< ପ୍ରେରିତ୍‌ 4 >

1 ପିତର୍‍ ଆରି ଯହନ୍‍ ରେମୁଆଁଇଂକେ ଦେକ୍‍ରକମ୍‍ ବୁଦି ବିଡିଙ୍ଗ୍‍ନେ ବେଲା ମନ୍ଦିର୍‍ନେ ଉଡ଼ିରୁଆ ପୁଜାରି ମନ୍ଦିର୍‍ ଉର୍‍ଣ୍ଡ୍ରେଇଂନେ ସେନାପତି ଆରି ଉଡ଼ିରୁଆ ସାଦୁକୀଇଂ ପିଙ୍ଗ୍‍ଚାଆର୍କେ ।
பேதுருவும் யோவானும் மக்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும், ஆலயக்காவலர் தலைவனும், சதுசேயரும் அங்கு வந்தார்கள்.
2 ମେଇଂ ରିସାଡିଙ୍ଗ୍‍ ୱେଲେଆର୍‌ଗେ ଡାଗ୍ଲା ପିତର୍‍ ଆରି ଯହନ୍‍ ରେମୁଆଁଇଂକେ ସିକ୍ୟା ବିଡିଙ୍ଗ୍‍ଗେ ଆରି ଜିସୁନେ ସାମୁଆଁ ସାଃଚେ ଗୁଏକ୍ନେ ରେମୁଆଁଇଂବାନ୍‍ ଗୁଏଚେ ତଃଡ଼୍ୟାନେ ବିସୟ୍‍ରେ ବାସଙ୍ଗ୍‍ଡିଂଗେ ।
இயேசுவில் இறந்தோருக்கு உயிர்த்தெழுதல் உண்டென்று மக்களுக்கு அப்போஸ்தலர் போதித்து, அறிவித்ததினால் அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள்.
3 ତେସା ମେଇଂ ଜେଲ୍‍କାନାନ୍ନିଆ ପିତର୍‍ ଆରି ଯହନ୍‍କେ ବନ୍ଦି ଆଡିଙ୍ଗ୍‍ବି ଆର୍କେ । ଆତେନ୍‌‍ ଦିନା ଜାବର୍‌ ଜିଲମ୍‍ ଡିଙ୍ଗ୍‍ ୱେଲେଲା ଆମେଇଂକେ ମାର୍‍ତଡ଼େ ଜାକ ଜେଲ୍‍କାନା ବିତ୍‍ରେ ବଆର୍‌କେ ।
அவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்து, மாலை நேரமாய் இருந்ததால் அவர்களை மறுநாள் வரைக்கும் சிறையில் போட்டார்கள்.
4 ମାତର୍‍ ଗୁଲେ ରୁଆ ମେଇଂନେ ବୁଦି ଦ୍ରିଗ୍‍ଚେ ବିସ୍‍ବାସ୍‍ ଡିଙ୍ଗ୍‍ଆର୍କେ ଆରି ଙ୍ଗିରେଇଂନେ ସଂକ୍ୟା ମ୍ନାଚେ ପ୍ରାୟ୍ ମାଲ୍ ଅଜାର୍‍ ଡିଙ୍ଗ୍‍କେ ।
ஆனால், வசனத்தைக் கேட்ட பலர் விசுவாசித்தார்கள். விசுவாசித்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
5 ମାର୍‍ତଡ଼େ ଜିଉଦି ନେତାଇଂ ମନ୍ଦିର୍‌ ବିନ୍‌ବିନ୍‌ ରେମୁଆଁଇଂ ବାରି ଦରମ୍‌ ଗୁରୁଇଂ ଯିରୁସାଲାମ୍‌ ମୁଇଂ ଅରିଆ ଡିଙ୍ଗ୍‌ଆର୍କେ ।
மறுநாளிலே ஆளுநர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள்.
6 ମେଇଂ ହାନାନ କୟାଫା ଜହନ୍‌ ଆଲେକ୍‍ଜାଣ୍ତାର୍‍ ବାରି ମ୍ନା ପୁଜାରି ଡୁଆଣ୍ଡ୍ରେନେ ବିନ୍‍ରେକେ କୁଡ଼େ ଆର୍କେ ।
பிரதான ஆசாரியனாகிய அன்னாவும் அங்கே இருந்தான். காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோருடன் பிரதான ஆசாரியனின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள்.
7 ମେଇଂ ପ୍ରେରିତ୍‌ ସିସ୍‍ଇଂକେ ସାମ୍‍ନେ ଆତୁଆଁଚେ ସାଲିଆକୁଆର୍କେ, “ଜାନେ ବପୁରେ ବା ଜା ମ୍ନିରେ ଆକେନ୍‍ ଡିଙ୍ଗ୍‍ପେଡିଙ୍ଗ୍‍?”
அவர்கள் பேதுருவையும் யோவானையும் தங்களுக்குமுன் கொண்டுவரும்படிச்செய்து, அவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்: “எந்த வல்லமையினால் அல்லது எந்தப் பெயரினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்றார்கள்.
8 ପିତର୍ ପବିତ୍ର ଆତ୍ମାନେ ବପୁ ବାଚେ ଆମେଇଂକେ ଉତର୍‍ ବିକେ “ଜିଉଦି ଜାତିନେ ଇଃସାଙ୍ଗ୍‌ ଆରି ଦର୍ମ ନେତାଇଂ!
அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவர்களிடம்: “ஆளுநர்களே, யூதரின் தலைவர்களே,
9 ଜଦି ଏକେ ନେ ଆକେନ୍‍ ଚଟା ନ୍‍ସା ଡିଙ୍ଗ୍‍ ନେବକ୍ନେ ବଲ୍‍ କାମ୍ ବିସୟ୍‌ରେ ପେଇଂ ପ୍ରସ୍‌ନ ଡିଙ୍ଗ୍‍ପେଡିଙ୍ଗ୍‍ ଆରି ମେଁ ଡିରକମ୍‍ ନିମାଣ୍ଡା ଡିଙ୍ଗ୍‍କେ ଡାଗ୍‌ଚେ ମ୍ୟାଃନ୍‍ସା ଚାଏଁପେଡିଙ୍ଗ୍‍କେ ।
ஒரு முடவனுக்குக் காண்பிக்கப்பட்ட ஒரு அனுதாபச் செயலுக்கு நாங்கள் இன்று காரணம் காட்டவேண்டுமென்றும், அவன் எப்படி சுகமானானென்றும் நாங்கள் விசாரிக்கப்படுகிறோம் என்றால்,
10 ତେଲା ପେ ଆରି ଇଶ୍ରାୟେଲୀୟନେ ସାପା ମ୍ୟାନ୍‍ସା ଦର୍‍କାର୍‍ ଜେ ପେ ସାମ୍‍ନେଆ ତୁଆଁ ଲେକ୍ନେ ଆକେନ୍‍ ରେମୁଆଁ କେବଲ୍‍ ନାଜରିତିୟ ଜିସୁ କିସ୍‌ଟନେ ମ୍ନିନେ ବପୁରେ ପୁରାପୁରି ନିମାଣ୍ଡା ଡିଙ୍ଗ୍‍ଲେକେ । ଆତେନ୍‌‍ ଜିସୁକେ ପେ କୁରୁସ୍‌ନ୍ନିଆ ଆଡେଚେ ପେବାଗୁଏକେ । ମାତର୍‍ ଇସ୍‍ପର୍‍ ଆମେକେ ଗୁଏକ୍ନେ ବାନ୍ ଆତଡ଼ିଆବକେ ।
நீங்களும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அறியவேண்டியது இதுவே: நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால், இந்த மனிதன் உங்களுக்கு முன்பாக சுகமடைந்தவனாய் நிற்கிறான். அந்த இயேசுவையே நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள், ஆனால் இறைவனோ இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்.
11 ଜିସୁନେ ବିସୟ୍‍ରେ ଆଃ ଦର୍ମସାସ୍ତର୍‌ନ୍ନିଆ ଗୁଆର୍‍ବକେ, ଆଣ୍ଡିନେ ବ୍ରିକେ ଡୁଆ ଆରେଡ୍ରେ ଆମେକେ ଦର୍‍କାର୍‍ ଣ୍ଡୁ ଡାଗ୍‍ଚେ ଜଗ୍‌ତ୍ଲାଗ୍‍ବଗେ । ମାତର୍‍ ଆତେନ୍‌‍ ବ୍ରି ଏକେ କନ୍‍ନେ ମୁଲ୍‌ ବ୍ରି ଡିଙ୍ଗ୍‍ଲେକେ ।
அந்த இயேசுவே, “‘கட்டிடம் கட்டுகிறவர்களாகிய நீங்கள் புறக்கணித்த கல், அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’
12 ଆମେ ଆନ୍ତାର୍‌ଲା ଆରି ଜାଡାଗ୍ରା ଉଦାର୍ ଣ୍ଡୁ; ଡାଗ୍ଲା ଜାନେ ବାନ୍ ଆନେକେ ଉଦାର୍‍ ବାନେ ଡିଂଏ କିତଂଇନି ଆଲ ରେମୁଆଁଇଂନେ ବିତ୍ରେବାନ୍ ଆରି ମେଃଡିଗ୍ ମ୍ନି ବିଆବକେ ଣ୍ଡୁ ।”
இயேசு அல்லாமல், வேறு எவரிலும் இரட்சிப்பு இல்லை. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின்கீழ், மனிதரிடையே அவருடைய பெயரின்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றான்.
13 ପିତର ଆରି ଜହନ୍‌ ଅସିକିତ୍‍ ଆରି ସାଦାସିଦା ରେମୁଆଁ ଲେଃଗେ ଡାଗ୍‌ଚେ ମ୍ନାଃ କୁକପାର୍‌ନେ ସଦସ୍ୟଇଂ ମ୍ୟାଃଲେଆର୍ଗେ । ତେସା ମ୍ୱାୟା ସିସ୍‍ନେ ସାହାସ୍‍ କେଚେ ମେଇଂ ବକୁଆ ଡିଙ୍ଗ୍‍ୱେଆର୍ଗେ । ବାରି ମେଇଂ ମ୍ୟାଃଲେଆର୍ଗେ, ଆତେନ୍‌‍ ମ୍ୱାୟା ଜିସୁ ଏତେ ଲେଆର୍ଗେ ।
பேதுரு, யோவான் ஆகிய இருவருடைய துணிச்சலையும், இவர்கள் கல்வியறிவு இல்லாத சாதாரண மனிதர் என்பதையும் தெரிந்துகொண்டபோது, அவர்கள் மலைத்துப்போனார்கள். இவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.
14 ମାତର୍ ମେଇଂ ବିରଦ୍‍ ଡିଙ୍ଗ୍‍ଚେ ମେଃଡିଗ୍‍ ବାସଙ୍ଗ୍‍ ଆୟାଆର୍କେ ଣ୍ଡୁ; ଡାଗ୍ଲା ମେଁ ନିମାଣ୍ଡା ଡିଙ୍ଗ୍‍ଲେକ୍ନେ ରେମୁଆଁକେ ପିତର୍‍ ଆରି ଯହନ୍‍ ଏତେ ତୁଆଁଲେକ୍ନେ କେକେ ।
சுகமடைந்த மனிதன் இவர்கள் முன்பு நின்றுகொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள். அதனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.
15 ମେଇଂ ସବାବାନ୍‍ ତାର୍‍ୱେ ନ୍‍ସା ଆଦେସ୍‍ ବିଃଆର୍‌କେ । ତେନ୍‌ ଇଡ଼ିଂ ନେତାଇଂ ମେଃ ଡିଙ୍ଗ୍‍ଆର୍‍ଏ, ଆତେନ୍‌‍ ବିସୟ୍‌ରେ ମେଇଂ ବିତ୍‍ରେ ବାଲିର୍‌ ବାତା ଡିଙ୍ଗ୍‍ ଆର୍କେ ।
எனவே, ஆலோசனைச் சங்கத்திலிருந்து இவர்களை வெளியே போகும்படி உத்தரவிட்டபின், அவர்கள் இந்த விஷயத்தைக்குறித்து ஒருவரோடொருவர் கலந்து பேசினார்கள்:
16 ମେଇଂ ବାସଙ୍ଗ୍‍ଆର୍କେ “ନେ ଆକ୍ମେଇଂ ଆଡ଼ାତ୍ରା ମେଃ ନେଃଡିଂପା? କିମେଇଂ ଡିଙ୍ଗ୍‍ବକ୍ନେ କାବା କାମ୍ ବିସୟ୍‍ରେ ଯିରୂଶାଲମ୍‌ନେ ସାପାରେ ମ୍ୟାଃଲେଆର୍ଗେ । ଆକେନ୍‍ ସତ୍‍କେ ନେ ଆରି ଅବିସ୍‌ବାସ୍‌ ଡିଙ୍ଗ୍‍ ନେୟା ଣ୍ଡୁ ।
“நாம் இவர்களுக்கு என்ன செய்யலாம்? ஏனென்றால், குறிப்பிடத்தக்க ஒரு பெரிய அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள் என்பது, எருசலேமில் வாழ்கிற அனைவருக்கும் தெரியும்; இதை நாமும் மறுக்க முடியாது.
17 ମାତର୍‍ ଆକେନ୍‍ ବ୍ନାଇର୍‍ ଜେନ୍ତିକି ରେମୁଆଁଇଂ ଡାଗ୍ରା ଜାବର୍‌ ଉଡ୍ରା ଆଡିଙ୍ଗ୍‍ ଆରି ଜିସୁନେ ମ୍ନିରେ ଜା ଡାଗ୍ରା ଡିଗ୍‍ ମେଃଡିଗ୍‍ ମାବାସଙ୍ଗ୍‍ ନ୍‌ସା ଆକ୍ମେଇଂକେ ନେ ସାବ୍‍ଦାନ୍‍ ଆଡିଙ୍ଗ୍‍ ନେବିପା ।”
ஆனால், இது தொடர்ந்து மக்களிடையே பரவாதபடி தடைசெய்வதற்கு, ‘இந்தப் பெயரிலே அவர்கள் இனிமேல் யாருடனும் பேசக்கூடாது’ என்று, நாம் அவர்களை எச்சரிக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
18 ତେସା ମେଇଂ ପିତର୍‍ ଆରି ଯହନ୍‍କେ ବାର୍‌ମୁଇଂତର୍‍ ବିତ୍‍ରେ ୱାଆର୍କେ ଆରି ଅନାଡିଗ୍‍ ଜିସୁନେ ମ୍ନିରେ ମେଃଡିଗ୍‍ ସାମୁଆଁ ମାବାସଙ୍ଗ୍‍ ନ୍‍ସା ଆରି ସିକ୍ୟା ମାବିନ୍‍ସା ତରକ୍‍ ଆଡିଙ୍ଗ୍‍ବି ଆର୍କେ ।
எனவே அவர்கள் மீண்டும் பேதுருவையும், யோவானையும் உள்ளே கூப்பிட்டு, “இயேசுவின் பெயரால் எதையும் பேசவோ, போதிக்கவோ கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
19 ମାତର୍‍ ପିତର ଆରି ଜହନ୍‌ ଆମେଇଂକେ ଉତର୍‍ ବିଃକେ, “ପର୍‍ମେସର୍‍ନେ ଆଦେସ୍‌ ଆନ୍ତାର୍‍ଚେ ପେନେ ଆଦେସ୍‌ ପାଲନ୍‍ ଡିଙ୍ଗ୍‍ନେ ନେନେ ଟିକ୍‌ କି ଣ୍ଡୁ, ଆତେନ୍‌‍ ପେ ବିଚାର୍‌ ଡିଙ୍ଗ୍‍ପା ।
ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களிடம், “நாங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், உங்களுக்குக் கீழ்ப்படிவது இறைவனுடைய பார்வையில் சரியானதோ என்று? நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
20 ନେ ମେଃନେ କେନେଲେକେ ଆରି ଅଁନେଲେକେ ଆତେନ୍‌‍ ରେମୁଆଁଇଂକେ ମାବାସଙ୍ଗ୍‍ଚେ ଲେଃନେୟା ଣ୍ଡୁ ।”
நாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பேசாமல் இருக்க எங்களால் முடியாது” என்றார்கள்.
21 ଆତ୍‍ବା ମେଇଂ ରେମୁଆଁଇଂକେ କେଚେ ଆମେଇଂକେ ଡଣ୍ଡ୍‍ ବିନେ ମେଃଡିଗ୍‍ ଉପାୟ୍‍ ମାବାଚେ ଆମେଇଂକେ ଅଦିକ୍‍ ଆପ୍‍ଟଚେ ଆନ୍‍ତାର୍‍ବି ଆର୍କେ ତେସା ମେଃନେ ଗଟେ ଲେଃଗେ ଆତେନ୍‌‍ସା ରେମୁଆଁ ସାପାରେ ଇସ୍‍ପର୍‍ନେ ମ‍ଇମା ଡିଙ୍ଗ୍‌ଆର୍‌କେ ।
அவர்கள் மீண்டும் பேதுருவையும் யோவானையும் பயமுறுத்தியபின், அனுப்பிவிட்டார்கள். எல்லா மக்களும் நடந்த அற்புதத்திற்காக இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தபடியால், இவர்களை எப்படிக் கண்டிப்பது என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை.
22 ମୁଡ଼ି ରେମୁଆଁ କାବା କାମ୍‍ରେ ନିମାଣ୍ଡା ଡିଙ୍ଗ୍‍ଲେଗେ ମେଁନେ ବୟସ୍‍ ଚାଲିସ୍‍ ମୁଆଃବାନ୍ ଅଦିକା ଲେଃଗେ ।
ஏனெனில், அற்புதமாய் சுகமடைந்தவன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
23 ପିତର୍‍ ଆରି ଯହନ୍‍କେ ଆନ୍ତାର୍‍ବିନେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ମେଇଂନେ ଦଲ୍‍ନ୍ନିଆ ଆଣ୍ଡେ ୱିଗ୍‍ଗେ ଆରି ମ୍ନା ପୁଜାରି ଆରି ଦର୍ମ ନେତାଇଂ ମେଃନେ ବାସଙ୍ଗ୍‍ବଗେ ଆତେନ୍‌‍ ଆମେଇଂକେ ଆମ୍ୟାଃକେ ।
பேதுருவும் யோவானும் விடுதலை செய்யப்பட்டதும், தங்களைச் சேர்ந்த மக்களிடம் திரும்பிப்போய், ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
24 ବିସ୍‍ବାସିଇଂ ସାପା ସାମୁଆଁ ଅଁକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍‍ ସାପାରେ ମୁଇଂନୁଗ୍‍ ରିସିଙ୍ଗ୍‍ଚେ ଇସ୍‍ପର୍‍ଡାଗ୍ରା ଆକେନ୍‍ ପାର୍‍ତନା ଡିଙ୍ଗ୍‍ଆର୍କେ “ଏ ମାପ୍‌ରୁ! କିତଂଇନି ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ କେଣ୍ଡିଆ ଆରି ଆତ୍‍ ଅରିଆ ଲେଡିଙ୍ଗ୍‍କ୍ନେ ସାପା କିଚି ତିଆର୍‍ ଡିଙ୍ଗ୍‍ ନାବକେ!
அவர்கள் இதைக் கேட்டதும், ஒன்றாக சத்தமிட்டு இறைவனிடம் மன்றாடினார்கள். அவர்கள், “எல்லாம் வல்ல கர்த்தாவே, நீரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர்.
25 ନେନେ ଅଃସେଣ୍ଡ୍ରେ ଦାଉଦ ନାନେ ସେବକ୍‌ ଲେଃଗେ । ମେଁ ପବିତ୍ର ଆତ୍ମାନେ ବାନ୍‍ ଆକେନ୍‍ ବ୍ନାଇର୍‍ ଗୁଆର୍‍ ବକେ ‘ଆକେନ୍‍ ଅଣଜିଉଦିଇଂ ମେଃନ୍‌ସା ୱିଙ୍ଗ୍‌ଆଃ ରିଙ୍ଗ୍‍ଆ ଡିଙ୍ଗ୍‍ ଆର୍‍ ଡିଙ୍ଗ୍‍କେ? ଆକେନ୍‍ ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ନେ ରେମୁଆଁଇଂ ମେଃନ୍‌ସା ପର୍‍ମେସର୍‍ ବିରଦ୍‍ରେ ଦଦ୍ୟା‍ ଚିନ୍ତା ବାବେ ଡିଙ୍ଗ୍‍ ଆର୍‍ଙ୍କେ? ଆକେନ୍‍ ସାପା ଦର୍‌କାର୍‌ ଣ୍ଡୁ ।
நீர் பரிசுத்த ஆவியானவரால் உமது ஊழியனும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது: “‘நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? மக்கள் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?
26 ମାପ୍‌ରୁନେ ବିରଦ୍‍ରେ ଆରି ମେଁନେ ମସିହନେ ବିରଦ୍‍ରେ ମଞ୍ଚ୍‌ପୁର୍‍ନେ ଇଃସାଙ୍ଗ୍‌ଇଂ ତୁଆଁ ଆର୍‍କେ ଆରି ସାସନ୍‍ ଡିଂଣ୍ଡ୍ରେ ମୁଇଂନ୍ନିଆ ରିସିଙ୍ଗ୍‍ ଆର୍କେ ।’
பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். ஆளுநர்களும் கர்த்தருக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடுகிறார்கள்.’
27 ଡାଗ୍ଲା ନାନେ ମୁଃଡ଼ି ପବିତ୍ର ଦାସ୍ ଜିସୁକେ ନାଁ ନାସ୍ରିକେ ପକ୍‌ରୁତ୍‌ରେ ଆକେନ୍‍ ନଗରିନ୍ନିଆ ହେରୋଦ ଆରି ପନ୍ତିୟ ପୀଲାତ ଅଣଜିଉଦି ଆରି ଇଶ୍ରାୟେଲୀୟନେ ରେମୁଆଁଇଂ ଏତେ କୁଡ଼େଚେ ପେବାନ୍‍ ବାଚେ ପେବକ୍ନେ ଜିସୁକେ ପେନେ ପବିତ୍ର ଦାସ୍‌ନେ ବିରଦ୍‍ରେ ଜଜ୍‌ନା ପେଡିଙ୍ଗ୍‍କେ ।
நீர் அபிஷேகம் செய்த உமது பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதற்கென, இந்த நகரத்தில் ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் யூதரல்லாத மக்களுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் ஒன்றுசேர்ந்தார்களே.
28 ପେନେ ବପୁ ଆରି ପେନେ ଇକ୍‌ଚାରେ ଜା ସାପା ଆଃଗଟେ ନ୍‍ସା ପେ ତିଆର୍‍ ଆଡିଙ୍ଗ୍‍ ପେବଗେ ମେଇଂ ରିସିଙ୍ଗ୍‍ଚେ ଆତେନ୍‌‍ ସାପା ଡିଙ୍ଗ୍‍ନ୍‍ସା ଲାଗେ ପଡ଼େଆର୍କେ ।
என்ன நடக்கவேண்டும் என்று முன்னதாகவே உம்முடைய வல்லமையும் திட்டமும் தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள்.
29 ଅ ମାପ୍‌ରୁ, ଏବେ ମେଇଂ ଆନେକେ ଡିରକମ୍‌ ଦମକ୍‍ ବିବକେ, ନା ଆତେନ୍‌‍ ବିସୟ୍‌ରେ ଦ୍ରିଗ୍‍ ଆରି ଦାସ ଦାସୀଇଂକେ ବର୍‌କସ୍‌ ବାବ୍‌ରେ ନାନେ ବ୍ନାଇର୍‍ ବାସଙ୍ଗ୍‍ ଅଲେଙ୍ଗ୍‍ ନ୍‍ସା ବପୁ ବିଲା ।
இப்பொழுதும் கர்த்தாவே, அவர்களுடைய பயமுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளும்; உமது வார்த்தையை அதிகத் துணிவுடன் பேசுவதற்கு, உமது ஊழியக்காரருக்கு ஆற்றலைக் கொடும்.
30 ନାନେ ବପୁ ଆନେକେ ଆସୁଏ ଜାଣ୍ଡେଃବାନ୍‌ କି ନେ ସାଆସ୍‍ରେ ନାନେ ପବିତ୍ର ଦାସ୍‌ ଜିସୁନେ ମ୍ନିରେ ରଗିଇଂକେ ନିମାଣ୍ଡା ଆଃଡିଙ୍ଗ୍‍ ନ୍‍ସା ଗୁଲେ ଚିନ୍ ଆସୁଏ ନ୍‍ସା ଆରି କାବା ରକମ୍‍ କାମ୍ ଡିଙ୍ଗ୍‍ ନେୟାଏ ।”
உமது பரிசுத்த ஊழியரான இயேசுவின் பெயரினால் சுகப்படுத்துவதற்கும், அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதற்கும் உமது கரத்தை நீட்டும்” என்று மன்றாடினார்கள்.
31 ପାର୍‌ତନା ଡାକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍‍ ଆଣ୍ଡିନ୍‍ ଡୁଆନ୍ନିଆ ପାର୍‍ତନା ଡିଙ୍ଗ୍‍ଆର୍‍ଡିଙ୍ଗ୍‍ଗେ ଆତ୍‍ଅରିଆ ସାପାରେ ରିସିଙ୍ଗ୍‍ଲେ ଆର୍ଗେ । ଆତେନ୍‌‍ ଡୁଆ ଲିଗିର୍ ୱେକେ । ମେଇଂ ସାପାରେ ପବିତ୍ର ଆତ୍ମା ବାଚେ ପର୍‍ମେସର୍‍ନେ ସାମୁଆଁ ସାହାସ୍‍ରେ ବାସଙ୍ଗ୍‍ ଅଲେଙ୍ଗ୍‍ନ୍‍ସା ମୁଲେକେ ।
அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையை பயமின்றிப் பேசினார்கள்.
32 ବିସ୍‍ବାସ୍‍ ଡିଙ୍ଗ୍‍ଲେ ଆର୍‍କ୍ନେ ରେମୁଆଁଇଂନେ ମୁଇଂ ମନ୍‌ ମୁଇଂ ଆତ୍ମାରେ ଲେଃଆର୍‌ଗେ । ମେଇଂନେ ବିତ୍‍ରେ ଜାଡିଗ୍‍ ମେଁ ଜିନିସ୍‌କେ ଡିଗ୍‍ ନିଜେନେ ଡାଗ୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‍ ଆଡିଙ୍ଗ୍‍ ଆର୍‍ ଣ୍ଡୁ । ମେଇଂ ଡାଗ୍ରା ମେଁନେ ଲେଃଗେ ଆତ୍‍ଅରିଆ ସାପାରେନେ ବାଟା ଲେଃଗେ ।
விசுவாசிகள் அனைவரும், இருதயத்திலும் மனதிலும் ஒன்றாய் இருந்தார்கள். ஒருவருமே தங்களுடைய சொத்துக்களைத் தங்களுடையது என்று உரிமை கருதவில்லை. ஆனால் அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாய்ப் பகிர்ந்துகொண்டார்கள்.
33 ମାପ୍‌ରୁ ଜିସୁ ଜା ସତ୍‍ରେ ଗୁଏଚେ ତଃଡ଼୍ୟା ଲେଃକେ ଆକେନ୍‍ ପ୍ରେରିତ୍‌ ସିସ୍‌ଇଂ ମ୍ନା ବପୁରେ ସାକି ବିଆର୍‌କେ । ପର୍‍ମେସର୍‍ ସାପା ବିସ୍‍ବାସିଇଂକେ ଗୁଲେ ଅନୁଗ୍ର‍ଅ ବିକେ ।
கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர் மிகுந்த வல்லமையுடன் சாட்சி கொடுத்தார்கள். அவர்கள் எல்லோர்மேலும் மிகுந்த கிருபை இருந்தது.
34 ମେଇଂନେ ବିତ୍‍ରେ ଆଜାକେ ଡିଗ୍‍ ଅବାବ୍‍ ଆଲେଗେ ଣ୍ଡୁ । ଜାନେ ଡୁଆ ବା ଲିଜ ଲେଃଗେ ମେଁ ଆତେନ୍‌‍ ସାପା ସଚେ ଡାବୁ ଡୁଂପାଙ୍ଗ୍‍ଚେ,
அவர்களுக்குள்ளே குறையுள்ளவர் யாரும் இருக்கவில்லை. ஏனெனில், காலத்திற்குக் காலம் சொந்த நிலங்களும் வீடுகளும் இருந்தவர்கள் அவற்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து,
35 ମେଇଂ ଆତେନ୍‌‍ ସମ୍ପତିକେ ପ୍ରେରିତ୍‌ ସିସ୍‌ଇଂନେ ଞ୍ଚଆଲ ବଡିଙ୍ଗ୍‍ଆର୍ଗେ । ସାପାରେକେ ନିଜେନେ ଉଡ଼ି ଦର୍‍କାର୍‍ ଅଃକେନ୍‌ ଇସାବ୍‍ରେ ଡାବୁ ବାଟା ବିଡିଙ୍ଗ୍‍ଗେ ।
அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தார்கள். அது தேவையுள்ள எல்லோருக்கும் தேவைக்கு ஏற்றபடி பகிர்ந்துகொடுக்கப்பட்டது.
36 ଯସେପ୍‍ ମ୍ନିରେ ମୁଇଂ ବିସ୍‍ବାସ୍‍ ରେମୁଆଁ ଲେଃଗେ । ପ୍ରେରିତ୍‌ ସିସ୍‌ଇଂ ଆମେକେ “ବର୍ଣ୍ଣବା” ମ୍ନିରେ ୱାଡିଙ୍ଗ୍‍ ଆର୍ଗେ । ଆକେନ୍‍ ମ୍ନିନେ ଅର୍‌ତ “ସାଇଜ ଡିଙ୍ଗ୍‍ଣ୍ଡ୍ରେ” ମେଁ ସାଇପ୍ରସ୍‌ ମ୍ନିକ୍ନେ ଜାଗାନ୍ନିଆ ମୁଇଂ ଲେବୀୟ ବଂସନ୍ନିଆ ଜନମ୍ ଡିଙ୍ଗ୍‌ଲେଃଗେ ।
சீப்புரு தீவைச்சேர்ந்த யோசேப்பு என்னும் ஒரு லேவியன் இருந்தான். அப்போஸ்தலர் அவனைப் பர்னபா என அழைத்தார்கள். பர்னபா என்றால், “ஆறுதலின் மகன்” என்று அர்த்தமாகும்.
37 ଯସେପ୍‍ନେ ଇକୁଡ଼ା ଲିଜ ଲେଃଗେ । ମେଁ ଆମେକେ ସ ଜଗ୍‍ତ୍ଲାଗ୍‍ଚେ ସକ୍ନେ ସାପା ଡାବୁ ଡୁଂପାଙ୍ଗ୍‍ଚେ ପ୍ରେରିତ୍‌ ସିସ୍‌ଇଂକେ ବିଃକେ ।
இவன் தனக்குச் சொந்தமான வயலை விற்று, பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான்.

< ପ୍ରେରିତ୍‌ 4 >