< Tim Jo-Lawi 7 >
1 Magi e chike mag misango ma ipwodhruokgo e ketho, ma en misango maler moloyo:
“‘குற்றநிவாரண காணிக்கைக்கான ஒழுங்குமுறைகள் இவையே: அது மகா பரிசுத்தமானது.
2 Chiayo mar misango mipwodhruokgo e ketho nyaka yangʼ mana kama iyangʼoe chiayo mar misango miwangʼo pep kendo rembe nyaka kir e bethe kendo mar misango koni gi koni.
தகன காணிக்கை மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்திலேயே, குற்றநிவாரண காணிக்கைக்கான மிருகமும் வெட்டிக் கொல்லப்படவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கப்படவேண்டும்.
3 Eka jadolo nokaw bochene duto, kaka sembe gi boche moumo jamb-ich,
அதன் கொழுப்பு முழுவதும் காணிக்கையாகச் செலுத்தப்பட வேண்டும். கொழுப்பான வாலும், உள்ளுறுப்புகளை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும்.
4 kod nyiroke kaachiel gi boche mogawe gi man but oguro kendo inigol jwala mabor manie wi chuny kod nyiroke.
விலாவுக்குக் கீழ்ப்புறமாக இருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அகற்றப்பட வேண்டிய ஈரலை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும்.
5 Jadolo nochiwgi ka wangʼogi ewi kendo mar misango, mondo obed misango miwangʼo gi mach ni Jehova Nyasaye, nikech en misango mipwodhruokgo e ketho.
ஆசாரியன் அவற்றை யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது குற்றநிவாரண காணிக்கை.
6 Ngʼato angʼata madichwo ma jaodgi jodolo oyiene chame, to nyaka chame mana e kama ler mar lemo mowal ni Jehova Nyasaye, nikech en gima ler moloyo.
ஆசாரியனின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்திலேயே சாப்பிடவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
7 Chik achielni ema oriwo misango mar golo richo kod misango mipwodhruokgo e ketho. Misenginigo nodongʼ ni jadolo motimogi, kopwodhogo richo.
“‘பாவநிவாரண காணிக்கையும், குற்றநிவாரண காணிக்கையும் ஒரே விதிமுறைப்படியே செய்யப்படவேண்டும். அவற்றைக் கொண்டு பாவநிவிர்த்தி செய்யும் ஆசாரியனுக்கே அவை சொந்தமாகும்.
8 Jadolo matimo misango miwangʼo pep ma ngʼato ochiwo nodongʼ gi pien chiayono kaka mare owuon.
யாருக்காகிலும் தகன காணிக்கையைச் செலுத்தும் ஆசாரியன் அதன் தோலை தனக்காக எடுத்துக்கொள்ளலாம்.
9 Misango duto mag cham mobul e kendo kata motedi e sufuria, kata e dakuon, nodongʼne jodolo motime;
அடுப்பில் தயாரிக்கப்பட்டதும், சட்டியில் சமைக்கப்பட்டதும், இரும்பு வலைத்தட்டியில் சுடப்பட்டதுமான தானியக் காணிக்கைகள் எல்லாம், அவற்றைச் செலுத்தும் ஆசாரியருக்கே உரியன.
10 makmana misengini mamoko mag cham moruw gi mo kata ma ok oruw, ema nopog maromre ne yawuot Harun duto.
எண்ணெய் சேர்க்கப்பட்டதாயினும், சேர்க்கப்படாத உலர்ந்ததாயினும், எல்லா தானியக் காணிக்கையும் ஆரோனின் மகன்கள் எல்லோருக்கும் சமமாக உரியதாகும்.
11 Magi e chike mag misango mar lalruok ma ngʼato nyalo chiwo ne Jehova Nyasaye.
“‘ஒருவன் யெகோவாவுக்குக் கொடுக்கும் சமாதான காணிக்கையின் ஒழுங்குமுறைகள் இவையே:
12 “‘Ka ochiwe ka gir goyo erokamano, to ochiwe kaachiel gi makati ma ok oketie thowi moted gi mo, kod chapat ma ok oketie thowi mowir gi mo, gi kek moted gi mogo mayom kendo modwal gi mo.
“‘அவன் தன் நன்றியுணர்வை வெளிப்படுத்த அதைச் செலுத்துவானாகில், இந்த நன்றிக் காணிக்கையுடன், புளிப்பில்லாமல் எண்ணெயில் பிசைந்து செய்யப்பட்ட அடை அப்பங்களையும், புளிப்பில்லாமல் செய்யப்பட்டு எண்ணெய் தடவப்பட்ட அதிரசங்களையும், சிறந்த மாவுடன் எண்ணெய் கலந்து நன்கு பிசைந்து சுடப்பட்ட அடைகளையும் அவன் செலுத்தவேண்டும்.
13 Bende enokel misango mar lalruok mar goyo erokamano kaachiel gi makati moted gi thowi.
நன்றி செலுத்துவதற்கான தன் சமாதான காணிக்கையுடன், புளிப்பூட்டிச் சுடப்பட்ட அடை அப்பங்களையும் அவன் காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
14 Enokel achiel kuom moro ka moro kaka misango mochiwe ne Jehova Nyasaye, nikech en mar jadolo makiro remb misengini mag lalruok.
அவன் ஒவ்வொரு வகையான அப்பத்திலும் ஒவ்வொன்றை யெகோவாவுக்கு அன்பளிப்பான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். சமாதான காணிக்கையின் இரத்தத்தைத் தெளிக்கும் ஆசாரியருக்கே இது உரியது.
15 Ring misango mar goyo erokamano nyaka cham mana odiechiengno mochiwe ma ok oriyo nyaka okinyi.
நன்றி செலுத்தும் சமாதான காணிக்கையின் இறைச்சியானது அது செலுத்தப்பட்ட நாளிலேயே, சாப்பிடப்பட வேண்டும். அவன் அதில் ஒன்றையும் காலைவரை விட்டுவைக்கக்கூடாது.
16 “‘Ka misango motimo en mar kwongʼruok, chiwo mar hera, to misangono nyaka cham e odiechiengno mochiwe, to ka moro odongʼ to inyalo chame kinyne.
“‘எனினும், அவனுடைய காணிக்கை ஒரு நேர்த்திக்கடனாகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கையாகவோ இருந்தால், அவன் பலிசெலுத்தும் நாளிலேயே அதைச் சாப்பிடவேண்டும். ஆனால் ஏதாவது மீதமிருந்தால் அடுத்தநாள் சாப்பிடலாம்.
17 Ka ringʼo moro mar misango odongʼ nyaka chiengʼ mar adek, to nyaka wangʼe e mach.
ஆனாலும், மூன்றாம் நாள்வரை விட்டுவைக்கப்பட்ட பலியின் இறைச்சி எதுவும் எரிக்கப்படவேண்டும்.
18 Ka ring misango mar lalruok ocham chiengʼ mar adek, to misangono ok noyiego. Bende Nyasaye ok nokwan misangono ka gima ber, nimar en gima kwero, kendo ngʼama ochame nobed jaricho.
சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும் மூன்றாம் நாளில் சாப்பிட்டால், அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அது காணிக்கை செலுத்துபவருக்கு பலனளிக்காது. ஏனெனில், அது அசுத்தமானது. அதில் எதையாவது சாப்பிடுபவன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாவான்.
19 “‘Ringʼo morere e gimoro amora mogak, kik cham, to nyaka wangʼ e mach. To ringʼo mamoko modongʼ to inyalo cham gi ngʼato angʼata maler.
“‘சம்பிரதாய முறைப்படி அசுத்தமாக எண்ணப்படும் எதிலாவது இறைச்சி பட்டுவிட்டால், அந்த இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அது எரிக்கப்படவேண்டும். மற்ற இறைச்சியைப் பொறுத்தமட்டில், அதை சம்பிரதாய முறைப்படி சுத்தமாய் இருப்பவன் எவனும் சாப்பிடலாம்.
20 To ka ngʼat mogak ochamo ring misango mar lalruok mochiwne Jehova Nyasaye, ngʼatni nyaka ngʼad kare oko kuom ogandagi.
ஆனால் யெகோவாவுக்குச் சொந்தமான சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும், அசுத்தமாயிருக்கிற யாராவது சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
21 Ngʼato angʼata momulo gimoro mogak, bedni en dhano kata le, kata gimoro amora makwero, eka bangʼe ochamo ring misango mar lalruok mochiw ni Jehova Nyasaye, en bende nyaka ngʼad kare oko kuom ogandagi.’”
மனித அசுத்தத்தையோ அல்லது அசுத்த மிருகத்தையோ அல்லது அசுத்தமும் அருவருப்புமான ஏதாகிலும் பொருளையோ, இவ்வாறான அசுத்தமான எதையாவது ஒருவன் தொட்டு, பின்பு யெகோவாவுக்குரிய சமாதான காணிக்கையின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும் என்றார்.’”
22 Jehova Nyasaye nowacho ne Musa niya,
யெகோவா மோசேயிடம்,
23 “Nyis jo-Israel kama: ‘Kik ucham bor moro amora mar dhok, rombe, kata diek.
“நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, மாடுகளின் கொழுப்பையோ, செம்மறியாட்டின் கொழுப்பையோ, வெள்ளாட்டின் கொழுப்பையோ சாப்பிடவேண்டாம்.
24 Chiayo moyud kotho kende kata ma ondiegi onego kik gicham bore to boreno inyalo tigo e yo moro amora.
செத்துக் கிடக்கக் காணப்பட்ட ஒரு மிருகத்தின் கொழுப்பையோ அல்லது காட்டு மிருகங்களால் கிழித்துப்போடப்பட்ட மிருகத்தின் கொழுப்பையோ வேறு ஏதாவது தேவைக்குப் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் அதைச் சாப்பிடக்கூடாது.
25 Ngʼato angʼata kuomu manocham bor chiayo ma lembe moko osetimgo misango miwangʼo pep ni Jehova Nyasaye, to nyaka ngʼad kare kuom ogandane.
யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைக்கான மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடும் எவனும், தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
26 Ka moro amora mudakie, kik ucham remo moro amora bed ni en mar winy kata en mar le.
நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், பறவையின் இரத்தத்தையோ, மிருகத்தின் இரத்தத்தையோ சாப்பிடக்கூடாது.
27 Ngʼato angʼata mochamo remo nyaka ngʼad kare kuom ogandane.’”
யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
28 Eka Jehova Nyasaye nowacho ne Musa niya,
யெகோவா மோசேயிடம்,
29 “Nyis jo-Israel kama: ‘Ngʼato angʼata mochiwo misango mar lalruok ne Jehova Nyasaye, nyaka kel migawo mar misango kaka chiwo mare ne Jehova Nyasaye.
“நீ இஸ்ரயேலருக்கு சொல்லவேண்டியதாவது: யெகோவாவுக்குச் சமாதான காணிக்கை கொண்டுவரும் எவனும் அதன் ஒரு பங்கைத் தனது பலியாக யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.
30 Enokelne Jehova Nyasaye gi lwete owuon boche miwangʼo gi mach kaachiel gi agoke kendo enolier agokono kofwaye e nyim Jehova Nyasaye kaka misango mifwayo.
நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கையைத் தன் சொந்தக் கைகளினாலேயே கொண்டுவர வேண்டும். அதன் நெஞ்சுப்பகுதியுடன் அதன் கொழுப்பையும் கொண்டுவந்து, நெஞ்சுப்பகுதியை யெகோவாவுக்குமுன் அசைவாட்டும் காணிக்கையாக, அசைவாட்டவேண்டும்.
31 Jadolo nowangʼ bochego e kendo mar misango, makmana ni agoko to nodongʼ ni Harun gi yawuote.
ஆசாரியன் கொழுப்பை பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். ஆனால் நெஞ்சுப்பகுதியோ ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் உரியது.
32 Unuchiwne jadolo bam ma korachwich mar chiayo kaka misango mar lalruok.
நீங்கள் சமாதான காணிக்கை மிருகத்தின் வலது தொடையை ஆசாரியனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கவேண்டும்.
33 To wuod Harun mano kir remo kendo wangʼ boche mar misango mar lalruok nyaka kaw bam korachwich kaka pokne.
சமாதான காணிக்கை மிருகத்தின் இரத்தத்தையும், கொழுப்பையும் செலுத்தும் ஆரோனின் மகன், மிருகத்தின் வலது தொடையை தனது பங்காக எடுக்கவேண்டும்.
34 To kuom misango mar lalruok ma jo-Israel golo, asekawo agoko miliero kendo ifwayo kod bam michiwo kaka pok kendo asemiyogi Harun jadolo kod yawuote kaka pokgi mapile pile kuom jo-Israel.’”
இஸ்ரயேலரின் சமாதான காணிக்கையிலிருந்து அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் நான் எடுத்துக்கொண்டேன். நான் அவைகளை இஸ்ரயேலரிடமிருந்து ஆசாரியன் ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் நிரந்தரமான பங்காகக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
35 Ma e migawo mar chiwo miwangʼo pep ne Jehova Nyasaye mane opogone Harun gi yawuote e odiechiengʼ mane owalgi mondo gitine Jehova Nyasaye kaka jodolo.
நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையின் இப்பங்கு, ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் ஒதுக்கப்பட்டது. அவர்கள் ஆசாரியர்களாக யெகோவாவுக்குப் பணிசெய்ய ஒப்புக்கொடுக்கப்பட்ட நாளிலேயே, இப்பங்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
36 E odiechiengʼ mane opwodhgi, Jehova Nyasaye nochiwo chik ni jo-Israel mondo omigi ma kaka pokgi mapile ne tienge mabiro.
அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த நாளிலே, “தலைமுறைதோறும் இஸ்ரயேலர் தங்களுடைய ஒழுங்கான பங்காக இதை ஆசாரியருக்குக் கொடுக்கவேண்டும்” என யெகோவா கட்டளையிட்டிருந்தார்.
37 Magi koro e chike mag misango miwangʼo pep, misango mar cham, misango mar golo richo, misango ma ipwodhruokgo e ketho gi misengini mitimo chiengʼ miketo jadolo e tich kaachiel gi misengini mag lalruok.
தகன காணிக்கை, தானியக் காணிக்கை, பாவநிவாரண காணிக்கை, குற்றநிவாரண காணிக்கை, அர்ப்பணிப்பு காணிக்கை, சமாதான காணிக்கை ஆகியவற்றிற்கான ஒழுங்குமுறைகள் இவையே.
38 Chikegi Jehova Nyasaye nomiyo Musa e Got Sinai, chiengʼ mane ochoko jo-Israel mondo ochiwne Jehova Nyasaye misengini mag-gi, ka gin e Thim mar Sinai.
இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் காணிக்கைகள் கொண்டுவர வேண்டுமென, யெகோவா சீனாய் பாலைவனத்தில் கட்டளையிட்ட நாளிலே, அவர் சீனாய் மலையில் இந்த ஒழுங்குமுறைகளை மோசேக்குக் கொடுத்தார்.