< Danieli 4 >
1 Nĩ niĩ Mũthamaki Nebukadinezaru, Ndĩramwandĩkĩra marũa maya inyuĩ andũ a iruka ciothe, na ndũrĩrĩ, na andũ a rwario o ruothe arĩa matũũraga thĩ yothe: Mũrogaacĩra makĩria!
அரசன் நேபுகாத்நேச்சார், உலகம் முழுவதிலும் வாழும் மக்களுக்கும், நாடுகளுக்கும், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கும் அறிவிக்கிறதாவது: நீங்கள் மிகவும் செழித்து வாழ்வடைவீர்களாக.
2 Ndĩ na gĩkeno ngĩmũmenyithia morirũ na maũndũ ma kũgegania marĩa Ngai-ũrĩa-ũrĩ-Igũrũ mũno anjĩkĩire.
மகா உன்னதமான இறைவன் எனக்குச் செய்த அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
3 Kaĩ morirũ make nĩ manene-ĩ!
அவர் செய்த அடையாளங்கள் எவ்வளவு பெரியவை!
4 Atĩrĩrĩ, niĩ Nebukadinezaru ndarĩ gwakwa mũciĩ, njiganĩire na ngagaacĩra nyũmba-inĩ yakwa ya ũthamaki.
நேபுகாத்நேச்சாராகிய நான் என் அரண்மனையிலுள்ள என் வீட்டில் திருப்தியுடனும், செழிப்புடனும் இருந்தேன்.
5 Na rĩrĩ, ũtukũ ũmwe ndarootire kĩroto kĩrĩa kĩamakirie mũno. Ngomete ũrĩrĩ-inĩ wakwa-rĩ, maũndũ marĩa mahĩtũkagĩra meciiria-inĩ makwa na cioneki ikĩndua nda.
ஆனால் நான் ஒரு கனவு கண்டு பயமடைந்தேன். நான் எனது படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும்போது, என் மனதை ஊடுருவிச்சென்ற காட்சிகளும், தரிசனங்களும் என்னுள்ளத்தில் திகிலை உண்டாக்கின.
6 Nĩ ũndũ ũcio ngĩathana ngiuga atĩ andũ arĩa othe oogĩ a Babuloni mareehwo mbere yakwa nĩguo mandaũrĩre kĩroto kĩu.
ஆகையால், எனது கனவின் விளக்கத்தை எனக்குச் சொல்லும்படி பாபிலோனிலுள்ள எல்லா ஞானிகளையும் எனக்கு முன்பாக அழைத்துவரும்படி கட்டளையிட்டேன்.
7 Rĩrĩa ago, na aragũri, na arori a njata na arathi mohoro mookire, ngĩmeera ũrĩa ndarooteete, no nĩmaremirwo nĩ kũndaũrĩra kĩroto kĩu.
மந்திரவாதிகளும், மாந்திரீகர்களும், சோதிடரும், குறிசொல்பவர்களும் வந்தபோது அவர்களுக்கு என் கனவைச் சொன்னேன். ஆனால் அவர்களால் கனவின் விளக்கத்தை எனக்குச் சொல்ல முடியவில்லை.
8 No thuutha wao, Danieli agĩũka mbere yakwa, na niĩ ngĩmwĩra ũrĩa ndarooteete. (Nĩwe wĩtagwo Beliteshazaru tondũ etanĩtio na ngai yakwa, nake akoragwo na roho wa ngai iria theru thĩinĩ wake.)
கடைசியாகத் தானியேல் என் முன்பாக வந்தபோது, நான் எனது கனவை அவனிடம் சொன்னேன். அவன், “பெல்தெஷாத்சார்” என்னும் என் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறான். அவனுக்குள் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருக்கிறது.
9 Ngĩĩra Beliteshazaru, mũnene wa ago othe atĩrĩ, “Nĩnjũũĩ atĩ roho wa ngai iria theru ũrĩ thĩinĩ waku, na gũtirĩ ũndũ ũrĩ hitho-inĩ ũngĩkũrema. Gĩkĩ nĩkĩo kĩroto gĩakwa; nawe he ũtaũri wakĩo.
நான் அவனிடம், “மந்திரவாதிகளுள் பிரதானமானவனே பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தெய்வங்களின் ஆவி உன்னிடம் உண்டென்பதை நான் அறிவேன். எந்த மறைபொருளையும் வெளிப்படுத்துவது உனக்குக் கடினமல்ல. இதுதான் எனது கனவு, அதன் விளக்கத்தைச் சொல் என்றேன்.”
10 Ici nĩcio cioneki iria ndonire rĩrĩa ndaakomete ũrĩrĩ-inĩ wakwa: Ndarorire ngĩona hau mbere yakwa harũngiĩ mũtĩ ũrĩ bũrũri gatagatĩ. Naguo warĩ mũraihu mũno.
நான் எனது படுக்கையில் படுத்திருக்கையில் கண்ட தரிசனங்கள் இவையே: நான் பார்த்தபோது எனக்கு முன்பாக நாட்டின் நடுவில் ஒரு மரம் நின்றது. அது மிக உயரமாயிருந்தது.
11 Mũtĩ ũcio ũkĩneneha ũkĩgĩa na hinya nako gacũmbĩrĩ kaguo gakahutia matu mairũ; naguo wonekaga nginya ituri ciothe cia thĩ.
அந்த மரம் விசாலமாயும் வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை ஆகாயத்தைத் தொட்டது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அதைப் பார்க்கக் கூடியதாயிருந்தது.
12 Mathangũ maguo maarĩ mathaka, na maciaro maguo makaingĩha warĩ na irio cia kũhũũnia andũ othe. Nyamũ cia gĩthaka ciaikaraga kĩĩruru-inĩ kĩaguo, nacio nyoni cia rĩera-inĩ igaikaraga honge-inĩ ciaguo; indo ciothe iria irĩ muoyo ciarĩĩaga maciaro maguo.
அதன் இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டன. எல்லோருக்கும் உணவும் அதில் இருந்தது. அதன் கீழே வெளியின் மிருகங்கள் புகலிடமடைந்திருந்தன. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகளும் குடியிருந்தன. அதிலிருந்து எல்லா உயிரினங்களுக்கும் உணவு கிடைத்தது.
13 “Ningĩ o ngomete ũrĩrĩ-inĩ wakwa ngĩrora ngĩona cioneki-inĩ icio, na hau mbere yakwa harĩ na mũrangĩri, mũndũ mũtheru, agĩikũrũka oimĩte igũrũ.
நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது, இந்தத் தரிசனத்தைக் கண்டேன். அதில் பரலோகத்திலிருந்து இறங்கி ஒரு பரிசுத்த தூதன் எனக்கு முன்பாக வந்தார்.
14 Akĩanĩrĩra na mũgambo mũnene, akiuga atĩrĩ: Temai mũtĩ ũcio na mũhũrũre honge ciaguo; itithiai mathangũ maguo, na mũhurunje maciaro maguo. Nyamũ nacio ciũre ciehere rungu waguo, o na nyoni ciume honge-inĩ ciaguo.
அவர் உரத்த சத்தமிட்டு, “இந்த மரத்தை வெட்டி வீழ்த்துங்கள். கிளைகளை அகற்றிப்போடுங்கள். அவற்றின் இலைகளை உதிர்த்து விடுங்கள். பழங்களைப் பறித்தெறியுங்கள். இந்த மரத்தின் கீழுள்ள மிருகங்களெல்லாம் ஓடிவிடட்டும். அதன் கிளைகளில் தங்கியுள்ள பறவைகளும் பறந்துவிடட்டும்.
15 No rĩrĩ, mũreke gĩthukĩ na mĩri yakĩo ciohwo na kĩgera na gĩcango, nacio itigwo tĩĩri-inĩ, kũu nyeki-inĩ ya gĩthaka. “Nĩaihũgagio nĩ ime rĩa igũrũ, na atũũranagie na nyamũ kũu nyeki-inĩ ĩrĩa nduru ya gĩthaka.
ஆனால் அதன் அடிமரத்தையும், வேர்களையும் இரும்பினாலும், வெண்கலத்தினாலும், கலந்து செய்யப்பட்ட சங்கிலியில் கட்டப்பட்டதாய் வயல்வெளியின் புற்தரையில் மீந்திருக்க விட்டுவிடுங்கள்” என்றார். மேலும் அவர், “‘வானத்தின் பனியில் நனைந்து, பூமியிலுள்ள மிருகங்களோடு வெளியில் பயிர்களுக்கிடையில் வாழட்டும்.
16 Meciiria make nĩmagarũrwo matige gũtuĩka ta ma mũndũ, nake agĩe na meciiria ta ma nyamũ, ihinda ta rĩa mĩaka mũgwanja.
அவனுடைய மனம் மாற்றப்பட்டு மனித மனமாயிராமல் போகட்டும். ஏழு காலங்கள் அவனைக் கடந்துசெல்லும்வரை மிருகத்தின் மனம் அவனுக்குக் கொடுக்கப்படட்டும்.
17 “‘Itua rĩu rĩanĩrĩirwo nĩ arangĩri, narĩo rĩgekĩrwo hinya nĩ arĩa atheru, nĩgeetha arĩa marĩ muoyo mamenye atĩ Ũrĩa-ũrĩ-Igũrũ-Mũno nĩwe wathaga mothamaki ma andũ, naguo ũthamaki aũheaga o ũrĩa angĩenda kũũhe, na agatũũgĩria mũndũ ũtarĩ igweta o na hanini nĩguo ũtuĩke wake.’
“‘அந்த தீர்மானம் தூதுவர்களாலும் அந்தத் தீர்ப்பு பரிசுத்தராலும் அறிவிக்கப்படுகிறது. மகா உன்னதமானவரே பூமியில் மனிதருடைய அரசுகளுக்கு மேலாக ஆளுபவர் என்பதையும், அவர் தாம் விரும்புகிறவர்களுக்கு அரசுகளைக் கொடுப்பவர் என்பதையும், அவற்றிற்கு மேலாக மனிதரில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை நியமித்திருப்பவர் என்பதையும், உலகில் வாழ்வோர் எல்லோரும் அறிந்துகொள்ளும்படியே அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.’
18 “Kĩu nĩkĩo kĩroto kĩrĩa niĩ, Mũthamaki Nebukadinezaru ndarootire. Atĩrĩrĩ, wee Beliteshazaru, ta njĩĩra ũrĩa kiugĩte kuona atĩ andũ arĩa angĩ othe oogĩ a ũthamaki wakwa nĩmaremetwo nĩkũndaũrĩra. No rĩrĩ, wee no ũhote tondũ roho wa ngai iria theru ũrĩ thĩinĩ waku.”
“அரசனான நேபுகாத்நேச்சாராகிய நான் கண்ட கனவு இதுவே. பெல்தெஷாத்சாரே இப்பொழுது இதன் விளக்கத்தை நீ எனக்குச் சொல். ஏனெனில் என் அரசிலுள்ள ஞானிகள் எவராலும் இதை எனக்கு விளக்கிச் சொல்ல முடியவில்லை. ஆனால் உன்னால் முடியும். ஏனெனில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி உனக்குள் இருக்கிறது என்றான்.”
19 Hĩndĩ ĩyo Danieli (na nowe wĩtagwo Beliteshazaru) akĩamba gũtangĩka mũno kwa ihinda, na akĩmaka mũno meciiria-inĩ make. Nĩ ũndũ ũcio mũthamaki akĩmwĩra atĩrĩ, “Beliteshazaru, tiga kũmakio nĩ kĩroto kĩu kana ũtaũri wakĩo.” Beliteshazaru agĩcookia atĩrĩ, “Mwathi wakwa, naarĩ korwo kĩroto kĩu kĩerekererio thũ ciaku, o na ũtaũri wakĩo wathĩrĩrio andũ arĩa magũthũire!
அப்பொழுது பெல்தெஷாத்சார் என அழைக்கப்படும் தானியேல், சிறிது நேரம் மிகவும் குழப்பமடைந்து நின்றான். அவனுடைய சிந்தனைகள் அவனுக்குத் திகிலைக் கொடுத்தது. அதைக்கண்ட அரசன், “பெல்தெஷாத்சாரே, இக்கனவினாலோ, அதன் விளக்கத்தினாலோ நீ கலங்கவேண்டாம் என்றான்.” அதற்கு பெல்தெஷாத்சார், “என் தலைவனே இக்கனவு உமது பகைவர்களுக்கும், அதன் விளக்கம் உமது எதிரிகளுக்கும் பலித்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்குமே!
20 Mũtĩ ũcio wonire, ũrĩa wanenehire na ũkĩgĩa na hinya, nako gacũmbĩrĩ kaguo gakahutia matu mairũ, na ũkoonekaga nĩ thĩ yothe,
நீர் ஒரு மரத்தைக் கண்டீரே; அது விசாலமானதாயும், வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் காணக்கூடியதாய் ஆகாயத்தைத் தொட்டது.
21 ũrĩ na mathangũ mathaka na maciaro maingĩ, na ũkaheaga andũ othe irio, na nyamũ cia gĩthaka cikaarahaga kĩĩruru-inĩ kĩaguo, na ũkagĩa na itara honge-inĩ ciaguo cia nyoni cia rĩera-inĩ-rĩ,
அதோடு இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டது. அவை எல்லோருக்கும் போதுமான உணவாயும் இருந்தன. வெளியின் மிருகங்களுக்கு அம்மரம் புகலிடம் கொடுத்தது. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் கூடுகட்ட இடமும் இருந்தது.
22 wee mũthamaki, nĩwe mũtĩ ũcio! Nĩũnenehete na ũkagĩa na hinya; ũnene waku ũgakũra nginya ũkahutia matu mairũ, naguo wathani waku ũgatambũrũka ũgakinya kũndũ kũraya gũkũ thĩ.
அரசே! நீரே அந்த மரம். நீர் பெரியவராயும், வல்லமையுடையவராயும் ஆகியிருக்கிறீர். உமது மேன்மை ஆகாயத்தைத் தொடும் வரைக்கும் வளர்ந்திருக்கிறது. உம்முடைய ஆளுகை பூமியின் தூரமான பகுதி வரைக்கும் விரிவடைந்திருக்கிறது.
23 “Wee, mũthamaki-rĩ, Nĩwonire mũrangĩri, mũndũ mũtheru, agĩikũrũka oimĩte matu-inĩ, akiugaga atĩrĩ, ‘Temai mũtĩ ũcio na mũwanange, no mũtige gĩthukĩ kĩohetwo na kĩgera na gĩcango, kũu nyeki-inĩ ya gĩthaka nayo mĩri yakĩo ĩtigwo tĩĩri-inĩ. Nake nĩaihũgagio nĩ ime rĩa matu-inĩ; nĩaikarage ta nyamũ cia gĩthaka ihinda rĩa mĩaka mũgwanja.’
“அரசே! பரலோகத்திலிருந்து பரிசுத்த தூதுவன் ஒருவன் இறங்கி வருவதையும் கண்டீர். அவன், ‘இந்த மரத்தை வெட்டி வீழ்த்தி அழித்துப்போடுங்கள்; ஆனால் அதன் அடிமரத்தை இரும்பினாலும், வெண்கலத்தினாலும் கட்டி, புற்தரையில் இருக்கும்படி விடுங்கள். அதன் வேர்களைத் தரையில் விட்டுவிடுங்கள். அவன் ஆகாயத்துப் பனியில் நனையட்டும். அப்படி ஏழு காலங்கள் கடந்துபோகும் வரைக்கும் காட்டு மிருகங்களைப்போல் வாழட்டும் என்றும் சொல்லக்கேட்டீரே.’
24 “Atĩrĩrĩ, wee mũthamaki, ũtaũri wa kĩroto kĩu nĩguo ũyũ, narĩo ituĩro rĩrĩa rĩtuĩtwo nĩ Ũrĩa-ũrĩ-Igũrũ-Mũno nĩguo rĩgũkore wee, mũthamaki, mwathi wakwa, nĩrĩo rĩĩrĩ:
“அரசே, விளக்கம் இதுவே; அரசனாகிய என் தலைவருக்கு எதிராக மகா உன்னதமானவர் பிறப்பித்த கட்டளை இதுவே:
25 Atĩrĩrĩ, nĩũkaingatwo weherio kuuma kũrĩ andũ, ũgatũũranagie na nyamũ cia gĩthaka; ũkaarĩĩaga nyeki ta ngʼombe, na ũihũgagio nĩ ime rĩa kuuma igũrũ. Mĩaka mũgwanja nĩĩgathira, o nginya ũmenye atĩ Ũrĩa-ũrĩ-Igũrũ-Mũno nĩwe ũthamakagĩra mothamaki mothe ma andũ, na akamaheana kũrĩ o ũrĩa angĩenda.
நீர் மக்கள் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர். ஆகாயத்துப் பனியில் நனைந்து மாட்டைப்போல் புல்லைத் தின்பீர். மகா உன்னதமானவர் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர் விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார் என்பதையும் நீர் ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் உம்மைக் கடந்துபோகும்.
26 Watho ũrĩa woigire gĩthukĩ na mĩri yakĩo gĩtigwo, nĩ kuuga atĩ nĩũgacookerio ũthamaki waku rĩrĩa ũkaamenya atĩ wathani uumaga Igũrũ.
ஆயினும், ‘வேர்களோடு அடிமரத்தை விட்டு வை’ என்ற கட்டளையின் விளக்கம் இதுவே: பரலோகமே ஆளுகை செய்கிறது என்பதை நீர் ஏற்றுக்கொள்ளும்போது, உமது அரசு உமக்கே திரும்பிக் கொடுக்கப்படும்.
27 Nĩ ũndũ ũcio, wee mũthamaki, ĩtĩkĩra kũigua ũtaaro wakwa: Tigana na mehia maku, wĩkage maũndũ marĩa magĩrĩire, na ũtige waganu waku, na ũndũ wa kũiguĩra arĩa ahinyĩrĩrie tha. Hihi kwahoteka ũgaacĩru waku ũthiĩ na mbere.”
ஆகையால் அரசே, தயவுசெய்து நான் சொல்லும் ஆலோசனையைக் கேளும். நியாயமானவற்றைச் செய்து உமது பாவங்களையும், ஒடுக்கப்பட்டோருக்கு இரக்கம் காட்டி உமது கொடுமைகளையும் அகற்றிவிடும். அதனால் ஒருவேளை உமது வளமான வாழ்வு நீடிக்கலாம் என்றான்.”
28 Na rĩrĩ, maũndũ macio mothe nĩmakorire Mũthamaki Nebukadinezaru.
இவையெல்லாம் நேபுகாத்நேச்சார் அரசனுக்கு நிறைவேறியது.
29 Thuutha wa mĩeri ikũmi na ĩĩrĩ, rĩrĩa mũthamaki aaceerangaga arĩ nyũmba igũrũ ya ũthamaki kũu Babuloni,
பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்பு ஒரு நாள் அரசன், பாபிலோனின் அரச அரண்மனை மொட்டைமாடியில் உலாவிக்கொண்டிருந்தான்.
30 akiuga atĩrĩ, “Githĩ ĩno tiyo Babuloni, itũũra inene rĩrĩa njakĩte rĩrĩ gĩikaro kĩa mũthamaki, na ũndũ wa ũhoti wakwa mũingĩ, na nĩ ũndũ wa riiri wa ũnene wakwa?”
அப்பொழுது அரசன், “நான் கட்டிய மாபெரும் பாபிலோன் இது அல்லவா! எனது மிகுந்த வல்லமையினால் எனது மாட்சிமையின் மகிமைக்காக எனது அரச குடியிருப்பாக இதைக் கட்டினேன், என தனக்குள் சொல்லிக்கொண்டான்.”
31 Kahinda o kau aaragia, mũgambo ũkiuma igũrũ, ũkiuga atĩrĩ, “Rĩĩrĩ nĩrĩo ituĩro rĩrĩa ũtuĩrĩirwo, Mũthamaki Nebukadinezaru: Atĩrĩrĩ, nĩwehererio ũhoti wa ũthamaki waku.
இந்த வார்த்தைகள் அவனுடைய உதட்டில் இன்னும் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “நேபுகாத்நேச்சார் அரசனே, உனக்குத் தீர்ப்பிடப்பட்டது இதுவே: உனது அரச அதிகாரம் உன்னிடமிருந்து இப்பொழுதே பறிக்கப்பட்டுவிடும்.
32 Nĩũkũingatwo weherio kuuma kũrĩ andũ, ũgatũũranagie na nyamũ cia gĩthaka; ũrĩrĩĩaga nyeki ta ngʼombe. Mĩaka mũgwanja nĩĩgũthira, o nginya ũmenye atĩ, Ũrĩa-ũrĩ-Igũrũ-Mũno nĩwe ũthamakagĩra mothamaki mothe ma andũ, na akamaheana kũrĩ o ũrĩa angĩenda.”
நீ மனிதரிடமிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வாய். மாடுகளைப்போல் புல்லைத் தின்பாய். மகா உன்னதமானவர், மனிதர்களின் அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், தாம் விரும்பியவர்களுக்கு அரசாட்சியைக் கொடுப்பவர் என்பதையும் நீ ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும் என அச்சத்தம் சொல்வதைக் கேட்டான்.”
33 O hĩndĩ ĩyo ituĩro rĩrĩa rĩatuĩrĩirwo Nebukadinezaru rĩkĩhinga. Akĩingatwo, akĩeherio kuuma kũrĩ andũ, na akĩrĩa nyeki ta ngʼombe. Mwĩrĩ wake waihũgagio nĩ ime rĩa igũrũ, o nginya njuĩrĩ yake ĩkĩraiha o ta njoya cia nderi, na ndwara ciake ikĩraiha o ta cia nyoni.
உடனடியாக நேபுகாத்நேச்சாரைப் பற்றிச் சொல்லப்பட்டது நிறைவேறியது. அவன் மனிதரிலிருந்து துரத்தப்பட்டு, மாடுகளைப்போல் புல்லைத் தின்றான். அவனுடைய உடல் ஆகாயத்துப் பனியில் நனைந்து அவனுடைய தலைமயிர் கழுகுகளின் இறகுகளைப்போல் வளர்ந்தது. அவனுடைய நகங்கள் பறவையின் நகங்களைப்போல் வளர்ந்தது.
34 Na rĩrĩ, mĩaka ĩyo yathira-rĩ, niĩ, Nebukadinezaru, ngĩtiira maitho makwa na igũrũ, na ngĩcookererwo nĩ ũgima wa meciiria makwa. Ningĩ ngĩgooca Ũrĩa-ũrĩ-Igũrũ-Mũno; ngĩmũtĩĩa na ngĩkumia ũcio ũtũũraga muoyo tene na tene.
அந்த ஏழு காலம் முடிந்தபின் நேபுகாத்நேச்சாராகிய நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அந்நேரம் எனது சுயபுத்தி எனக்குத் திரும்பவும் கொடுக்கப்பட்டது. அப்பொழுது நான் மகா உன்னதமானவரைத் துதித்தேன்.
அவர் பூமியின் மக்கள் கூட்டங்களை
36 O ihinda-inĩ o rĩu ndaacookereirwo nĩ ũgima wa meciiria makwa-rĩ, norĩo ndaacookeirio gĩtĩĩo gĩakwa na ũkaru wakwa nĩgeetha ũthamaki wakwa ũgĩe na riiri. Ningĩ ataari akwa na andũ arĩa maarĩ igweta makĩĩnyamũkĩra, ngĩcookio gĩtĩ-inĩ gĩakwa kĩa ũnene, na ngĩneneha gũkĩra mbere.
எனக்கு சுயபுத்தி திரும்பவும் வந்தது. அதே நேரத்தில் எனது அரசின் மேன்மைக்காக, எனது கனமும், மகிமையும் எனக்கு மீண்டும் கிடைத்தன. என் ஆலோசகர்களும், உயர்குடி மக்களும் திரும்பவும் என்னைத் தேடிவந்தார்கள். நான் திரும்பவும் அரண்மனையில் அமர்த்தப்பட்டு, முன்பைவிட மேன்மையடைந்தேன்.
37 Na rĩrĩ, niĩ Nebukadinezaru-rĩ, nĩngũkumia, na ndũũgĩrie, na ngooce Mũthamaki wa igũrũ, nĩgũkorwo maũndũ marĩa mothe ekaga nĩmagĩrĩire, na mĩthiĩre yake yothe nĩ ya kĩhooto. Nao arĩa mathiiaga na mwĩgaatho nĩahotaga kũmanyiihia.
இப்பொழுது நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோக அரசரைத் துதித்து மேன்மைப்படுத்தி, மகிமைப்படுத்துகிறேன். ஏனெனில் அவர் செய்வதெல்லாம் நியாயமும், அவர் வழிகளெல்லாம் நீதியுமானவை; அவர் பெருமையில் நடப்பவர்களைத் தாழ்த்த வல்லவராயிருக்கிறார்.