria, mamainainĩrie mĩtwe.
இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி, அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்; அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள்.
9 Andũ othe nĩmagetigĩra; nĩmakaheana ũhoro wa wĩra wa Ngai, na meciirie ũhoro wa maũndũ marĩa ekĩte.
எல்லா மனிதரும் பயப்படுவார்கள்; இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து, அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள்.
10 Andũ arĩa athingu nĩmagĩkenere Jehova na moragĩre harĩ we; andũ arĩa othe arũngĩrĩru ngoro nĩmamũgooce!
நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து, அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்; இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்!

< Thaburi 64 >