< Kwan 25 >
1 Kane oyudo jo-Israel odak Shitim, chwo nochako terore gi monde jo-Moab,
௧இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கும்போது, மக்கள் மோவாபின் மகள்களோடு விபசாரம் செய்யத் தொடங்கினார்கள்.
2 mane ogwelogi e chiwo misengini ne nyisechegi. Ji nochiemo moyiengʼ kendo negipodho auma ka gilamo nyisechegi.
௨அவர்கள் தங்களுடைய தெய்வங்களுக்கு செலுத்திய பலிகளை விருந்துண்ணும்படி மக்களை அழைத்தார்கள்; மக்கள் போய் சாப்பிட்டு, அவர்கள் தெய்வங்களைப் பணிந்துகொண்டார்கள்.
3 Omiyo Israel noriwore kodgi e yor lamo Baal mar Peor. Kendo mirima nomako Jehova Nyasaye ahinya kodgi.
௩இப்படி இஸ்ரவேலர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவுடைய கோபம் வந்தது.
4 Jehova Nyasaye nowacho ne Musa niya, “Kaw jotend jogi duto, neg-gi kendo dhurgi e lela e nyim Jehova Nyasaye, mondo omi mirimb Jehova Nyasaye owuog kuom Israel.”
௪யெகோவா மோசேயை நோக்கி: “யெகோவாவுடைய கடுமையான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ மக்களின் தலைவர் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரிய வெளிச்சத்திலே யெகோவாவுடைய சந்நிதானத்தில் தூக்கில்போடும்படி செய் என்றார்.
5 Omiyo Musa nowacho ne jongʼad bura mag Israel niya, “Ngʼato ka ngʼato kuomu nyaka neg jou machwo ma oseriwore e lamo Baal mar Peor.”
௫அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: “நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்களுடைய மனிதர்களைக் கொன்றுபோடுங்கள்” என்றான்.
6 Eka ja-Israel moro nobiro gi nyar jo-Midian e hembe ka Musa neno kaachiel gi oganda jo-Israel duto mane oyudo ywak e dho Hemb Romo.
௬அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரத்தின்வாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கும்போது, அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் மக்களில் ஒருவன் ஒரு மீதியானிய பெண்ணைத் தன்னுடைய சகோதரர்களிடம் அழைத்துக்கொண்டுவந்தான்.
7 Kane Finehas wuod Eliazar, ma wuod Harun jadolo, noneno ma, nowuok e chokruokno, mokawo tongʼ e lwete,
௭அதை ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் பார்த்தபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்னுடைய கையிலே பிடித்து,
8 kendo noluwo bangʼ ja-Israelno nyaka e hema. Nochwowogi duto moriwogi gi tongʼ. Eka tho mane osenego jo-Israel norumo;
௮இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் விபசாரம்செய்யும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த பெண்ணுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி வெளியே போகுமளவுக்கு அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் மக்களில் உண்டான வாதை நின்றுபோயிற்று.
9 to ji mane tho ma kamano onego ne gin ji alufu piero ariyo gangʼwen.
௯அந்த வாதையால் இறந்தவர்கள் 24,000 பேர்.
10 Jehova Nyasaye nowacho ne Musa niya,
௧0யெகோவா மோசேயை நோக்கி:
11 “Finehas wuod Eliazar, ma wuod Harun jadolo, osetieko mirimba kuom jo-Israel; nimar en gi nyiego machal gi mara; mano emomiyo ne ok atiekogi kata obedo nine an kod mirima kodgi kamano.
௧௧“நான் என்னுடைய எரிச்சலில் இஸ்ரவேல் மக்களை அழிக்காதபடி, ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், எனக்காக அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் மக்கள்மேல் உண்டான என்னுடைய கடுங்கோபத்தை திருப்பினான்.
12 Emomiyo nyise ni aloso singruok mar kwe kode.
௧௨ஆகையால், “இதோ, அவனுக்கு என்னுடைய சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.
13 Asingorane ni en kod nyikwaye ginibed jodolo maga nyaka chiengʼ, nikech ne en jasinani kuom miyo Nyasache duongʼ kendo negichiwo misango mar pwodho jo-Israel e richo.”
௧௩அவன் தன்னுடைய தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நிரந்தர ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல்” என்றார்.
14 Nying ja-Israel mane onegi gi nyar jo-Midian ne en Zimri wuod Salu, mane en jatend dhood Simeon.
௧௪மீதியானிய பெண்ணோடு குத்தப்பட்டு இறந்த இஸ்ரவேல் மனிதனுடைய பெயர் சிம்ரி; அவன் சல்லூவின் மகனும், சிமியோனியர்களின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவாகவும் இருந்தான்.
15 To nying nyar jo-Midian mane onegi ne en Kozbi ma nyar Zur, ma wuon-gi ne en jatend dhood jo-Midian.
௧௫குத்தப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி, அவள் சூரின் மகள், அவன் மீதியானியர்களுடைய தகப்பன் வம்சத்தாரான மக்களுக்குத் தலைவனாக இருந்தான்.
16 Jehova Nyasaye nowacho ne Musa niya,
௧௬யெகோவா மோசேயை நோக்கி:
17 “Sanduru jo-Midian kendo uneg-gi,
௧௭“மீதியானியர்களை வீழ்த்தி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
18 nikech ne githagou gi timbegi maricho mane gitimo Peor kendo kuom wach Kozbi ma nyar jatend Midian mane onegi ndalo mane yamb tho obiro nikech gima notimore Peor.”
௧௮பேயோரின் காரியத்திலும் பேயோரினால் வாதை உண்டான நாளிலே குத்தப்பட்ட அவர்களுடைய சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய மகளின் காரியத்திலும், அவர்கள் உங்களுக்குச் செய்த துரோகங்களினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே” என்றார்.