< Kohelethu 2 >

1 Ndeĩrire na ngoro yakwa atĩrĩ, “Atĩrĩrĩ, ũka rĩu, nĩngũkũgeria na ikeno nĩgeetha nyone nĩ ũndũ ũrĩkũ mwega.” No rĩrĩ, o naguo ũndũ ũcio warĩ o wa tũhũ.
“வா, இப்பொழுது நன்மையானது என்னவென்று கண்டுபிடிக்கும்படி இன்பத்தை அனுபவித்துச் சோதித்துப் பார்ப்போம்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் அதுவும் அர்த்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டது.
2 Ningĩ ngiuga atĩrĩ, “Mĩtheko o nayo nĩ ũrimũ. Naguo ũhoro wa gwĩkenia-rĩ, ngĩĩyũria nĩ wa bata ũrĩkũ?”
சிரிப்பு மூடத்தனமானது என்றும், இன்பம் என்ன பலனைக் கொடுக்கிறது என்றும் நான் சொன்னேன்.
3 Ndaageririe ũrĩa ingĩkenia mwĩrĩ wakwa na ndibei, o ndongoretio nĩ ngoro yakwa na ũũgĩ, ngĩhĩmbĩria ũkĩĩgu, ngĩenda kũmenya nĩ ũndũ ũrĩkũ andũ maagĩrĩirwo nĩ gwĩka gũkũ thĩ matukũ-inĩ o macio manini ma muoyo wao.
திராட்சை இரசத்தினால் என்னை உற்சாகப்படுத்தியும், மூடத்தனமாயும் நடந்து பார்த்தேன்; அப்பொழுது இன்னும் என் மனமே ஞானத்தினால் எனக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. மனிதர் தங்களுடைய வாழ்வின் குறுகிய நாட்களில், வானத்தின் கீழே செய்யப் பயனுள்ளது என்ன என்று பார்க்க விரும்பினேன்.
4 Nĩndarutire mawĩra manene: Ngĩĩyakĩra nyũmba, na ngĩĩhaandĩra mĩgũnda ya mĩthabibũ.
பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினேன்.
5 Nĩndathondekire mĩgũnda na kũndũ gwa kũhurũkwo, na ngĩhaanda mĩtĩ ya mĩthemba yothe ya matunda kuo.
அழகிய சோலைகளையும் பூந்தோட்டங்களையும் எனக்காக உண்டாக்கி, எல்லாவித பழமரங்களையும் அதில் நட்டேன்.
6 Ngĩcooka ngĩhingĩrĩria tũria twa maaĩ twa kuunithagĩria maaĩ kũrĩa mĩtĩ ĩyo yakũragĩra.
செழித்து வளர்ந்த தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்குக் குளங்களைக் கட்டினேன்.
7 Ningĩ ngĩgũra ngombo cia arũme na cia andũ-a-nja, na nĩ ndaarĩ na ngombo ingĩ iria ciaciarĩirwo gwakwa mũciĩ. O na nĩ ndaarĩ na ndũũru nyingĩ cia mbũri na cia ngʼombe gũkĩra arĩa othe maarĩ Jerusalemu mbere yakwa.
ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினேன்; மேலும் வீட்டில் பிறந்த அடிமைகளையும் வைத்திருந்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும், அதிகமான ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் எனக்கிருந்தன.
8 Nĩndacookanĩrĩirie betha na thahabu, na indo cia bata iria cia athamaki o na cia mabũrũri. Ningĩ ngĩgĩa na aini a arũme na a andũ-a-nja, o na thuriya nyingĩ mũno: maũndũ marĩa makenagia ngoro ya mũndũ.
நான் தங்கத்தையும் வெள்ளியையும் எனக்கெனக் குவித்தேன்; அரசர்களிடமிருந்தும் மாகாணங்களிலிருந்தும் கிடைத்த செல்வங்களைச் சேர்த்தேன். பாடகர்களும் பாடகிகளும் எனக்கிருந்தனர்; மனித இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பல பெண்களையும் வைத்திருந்தேன்.
9 Nĩ ũndũ ũcio ngĩneneha na ngĩtonga mũno gũkĩra arĩa othe maarĩ Jerusalemu mbere yakwa. Thĩinĩ wa maũndũ macio mothe-rĩ, ũũgĩ wakwa ndaarĩ o naguo.
எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் மிகப்பெரியவனானேன். இவை எல்லாவற்றின் மத்தியிலும் என் ஞானம் என்னைவிட்டு நீங்காமல் இருந்தது.
10 Naguo ũndũ o wothe ũrĩa maitho makwa meriragĩria ndierigagĩrĩria kũwĩka; o na ningĩ ngoro yakwa ndiamĩrigĩrĩirie gĩkeno o na kĩrĩkũ. Nĩgũkorwo ngoro yakwa nĩyakenagĩra mawĩra makwa mothe, naguo ũndũ ũcio nĩguo warĩ irĩhi rĩa wĩra wakwa wothe.
என் கண்கள் ஆசை வைத்த எதையும் நான் பெறாமல் விடவில்லை; என் இருதயத்துக்கு எந்த இன்பங்களையும் நான் கொடுக்க மறுக்கவில்லை. என் எல்லா வேலையிலும் என் இருதயம் மகிழ்ந்தது, என் எல்லா உழைப்புக்குமான வெகுமதி இதுவே.
11 No rĩrĩa ndaarorire mawĩra marĩa mothe ndaarutĩte na moko makwa, o na ũrĩa ndetungumanĩtie ngĩmaruta, ngĩona atĩ maũndũ mothe nĩ ma tũhũ, no ta gũtengʼeria rũhuho; gũtirĩ kĩndũ mũndũ angĩĩguna nakĩo gũkũ thĩ.
அப்படியிருந்தும் என் கைகள் செய்த எல்லாவற்றையும், அவற்றை அடைய நான் பட்ட பிரசாயத்தையும் பார்த்தபோது, இவை யாவும் அர்த்தமற்றவையாகவே இருந்தன, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
12 Ningĩ ngĩcooka ngĩĩhũgũra nĩguo ndĩcũũranie ũhoro wa ũũgĩ, o na wa ũgũrũki, na wa ũkĩĩgu. Atĩrĩrĩ, nĩ atĩa ũngĩ mũthamaki ũrĩa ũcookagio ithenya rĩa ũrĩa ũngĩ angĩĩka ũteekĩtwo?
பின்பு நான் ஞானத்தை ஆராய்ந்து பார்க்கவும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் அறிந்துகொள்ளவும் என் மனதை திருப்பினேன். அரசனுக்குப்பின் அவனுடைய இடத்தில் வருகிறவன், முன்பு அவனால் செய்யப்பட்டதைப் பார்க்கிலும் இவனால் அதிகமாய் என்ன செய்யமுடியும்?
13 Hĩndĩ ĩyo ngĩkĩona atĩ ũũgĩ nĩ mwega gũkĩra ũkĩĩgu, o ta ũrĩa ũtheri ũrĩ mwega gũkĩra nduma.
இருளைப் பார்க்கிலும் வெளிச்சம் நல்லதாய் இருப்பதுபோலவே, மூடத்தனத்தைப் பார்க்கிலும் ஞானம் நல்லது எனக் கண்டேன்.
14 Mũndũ ũrĩa mũũgĩ nĩonaga kũrĩa arathiĩ, no mũndũ mũkĩĩgu athiiagĩra nduma-inĩ; no ngĩcooka ngĩmenya atĩ o eerĩ makoragwo nĩ ũndũ o ro ũmwe.
ஒரு ஞானமுள்ளோரின் கண்கள் வெளிச்சத்தை நோக்கியிருக்கின்றன, மூடரோ இருளில் நடப்பார்கள்; ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரே முடிவே ஏற்படுகிறது என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.
15 Hĩndĩ ĩyo ngĩkiuga na ngoro yakwa atĩrĩ, “Ũndũ ũrĩa ũkoraga mũndũ mũkĩĩgu o na niĩ no ũkaangora. Ũũgĩ wakwa-rĩ, ũkĩngʼunĩte na kĩ?” Ngĩkiuga atĩrĩ na ngoro yakwa, “Ũndũ ũyũ o naguo no wa tũhũ.”
பின்பு நான், மூடரின் முடிவே என்னையும் மேற்கொள்ளும், “ஆகவே ஞானமுள்ளவனாய் இருப்பதால் நான் பெறும் இலாபம் என்ன?” என்று என் இருதயத்தில் சிந்தித்தேன். “இதுவும் அர்த்தமற்றதே” என்று என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன்.
16 Nĩgũkorwo mũndũ ũrĩa mũũgĩ, o ta mũndũ ũrĩa mũkĩĩgu, ndagatũũra aririkanagwo; nĩgũkorwo matukũ-inĩ marĩa magooka o eerĩ nĩmakariganĩra. Hĩ, mũndũ ũrĩa mũũgĩ akuuaga o ta mũndũ ũrĩa mũkĩĩgu!
மூடரைப் போலவே ஞானமுள்ளோரும் நெடுங்காலம் ஞாபகத்தில் இருக்கமாட்டார்கள்; வருங்காலத்தில் இருவரும் மறக்கப்பட்டுப் போவார்கள். மூடரைப் போலவே, ஞானமுள்ளோரும் இறந்துபோவார்கள்.
17 Nĩ ũndũ ũcio ngĩthũũra gũtũũra muoyo, tondũ wĩra ũrĩa ũrutagwo gũkũ thĩ kwaraga riũa warĩ wa kũnjiguithia kĩeha. Wothe warĩ wa tũhũ, o ta gũtengʼeria rũhuho.
சூரியனுக்குக் கீழே செய்யப்படுவதெல்லாம் எனக்குத் துக்கமாகவே இருந்தது, ஆதலால் நான் வாழ்க்கையை வெறுத்தேன். அவையாவும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சிக்கு ஒப்பானது.
18 Ngĩgĩthũũra maũndũ mothe marĩa ndenogeetie namo gũkũ thĩ kwaraga riũa, tondũ no nginya ngaamatigĩra ũrĩa ũgooka thuutha wakwa.
சூரியனுக்குக் கீழே நான் பிரயாசப்பட்டு பெற்றதையெல்லாம் நான் வெறுத்தேன். ஏனெனில், அவற்றை நான் எனக்குப்பின் வருவோருக்கு விட்டுச்செல்ல வேண்டுமே.
19 Ningĩ nũũ ũũĩ kana ũcio ũgooka ithenya rĩakwa agaakorwo arĩ mũndũ mũũgĩ kana arĩ mũndũ mũkĩĩgu? No rĩrĩ, nĩwe ũkaarũgamĩrĩra wĩra ũrĩa ndaanetungumania naguo ngĩtũmagĩra ũũgĩ wakwa gũkũ thĩ kwaraga riũa. Ũndũ ũcio o naguo no wa tũhũ.
அவர்கள் ஞானமுள்ளோராய் இருப்பார்களோ, அல்லது மூடராயிருப்பார்களோ என்று யார் அறிவார்? சூரியனுக்குக் கீழே என் முயற்சியையும் திறமையையும் உபயோகித்து நான் செய்த எல்லா வேலைகள்மேலும் அவர்கள் அதிகாரம் செலுத்துவார்களே. இதுவும் அர்த்தமற்றதே.
20 Nĩ ũndũ ũcio ngoro yakwa ĩkĩambĩrĩria kũũrwo nĩ hinya nĩ ũndũ wa wĩra wakwa wothe wa mĩnoga ũrĩa ndaarutaga gũkũ thĩ kwaraga riũa.
எனவே சூரியனுக்குக் கீழேயுள்ள என் பிரயாசங்களின் முயற்சி அனைத்தையும் குறித்து, என் இருதயம் விரக்தியடையத் தொடங்கியது.
21 Tondũ mũndũ no arute wĩra wake na ũũgĩ, na ũmenyo, na kũũhĩgĩra maũndũ, no rĩrĩ, no nginya acooke atige kĩrĩa gĩothe agĩĩta nakĩo kũrĩ mũndũ ũngĩ ũtakĩnogeire. Ũndũ ũyũ o naguo no wa tũhũ, na nĩ mũtino mũnene.
ஏனெனில் ஒரு மனிதர்கள் தன் வேலையை ஞானத்துடனும், அறிவுடனும், திறமையுடனும் செய்கிறார்கள்; ஆகிலும் அவர்கள் தங்களுக்கு உரிமையான அனைத்தையும் அதற்காகப் பிரயாசப்படாத வேறொருவருக்கு விட்டுச்செல்ல நேரிடுகிறதே. இதுவும் அர்த்தமற்றதும், பெரும் தீமையாய் இருக்கிறது.
22 Mũndũ-rĩ, nĩ uumithio ũrĩkũ oonaga harĩ wĩra ũrĩa wothe arutaga, na mĩnoga, na gwĩtungumania kũrĩa anetungumania nakuo gũkũ thĩ kwaraga riũa?
சூரியனுக்குக் கீழே மனிதர்கள் மிகவும் பிரயாசப்பட்டும், கவலையுடன் போராடியும் உழைப்பதினால், அவர்கள் பெறும் இலாபம் என்ன?
23 Nĩgũkorwo matukũ make mothe, wĩra wake nĩ wa ruo na kĩeha; o na ũtukũ, meciiria make matihurũkaga. Ũndũ ũcio o naguo no wa tũhũ.
அவர்களுடைய வாழ்நாளெல்லாம் அவர்கள் செய்யும் வேலை, வேதனையும் துன்பமுமே; இரவிலும் அவர்களுடைய மனம் இளைப்பாறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதே.
24 Mũndũ-rĩ, ndarĩ ũndũ ũngĩ mwega angĩĩka ũkĩrĩte kũrĩa na kũnyua, na gũkenera wĩra wake. Ũndũ ũyũ o naguo ngĩona atĩ uumĩte guoko-inĩ kwa Ngai,
சாப்பிட்டு, குடித்து தங்கள் வேலையில் திருப்தி காண்பதைவிட, அவர்கள் செய்யக்கூடிய நலமானது ஒன்றும் இல்லை. இதுவும் இறைவனின் கரத்திலிருந்து வருகிறது என்று நான் காண்கிறேன்.
25 nĩ ũndũ-rĩ, nũũ ũngĩhota kũrĩa kana gũkena Ngai atarĩ ho?
அவராலேயன்றி உணவு சாப்பிடவோ, சந்தோஷமாயிருக்கவோ யாரால் முடியும்?
26 Ngai aheaga mũndũ ũrĩa ũmũkenagia maũndũ ma ũũgĩ, na ũmenyo, na gĩkeno, no mũndũ ũrĩa mwĩhia akamũhe wĩra wa gũcookanĩrĩria na kwĩigĩra ũtonga, nĩguo acooke aũnenganĩre kũrĩ mũndũ ũrĩa ũmũkenagia. Ũndũ ũcio o naguo no wa tũhũ, o ta gũtengʼeria rũhuho.
இறைவனைப் பிரியப்படுத்துகிற மனிதருக்கு அவர் ஞானத்தையும், அறிவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறார். ஆனால் பாவிகளுக்கோ, இறைவனைப் பிரியப்படுத்துபவர்களுக்குக் கொடுக்கும்படி, செல்வத்தைச் சேர்த்துக் குவித்து வைக்கும் வேலையைக் கையளிக்கிறார். இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் ஒரு முயற்சியே.

< Kohelethu 2 >