< Wuok 22 >

1 “Ka ngʼato okwalo rwath kata rombo kendo onege kata ouse, nyaka ochul dhok abich kuom rwath kendo kweth rombe angʼwen kuom rombo.
“ஒரு மனிதன் ஒரு எருதையோ அல்லது செம்மறியாட்டையோ திருடி, அதைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ அவன் அந்த எருதுக்குப் பதிலாக ஐந்து எருதுகளையும், அந்த செம்மறியாட்டுக்குப் பதிலாக நான்கு செம்மறியாடுகளையும் கொடுக்கவேண்டும்.
2 “Ka jakuo ojuk kakwelo kendo ogoye mi otho, ngʼatno mogoye remo ok nodongʼ e wiye kuom remo mochwer;
“திருடன் ஒருவன், வீட்டை உடைத்துத் திருடுகையில் பிடிக்கப்பட்டு, அடிபட்டு இறந்தால், அடித்தவன் இரத்தத்தைச் சிந்தியதற்கான குற்றவாளி அல்ல.
3 to ka otimore bangʼ ka chiengʼ osetuch, to remo nodongʼ e wiye. “Jakuogno nyaka chul gima rom gi gima nokawono, to ka oonge gi gimoro, to nyaka use mondo ochulgo kuo mokwalono.
ஆனால் அது சூரியன் உதித்தபின் நடந்திருந்தால் இரத்தத்தைச் சிந்திய குற்றம் அவன்மேல் இருக்கும். “திருடன் தன் திருட்டிற்காகப் பதிலீடு செய்யவேண்டும். அவனிடம் ஒன்றுமில்லையானால் அபராதத்தைச் செலுத்துவதற்காக அவன் விற்கப்படவேண்டும்.
4 “Ka chiayo mokwalno oyudego kangima bed ni en rwath kata punda kata rombo, nyaka ochul nyadiriyo.
அவன் திருடிய எருதோ, கழுதையோ, செம்மறியாடோ அவனிடத்தில் உயிரோடிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு அபராதத்தைச் செலுத்தவேண்டும்.
5 “Ka ngʼato okwayo jambe e puodho kata e puoth mzabibu kendo oweyogi ma gi chodo kendo gikwayo e puoth ngʼato, nyaka ochul kawuok kuom puothe kata puothene mag olembe mabeyo.
“ஒருவன் தன் வளர்ப்பு மிருகங்களை ஒரு வயலிலோ, திராட்சைத்தோட்டத்திலோ மேய்க்கிறபோது, அவற்றைக் கட்டாமல் இன்னொருவனுடைய வயலில் மேயவிட்டால், அவன் தன்னுடைய வயலிலிருந்தும், தோட்டத்திலிருந்தும் அதற்குப் பதிலீடாக மிகச்சிறந்ததைக் கொடுக்கவேண்டும்.
6 “Ka mach omuoch mi olandore e bungu kendo owangʼo cham ma pod ochungʼ kata cham mobeti kata puodho duto, to ngʼatno mane omoko majno nyaka chul.
“நெருப்பு மூண்டு முட்செடிகளில் பற்றிப்பரவி, தானியக்கட்டுகளையோ, விளைந்து நிற்கும் தானியக்கதிர்களையோ அல்லது முழு வயலையோ எரித்துப்போட்டால், நெருப்பை மூட்டியவன் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும்.
7 “Ka ngʼato omiyo wadgi fedha kata mwandu mondo okanne kendo okwalgi e od wadgino, to ka omak jakuogno, to nyaka chul nyadiriyo.
“ஒரு மனிதன் தன் அயலானிடம் வெள்ளியையோ, பொருட்களையோ பாதுகாப்பாக வைப்பதற்குக் கொடுக்கையில், அந்த அயலானுடைய வீட்டிலிருந்து அவை திருடப்பட்டு, அந்த திருடன் பிடிக்கப்பட்டால் அவன் இரண்டு மடங்கு அபராதம் செலுத்தவேண்டும்.
8 To ka jakuo ok oyudi, wuon ot nyaka chopi e nyim jongʼad bura mondo gifweny ka dipo ni lwete omulo mwandu nyawadgi
ஆனால், அத்திருடன் அகப்படாவிட்டால், வீட்டின் உரிமையாளன் தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட பொருட்களை தான் எடுக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவன் நீதிபதிகள் முன் வரவேண்டும்.
9 E weche duto mag bedo gi rwath, e yo ma ok owinjore kata punda kata rombo kata law, kata gimoro amora molal ma ngʼato diwachie ni, ‘Ma en mara,’ jogo duto nyaka kel wechegigo e nyim jongʼad bura. Ngʼat ma jongʼad bura oyudo ni nigi ketho, nyaka chul wadgino nyadiriyo.
ஒருவன் தன்னுடையதல்லாத எருதையோ, கழுதையையோ, செம்மறியாட்டையோ, உடையையோ, காணாமற்போன எந்தப் பொருளையோ வைத்திருக்கும்போது, அதை இன்னொருவன் கண்டு, ‘இது என்னுடையது’ என்று சொன்னால், அவர்கள் இருவரும் நீதிபதியின் முன்பாக தங்கள் வழக்குகளை கொண்டுவர வேண்டும். நீதிபதியால் குற்றவாளியென்று தீர்க்கப்படுகிறவன் மற்றவனுக்கு இரண்டு மடங்காகக் கொடுக்கவேண்டும்.
10 “Ka ngʼato omiyo wadgi punda kata rwath kata rombo kata chiayo moro amora mondo oritne maber to chiayono otho kata ohinyore kata okwal,
“ஒருவன் தன் கழுதையையோ, எருதையோ, செம்மறியாட்டையோ, வேறொரு மிருகத்தையோ தன் அயலானிடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுத்திருக்கும்போது, அது இறந்தால் அல்லது காயமடைந்தால் அல்லது ஒருவரும் பார்க்காத வேளையில் காணாமற்போனால்,
11 to wach mantie e kindgi ibiro losi kuom kwongʼruok e nyim Jehova Nyasaye ne wadgino nine ok omulo mwandu wadgi. Wuon chiayono nyaka yie gi wachno, kendo onge chudo manochiw.
அந்த மிருகங்களை வைத்திருந்த மனிதன் அவற்றைத் தான் திருடவில்லை என யெகோவா முன்னிலையில் சத்தியம் செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையில் இப்பிரச்சனை தீர்க்கப்படும். மிருகங்களின் உரிமையாளன் அந்த ஆணையை ஏற்றுக்கொள்ளவேண்டும். பதிலீடு எதுவும் வேண்டியதில்லை.
12 To ka chiayono ne okwal koa kuom wadgi, to nyaka wadgino chule nengo moromo gi chiayono.
ஆனால் அந்த மிருகம் அயலானிடத்திலிருந்து களவுபோயிருந்தால், அவன் அதன் உரிமையாளனுக்கு அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும்.
13 Ka chiayono ne okidhi gi le mager, to enokel choke modongʼ kaka ranyisi kendo ok enochune mondo ochul chiayo mokidhino.
கொடிய மிருகங்களால் அது துண்டுகளாகக் கிழிக்கப்பட்டிருந்தால், அதன் உடலில் மீதியானவற்றைச் உரிமையாளனிடம் சாட்சியமாகக் கொண்டுவர வேண்டும். கிழிக்கப்பட்ட அந்த மிருகத்திற்காக அவன் பணம் செலுத்தும்படி கேட்கப்படமாட்டான்.
14 “Ka ngʼato oholo chiayo koa kuom wadgi kendo chiayono ohiny kata otho ka wuon-gi onge, nyaka ochul.
“ஒருவன் தன் அயலானிடம் ஒரு மிருகத்தை இரவலாக வாங்கியிருக்கையில், அதன் உரிமையாளர் இல்லாத வேளையில் அது காயப்பட்டால் அல்லது இறந்துபோனால், அவன் அதற்கு ஈடுசெய்ய வேண்டும்.
15 To ka wuon chiayo nigi chiayono, to jaholono ok nochun mondo ochul. Ka chiayono ne ichuloe gimoro, to pesa mochulno norom nyaka lalno.
ஆனால் மிருகத்தின் உரிமையாளர் அதனுடன் இருந்தால், இரவல் வாங்கியவன் அதற்காக ஈடுசெய்ய வேண்டியதில்லை. அந்த மிருகம் கூலிக்கு எடுக்கப்பட்டிருந்தால், கூலியாகச் செலுத்தப்பட்ட பணம் அந்த நஷ்டத்தை ஈடுசெய்கிறது.
16 “Ka ngʼato osero nyako mapok osingi ne kend kendo oriwore kode nyaka ochul gir keny kendo nyakono nobed chiege.
“திருமணத்திற்காக நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப்பெண்ணை ஒருவன் வஞ்சித்து, அவளுடன் உறவுகொண்டால், அவன் அவளுக்கான சீதனத்தை அவளுடைய தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும். அவள் அவனுக்கு மனைவியாயிருப்பாள்.
17 Ka wuon-gi otamore chiwe ne ngʼatno, to ngʼatno pod nyaka chul mana gir keny.
அப்பெண்ணின் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்க முற்றிலுமாக மறுத்தால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் சீதனப் பணத்தை கண்டிப்பாக அவன் கொடுத்தாகவேண்டும்.
18 “Kik uwe jajwok madhako bed mangima.
“சூனியக்காரியை உயிரோடு இருக்கவிடவேண்டாம்.
19 “Ngʼato angʼata moriwore gi chiayo nyaka negi.
“மிருகத்தோடு பாலுறவுகொள்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
20 “Ngʼato angʼata motimo misango ni nyasaye moro makmana Jehova Nyasaye nyaka negi.
“யெகோவாவைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் எவனும் அழிக்கப்படவேண்டும்.
21 “Kik sand jadak kata loke misumba, nikech ne un jodak Misri.
“பிறநாட்டினனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே பிறநாட்டினராயிருந்தீர்களே.
22 “Kik uthir dhako ma chwore otho kata nyathi kich.
“விதவைகளையும், அனாதைப் பிள்ளைகளையும் தன்னலத்துக்காக சுரண்டவேண்டாம்.
23 Ka utimo kamano ma giywakna, adier anawinj ywakgi
அப்படிச் செய்தால் அவர்கள் என்னிடம் அழும்போது, நான் நிச்சயமாக அவர்கள் அழுகையைக் கேட்பேன்.
24 Mirimba biro bedo mager kodu kendo abiro negou gi ligangla mondeu biro bedo monde liete kendo nyithindu biro bedo nyithi kiye.
அதனால் நான் கோபமடைந்து, உங்களை வாளினால் கொல்லுவேன். அப்பொழுது உங்கள் மனைவிகள் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றவர்கள் ஆவார்கள்.
25 “Ka iholo pesa ni achiel kuom joga ma jachan mantie e dieru, to kik uchal gi ji mamoko ma holo ji pesa kendo kik ukaw ohala kuomgi.
“என் மக்களில் வறுமையான ஒருவனுக்கு யாராவது பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப்போல அவனிடம் வட்டியை வாங்கக்கூடாது.
26 Ka ikawo law wadu kaka gir singo, to duoknego kapok chiengʼ opodho,
உங்கள் அயலானுடைய மேலங்கியை அடகுப்பொருளாக வாங்கியிருந்தால், சூரியன் மறையும் முன்பே அதை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும்.
27 nikech laweno kende ema oumorego. Ere gima donindie? Ka oywakna, to abiro winjo, nimar an Nyasaye ma jangʼwono.
ஏனெனில், அதுமட்டுமே அவனுடைய உடலை மூடும் போர்வையாயிருக்கிறது. அவன் படுக்கும்போது, வேறு எதனால் அவன் தன்னை மூடிக்கொள்வான்? அவன் என்னிடம் அழும்போது நான் கேட்பேன். ஏனெனில் நான் கருணையுள்ளவர்.
28 “Kik iyany Nyasaye kata kwongʼo jatend jou.
“இறைவனை நிந்திக்கவேண்டாம். உங்கள் மக்களின் ஆளுநனை சபிக்கவேண்டாம்.
29 “Kik utamru golo chiwo mowuok e decheu kata kuonde kenou. “Nyaka umiya yawuotu makayo.
“உங்கள் தானியக் களஞ்சியங்களிலிருந்தும், திராட்சை இரசத் தொட்டிகளிலிருந்தும் காணிக்கைகளைக் கொடுக்காமல் வைத்திருக்கவேண்டாம். “உங்கள் மகன்களில் முதற்பேறானவனை நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டும்.
30 Timuru machal kamano ni rwethu kod rombeu. Weuru gibed gi minegi kuom ndalo abiriyo, to chiengʼ mar aboro miyagiuru.
நீங்கள் உங்கள் ஆடுமாடுகளிலிருந்தும் செம்மறியாடுகளிலிருந்தும் அப்படியே செய்யவேண்டும். அவை தங்களுடைய தாய்களுடன் ஏழுநாட்களுக்கு இருக்கட்டும். எட்டாம் நாளிலே அவற்றை எனக்குக் கொடுக்கவேண்டும்.
31 “Unubed joga maler. Kuom mano kik ucham ring chiayo mondiek onego; direuru ne guogi.
“நீங்கள் என் பரிசுத்த மக்களாக இருக்கவேண்டும். ஆகையால், காட்டு மிருகங்களினால் கிழிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியைச் சாப்பிடவேண்டாம். அதை நாய்களுக்கு எறிந்துவிடுங்கள்.”

< Wuok 22 >