< ରମିୟ 7 >
1 ୧ ଏ ବାଇବଇନିମନ୍, ଏବେ ମୁଇ ଜାଇଟା କଇବାକେ ଗାଲିନି, ସେଟା ଅଇଲାନି ନିୟମ୍ । ନିୟମ୍ କାଇଟା ବଲି ତମେ ବୁଜିପାରାସ୍, ତାର୍ ଅରତ୍ ମିସା ଜାନାସ୍ । ମୁନୁସ୍ ଅବ୍କା ତାର୍ ଜିଇବା କାଇବା ଦିନ୍ ଜାକ ନିୟମର୍ ତଲେ ରଇସି ।
௧நியாயப்பிரமாணத்தை தெரிந்திருக்கிறவர்களோடு பேசுகிறேன். சகோதரர்களே, ஒரு மனிதன் உயிரோடிருக்கும்வரைக்கும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா?
2 ୨ ବିବା ଅଇବା ବିସଇ ଦେକ୍ଲେ, ମୁନୁସ୍ ବଁଚି ରଇବା ଜାକ, ତାର୍ ମାଇଜି ସଙ୍ଗ୍ ବିବା ବାନ୍ଦନେ ବାନ୍ଦିଅଇରଇସି । ମାତର୍ ମୁନୁସ୍ ମରିଗାଲା ପଚେ ତାର୍ ମାଇଜି ଏ ନିୟମେଅନି ମୁକଲ୍ସି ।
௨அது எப்படியென்றால், கணவனையுடைய ஒரு பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; கணவன் மரித்தபின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறாள்.
3 ୩ ସେ ବଁଚି ରଇଲା ବେଲେ, ତାର୍ ମାଇଜି ଜଦି ବିନ୍ ମୁନୁସ୍କେ ବିବା ଅଇସି, ତେବେ ତାକେ ଚାଡ୍ରି ବଲି କଇବାଇ, ମାତର୍ ମୁନୁସର୍ ମରନ୍ ପଚେ ବିନ୍ ମୁନୁସ୍କେ ବିବା ଅଇଲେ, ତାକେ ଆରି ଚାଡ୍ରି ବଲି ନ କଅତ୍ । ନିୟମ୍ ଇସାବେ ସେ ଗଟେକ୍ ମୁକ୍ଲି ରଇବା ମାଇଜି ।
௩ஆகவே, கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள்; ஆனால், கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை.
4 ୪ ଏ ମର୍ ବାଇବଇନିମନ୍, ତମେ ମିସା ସମାନ୍ ସେନ୍ତାରିସେ । ନିୟମ୍ ଇସାବେ କିରିସ୍ଟର୍ ଗାଗ୍ଡେ ମିସ୍ଲାର୍ପାଇ ତମେମିସା ମରିଆଚାସ୍ । ଏବେ ତମେ ତାର୍ଟା । ପର୍ମେସର୍ ତାକେ ମରନେଅନି ଉଟାଇଆଚେ । ଜେନ୍ତାରିକି ତାର୍ ସେବାକାମେ ଆମେ ମିସା ମିସ୍ବୁ ।
௪அதுபோல, என் சகோதரர்களே, நீங்கள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று பலன் கொடுப்பதற்காக கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களானீர்கள்.
5 ୫ ଜେତେଦିନ୍ ଜାକ ଆମେ ଗାଗଡ୍ ମନ୍ କଲା ଇସାବେ ବାନ୍ଦିଅଇରଇଲୁ, ନିୟମ୍ ଆମ୍କେ ନାଇ ବଲି କଇତେରଇଲା । ସେଟା ଆମର୍ ପାପ୍ ଅଦିକ୍ ଅଦିକ୍ କରାଇତେ ରଇଲା । ଆରି ଆମେ ମରନ୍ ବାଟେ ଜାଇତେରଇଲୁ ।
௫நாம் சரீரத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்குரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாக நம்முடைய சரீர உறுப்புகளிலே பெலன்செய்தது.
6 ୬ ଏବେ ଆମେ ନିୟମର୍ ସାସନେଅନି ମୁକଲ୍ଲୁ ଆଚୁ, କାଇକେବଇଲେ ଜନ୍ଟା ଆମ୍କେ ଦିନେକ୍ ବନ୍ଦି କରି ସଙ୍ଗାଇରଇଲା, ସେଟା ଆମର୍ ବିତ୍ରେ ମରିଗାଲାଆଚେ । ଆମେ ଆରି ଆଗ୍ତୁର୍ ପାରା ଲେକାଅଇଲା ନିୟମ୍ ଇସାବେ ପର୍ମେସର୍କେ ସେବାକରୁ ନାଇ । ଏବେ ସୁକଲ୍ ଆତ୍ମା ଦେକାଇଲା ବାଟେ ଇଣ୍ଡ୍ଲୁନି ।
௬இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி இல்லை, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி, அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
7 ୭ ତେବେ ଆମେ କାଇଟା ବଲି କଉଁ, ନିୟମେସେ ପାପ୍ ଆଚେ କି? ସେଟା ସତଇସେ ନଏଁ । ମାତର୍ ପାପ୍ କାଇଟା? ସେଟା, ମକେ ନିୟମ୍ ଜାନାଇଦେଲା ଆଚେ । “ବିନ୍ ଲକର୍ ଦିନ୍ସୁ ଲବାଇବାର୍ ନାଇ ।” ଏ ଆଦେସ୍ ଜଦି ନିୟମ୍ତେଇ ନ ରଇତା, ଲବାଇବାଟା କାଇଟା ବଲି ମୁଇ ନାଜାନ୍ତି ।
௭எனவே, என்னசொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? இல்லையே, பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனேதவிர மற்றப்படி இல்லை; “இச்சிக்காமல் இருப்பாயாக” என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே.
8 ୮ ମାତର୍ ଉପ୍ରର୍ ଆଦେସର୍ ସୁବିଦାନେଇ ପାପ୍ ମର୍ ବିତ୍ରେ ବିନ୍ବିନ୍ ରକାମର୍ କାରାପ୍ ମନ୍ କର୍ବାଟା ଜନ୍ମାଇଲା । ନିୟମ୍କେ ଚାଡିଦେଲେ ପାପ୍ ମଲା ସମାନ୍ ଆଚେ ।
௮பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று எல்லாவிதமான இச்சைகளையும் எனக்குள் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாக இருக்குமே.
9 ୯ ଗଟେକ୍ ବେଲାଇ, ମୁଇ ନିୟମ୍ ନାଜାନି କରି ଜିଇତେ ରଇଲି, ନିୟମ୍ ଜାନ୍ଲା ପଚେ ପାପ୍ ପୁର୍ଲା,
௯முன்பே நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இருந்தபோது நான் ஜீவனுள்ளவனாக இருந்தேன்; கட்டளை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.
10 ୧୦ ଆରି ମୁଇ ମରିଗାଲି । ଜନ୍ ନିୟମ୍ ଜିବନ୍ ଦେବାକେ ଟିକ୍ କରିରଇଲା, ସେଟା ମର୍ ପାଇ ମରନ୍ ଆନ୍ଲା ।
௧0இப்படியிருக்க, ஜீவனுக்குரிய கட்டளை எனக்கு மரணத்திற்குரியதாக இருப்பதைப் பார்த்தேன்.
11 ୧୧ କାଇକେବଇଲେ ନିୟମର୍ ସୁବିଦା ନେଇ ମକେ ପାପ୍ ନାଡାଇଲା ଆରି ମରାଇଲା ।
௧௧பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று, என்னை ஏமாற்றியது, அதினாலே என்னைக் கொன்றது.
12 ୧୨ ନିୟମ୍ ପର୍ମେସରର୍ଟାନେଅନି ଆଇଲାକେ ସୁକଲ୍ ଆଚେ । ତାର୍ ଆଦେସ୍ ସବୁ ସୁକଲ୍, ଟିକ୍ ଆରି ବେସି ନିକ ।
௧௨எனவே, நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது, கட்டளையும் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது.
13 ୧୩ ସେନ୍ତିଆଲେ ଜନ୍ଟା ନିକ, ସେଟା କାଇକେ ମର୍ ମରନ୍ ଆନ୍ବାଟା ଅଇରଇଲା? ସେନ୍ତାରି କେବେ ନ ଅ । ମାତର୍ ପାପର୍ ମରନ୍ ଅଇଲା । ତାର୍ ନିୟମ୍, ଜେନ୍ତିକି ଆମର୍ ପାପ୍ କେତେକ୍ କାରାପ୍ ଆଚେବଲି ଡିସାଇବାକେ ପର୍ମେସରର୍ ଜଜ୍ନା ରଇଲା । ତେବର୍ପାଇ ତାର୍ ନିୟମର୍ଲାଗି ଏଟା ସାଦନ୍ କଲା ।
௧௩இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமானதோ? அப்படி இல்லை; பாவமே எனக்கு மரணமானது; பாவம் கட்டளையினாலே அதிக பாவமுள்ளதாவதற்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே இருக்கும்படிக்கும் அப்படியானது.
14 ୧୪ ଆମେ ଜାନୁ ଜେ, ନିୟମ୍ ଆତ୍ମାଇ ଆଇସି, ମାତର୍ ମୁଇ ମର୍ ଗାଗଡ୍ ମନ୍ କଲାଟାକେ ମାନ୍ଲାର୍ପାଇ ପାପର୍ ଗତିଦାଙ୍ଗ୍ଡା ଅଇଲିଆଚି ।
௧௪மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது, நானோ பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு, சரீரத்திற்குரியவனாக இருக்கிறேன்.
15 ୧୫ ମୁଇ ଜନ୍ଟା କଲିନି, ସେଟା ବୁଜି ନାଇ, ମାତର୍ ଜନ୍ ନିକ କାମ୍ କର୍ବାକେ ମନ୍ କଲିନି ସେଟାସେ କରିନାପାର୍ଲିନି । ଆରି ଜନ୍ କାରାପ୍ କାମ୍ କର୍ବାକେ ମୁଇ ମୁଲ୍କେ ମନ୍ କରି ନାଇ, ସେଟାସେ କଲିନି ।
௧௫எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
16 ୧୬ ମାତର୍ ମୁଇ ମନ୍ ନ କରି ରଇବା କାମ୍ କର୍ବାର୍ ଲାଗି, ନିୟମ୍ ଟିକ୍ ଆଚେ ବଲି ମାନ୍ଲିନି ।
௧௬இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க, நியாயப்பிரமாணம் நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறேனே.
17 ୧୭ ସେଟାର୍ ପାଇ ଏ ସବୁ ଜାକ କାମ୍ ମୁଇ କରି ନାଇ । ମର୍ ବିତ୍ରେ ରଇବା ପାପ୍ସେ ସେଟା କଲାନି ।
௧௭எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
18 ୧୮ ମର୍ ଗାଗଡର୍ କାରାପ୍ ମନ୍ କର୍ବାଟାନେଅନି କାଇମିସା ନିମାନ୍ ବିସଇ ନ ଆସେ ବଲି ମୁଇ ଜାନ୍ଲିନି । କାଇକେବଇଲେ ନିକ କାମ୍ କର୍ବାକେ ମନ୍ ରଇଲେ ମିସା ସେଟା କରି ନାପାର୍ଲିନି ।
௧௮அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை.
19 ୧୯ ସେଟାର୍ ପାଇ ଜନ୍ ନିକ କାମ୍ କର୍ବାକେ ମୁଇ ମନ୍ କଲିନି, ସେ କାମ୍ ନ କରି, ଜନ୍ କାରାପ୍ କାମ୍ କର୍ବାକେ ମୁଲ୍କେ ମନ୍ ନାଇ, ସେଟାସେ କଲିନି ।
௧௯எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20 ୨୦ ଜଦି ମୁଇ ମନ୍ ନ କର୍ବାଟା କରିଲାଗି ଆଚି, ସେନ୍ତାର୍ଆଲେ ଜାଇଟା କଲିନି, ସେଟା ମୁଇ ସତଇସେ କରିନାଇ, ମର୍ ବିତ୍ରେ ରଇଲା ପାପ୍ସେ ସେଟା କଲାନି ।
௨0அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
21 ୨୧ ଏଟା ମର୍ ବିତ୍ରେ ଗଟେକ୍ କାମ୍କର୍ବା ନିୟମ୍ ବଲି ମନେ ଅଇଲାନି । ଜନ୍ଟା ନିକ, ସେଟା ମୁଇ କର୍ବାକେ ଗାଲାବେଲେ, ଅବ୍କା କାରାପ୍ ବିସଇସେ କଲିନି ।
௨௧ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன்.
22 ୨୨ ପରମେସରର୍ ନିୟମ୍ ନାମ୍ବାକେ ମୁଇ ବେସି ମନ୍ କଲିନି,
௨௨உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன்.
23 ୨୩ ମାତର୍ ମର୍ ମନ୍ କଲା ବିରଦେ ମର୍ ଗାଗଡ୍ ତେବାଇବା ବିଦି ସବୁବେଲେ ଜୁଇଦ୍ କଲାନି । ମର୍ ଗାଗ୍ଡେ କାମ୍କର୍ତେ ରଇବା ସବୁ ପାପ୍ ମକେ ବନ୍ଦି କରି ସଙ୍ଗଇଲା ଆଚେ ।
௨௩ஆனாலும் என் மனதின் பிரமாணத்திற்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன்; அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
24 ୨୪ କେଡେ କରମ୍ ନଇଲା ଲକ୍ ମୁଇ! ମରନର୍ ମୁଏଁ ଜିକିନେବା ଏ ଗାଗଡର୍ ଚଲାଚଲ୍ତି ଅନି କେ ମକେ ମୁକ୍ଲାଇସି?
௨௪நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்?
25 ୨୫ ପରମେସର୍ ଦନିଅବାଦ୍ ପାଅ! ମାପ୍ରୁ ଜିସୁ କିରିସ୍ଟର୍ ଲାଗି ମୁଇ ଉଦାର୍ ପାଇଆଚି । ତେବେ, ଏଟା ଅଇଲାନି ମର୍ କରମ୍ । ପରମେସରର୍ ନିୟମ୍ କାଲି ମୁଇ ମର୍ ମନେ ନାମି ପାର୍ବି । ମାତର୍ ମର୍ ମୁନୁସ୍ ଇସାବର୍ ଚଲାଚଲ୍ତି ମକେ ପାପର୍ ଗତି ଦାଙ୍ଗ୍ଡା ଅଇବାକେ ବାଦିଅ କଲାନି ।
௨௫நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்.