< ଲୁକ୍ 8 >
1 ୧ ତେଇଅନି ଚନେକ୍ ଗାଲାପଚେ, ଜିସୁ ନଅରେ ନଅରେ ଆରି ଗାଏଁ ଗାଏଁ ପର୍ମେସରର୍ ରାଇଜର୍ ସୁବ୍କବର୍ କଇ ବୁଲ୍ବାର୍ ଦାର୍ଲା, ଆରି ବାରଟା ସିସ୍ମନ୍ ତାର୍ ସଙ୍ଗ୍ ରଇଲାଇ ।
௧பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள்.
2 ୨ ଜନ୍ ମାଇଜିମନ୍ ଡୁମାଦାର୍ଲା ଟାନେଅନି ଆରି ଜର୍ଦୁକା ଟାନେଅନି ନିକ ଅଇରଇଲାଇ, ସେମନ୍ ମିସା ତାର୍ ସଙ୍ଗ୍ ରଇଲାଇ । ମାଇଜିମନର୍ ବିତ୍ରେ ଅନି ମରିୟମ୍ ଜାକେ କି ମଗ୍ଦଲିନି ମରିୟମ୍ ବଲି କଇବାଇ । ଜାର୍ଟାନେଅନି ସାତ୍ଟା ଡୁମା ବାରଇ ଜାଇରଇଲାଇ ।
௨பொல்லாத ஆவிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவித்து சுகமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பிசாசுகளின் தொல்லையிலிருந்து விடுதலைபெற்ற மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3 ୩ ଏରଦ୍ ରାଜାର୍ ଗୁମସ୍ତା କୁଜାର୍ ମାଇଜି ଜଆନା, ସସନା, ଆରି କେତେକ୍ କେତେକ୍ ମାଇଜିମନ୍, ଜିସୁର୍ ସଙ୍ଗ୍ ରଇ ନିଜର୍ ନିଜର୍ ଦନ୍ ସାରାଇ ତାକେ ସେବା କର୍ତେରଇଲାଇ ।
௩ஏரோதின் மேலாளரான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த பல பெண்கள் அவரோடு இருந்தார்கள்.
4 ୪ ଜେଡେବେଲେ ଲକ୍ମନ୍ ଗଟେକ୍ ଜାଗାଇ ଟୁଲ୍ଅଇଲାଇ, ଆରି ନଅରେ ନଅରେ ଅନି ତାର୍ଲଗେ ଆଇଲାଇଜେ ଜିସୁ ଏନ୍ତି ଉଦାଅରନ୍ ଦେଇ କଇଲା,
௪எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மக்கள்கூட்டம் அவரிடத்தில் வந்தவுடன், அவர் உவமையாகச் சொன்னது:
5 ୫ “ଗଟେକ୍ ଚାସି ତାର୍ ବିଅନ୍ ବୁନ୍ବାକେ ବାରଇଲା । ସେ ବୁନୁ ବୁନୁ କେତେଟା ବିଅନ୍ ବାଟେ ଅଦର୍ଲା । ଲକ୍ମନ୍ ସେଟା ମାଣ୍ଡ୍ଚୁଣ୍ଡ କରିଦେଲାଇ ଆରି ଚଡଇମନ୍ ଆସି କାଇଦେଲାଇ ।
௫விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைச் சாப்பிட்டுச் சென்றன.
6 ୬ କେତେଟା ପାକ୍ନା ବାଡି ରଇଲା ବୁଏଁ ଅଦର୍ଲା, ସେଟା ଆଁକ୍ରି ଗାଜା ଅଇଲା, ମାତର୍ ମାଟି ନ ବିଜିରଇଲାଜେ ସୁକିଗାଲା ।
௬சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோனது.
7 ୭ କେତେଟା କାଟାବୁଟାମନର୍ ମଜାଇ ଅଦର୍ଲା । କାଟାବୁଟାମନ୍ ଦାପ୍ରେ ବଡିକରି ଆଁକର୍ଲାଟାମନ୍କେ ଚାପିଦେଲା ।
௭சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
8 ୮ ଆରି ବାକି କେତେଟା ନିକ ଜମିଟାନେ ଅଦର୍ଲା ଆରି ସଏ ଗୁନ୍ ପଲ୍ ପଲ୍ଲା ।” ଏଟା କଇସାରାଇ ଜିସୁ ଆଉଲିଅଇକରି କଇଲା, “ଜାକେ ସୁନ୍ଲାପାରା କାନ୍ ଆଚେ, ସେ ସୁନ ।”
௮சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கூறினார்.
9 ୯ ତାର୍ ସିସ୍ମନ୍ ଏ ଉଦାଅରନ୍ ଦେଇରଇବାଟା କାଇଟା ଅଇରଇସି ବଲି ତାକେ ପାଚାର୍ବାର୍ ଦାର୍ଲାଇ ।
௯அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
10 ୧୦ ତେଇ ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ପର୍ମେସରର୍ ରାଇଜର୍ ଟିକିନିକି ବିସଇ ଜାନତ୍ ବଲି ତମ୍କେ ଗିଆନ୍ ଦିଆଅଇଲାଆଚେ, ମାତର୍ ବିନ୍ଲକ୍ମନ୍କେ ଉଦାଅରନ୍ ଦେଇ କଇଅଇସି, ଜେନ୍ତାରିକି ସେମନ୍ ଦେକି ଦେକି ନ ଦେକତ୍ କି ସୁନି ସୁନି ମିସା ନ ବୁଜତ୍ ।”
௧0அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
11 ୧୧ “ଉଦାଅରନର୍ କାତା ଏନ୍ତାରି, ବିଅନ୍ ଅଇଲାନି ପର୍ମେସରର୍ ବାକିଅ ।
௧௧“அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
12 ୧୨ ବାଟ୍ଲଗେ ଅଦର୍ଲା ବିଅନ୍, ଏନ୍ତାରି ଲକ୍ମନର୍ପାରା, ଜେମନ୍ ବାକିଅ ସୁନ୍ବାଇ । ତାର୍ପଚେ ସଇତାନ୍ ଆସି, ଜେନ୍ତିକି ସେମନ୍ ବିସ୍ବାସ୍ କରି ରକିଆ ନ ପାଅତ୍, ସେ ଲକ୍ମନର୍ ମନ୍ବିତ୍ରେଅନି ବାକିଅ ଜିକିନେଇସି ।
௧௨வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
13 ୧୩ ପାକ୍ନାବାଡି ବୁଏଁ ଅଦର୍ଲା ବିଅନ୍ ଏନ୍ତାରି ଲକ୍ମନ୍କେ ବୁଜାଇସି । ସେମନ୍ ବାକିଅ ସୁନି ସାର୍ଦାସଙ୍ଗ୍ ମାନ୍ବାଇ, ମାତର୍ ସେମନ୍କେ ଚେର୍ ନ ରଇଲାର୍ପାଇ ବଲି ଚନେକ୍ ବିସ୍ବାସ୍ କର୍ବାଇ ଆରି କାଇଆଲେ ପରିକା ବେଲାଇ ବିସ୍ବାସ୍ ଚାଡିଦେବାଇ ।
௧௩கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமட்டும் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
14 ୧୪ ଆରି କାଟାବୁଟାମନର୍ ମଜାଇ ଅଦର୍ଲା ବିଅନ୍ ଏନ୍ତାରି ଲକ୍ମନ୍କେ ବୁଜାଇସି । ଜନ୍ଲକ୍ମନ୍ ବାକିଅ ସୁନ୍ବାଇ, ମାତର୍ ଜଗତର୍ ଚିନ୍ତା, ଦନ୍ ସଁପତିର୍ ଚିନ୍ତା କରି କରି ଚାପିଅଇଜିବାଇ । ତେଇ ନିକ ଦାନ୍ ନ ଅଏ ।
௧௪முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள்.
15 ୧୫ ଆରି ନିମାନ୍ ବୁଏଁ ଅଦର୍ଲା, ବିଅନ୍ ଏନ୍ତାରି ଲକ୍ମନ୍କେ ବୁଜାଇସି । ଜନ୍ ଲକ୍ମନ୍ କି ନିମାନ୍ ଆରି ଦରମ୍ ମନେ ବାକିଅ ସୁନିକରି ସେଟା ଡାଟ୍ ସଙ୍ଗ୍ ଦାରି ସଙ୍ଗଇବାଇ ଆରି ଜାଗିରଇକରି ପଲ୍ପଲ୍ବାଇ ।”
௧௫நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.
16 ୧୬ “ବତି ଡସାଇ କରି କେ ମିସା ଡାଲାଡାବି ନ ସଙ୍ଗଅତ୍ । କି କଟ୍ ତଲେ ନ ସଙ୍ଗଅତ୍ । ମାତର୍ ବତି କୁଦ୍ରା ଉପ୍ରେ ସଙ୍ଗଇବାଇ । ଜେନ୍ତାରିକି ଆଇଲା ଲକ୍ମନ୍ ଉଜଲ୍ ଦେକିପାରତ୍ ।”
௧௬ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடிவைக்கமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; உள்ளே நுழைகிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
17 ୧୭ “କାଇକେବଇଲେ, ଏନ୍ତାରି ଲୁଚିରଇବା ବିସଇ କାଇଟା ନାଇ, ଜନ୍ଟା ଜାନା ନ ପଡେ । ଡାବିଅଇରଇବା ବିସଇ କାଇଟା ନାଇ ଜନ୍ଟା ଉଗାଡି ନଏଁ ।”
௧௭வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை.
18 ୧୮ “ସେଟାର୍ ପାଇ, ଜେନ୍ତାରି ସୁନ୍ସା, ସେ ବିସଇ ନେଇକରି ଜାଗ୍ରତ୍ ରୁଆ । କାଇକେବଇଲେ ଜାକେ ଆଚେ ତାକେ ଅଦିକ୍ ଦିଆଅଇସି । ଆରି ଜାକେ ନାଇ, ସେ ଜେତ୍କି ନିଜର୍ଟା ଆଚେ ବଲି ବାବ୍ସି, ସେ ଅଲପ୍ଟା ମିସା ତାର୍ଟାନେଅନି ନିଆଅଇସି ।”
௧௮ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
19 ୧୯ ଜିସୁର୍ ମାଆ ଆରି ବାଇମନ୍ ତାର୍ ଲଗେ ଆଇଲାଇ । ମାତର୍ ଲକ୍ମନ୍ ଜବର୍ ରଇଲାଇକେ ତାର୍ ସଙ୍ଗ୍ ମିସିନାପାର୍ତେ ରଇଲାଇ ।
௧௯அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் வந்தார்கள் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் அருகில் செல்லமுடியாமல் இருந்தது.
20 ୨୦ ତେଇ ଜିସୁକେ ଏ କବର୍ ଦେଲାଇ, “ତମର୍ ମାଆ ଆରି ବାଇମନ୍ ତକେ ଦେକ୍ବାକେ ମନ୍କରି ବାଇରେ ଟିଆଅଇଲାଇ ଆଚତ୍ ।”
௨0அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21 ୨୧ ମାତର୍ ଜିସୁ ଲକ୍ମନ୍କେ କଇଲା, “ଜନ୍ ଲକ୍ମନ୍ ପର୍ମେସରର୍ ବାକିଅ ସୁନ୍ବାଇ ଆରି ମାନ୍ବାଇ ସେମନ୍ ମର୍ ମାଆ ଆରି ବାଇମନ୍ ।”
௨௧அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக்கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரர்களுமாக இருக்கிறார்கள் என்றார்.
22 ୨୨ ଦିନେକ୍ ଜିସୁ ଆରି ତାର୍ ସିସ୍ମନ୍ ଗଟେକ୍ ଡଙ୍ଗାଇ ଚଗ୍ଲାଇ, ଆରି ସେ ସିସ୍ମନ୍କେ କଇଲା, “ଆସା, ଗାଡ୍ ସେପାଟେ ଜୁ ।” ତେଇ ସେମନ୍ ଡଙ୍ଗା ମେଲ୍ଲାଇ ।
௨௨பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
23 ୨୩ ମାତର୍ ଡଙ୍ଗାଗାଟି ଗାଲାବେଲେ ଜିସୁ ସଇଦେଲା । ସେଡ୍କିବେଲେ ଗାଡେ ଅଟାତ୍ ବାଉପବନ୍ ଆଇଲା ଆରି ଡଙ୍ଗାଇ ପାନିପୁରି ବର୍ତି ଅଇବାର୍ ଦାର୍ଲା । ସେମନ୍ ବଡ୍ ବିପଦେ ପଡିଗାଲାଇ ।
௨௩படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது.
24 ୨୪ ତେଇ ସିସ୍ମନ୍ ଜିସୁର୍ଲଗେ ଆସି ତାକେ ଉଟାଇ କଇଲା “ଏ ଗୁରୁ, ଏ ଗୁରୁ, ଆମେ ମରିଜିବୁବେ!” ତେଇ ଜିସୁ ଉଟିକରି ପବନ୍ ଆରି ବଡ୍ ଲଅଡିକେ ଦମ୍କାଇଲା, ଆରି ସେଟା ସବୁ ଚିମ୍ରାଇଅଇ ତବିର୍ ଅଇଲା ।
௨௪அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, சாகப்போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் தண்ணீரின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டானது.
25 ୨୫ ସେ ସିସ୍ମନ୍କେ କଇଲା, “ତମର୍ ବିସ୍ବାସ୍ କେନେ ଅଇଲା?” ମାତର୍ ସେମନ୍ ଡରିକରି କାବାଅଇ ନିଜେ ନିଜେ କଇବାର୍ ଦାର୍ଲାଇ । “ତେବେ ଏ କେ ଜେ ପବନ୍ ଆରି ପାନିକେ ମିସା ଆଦେସ୍ ଦେଲା ଦାପ୍ରେ, ସେଟା ସବୁ ତାର୍ ଆଦେସ୍ ମାନ୍ବାଇ ।”
௨௫அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
26 ୨୬ ପଚେ ଜିସୁ ଆରି ତାର୍ ସିସ୍ମନ୍ ଗାଲିଲି ମୁଆଟର୍ ସେପାଟେ ଗରାସିୟମନର୍ ଜାଗାଇ କେଟ୍ଲାଇ ।
௨௬பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள்.
27 ୨୭ ଜିସୁ ଡଙ୍ଗାଇଅନି ଉତର୍ଲା ଦାପ୍ରେ, ସେ ନଅରର୍ ଗଟେକ୍ ଡୁମାଦାର୍ଲା ଲକ୍ ତାକେ ବେଟ୍ଅଇଲା । ସେ ବେସି ଦିନେଅନି କାଇଟା ନ ପିନ୍ଦିକରି ଗରେ ନ ରଇ, ମସ୍ନେ ରଇତେ ରଇଲା ।
௨௭அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாகப் பிசாசுகள் பிடித்தவனும், ஆடையணியாதவனும், வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவனுமாக இருந்த அந்தப் பட்டணத்து மனிதன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான்.
28 ୨୮ ସେ ଜିସୁକେ ଦେକି କିର୍କିରି ତାର୍ ପାଦେ ଅଦ୍ରି, ଆଉଲିଅଇ କଇଲା, “ଏ ବେସି ବପୁର୍ସଙ୍ଗ୍ ରଇବା ପର୍ମେସରର୍ ପଅ ଜିସୁ, ମର୍ ଲଗେ ତମର୍ କାଇ କାମ୍ ଆଚେ? ମୁଇ ତମ୍କେ ବାବୁଜିଆ କରି କଇଲିନି, ମକେ କସ୍ଟ ନ ଦିଆ ।”
௨௮அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான்.
29 ୨୯ କାଇକେ ବଇଲେ ଜିସୁ ଡୁମାକେ ସେ ମୁନୁସର୍ ଟାନେଅନି ବାରଇଜାଅ ବଲି ଆଦେସ୍ ଦେଇରଇଲା । ସେ ଡୁମା ସେଲକ୍କେ ଦାରିଲାଗିରଇଲା, ଆରି ଲକ୍ମନ୍ ତାକେ ସିକିଲି ସଙ୍ଗ୍ ବାନ୍ଦି ଜାଗ୍ତେ ରଇଲାଇ । ମାତର୍ ସେ ବାନ୍ଦ୍ଲାଟା ସବୁ ଚିଡାଇ ପାକାଇତେରଇଲା ଆରି ଡୁମା ତାକେ କିନରା ଜାଗାମନ୍କେ ଦାରିଜାଇତେରଇଲା ।
௨௯அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30 ୩୦ ଜିସୁ ତାକେ ପାଚାର୍ଲା, “ତର୍ ନାଉଁ କାଇ ନାଉଁ?” ସେ କଇଲା, ବାଇନି, କାଇକେ ବଇଲେ ତାକେ ଗାଦା ଡୁମାମନ୍ ଦାରି ରଇଲାଇ ।
௩0இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான்.
31 ୩୧ ଆରି ଜିସୁ ଜେନ୍ତିକି ସେମନ୍କେ ପାତାଲେ ଜିବାକେ ଆଦେସ୍ ନ ଦେଏ, ଏଟାର୍ ପାଇ ସେମନ୍ ତାକେ ବାବୁଜିଆ କର୍ବାର୍ ଦାର୍ଲାଇ । (Abyssos )
௩௧தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos )
32 ୩୨ ତେଇ କୁପ୍ଲି ଲଗେ ଗଟେକ୍ ମାନ୍ଦା ଗୁସ୍ରି ରାସି ଚାର୍ତେ ରଇଲାଇ । ଆରି ସେ ଜେନ୍ତାରି ସେମନ୍କେ ସେ ଗୁସ୍ରି ମାନ୍ଦାର୍ ମଜାଇ ପୁର୍ବାକେ ଆଦେସ୍ ଦେଇସି, ଏଟାର୍ ପାଇ ସେମନ୍ ଜିସୁକେ ବାବୁଜିଆ କଲାଇ ।
௩௨அந்த இடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.
33 ୩୩ ଜିସୁ ସେମନ୍କେ ଆଦେସ୍ ଦେଲା ଦାପ୍ରେ ଡୁମାମନ୍ ସେ ମୁନୁସର୍ଟାନେଅନି ବାରଇ ଗୁସ୍ରି ରାସିର୍ ମଜାଇ ପୁର୍ଲାଇ । ପୁର୍ଲାକେ ଗୁସ୍ରି ମାନ୍ଦା ଜବର୍ ପାଲାଇକରି ଗଡ୍ଗଡାବାଟେ ଜାଇ ଗାଡେ ଅଦ୍ରି ମରିଗାଲାଇ ।
௩௩அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன.
34 ୩୪ ଗୁସ୍ରି ଚାରାଇତେ ରଇଲା ଲକ୍ମନ୍ ସେ ଗଟ୍ନା ଦେକି ପାଲାଇକରି ନଅରେ ଆରି ଗାଉଁମନ୍କେ ଜାଇ ସେ କାତା ଜାନାଇଲାଇ ।
௩௪அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35 ୩୫ ତେଇ ଲକ୍ମନ୍ ସେ ଗଟ୍ନା ଦେକ୍ବାକେ ବାରଇ ଆଇଲାଇ ଆରି, ସେମନ୍ ଜିସୁର୍ ଲଗେ ଆସି ଜନ୍ ମୁନୁସର୍ ଟାନେଅନି ଡୁମାମନ୍ ବାରଇଲାଇ, ସେ ଲକ୍ ଲୁଗା ପିନ୍ଦି ନିକ ମନର୍ ସଙ୍ଗ୍ ଜିସୁର୍ ପାଦ୍ ତଲେ ବସି ରଇବାଟା ଦେକି ଡରିଗାଲାଇ ।
௩௫அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36 ୩୬ ଆରି ଜନ୍ଲକ୍ମନ୍ ଏଟା ସବୁ ଦେକି ରଇଲାଇ, ସେମନ୍ ସେ ଡୁମା ଦାର୍ଲା ଲକ୍ କେନ୍ତାରି ନିକ ଅଇଲା, ସେଟା ବିନ୍ ଲକ୍ମନ୍କେ ଜାନାଇଲାଇ ।
௩௬பிசாசுகள் பிடித்திருந்தவன் சுகமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37 ୩୭ ତେଇ ଗରାସିୟମନର୍ ଚାରିବେଡ୍ତିର୍ ଜାଗାର୍ ଲକ୍ମନ୍ ଜିସୁକେ ତାକର୍ଟାନେଅନି ଜିବାକେ ଗୁଆରି କଲାଇ । କାଇକେବଇଲେ ସେମନ୍ ବେସି ଡରିଜାଇ ରଇଲାଇ ଆରି, ଜିସୁ ଗଟେକ୍ ଡଙ୍ଗାଇ ବସି ବାଉଡି ଆଇଲା ।
௩௭அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார்.
38 ୩୮ ମାତର୍ ଜନ୍ ଲକର୍ଟାନେଅନି ଡୁମାମନ୍ ବାରଇଜାଇ ରଇଲାଇ, ସେ ଜିସୁର୍ ସଙ୍ଗ୍ ରଇବି ବଲି ଗୁଆରି କର୍ବାର୍ଦାର୍ଲା ।
௩௮பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
39 ୩୯ ମାତର୍ ସେ ତାକେ କଇକରି ପାଟାଇଲା । “ତର୍ ଗରେ ବାଉଡି ଜା ଆରି ପର୍ମେସର୍ ତର୍ଲାଗି ଜନ୍ ଜନ୍ କାମ୍ କଲାଆଚେ ସେ ସବୁ କଇଦେସ୍ ।” ତେଇ ସେ ଲକ୍ ଇଣ୍ଡିଜାଇ ଜିସୁ ତାର୍ ପାଇ ଜନ୍ ଜନ୍ କାମ୍ କରିରଇଲା, ଗୁଲାଇ ନଅରେ ଜାନାଇବାର୍ ଦାର୍ଲା ।
௩௯இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் சொல் என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான்.
40 ୪୦ ଜିସୁ ଗାଡ୍ ସେପାଟେ ଅନି ଏ ପାଟେ ଆରିତରେକ୍ ବାଉଡି ଆଇଲା ପଚେ, ଲକ୍ମନ୍ ତାକେ ସାର୍ଦା ସଙ୍ଗ୍ ମାନ୍ଲାଇ । କାଇକେ ବଇଲେ ସେମନ୍ ତାକେ ଜାଗି ରଇଲାଇ ।
௪0இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.
41 ୪୧ ଆରି ଏଦେ ଦେକା! ଜାଇରସ୍ ନାଉଁର୍ ଗଟେକ୍ ଲକ୍ ଆଇଲା । ସେ ଜିଉଦି ଲକ୍ମନର୍ ପାର୍ତନା ଗରର୍ ମୁକିଆ ରଇଲା । ସେ ଜିସୁର୍ ପାଦ୍ ତଲେ ଅଦ୍ରି ତାର୍ ଗରେ ଆଇବାକେ ଗୁଆରି କଲା ।
௪௧அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால்,
42 ୪୨ କାଇକେ ବଇଲେ ତାଉଁକେ ଗଟେକ୍ସେ ବାର ବରସର୍ ଟକି ରଇଲା ଆରି ସେ ମଲାପାରା ଅଇଜାଇରଇଲା । ମାତର୍ ଜିସୁ ଜାଇତେ ରଇବାବେଲେ ଲକ୍ମନ୍ ତାର୍ ଉପ୍ରେ ମାଣ୍ଡାଚୁଣ୍ଡାଅଇଜାଇତେ ରଇଲାଇ ।
௪௨தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள்.
43 ୪୩ ସେଡ୍କିବେଲେ ବାର ବରସ୍ ଦାରି ବନି ଜାଇତେ ରଇବା ଗଟେକ୍ ରଗିନି ମାଇଜି ରଇଲା । ନିଜର୍ ସବୁଡାବୁ ସାରାଇକରି ମିସା କାର୍ ଲଗେ ଜାଇ ନିକ ଅଇ ନାପାର୍ଲା ।
௪௩அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண்,
44 ୪୪ ସେ ପଚ୍ବାଟେଅନି ଆସି ଜିସୁର୍ ଲୁଗା ଜାଲି ଚିଇଲା । ଚିଇଲା ଦାପ୍ରେ ତାର୍ ବନି ଜିବାଟା ତେବ୍ଲା ।
௪௪அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது.
45 ୪୫ ତେଇ ଜିସୁ କଇଲା, “କେ ମକେ ଚିଇଲା?” ମାତର୍ ସବୁ ଲକ୍ ନାଇ ବଲି କଇଲାଇଜେ, ପିତର୍ କଇଲା, “ଏ ଗୁରୁ ଲକ୍ମନ୍ ମାଣ୍ଡାଚୁଣ୍ଡାଅଇ ତମର୍ ଉପ୍ରେ ଡାବିଅଇଆଇଲାଇନି ।”
௪௫அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46 ୪୬ ମାତର୍ ଜିସୁ କଇଲା, “କେ କି ଗଟେକ୍ ଲକ୍ ମକେ ଚିଇଲା, କାଇକେ ବଇଲେ ମର୍ ବିତ୍ରେଅନି ବପୁ ବାରଇଲା ବଲି ମୁଇ ଜାନ୍ଲି ।”
௪௬அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
47 ୪୭ ଜେଡେବଲ୍ ମାଇଜି ଦେକ୍ଲାଜେ ମୁଇ ଲୁଚିନାପାରି, ସେ ତର୍ତରି ତର୍ତରି ଆସି ଜିସୁର୍ ପାଦେ ଅଦ୍ରି, କାଇଟାର୍ ପାଇ ତାକେ ଚିଇଲା, ଆରି କେନ୍ତାରି ଦାପ୍ରେ ନିକ ଅଇଲା, ସେଟା ସବୁ ଲକର୍ ମୁଆଟେ ଜାନାଇଲା ।
௪௭அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48 ୪୮ ତେଇ ଜିସୁ ତାକେ କଇଲା, “ନୁନି ତର୍ ବିସ୍ବାସ୍ ତକେ ନିମାନ୍ କଲାଆଚେ ସାନ୍ତିଅଇ ଉଟିଜା ।”
௪௮அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
49 ୪୯ ସେ ଏ କାତା କଇବା ବେଲେ ଜିଉଦିମନର୍ ପାର୍ତନା ଗରର୍ ମୁକିଆ ଜାଇରସର୍ ଗରେଅନି ଗଟେକ୍ ଲକ୍ ଆସି କଇଲା, “ତମର୍ ଟକି ମରିଗାଲାବେ, ଗୁରୁକେ ଆରି କସ୍ଟ ଦିଆସ୍ ନାଇ ।”
௪௯அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான்.
50 ୫୦ ମାତର୍ ଜିସୁ ଏଟା ସୁନି ଜାଇରସ୍କେ କଇଲା, “ଡରାନାଇ ଅବ୍କା ବିସ୍ବାସ୍ କରା, ସେ ବଁଚ୍ସି ।”
௫0இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
51 ୫୧ ଜିସୁ ଜାଇରସର୍ ଗରେ ଆସି ପିତର୍, ଜଅନ୍ ଆରି ଜାକୁବ୍ ଆରି ଟକିର୍ ବାବା ମାଆ କେ ଚାଡିକରି କାକେ ମିସା ବିତ୍ରେ ଡାକିନେଏ ନାଇ ।
௫௧அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல்,
52 ୫୨ ମାତର୍ ସବୁ ଲକ୍ ଟକିର୍ ଲାଗି କାନ୍ଦି କାନ୍ଦି କରି ବୁକେ ମାରିଅଇତେ ରଇଲାଇ । ତେଇ ଜିସୁ କଇଲା “କାନ୍ଦା ନାଇ, ସେ ମରେ ନାଇ, ମାତର୍ ସଇ ଦେଲାଆଚେ ।”
௫௨எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார்.
53 ୫୩ ମାତର୍ ଟକି ମରିଗାଲାଆଚେ ବଲି ଜାନି ରଇଲାଇଜେ ଲକ୍ମନ୍ ଜିସୁକେ କିଜାଇବାର୍ ଦାର୍ଲାଇ ।
௫௩அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
54 ୫୪ ମାତର୍ ଜିସୁ ଟକିର୍ ଆତେ ଦାରି କଇଲା, “ଏ ନୁନି ଉଟ୍ ।”
௫௪எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
55 ୫୫ ତେଇ ଟକିର୍ ଜିବନ୍ ବାଉଡି ଆଇଲା, ଆରି ସେ ସେଡ୍କି ବେଲେସେ ଉଟ୍ଲା । ଜିସୁ ତାକେ କାଇଟା ଆଲେ କାଇବାକେ ଦିଆସ୍ ବଲି ଆଦେସ୍ ଦେଲା ।
௫௫அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார்.
56 ୫୬ ତେଇ ଟକିର୍ ବାବା ମା କାବା ଅଇଗାଲାଇ, ମାତର୍ ଜିସୁ ସେ ଗଟ୍ନାର୍ କାତା କାକେ ଜାନାଆ ନାଇ ବଲି ଆଦେସ୍ ଦେଲା ।
௫௬அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.