< Mariko 14 >

1 Na rĩrĩ, gwatigaire o mĩthenya ĩĩrĩ nĩguo kũgĩe na Gĩathĩ kĩa Bathaka na kĩa Mĩgate ĩtarĩ Mĩĩkĩre Ndawa ya Kũimbia, nao athĩnjĩri-Ngai arĩa anene na arutani a watho nĩmacaragia ũrĩa mangĩnyiitithia Jesũ na njĩra ya wara nĩguo mamũũrage.
பஸ்கா என்ற பண்டிகையும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகையும் வருவதற்கு, இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கைதுசெய்து, அவரைக் கொலைசெய்வதற்கு தந்திரமான ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
2 Makiuga atĩrĩ, “No tũtingĩmũnyiita hĩndĩ ya Gĩathĩ, tondũ andũ mahota kũruta haaro.”
ஆனால், “பண்டிகை காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.
3 Na rĩrĩa arĩ itũũra-inĩ rĩa Bethania kwa mũndũ wetagwo Simoni ũrĩa warĩ na mangũ, aikarĩte metha-inĩ akĩrĩa irio-rĩ, nĩhookire mũndũ-wa-nja arĩ na cuba ya maguta ma goro mũno na manungi wega. Akĩũraga cuba ĩyo na akĩmũitĩrĩria maguta macio mũtwe.
பெத்தானியாவிலே, அவர் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கும்போது, ஒரு பெண் அங்கே வந்தாள்; அவள் நளதம் என்னும் விலையுயர்ந்த நறுமணத் தைலமுள்ள, வெள்ளைக்கல் குடுவையைக் கொண்டுவந்தாள். அவள் அதை உடைத்து, அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள்.
4 Andũ amwe arĩa maarĩ kuo makĩigua ũũru, makĩũrania atĩrĩ, “Maguta maya maitangwo ũguo nĩkĩ?
அங்கிருந்தவர்களில் சிலர், “இந்த வாசனைத் தைலத்தை இவ்விதமாய் வீணாக்குவது ஏன்?” என்று கோபத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
5 Maguta macio nĩmangĩendio mbeeca ikĩrĩte mũcara wa mũndũ wa mwaka mũgima nacio mbeeca icio iheo athĩĩni.” Magĩkũũma mũndũ-wa-nja ũcio marĩ na ũũru.
“இதை ஒரு வருட சம்பளத்தைவிடக் கூடுதலான பணத்துக்கு விற்றிருக்கலாமே. அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று சொல்லி, அவர்கள் அவளை கடுமையாய் திட்டினார்கள்.
6 Nowe Jesũ akĩmeera atĩrĩ, “Tiganai nake, mũramũtanga nĩkĩ? Nĩanjĩka ũndũ mwega mũno.
அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விடுங்கள். ஏன் அவளுக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்கள்? அவள் இந்தச் செயலை ஒரு சிறந்த நோக்கத்துடனேயே செய்தாள்.
7 Athĩĩni marĩkoragwo na inyuĩ hĩndĩ ciothe na no mũmateithie hĩndĩ ĩrĩa yothe mũngĩenda. No niĩ mũtirĩkoragwo na niĩ hĩndĩ ciothe.
ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள்; விரும்புகிற போதெல்லாம், நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன்.
8 Anjĩka o ũrĩa angĩahota. Aitĩrĩria mwĩrĩ wakwa maguta o mbere nĩ ũndũ wa kũhaarĩria gũthikwo gwakwa.
அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என்னை அடக்கம்பண்ணுவதற்கென, முன்னதாகவே ஆயத்தம் செய்யும்படி, அவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றினாள்.
9 Ngũmwĩra atĩrĩ na ma, kũrĩa guothe Ũhoro-ũyũ-Mwega ũkaahunjagio thĩinĩ wa thĩ, ũguo eka nĩũkeeragwo andũ nĩgeetha aririkanagwo.”
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய ஞாபகமாக சொல்லப்படும்” என்றார்.
10 Hĩndĩ ĩyo Judasi Mũisikariota, ũmwe wa arĩa ikũmi na eerĩ, agĩthiĩ kũrĩ athĩnjĩri-Ngai arĩa anene agakunyanĩre Jesũ kũrĩ o.
அப்பொழுது பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து, தலைமை ஆசாரியர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படிப் போனான்.
11 Nao magĩkena mũno maigua ũguo na makĩmwĩra nĩmekũmũhe mbeeca. Nĩ ũndũ ũcio Judasi agĩcaria mweke wa kũmũneana kũrĩ o.
அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்து, அவனுக்குப் பணம் தருவதென வாக்குறுதி கொடுத்தார்கள். எனவே யூதாஸ் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான்.
12 Mũthenya wa mbere wa Gĩathĩ kĩa Mĩgate ĩtarĩ Mĩĩkĩre Ndawa ya Kũimbia, o ũrĩa wathĩnjagwo gatũrũme ka Bathaka-rĩ, arutwo a Jesũ makĩmũũria atĩrĩ, “Ũkwenda tũthiĩ kũ tũkahaarĩrie nĩguo ũkarĩĩre irio cia Bathaka kuo?”
புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடுவது வழக்கமாயிருந்தது. எனவே, இயேசுவினுடைய சீடர்கள் அவரைப் பார்த்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
13 Nĩ ũndũ ũcio agĩtũma arutwo ake eerĩ akĩmeera atĩrĩ, “Thiĩi mũtoonye itũũra, na nĩ mũgũcemania na mũndũ ũkuuĩte ndigithũ ya maaĩ. Mũrũmĩrĩrei.
அப்பொழுது இயேசு, தம்முடைய சீடர்களில் இருவரை அனுப்பி அவர்களிடம், “பட்டணத்திற்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிற ஒருவனைச் சந்திப்பீர்கள். அவனைப் பின்தொடர்ந்து போங்கள்.
14 Kũrĩa egũtoonya mwĩre mwene nyũmba ĩyo atĩrĩ, ‘Mũrutani arooria atĩrĩ, nyũmba yakwa ya ageni ĩrĩ ha, harĩa ingĩrĩĩra irio cia Bathaka na arutwo akwa?’
அவன் போகிற வீட்டினுடைய சொந்தக்காரனிடம், ‘என்னுடைய விருந்தினருக்கான அறை எங்கே இருக்கிறது? அங்கு நானும், என்னுடைய சீடர்களும் பஸ்காவைச் சாப்பிடவேண்டும்’ என்று போதகர் கேட்கிறார் என அவனுக்குச் சொல்லுங்கள்.
15 Nake nĩekũmuonia nyũmba nene ya igũrũ ĩkĩrĩtwo indo na ĩgathondekwo wega. Haarĩriai irio cia Bathaka iitũ kuo.”
அவன் உங்களுக்கு ஒரு பெரிய மேல்வீட்டு அறையைக் காண்பிப்பான். அது கம்பளங்கள் போடப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டதாய் இருக்கும். அங்கே நாம் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
16 Arutwo acio makiumagara, magĩtoonya itũũra, magĩkora maũndũ mahaana o ta ũrĩa Jesũ aamerĩte. Nĩ ũndũ ũcio makĩhaarĩria irio cia Bathaka.
சீடர்கள் புறப்பட்டு பட்டணத்துக்குள் போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருப்பதைக் கண்டார்கள். அப்படியே, அவர்கள் பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
17 Na gwakinya hwaĩ-inĩ, Jesũ agĩkinya kuo marĩ na arutwo arĩa ikũmi na eerĩ.
மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு அங்கு வந்து சேர்ந்தார்.
18 Maikarĩte metha-inĩ makĩrĩa akĩmeera atĩrĩ, “Ngũmwĩra atĩrĩ na ma, ũmwe wanyu nĩekũngunyanĩra, ũmwe wa arĩa mararĩĩanĩra na niĩ.”
அவர்கள் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான். என்னோடு சாப்பிடுகிறவர்களில், ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.
19 Makĩnyiitwo nĩ kĩeha mũno, na o ũmwe akamũũria atĩrĩ, “Ti-itherũ hihi nĩ niĩ?”
அவர்கள் துக்கமடைந்து, ஒருவர் பின் ஒருவராக அவரிடம், “நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்டார்கள்.
20 Jesũ akĩmacookeria akĩmeera atĩrĩ, “Nĩ ũmwe wanyu inyuĩ ikũmi na eerĩ, ũrĩa ũgũtobokanĩria mũgate mbakũri-inĩ hamwe na niĩ.
“என்னுடனே ஒரே கிண்ணத்தில் தொட்டுச் சாப்பிடுகிற பன்னிரண்டு சீடர்களில் ஒருவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான்” என இயேசு பதிலளித்தார்.
21 Mũrũ wa Mũndũ egũthiĩ o ta ũrĩa ũhoro wake wandĩkĩtwo. No mũndũ ũrĩa ũgaakunyanĩra Mũrũ wa Mũndũ kaĩ arĩ na haaro-ĩ! Nĩ kaba mũndũ ũcio atangĩaciarirwo.”
மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு “நலமாய் இருந்திருக்கும்” என்றார்.
22 Ningĩ o makĩrĩĩaga-rĩ, Jesũ akĩoya mũgate, agĩcookia ngaatho, agĩcooka akĩwenyũranga, akĩhe arutwo ake, akiuga atĩrĩ, “Oyai; ũyũ nĩguo mwĩrĩ wakwa.”
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்துச் சொன்னதாவது, “இதை எடுத்துச் சாப்பிடுங்கள்; இது என்னுடைய உடல்.”
23 Agĩcooka akĩoya gĩkombe, agĩcookia ngaatho akĩmanengera, nao othe magĩkĩnyuĩra.
பின்பு இயேசு பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும், அந்தப் பாத்திரத்திலிருந்து குடித்தார்கள்.
24 Akĩmeera atĩrĩ, “Ĩno nĩyo thakame yakwa ya kĩrĩkanĩro, ĩrĩa ĩitĩtwo nĩ ũndũ wa andũ aingĩ.
இயேசு அவர்களைப் பார்த்து, “இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, இது அநேகருக்காகச் சிந்தப்படுகிறது.
25 Ngũmwĩra atĩrĩ na ma, ndikũnyua rĩngĩ ndibei ya maciaro ma mũthabibũ, nginya mũthenya ũrĩa ngaamĩnyua ĩrĩ njerũ ũthamaki-inĩ wa Ngai.”
உண்மையாய் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் இறைவனுடைய அரசில் திராட்சைப்பழ இரசத்தைப் புதிதாகக் குடிக்கும் அந்த நாள்வரைக்கும், இனிமேல் நான் குடிக்கமாட்டேன்” என்றார்.
26 Na maarĩkia kũina rwĩmbo, makiumagara magĩthiĩ kĩrĩma-inĩ kĩa Mĩtamaiyũ.
அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள்.
27 Nake Jesũ akĩmeera atĩrĩ, “Inyuĩ inyuothe nĩmũrĩndirika, nĩgũkorwo nĩ kwandĩkĩtwo atĩrĩ: “‘Nĩngaringa mũrĩithi, nacio ngʼondu ihurunjũke.’
இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப்போவீர்கள், “‘மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன், அப்பொழுது ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று பரிசுத்த வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
28 No ndaariũka, nĩngamũtongoria gũthiĩ Galili.”
ஆனால் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.
29 Petero akĩmwĩra atĩrĩ, “O na othe mangĩgũtirika, niĩ ndingĩgũtirika.”
அதற்குப் பேதுரு அவரிடம், “எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும், நான் போகமாட்டேன்” என்றான்.
30 Nake Jesũ akĩmũcookeria, akĩmwĩra atĩrĩ, “Ngũkwĩra atĩrĩ na ma, ũmũthĩ, o ũtukũ ũyũ, ngũkũ ĩtanakũga keerĩ, nĩũrĩngaana maita matatũ.”
அப்பொழுது இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இன்று இரவே, சேவல் இரண்டுமுறை கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார்.
31 No Petero akĩaria ahinyĩrĩirie, akiuga atĩrĩ, “O na angĩkorwo ndĩrĩkuanĩra nawe, niĩ ndingĩgũkaana!” O na acio angĩ othe makiuga o ũguo.
ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் சாகவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்” என்று வலியுறுத்திச் சொன்னான். மற்றெல்லோருங்கூட அவ்விதமாகவே சொன்னார்கள்.
32 Nao magĩkinya handũ heetagwo Gethisemane, nake Jesũ akĩĩra arutwo ake atĩrĩ, “Ikarai haha thiĩ ngahooe.”
அவர்கள் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார்கள். அங்கு இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, “நான் மன்றாடப்போகிறேன், அதுவரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார்.
33 Akĩoya Petero na Jakubu na Johana agĩthiĩ nao, na o hĩndĩ ĩyo akĩnyiitwo nĩ kĩeha kĩnene na agĩthĩĩnĩka mũno.
இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்முடன் கூட்டிக்கொண்டு சென்றார். அவர் மிகவும் துயருற்று கலக்கமடையத் தொடங்கினார்.
34 Akĩmeera atĩrĩ, “Ngoro yakwa nĩĩraigua kĩeha mũno o ta ingĩkua, ikarai haha na mwĩhũge.”
“என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழிப்பாயிருங்கள்” என்றார்.
35 Na aathiathia hanini, akĩĩgũithia thĩ, akĩhooya atĩ korwo kwahoteka, ihinda rĩu rĩmweherere.
இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த், தரையில் விழுந்து மன்றாடினார். முடியுமானால், அந்த வேளை தம்மை விட்டுக் கடந்து போகட்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார்.
36 Akiuga atĩrĩ, “Abba, Baba, maũndũ mothe nĩmahotekaga nĩwe. Njehereria gĩkombe gĩkĩ. No ti ũrĩa ngwenda niĩ, no nĩ ũrĩa wee ũkwenda.”
அவர் தொடர்ந்து, “அப்பா பிதாவே, எல்லாவற்றையும் செய்ய உம்மால் இயலும். இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு எடுத்துவிடும். ஆனால், என் சித்தத்தின்படியல்ல, உமது சித்தத்தின்படியே ஆகட்டும்” என்றார்.
37 Ningĩ agĩcooka harĩ arutwo ake akĩmakora makomete. Akĩũria Petero atĩrĩ, “Simoni, kaĩ ũkomete? Ndũngĩhota gũikara ithaa rĩmwe wĩiguĩte?
பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவைப் பார்த்து, “சீமோனே, நீ நித்திரை செய்கிறாயோ? ஒருமணி நேரமாவது விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?
38 Mwĩhũgagei na mũhooyage nĩgeetha mũtikagwe magerio-inĩ. Ngoro nĩyenda, no mwĩrĩ ndũrĩ na hinya.”
விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.
39 O rĩngĩ agĩthiĩ akĩhooya o ũguo.
இயேசு மீண்டும் போய், அதேவிதமாகவே மன்றாடினார்.
40 Na acooka rĩngĩ harĩo, agĩkora makomete tondũ nĩmahĩtĩtwo nĩ toro. Nao makĩrigwo nĩ ũrĩa mangĩmwĩra.
இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. அவரிடம் என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
41 Ningĩ agĩũka ihinda rĩa gatatũ akĩmooria atĩrĩ, “O na rĩu mũrĩ o toro, o mũhurũkĩte? Kinyiai hau! Ithaa nĩrĩakinya. Atĩrĩrĩ, Mũrũ wa Mũndũ nĩakunyanĩirwo akaneanwo moko-inĩ ma andũ ehia.
இயேசு மூன்றாம் முறையும் திரும்பிவந்து, சீடர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? போதும்! வேளை வந்துவிட்டது. போதும்! மானிடமகனாகிய நான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன்.
42 Ũkĩrai, tũthiĩ! Ũrĩa ũkũngunyanĩra nĩarooka.”
எழுந்திருங்கள், நாம் போவோம்! என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ வருகிறான்!” என்றார்.
43 O akĩaragia-rĩ, Judasi, ũmwe wa arutwo arĩa ikũmi na eerĩ, agĩkinya. Ookire arĩ na gĩkundi kĩnene kĩa andũ marĩ na hiũ cia njora na njũgũma, matũmĩtwo nĩ athĩnjĩri-Ngai arĩa anene, na arutani a watho na athuuri.
இயேசு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு கூட்ட மக்கள் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும், யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள்.
44 Judasi ũcio wamũkunyanĩire nĩamaheete kĩmenyithia akameera atĩrĩ, “Ũrĩa ndĩmumunya nĩwe; mũmũnyiite na mũmũtware arangĩirwo.”
இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே இயேசு; அவரைக் கைதுசெய்து, காவலுடன் கூட்டிச் செல்லுங்கள்” என்று சொல்லியிருந்தான்.
45 Judasi o rĩmwe agĩthiĩ harĩ Jesũ, akĩmwĩta atĩrĩ, “Rabii!” na akĩmũmumunya.
யூதாஸ் இயேசுவுக்கு அருகில் வந்து, “போதகரே!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான்.
46 Nao andũ acio makĩguthũkĩra Jesũ makĩmũnyiita.
அப்பொழுது அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைக் கைது செய்தார்கள்.
47 Na ũmwe wa arĩa maarũngiĩ hakuhĩ agĩcomora rũhiũ rwake rwa njora agĩtinia gũtũ kwa ndungata ya mũthĩnjĩri-Ngai ũrĩa mũnene.
அவ்வேளையில், அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை வெட்டினான்; அவனுடைய காது வெட்டுண்டது.
48 Nake Jesũ akĩmooria atĩrĩ, “Kaĩ ndĩ mũtongoria wa akararia a watho atĩ nĩkĩo muoka kũũnyiita mũrĩ na hiũ cia njora na njũgũma?
இயேசு அவர்களைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்?
49 Ndĩratũũraga na inyuĩ hekarũ-inĩ ngĩrutanaga mũthenya o mũthenya na mũtingĩĩnyiita. No rĩrĩ, Maandĩko no nginya mahiinge.”
ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு, உங்களோடு தானே இருந்தேன். அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆம், வேதவசனங்கள் நிறைவேற வேண்டுமே” என்றார்.
50 Hĩndĩ ĩyo arutwo ake othe makĩmũtiganĩria, makĩũra.
அப்பொழுது எல்லோரும், இயேசுவைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள்.
51 Na mwanake ũmwe ũteehumbĩte kĩndũ tiga taama wa gatani akĩrũmĩrĩra Jesũ. Na rĩrĩa maamũnyiitire,
இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன், மென்பட்டு மேலுடையை உடுத்திக் கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது,
52 agĩtiga taama wake nao, akĩũra e njaga.
அவன் தன்னுடைய மேலுடையை விட்டுவிட்டு, நிர்வாணமாய்த் தப்பி ஓடினான்.
53 Nao andũ acio magĩtwara Jesũ kũrĩ mũthĩnjĩri-Ngai ũrĩa mũnene, nao athĩnjĩri-Ngai arĩa anene othe, na athuuri na arutani a watho makĩgomana hamwe.
அவர்கள் இயேசுவை பிரதான ஆசாரியனிடம் கொண்டுப் போனார்கள். அங்கே எல்லா தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் ஒன்றுகூடி இருந்தார்கள்.
54 Petero akĩmũrũmĩrĩra arĩ haraaya o nginya agĩkinya nja ya mũciĩ wa mũthĩnjĩri-Ngai ũcio mũnene. Agĩikarania na thigari kũu agĩota mwaki.
பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றத்திற்குள் போனான். அங்கே, அவன் காவலாளிகளுடன் நெருப்பின் அருகே உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.
55 Na rĩrĩ, athĩnjĩri-Ngai arĩa anene, o na Kĩama kĩu gĩothe, magĩcaria ũira wa kũũragithia Jesũ, no mationire.
தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை.
56 Na andũ aingĩ nĩmarutire ũira wa maheeni, no ũira wao ũkĩaga kũiguana.
பலர் இயேசுவுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னவை, ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லை.
57 Gũgĩcooka gũkĩrũgama andũ amwe, nao makĩruta ũira wa maheeni makiuga atĩrĩ,
பின்பு சிலர் எழுந்து நின்று, இயேசுவுக்கு எதிராக பொய்ச்சாட்சி கொடுத்தார்கள்:
58 “Nĩtwaiguire akiuga atĩrĩ, ‘Nĩngatharia hekarũ ĩno yakĩtwo nĩ andũ, na njake ĩngĩ ĩtakĩtwo nĩ mũndũ na ihinda rĩa mĩthenya ĩtatũ.’”
“மனிதருடைய கைகளினால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை நான் இடித்துப்போட்டு பின்பு மூன்று நாட்களில், நான் கைகளினால் கட்டப்படாத, வேறொரு ஆலயத்தைக் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள்.
59 No o na moiga ũguo, ũira wao ũkĩaga kũiguana.
அப்பொழுதுங்கூட, அவர்களுடைய சாட்சி ஒன்றுக்கொன்று வேறுபட்டது.
60 Hĩndĩ ĩyo mũthĩnjĩri-Ngai ũrĩa mũnene akĩrũgama gatagatĩ kao, akĩũria Jesũ atĩrĩ, “Kaĩ wee ũtarĩ na ũndũ ũngĩcookia? Nĩ ũhoro ũrĩkũ ũyũ ũrathitangwo naguo?”
அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான்.
61 No Jesũ agĩkira ki, na ndacookie ũndũ. O rĩngĩ mũthĩnjĩri-Ngai ũcio mũnene akĩmũũria atĩrĩ, “Wee nĩwe Kristũ, Mũrũ wa Ũrĩa Mũrathime?”
ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார், பதில் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து, “நீ போற்றப்பட்டவரின் மகனான கிறிஸ்துவா?” என்று கேட்டான்.
62 Nake Jesũ akĩmũcookeria atĩrĩ, “Ĩĩ nĩ niĩ. Na nĩmũkona Mũrũ wa Mũndũ aikarĩte guoko-inĩ kwa ũrĩo kwa Ũrĩa-ũrĩ-Hinya, na agĩũka arĩ igũrũ rĩa matu.”
அதற்கு இயேசு, “ஆம், நானே அவர், மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.
63 Mũthĩnjĩri-Ngai ũcio mũnene agĩtembũranga nguo ciake. Akĩũria atĩrĩ, “Tũgũkĩbatario nĩ aira angĩ a kĩ?
அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ?
64 Nĩmweiguĩra akĩruma Ngai. Mũgwĩciiria atĩa?” Nao othe makĩmũtuĩra atĩ aagĩrĩirwo nĩ kũũragwo.
இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் கேட்டீர்களே. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றான். அவர்கள் எல்லோரும் இயேசுவை, இவன் சாக வேண்டியவன் எனத் தீர்ப்புக் கூறினார்கள்.
65 Hĩndĩ ĩyo amwe makĩambĩrĩria kũmũtuĩra mata, na makĩmũhumbĩra ũthiũ, makĩmũringa na ngundi makĩmwĩraga atĩrĩ, “Ta kĩrathe ũhoro.” Nacio thigari ikĩmuoya, ikĩmũhũũra.
அப்பொழுது சிலர், இயேசுவின்மேல் துப்பத் தொடங்கினார்கள். அவர்கள் அவருடைய கண்களைக் கட்டிவிட்டு, தங்களுடைய கைகளால் அவரை குத்தி, “தீர்க்கதரிசனம் சொல்!” என்று சொன்னபின்பு, காவலாளிகளும் அவரைப் பிடித்துக் கொண்டுபோய் அடித்தார்கள்.
66 Na hĩndĩ ĩyo Petero aikarĩte o hau nja-rĩ, ũmwe wa ndungata cia airĩtu cia mũthĩnjĩri-Ngai ũrĩa mũnene akĩgerera ho.
அவ்வேளையில் பேதுரு கீழே அந்த முற்றத்திலேயே இருந்தான். அப்பொழுது பிரதான ஆசாரியனின் வேலைக்காரிகளில் ஒருத்தி அவ்வழியாய் வந்தாள்.
67 Rĩrĩa oonire Petero agĩota mwaki, akĩmũrora wega. “Akĩmwĩra atĩrĩ, ‘O nawe uuma hamwe na Jesũ ũcio wa Nazarethi’.”
அவள் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள். அவனை உற்றுப்பார்த்து, “நீயும் நாசரேத் ஊரானாகிய அந்த இயேசுவோடுகூட இருந்தவன்” என்றாள்.
68 Nowe Petero agĩkaana ũhoro ũcio, akĩmwĩra atĩrĩ, “Ndiũĩ ũhoro ũcio, o na ndiramenya nĩ atĩa ũroiga,” na akiumagara agĩthiĩ itoonyero-inĩ.
ஆனால் அவனோ, “எனக்குத் தெரியாது, நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு விளங்கவும் இல்லை” என்று மறுதலித்தான். அவன் இவ்வாறு சொல்லிவிட்டு, முற்றத்தின் வாசல் பக்கமாய் போனான். அப்பொழுது சேவல் கூவிற்று.
69 Na rĩrĩa ndungata ĩyo ya mũirĩtu yamuonire ho, o rĩngĩ ĩkĩĩra arĩa maarũngiĩ ho atĩrĩ, “Mũndũ ũyũ nĩ ũmwe wao.”
அந்த வேலைக்காரி அவனை அங்கேயும் கண்டு, அங்கே சுற்றி இருந்தவர்களைப் பார்த்து, “இவனும் அவர்களில் ஒருவன்” என்றாள்.
70 No Petero agĩkaana ũhoro ũcio rĩngĩ. Thuutha wa kahinda kanini, arĩa maarũgamĩte hakuhĩ makĩĩra Petero atĩrĩ, “Ti-itherũ ũrĩ ũmwe wao, nĩ ũndũ wĩ Mũgalili.”
பேதுரு மீண்டும் அதை மறுதலித்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவைப் பார்த்து, “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். ஏனென்றால் நீ ஒரு கலிலேயன்” என்றார்கள்.
71 Nake akĩambĩrĩria kwĩhĩta akiugaga atĩrĩ, “Niĩ ndiũĩ mũndũ ũyũ mũraaria ũhoro wake.”
அப்பொழுது பேதுரு, “நீங்கள் சொல்கிற அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான்.
72 O hĩndĩ ĩyo ngũkũ ĩgĩkũga hĩndĩ ya keerĩ. Nake Petero akĩririkana ũhoro ũrĩa Jesũ aamwĩrĩte atĩrĩ, “Ngũkũ ĩtanakũga keerĩ nĩũrĩngaana maita matatũ.” Nake akĩambĩrĩria kũrĩra.
உடனே சேவல் இரண்டாம் முறையாக கூவியது. அப்பொழுது, “சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தான். அவன் மனம்வருந்தி அழுதான்.

< Mariko 14 >