< Rapar Mar Chik 27 >

1 Musa kod jodong Israel duto ne ochiko oganda niya, “Rituru chikegi ma amiyou kawuono
மோசேயும் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களும் மக்களுக்குக் கட்டளையிட்டதாவது: “இன்று நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
2 Ka usengʼado aora Jordan ma uchopo e piny ma Jehova Nyasaye ma Nyasachu miyou, keturu kite moko kendo uwirgi maber.
நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டிற்குள் போகும்போது, சில பெரிய கற்களை நாட்டி அவற்றிற்குச் சாந்து பூசுங்கள்.
3 Ndikuru kuomgi weche duto manie chike ka usengʼado ma uchopo e piny ma Jehova Nyasaye ma Nyasachu miyou ma en piny mopongʼ gi chak kod mor kich, mana kaka Jehova Nyasaye ma Nyasach kwereu nosingonu.
நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள், அதாவது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு வாக்குக்கொடுத்த பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்குள் போகும்போது, இந்த சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் அந்தக் கற்களின்மேல் எழுதுங்கள்.
4 Ka usengʼado aora Jordan, chunguru kitegi e Got Ebal mana kaka achikou kawuono ka uwirogi maber.
நீங்கள் யோர்தானைக் கடந்துபோகும்போது, இன்று உங்களுக்கு நான் கட்டளையிட்டபடியே ஏபால் மலையில் இந்தக் கற்களை நாட்டி, அவற்றுக்குச் சாந்து பூசுங்கள்.
5 Geruru kendo mar misango ne Jehova Nyasaye ma Nyasachu, ma en kendo mar misango molos gi kite. Kitego kik paa gi chuma.
அங்கே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கற்களினால் ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். இரும்பு ஆயுதங்கள் எதையும் அதன்மேல் பயன்படுத்த வேண்டாம்.
6 Geruru kendo mar misango mar Jehova Nyasaye ma Nyasachu gi kite ma ok opa, kendo utim misango miwangʼo pep kanyo ne Jehova Nyasaye ma Nyasachu.
வெட்டப்படாத கற்களால் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பலிபீடத்தைக் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்துங்கள்.
7 Timuru misengini mag lalruok kanyo, ka uchiemo kendo ubedo gi mor e nyim Jehova Nyasaye ma Nyasachu.
அங்கே சமாதான காணிக்கைகளையும் செலுத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில், நீங்களும் சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள்.
8 Kendo ndikuru weche duto mag chikni mochanore e kite ma usechungono.”
நீங்கள் நாட்டிய இந்தக் கற்களின்மேல் இந்த சட்டங்களின் வார்த்தைகளையெல்லாம் மிகத் தெளிவாக எழுதவேண்டும்” என்றார்கள்.
9 Eka Musa kod jodolo ma gin jo-Lawi nowachone jo-Israel duto niya, “Lingʼuru, yaye Israel, bende chikuru itu! Koro usebedo jo-Jehova Nyasaye ma Nyasachu.
அதன்பின் மோசேயும், லேவிய ஆசாரியரும் எல்லா இஸ்ரயேலரிடமும் சொன்னதாவது, “இஸ்ரயேலர்கள், மவுனமாய் இருந்து செவிகொடுங்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் சொந்த மக்களாகிவிட்டீர்கள்.
10 Luor Jehova Nyasaye ma Nyasachi kendo mondo iluw chikene kod buchene ma amiyi kawuono.”
ஆகவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்றார்கள்.
11 E odiechiengʼ onogono Musa nochiko oganda kowachonegi niya,
மேலும் அதே நாளில் மோசே மக்களுக்குக் கட்டளையிட்டதாவது:
12 Ka usengʼado aora Jordan, to dhoudigi nobi e Got Gerizim mondo gigwedh ji: Simeon, Lawi, Juda, Isakar, Josef kod Benjamin.
நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தவுடன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய கோத்திரங்கள் மக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கூறும்படி, கெரிசீம் மலையில் நிற்கவேண்டும்.
13 Kendo dhoudigi nochungʼ e Got Ebal ka gihulo weche mag kwongʼ: Reuben, Gad, Asher, Zebulun, Dan kod Naftali.
ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகிய கோத்திரங்கள் சாபங்களைக் கூறும்படி ஏபால் மலையில் நிற்கவேண்டும்.
14 Jo-Lawi biro somone jo-Israel gi dwol maduongʼ niya,
அப்பொழுது லேவியர், இஸ்ரயேல் மக்கள் யாவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியதாவது:
15 “Okwongʼ ngʼat moloso kido milamo, kata nyiseche mopa, ma en gima mono e nyim Jehova Nyasaye, tij lwedo mar japecho kendo mochungi kama opondo.” Eka ji duto nodwok niya, “Amin!”
“யெகோவாவுக்கு அருவருப்பானதும், கைவினைக் கலைஞனின் வேலையுமான ஒரு உருவச்சிலையை செதுக்கி, ஒரு விக்கிரகத்தை வார்ப்பித்து, அதை மறைவிடத்தில் வைக்கிற மனிதன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
16 “Okwongʼ ngʼat ma ok oluoro wuon kata min.” Eka ji duto nodwok niya, “Amin!”
“தகப்பனையோ, தாயையோ கனம் பண்ணாதவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
17 “Okwongʼ ngʼat masudo tongʼ mar jakiepe.” Eka ji duto nodwok niya, “Amin!”
“அயலானின் எல்லைக்கல்லைத் தள்ளி நாட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
18 “Okwongʼ ngʼat ma wito muofu e yo.” Eka ji duto nodwok niya, “Amin!”
“குருடனை வீதியில் தவறாக வழிநடத்துகிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
19 “Okwongʼ ngʼat maketho buch japiny moro, nyathi kich kod dhako ma chwore otho.” Eka ji duto nodwok niya, “Amin!”
“அந்நியனுக்கும், தந்தையற்றவனுக்கும், விதவைக்கும் நீதி வழங்காதிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
20 “Okwongʼ ngʼat ma terore gi chi wuon, nimar odwanyo kitanda wuon.” Eka ji duto nodwok niya, “Amin!”
“தகப்பனின் மறுமனைவியுடன் உடலுறவுகொள்பவன் தன் தகப்பனை அவமதித்தபடியால் அவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
21 “Okwongʼ ngʼat ma oterore gi chiayo.” Eka ji duto nodwok niya, “Amin!”
“எந்த மிருகத்துடனும் பாலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
22 “Okwongʼ ngʼat ma terore gi nyamin kata nyar wuon kata nyar min mare.” Eka ji duto nodwok niya, “Amin!”
“தனது தகப்பனுக்காவது, தாய்க்காவது பிறந்த தன் சகோதரியுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
23 “Okwongʼ ngʼat ma oterore gi mar-mare.” Eka ji duto nodwok niya, “Amin!”
“தன் மனைவியின் தாயுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
24 “Okwongʼ ngʼat ma onego nyawadgi lingʼ-lingʼ.” Eka ji duto nodwok niya, “Amin!”
“இரகசியமாக தன் அயலானைக் கொலைசெய்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
25 “Okwongʼ ngʼat ma okawo asoya mondo oneg ngʼat maonge ketho.” Eka ji duto nodwok niya, “Amin!”
“குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்குக் கைக்கூலி வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
26 “Okwongʼ ngʼat ma ok orito weche mag chikni kata luwogi ka ojiwogi.” Eka ji duto nodwok niya, “Amin!”
“இந்த சட்டங்களையெல்லாம் கைக்கொண்டு, அதன்படி நடக்காதவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

< Rapar Mar Chik 27 >