< ମାତିଉ 12 >
1 ୧ ତାର୍ କେତେ ଦିନ୍ ପଚେ ଜିସୁ ଗଟେକ୍ ବିସ୍ରାମ୍ବାରେ ତାସ୍ପଦାର୍ ବାଟେ ଜାଇତେରଇଲା । ଜିବାବେଲେ ତାର୍ ସିସ୍ମନ୍କେ ବୁକ୍ ଲାଗ୍ଲାଜେ କେଡ୍ ଚିଡାଇ କାଇବାର୍ ଦାର୍ଲାଇ ।
௧அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் வயல்வழியே போனார்; அவருடைய சீடர்கள் பசியாக இருந்து, கதிர்களைப் பறித்து, சாப்பிடத் தொடங்கினார்கள்.
2 ୨ ସେଟା ଦେକି ପାରୁସିମନ୍ ଜିସୁକେ ପାଚାର୍ଲାଇ, “ଦେକ୍ ବିସ୍ରାମ୍ବାରେ ତର୍ ସିସ୍ମନ୍ କେନ୍ତାରି ସାସ୍ତରେ ରଇବା ରିତିନିତି ବିରଦର୍ କାମ୍ କଲାଇନି ।”
௨பரிசேயர்கள் அதைக் கண்டு, அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை உம்முடைய சீடர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
3 ୩ ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ଦିନେକ୍ ଦାଉଦ୍ ଆରି ତାର୍ ସଙ୍ଗ୍ ରଇଲା ଲକ୍ମନ୍ ବୁକେ ରଇଲା ବେଲେ, ଦାଉଦ୍ କାଇଟା କରି ରଇଲା, ତମେ ସାସ୍ତରେ ପଡାସ୍ ନାଇ କି?
௩அதற்கு அவர்: தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
4 ୪ ସେଦିନେ ସେମନ୍ ମନ୍ଦିର୍ ବିତ୍ରେ ପୁରି, ମାପ୍ରୁର୍ପାଇ ସର୍ପି ଅଇରଇବା ରୁଟି କାଇଲାଇ । ନିୟମ୍ ଇସାବେ ପୁଜାରିକେ ଚାଡି, ସେ ରୁଟି କେ ମିସା କାଇବାର୍ ଅଦିକାର୍ ନ ରଇଲା ।
௪அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் புசிக்கக்கூடாத தேவ சமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடு இருந்தவர்களும் புசித்தார்களே.
5 ୫ ତମେ କାଇ ପଡାସ୍ ନାଇ କି? ମସାର୍ ନିୟମ୍ ଇସାବେ ସବୁ ବିସ୍ରାମ୍ବାରେ ପୁଜାରିମନ୍ ନିୟମ୍ ନ ମାନ୍ଲେ ମିସା, ସେଟାର୍ ପାଇ, ସେମନ୍ ଦସି ବଲି ବିଚାର୍ନା ନ ଅଅତ୍ ।
௫அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
6 ୬ ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, ଆଜି ଏ ମନ୍ଦିର୍ଟାନେଅନି ମୁକିଅ ବିସଇ ଇତି ଆଚେ ।”
௬தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7 ୭ “ସାସ୍ତର୍ କଇଲାନି, ପସୁ ପୁଜ୍ବା ବିରୁ ନ କରି, ଲକ୍ମନ୍କେ ଦୟା କର୍ବାଟା, ମୁଇ ମନ୍ କଲିନି । ଏ କାତାର୍ ଅରତ୍ ଜଦି ସତ୍ ଇସାବେ ବୁଜିରଇତାସ୍ବଇଲେ, ଏ ଦସ୍ ନ କଲା ଲକ୍ମନ୍କେ ତମେ ଦସି ନ କର୍ତାସ୍ ।
௭பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
8 ୮ ଜାନିରୁଆ, ନର୍ପିଲା ମୁଇ ନିଜେ ବିସ୍ରାମ୍ବାରର୍ ମାପ୍ରୁ ।”
௮மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
9 ୯ ଜିସୁ ସେ ଜାଗାଇଅନି ବାରଇ ଜାଇ ପାର୍ତନା ଗରେ ପୁର୍ଲା ।
௯அவர் அந்த இடத்தைவிட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார்.
10 ୧୦ ତେଇ ଆତ୍ ସୁକିଜାଇରଇଲା ଗଟେକ୍ ଲକ୍ ରଇଲା । ଜିସୁର୍ ଦସ୍ ଦାର୍ବାକେ ପାରୁସିମନ୍ ଗଟେକ୍ ଦଲଅଇ ତେଇ ଜାଗି ରଇଲାଇ । ସେଟାର୍ପାଇ ସେମନ୍ ଜିସୁକେ ପାଚାର୍ଲାଇ, “ବିସ୍ରାମ୍ବାରେ ନିମାନ୍ କର୍ବାଟା ଆମର୍ ନିୟମର୍ ବିରଦ୍ ନଏଁ କି?”
௧0அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
11 ୧୧ ଜିସୁ କଇଲା, “ଜଦି ବିସ୍ରାମ୍ବାରେ ତମର୍ ବିତ୍ରେ କାର୍ଆଲେ ମେଣ୍ଡା ଗଟେକ୍ ଡେଙ୍ଗ୍ କାଲେ ଅଦର୍ଲେ, ତମେ ତାକେ ଜିକି ନ ଆନାସ୍ କି?
௧௧அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
12 ୧୨ ମେଣ୍ଡାର୍ତେଇ ଅନି ଗଟେକ୍ ଲକର୍ ମୁଲିଅ କେତେକ୍ ଅଦିକ୍ । ସେଟାର୍ ପାଇ ଆମେ ବିସ୍ରାମ୍ବାରେ ବିନ୍ ଲକ୍କେ ସାଇଜ କର୍ବାଟା ସାସ୍ତରେ ରଇବା ରିତିନିତିର୍ ବିରଦ୍ ଅଇବା କାମ୍ ନଏଁ ।”
௧௨ஆட்டைவிட மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயம்தான் என்று சொன்னார்.
13 ୧୩ ଏତ୍କି କଇକରି ସେ ଆତ୍ ସୁକିଜାଇରଇଲା ଲକ୍କେ କଇଲା, “ଆତ୍ ସଲକ୍ କର୍ ।” ସେ ଲକ୍ ଆତ୍ ସଲକ୍ କଲା ଦାପ୍ରେ, ସେ ଆତ୍ ନିକ ଲକର୍ ଆତ୍ ପାରା ଅଇଗାଲା ।
௧௩பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.
14 ୧୪ ତାର୍ପଚେ ପାରୁସିମନ୍ ସେ ଜାଗାଇଅନି ବାରଇ ଉଟିଜାଇ ଜିସୁକେ ମରାଇବାକେ ଜଜ୍ନା କଲାଇ ।
௧௪அப்பொழுது, பரிசேயர்கள் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள்.
15 ୧୫ ତାର୍ ବିରୁଦେ ପାଁଚ୍ବାଟା ସୁନିକରି, ଜିସୁ ସେ ଜାଗା ଚାଡି ବିନେ ଉଟିଗାଲା । କେତେକ୍ କେତେକ୍ ଲକ୍ ତାର୍ ପଚେ ପଚେ ଗାଲାଇ । ଆରି ସେ ସବୁ ରଗି ଲକ୍ମନ୍କେ ନିକ କଲା ।
௧௫இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி,
16 ୧୬ ତାର୍ ନିଜର୍ ବିସଇ ବିନ୍ ଲକ୍ମନ୍କେ କାଇ ବଲି ନ କୁଆ ବଲି ସେମନ୍କେ ଆଦେସ୍ ଦେଇତେରଇଲା ।
௧௬தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.
17 ୧୭ ଜିସାୟ ବବିସତ୍ବକ୍ତାର୍ ଟାନେଅନି ପର୍ମେସର୍ ଜନ୍ କାତା ସୁନାଇରଇଲା, ସେଟା ପୁରାପୁରୁନ୍ କର୍ବାକେ ଏଟା କଲା,
௧௭ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது:
18 ୧୮ “ଏ ମର୍ ବାଚିରଇବା ସେବାକାରିଆ । ଆକେ ମୁଇ ଆଲାଦ୍ କଲିନି, ତାର୍ ଲଗେ ମର୍ ସାର୍ଦା । ମର୍ ଆତ୍ମା ତାର୍ ଉପ୍ରେ ଆସି ଡାବି ଅଇସି, ସେ ସବୁ ଜାତିର୍ ଲଗେ ଜାଇ ମର୍ ଟିକ୍ ବିଚାର୍ନା ଜାନାଇସି ।
௧௮“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன், அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார்.
19 ୧୯ ସେ କାକେ କିରଜାଟି ନ କରେ । ସେ ବେସି ଆଉଲି ନ ଅଏ । ସାଇର୍ ମଜାଇ ଟିଆ ନ ଅଏ ଆରି ଜବର୍ ଅଇତେ କାତା ନ କଏ ।
௧௯வாக்குவாதம் செய்யவும் மாட்டார், சத்தமிடவும் மாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.
20 ୨୦ ଦୁର୍ବଲ୍ ଲକ୍ମନ୍କେ ସେ ଆଲାଦର୍ ଚଲାଚଲ୍ତି କର୍ସି, ଆରି ଆକା ସାକା ନଇଲା ଲକ୍ମନ୍କେ ଦୟା କର୍ସି । ସେମନ୍ ନିଆଇ ନ ପାଇବାଜାକ ସେ ତାର୍ କାମ୍ ବନ୍ଦ୍ ନ କରେ ।
௨0அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.
21 ୨୧ ତାକେ ସବୁ ଦେସର୍ ଲକ୍ ଆସା କର୍ବାଇ ।”
௨௧அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே.
22 ୨୨ ତାର୍ ପଚେ ଦିନେକ୍ ଲକ୍ମନ୍ ଗଟେକ୍ କାଣା ଅଇ ଗୁଲା ଅଇଜାଇରଇଲା ଲକ୍କେ ଜିସୁର୍ ଲଗେ ଆନ୍ଲାଇ । ତାକେ ଡୁମା ଦାରିରଇଲାଜେ କାତାଅଇ ନାପାର୍ତେ ରଇଲା । ଜିସୁ ତାକେ ନିମାନ୍ କଲା । ଏଦେ ଦେକା! ସେ ଦେକ୍ଲା ଆରି କାତା କଇପାର୍ଲା ।
௨௨அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார்.
23 ୨୩ ଜିସୁର୍ ଏ କାମ୍ ଦେକି ସବୁ ଲକ୍ କାବା ଅଇଜାଇ ପାଚାର୍ ଉଚାର୍ ଅଇଲାଇ, “ଏ କାଇ ସେ ଦାଉଦର୍ ପଅ କି?”
௨௩மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
24 ୨୪ ଏଟା ସୁନି ପାରୁସିମନ୍ କଇଲାଇ, “ସେ ଡୁମାମନର୍ ମୁକିଅ ବାଲ୍ଜିବୁଲର୍ ଟାନେଅନି ବପୁ ପାଇ ଡୁମା ଚାଡାଇଲାନି ।”
௨௪பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள்.
25 ୨୫ ଜିସୁ ତାକର୍ ମନର୍ କାତା ଜାନି ସେମନ୍କେ କଇଲା, ଗଟେକ୍ ରାଇଜର୍ ଲକ୍ ବିନ୍ବିନ୍ ଦଲେ ବାଗ୍ ଅଇ ନିଜର୍ ନିଜର୍ ବିତରେ ଲାଗାଲାଗି ଅଇଲେ, ସେ ଦେସ୍ ବେସି ଦିନ୍ ନ ରଏ । କନ୍ଆଲେ ସଅର୍ ନଇଲେ ଗର୍ ବିତ୍ରେ ବିନ୍ ବିନ୍ ଦଲ୍ ଗଡିକରି ଲାଗାଜଡା ଅଇଲେ ସେମନ୍ ଦାପ୍ରେସେ କୁରୁପ୍ନାସ୍ ଅଇଜିବାଇ ।
௨௫இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
26 ୨୬ ସେନ୍ତାରିସେ, ସଇତାନର୍ ରାଇଜେ ଜଦି ଗଟେକ୍ ଦଲ୍ ବିନ୍ ଦଲ୍ ବିରୁଦେ ଲାଗ୍ଲାନି ବଇଲେ, ସେଟା କୁଟ୍କୁଟା ଅଇ ବିଲିଜାଇସି । ଏଟା ଜାନ୍ବାର୍ ଆଚେ ।
௨௬சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?
27 ୨୭ ମୁଇ ବାଲ୍ଜିବୁଲର୍ ବପୁ ପାଇ ଡୁମାମନ୍କେ ଚାଡାଇଲିନି ବଲି ତମେ କଇଲାସ୍ନି ତେବେ, ସେମନ୍କେ କେଦ୍ବାକେ ତମର୍ ସିସ୍ମନ୍କେ କେ ବପୁ ଦେଲାନି? ତମର୍ ସିସ୍ମନର୍ ଏ କାମର୍ ଲାଗି, ତମେ ଦାବି କଲାଟା ମିଚ୍ ବଲି ଜାନାପଡ୍ଲାନି ।
௨௭நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள்.
28 ୨୮ ଡୁମା ଚାଡାଇବା ବପୁ ମୁଇ ବାଲ୍ଜିବୁଲର୍ ଟାନେଅନି ପାଇନାଇ । ସେଟା ମୁଇ ପର୍ମେସରର୍ ଆତ୍ମାର୍ଟାନେଅନି ପାଇଆଚି । ଏଟାର୍ ପାଇ ଆରି ଗଟେକ୍ ବିସଇ ଜାନାପଡି ଗାଲାନିଜେ ସରଗ୍ ରାଇଜ୍ ତମର୍ ଲଗେ ଆସି କେଟିଗାଲାବେ ।
௨௮நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே.
29 ୨୯ ଆଗେ ଗଟେକ୍ ବପୁର୍ ଲକ୍କେ ନ ବାନ୍ଦ୍ତେ କେ ମିସା ତାର୍ ଗରେ ପୁରିକରି ଗରେ ରଇଲାଟା ଚରାଇ ନେଇ ନାପାରତ୍ ।
௨௯அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
30 ୩୦ ଜେ ମର୍ ବାଟେ ନ ରଏ, ବାଇଦରେ ସେ ମର୍ ବିରୁଦେ ଆଚେ । ଆରି ଜେ ମର୍ ସଙ୍ଗ୍ ମିସିକରି ନ ଟୁଲିଆଏ, ସେ ବିଚିଦେଲାନି ।
௩0என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
31 ୩୧ ସେଟାର୍ପାଇ ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, ଜଦି କେ ଆଲେ ପାପ୍ କଲେ କି ନିନ୍ଦା କାତା କଇଲେ ମିସା, ତାର୍ ଲାଗି ତାକେ କେମା ଦିଆଅଇସି । ମାତର୍ କେ ଜଦି ସୁକଲ୍ ଆତ୍ମାର୍ ବିରୁଦେ କାଇ ବଲି କଇସି ବଇଲେ, ତାକେ କେମା ନାଇ ।
௩௧ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
32 ୩୨ ଜଦି କେ ନର୍ପିଲା, ମର୍ ବିରଦେ ନିନ୍ଦା କାତା କଇଲେ, ତାକେ କେମା ମିଲ୍ସି, ମାତର୍ ଜେ ଜଦି ସୁକଲ୍ ଆତ୍ମାର୍ ବିରୁଦେ ନିନ୍ଦା କାତା କଇଲେ ତାକେ ଏବେ କି ପଚ୍କେ ମିସା କେମା ନ ମିଲେ । (aiōn )
௩௨எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn )
33 ୩୩ “ନିକ ପଲ୍ ଦାର୍ବାର୍ଆଲେ ଗଟେକ୍ ଗଚ୍ ନିକ ଅଇବାର୍ ଆଚେ । ବାନିଆ ଗଚେ ବାନିଆ ପଲ୍ ଅଇସି । ଗଚ୍ କେନ୍ତିଟା, ତାର୍ ପଲେ ଅନି ଜାନାପଡ୍ସି ।
௩௩மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
34 ୩୪ ଏ ସାଁପ୍ ପାରା କାରାପ୍ ଲକ୍ମନ୍! ତମେ କାରାପ୍ ଅଇ ନିମାନ୍ କାତା କଇପାରାସ୍ କି? ମନେ ଚିନ୍ତାକଲାଟା ଟଣ୍ଡ୍ବାଟେ ବାରଇସି ।
௩௪விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
35 ୩୫ ଗଟେକ୍ ନିମାନ୍ ଲକ୍ ତାର୍ ମନ୍ବିତ୍ରେ ଅନି ନିମାନ୍ କାତା ଆନ୍ସି । ଗଟେକ୍ କାରାପ୍ ଲକ୍ ତାର୍ ମନ୍ ବିତ୍ରେ ବର୍ତିଅଇ ରଇବା ବାଦ୍ଲାପାରା କାତା ବାର୍କରାଇ ଆନ୍ସି ।”
௩௫நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
36 ୩୬ “ତମେ କଇରଇଲା କାଇ ଲଡାକେ ନଇବା ସବୁ କାତା, ବିଚାର୍ନା ଦିନେ ତମ୍କେ ଇସାବ୍ ଦେବାକେ ଅଇସି ।
௩௬மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
37 ୩୭ ତମର୍ କାତାଇଅନି ତମେ ବିଚାର୍ କରାଇଅଇ, ଦସି ନଇଲେ ଦସ୍ ନ କଲା ଲକ୍ ବଲାଇଅଇସା ।”
௩௭ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
38 ୩୮ ଗଟେକ୍ ଦିନେ ଜିଉଦି ମନର୍ ନିୟମ୍ ସିକାଇଦେବା ଲକ୍ମନ୍ ଆରି ପାରୁସି ଲକ୍ମନର୍ ବିତ୍ରେଅନି କେତେଲକ୍ ଜିସୁକେ କଇଲାଇ, “ଏ ଗୁରୁ, ତମର୍ ଗଟେକ୍ କାବାଅଇଜିବା ଚିନ୍ ଦେକ୍ବାକେ ଆମେ ମନ୍କଲୁନି ।”
௩௮அப்பொழுது, வேதபண்டிதர்களிலும் பரிசேயர்களிலும் சிலர் அவரைப் பார்த்து: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.
39 ୩୯ ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ଏ ଜୁଗର୍ ବିସ୍ବାସ୍ ନ କରୁମନ୍ କେଡେ କାରାପ୍, ଆରି ପର୍ମେସର୍କେ ବିସ୍ବାସ୍ କରତ୍ନାଇ । ତମେ ମକେ ଗଟେକ୍ କାବାଅଇଜିବା କାମ୍ ଦେକାଇବାକେ କଇଲାସ୍ନି? ନାଇ, ଅବ୍କା ବାବବାଦି ଜୁନସର୍ ଜିବନେ ଗଟିରଇଲା କାବାଅଇଜିବାଟା ତମ୍କେ ଦେକାଇଦେଇ ଅଇସି ।”
௩௯அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
40 ୪୦ “ଜୁନସ୍ ଜେନ୍ତି ମାଚ୍ ପେଟେ ତିନ୍ ଦିନ୍ ତିନ୍ ରାତି ରଇଲା, ସେନ୍ତି ନର୍ପିଲା ମୁଇ ମିସା ମାଟି ତଲେ ତିନ୍ ଦିନ୍ ତିନ୍ ରାତି କାଟାଇବି ।
௪0யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
41 ୪୧ ଜନ୍ ଦିନେ ପର୍ମେସର୍ ଲକ୍ମନର୍ ବିଚାର୍ କର୍ସି, ସେ ଦିନେ ନିନିବିର୍ ଲକ୍ମନ୍ ତମର୍ ବିରୁଦେ ଦାବି କର୍ବାକେ ଟିଆ ଅଇବାଇ । କାଇକେ ବଇଲେ ସେମନ୍ ଜୁନସର୍ କାତା ସୁନି ପାପ୍ ବାଟେଅନି ବାଅଡ୍ଲାଇ । ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, ଜୁନସର୍ ଟାନେଅନି ବଡ୍ ଲକ୍ ଇତି ଆଚେ ।
௪௧யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
42 ୪୨ ବିଚାର୍ କର୍ବାବେଲେ ଦକିନ୍ ଦେସେ ରଇବା ସେବା ନାଉଁର୍ ଗଟେକ୍ ଜାଗାର୍ ରାନି, ତମର୍ ଦସ୍ ଦେକାଇବାକେ ଟିଆ ଅଇସି, କାଇକେ ବଇଲେ ସଲମନର୍ ଗିଆନର୍ କାତା ସୁନ୍ବାକେ ବେସି ଦୁର୍ ଦେସେଅନି ସେ ଆସି ରଇଲା । ମାତର୍ ମୁଇ ତମ୍କେ ସତ୍ କଇଲିନି, ସଲ୍ମନର୍ ଟାନେ ଅନି ଗଟେକ୍ ବେସି ବଡ୍ ଲକ୍ ଇତି ଆଚେ ।”
௪௨தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
43 ୪୩ ଜିସୁ ଆରି କଇଲା, ଜେଡେବଲ୍ କାରାପ୍ ଆତ୍ମା ଗଟେକ୍ ଲକର୍ ଗାଗ୍ଡେଅନି ବାରଇ ଜାଇସି, ସେବେଲା, ସେ ରଇବାକେ ମରୁବାଲିବୁଏଁ ଜାଗା କଜି ବୁଲ୍ସି । ମାତର୍ ସେନ୍ତି ଜାଗା ତାକେ ନ ମିଲ୍ଲେ ।
௪௩அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:
44 ୪୪ ସେ ବେଲା ସେ କଇସି, “ମୁଇ ଜନ୍ ଲକର୍ତେଇଅନି ବାରଇ ଆଇଲି ଆଚି, ତେଇସେ ଆରିତରେକ୍ ଜିବି” ବଲି ବାଉଡି ଉଟିଜାଇସି । ସେଡିକି ବେଲେ ସେ ଆସିକରି ବିତ୍ରେ ସପାସୁତର୍ ଅଇ ପରିଚଲ୍ ରଇବାଟା ଦେକ୍ଲେ, ସେ ଜାଇ ତାର୍ତେଇଅନି ଅଦିକ୍ କାରାପ୍ ରଇବା ସାତ୍ଟା ଆତ୍ମାମନ୍କେ ଡାକିଆନ୍ସି ।
௪௪நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதைப் பார்த்து,
45 ୪୫ ତାର୍ ପଚେ ସବୁ କାରାପ୍ ଆତ୍ମାମନ୍ ଜାଇକରି ସେ ଲକର୍ ବିତ୍ରେ ବାସାକରି ରଇବାଇ । ସେ ବେଲା ସେ ଲକ୍ ଆଗ୍ତୁର୍ତେଇଅନି ଅଦିକ୍ କରାପ୍ଅଇଜାଇସି । ଏନ୍ତିସେ ଆଜିକାଲି ଜିଇବା କାରାପ୍ ଲକ୍ମନ୍କେ ଅଇସି । ବଲି କଇଲା ।
௪௫திரும்பிப்போய், தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டுவந்து, உள்ளே நுழைந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனிதனுடைய முன்னிலைமையைவிட அவனுடைய பின்னிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியார்களுக்கும் நடக்கும் என்றார்.
46 ୪୬ ଜିସୁ ଜେଡେବେଲା ତେଇ ରୁଣ୍ଡିରଇଲା ଲକ୍ମନ୍କେ କାତା ସୁନାଇତେ ରଇଲା, ତାର୍ ଆୟା ଆରି ବାଇମନ୍ ଆସି ଡାଣ୍ଡେ ଟିଆଅଇରଇଲାଇ । ସେମନ୍ ଜିସୁର୍ ସଙ୍ଗ୍ କାତାଅଇବାକେ ମନ୍ କର୍ତେ ରଇଲାଇ ।
௪௬இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
47 ୪୭ ସେଡିକି ବେଲେ ଗଟେକ୍ ଲକ୍ ଜିସୁକେ କଇଲା, “ତର୍ ଆୟା ଆରି ବାଇମନ୍ ଡାଣ୍ଡେ ଜାଗ୍ଲାଇ ଆଚତ୍, ସେମନ୍ ତର୍ ସଙ୍ଗ୍ କାତା ଅଇବାକେ ମନ୍ କଲାଇନି ।”
௪௭அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
48 ୪୮ ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “କାକେ ମର୍ ଆୟା ଆରି ବାଇମନ୍ ବଲି ବାବ୍ଲାସ୍ନି?”
௪௮தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி,
49 ୪୯ ତାର୍ ସିସ୍ମନର୍ ବାଟେ ଆତ୍ ଦେକାଇ କଇଲା, “ଏ ଲକ୍ମନ୍ସେ ମର୍ ଆୟା ଆରି ବାଇମନ୍ ଅଇବାଇ ।
௪௯தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
50 ୫୦ ଜେ ସର୍ଗେ ରଇବା ମର୍ ବାବାର୍ ମନ୍ କଲା ଇସାବେ କାମ୍ କର୍ସି, ସେମନ୍ ଆକା ମର୍ ବାଇ, ବଇନି ଆରି ଆୟା ଅଇବାଇ ।”
௫0பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.