< ଲୁକ୍ 6 >
1 ୧ ତରେକ୍ ବିସ୍ରାମ୍ ବାରେ ଜିସୁ ତାସ୍ ରଇଲା ପଦାବାଟେ ଜିବାବେଲେ ତାର୍ ସିସ୍ମନ୍ କେଡ୍ ଚିଡାଇ ଆତେ ରମ୍ଦି କାଇତେରଇଲାଇ ।
௧பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, இயேசு வயல்வெளியில் நடந்துபோகும்போது, அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.
2 ୨ ସେମନ୍କେ ଦେକ୍ତେରଇବା ପାରୁସି ଲକ୍ମନର୍ ବିତ୍ରେଅନି କେତେଲକ୍ କଇଲାଇ, “ବିସ୍ରାମ୍ ବାରେ ଜନ୍ଟା କର୍ବାର୍ ବିଦି ନଏଁ, ସେଟା ତମେ କାଇକେ କଲାସ୍ନି?”
௨பரிசேயர்களில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யக்கூடாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
3 ୩ ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ଦାଉଦ୍ ଆରି ତାର୍ ସଙ୍ଗର୍ ଲକ୍ମନ୍ ବୁକେ ରଇଲାବେଲେ, ଦାଉଦ୍ କାଇଟା କରିରଇଲା, ସେଟା କାଇ ତମେ ପଡାସ୍ ନାଇ କି?
௩இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தாவீதும் அவனோடுகூட இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறுயாரும் சாப்பிடக்கூடாத தேவசமூகத்தின் அப்பங்களைக் கேட்டு வாங்கி,
4 ୪ ସୁନା, ଦାଉଦ୍ ପର୍ମେସରର୍ ଗରେ ପୁରି, ପର୍ମେସର୍କେ ସର୍ପି ଅଇରଇଲା ଜନ୍ ରୁଟି, ପୁଜାରିମନ୍କେ ଚାଡି ଆରି କେ ମିସା କାଇବାର୍ ବିଦି ନ ରଇଲା, ସେଟା ନେଇକରି କାଇଲା ଆରି ତାର୍ ସଙ୍ଗର୍ ଲକ୍ମନ୍କେ ମିସା ଦେଇରଇଲା ।”
௪தான் சாப்பிட்டதுமல்லாமல், தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5 ୫ ଆରି ଜିସୁ କଇଲା, “ପର୍ମେସର୍ ପାଟାଇରଇବା ନର୍ପିଲା ମୁଇ ବିସ୍ରାମ୍ ବାରେ ଲକ୍ମନ୍ କାଇଟା କର୍ବାର୍ ଆଚେ କାଇଟା କର୍ବାର୍ ନାଇ, ସେଟା କଇବାର୍ ମର୍ ଅଦିକାର୍ ଆଚେ ।”
௫மேலும் மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
6 ୬ ଆରି ଜିସୁ ବିନ୍ ଗଟେକ୍ ବିସ୍ରାମ୍ବାରେ, ଜିଉଦି ଲକ୍ମନର୍ ପାର୍ତନା ଗରେ ଜାଇକରି ସିକାଇତେରଇଲା । ତେଇ ଗଟେକ୍ ଲକ୍ ରଇଲା । ତାର୍ ଉଜା ଆତ୍ ସୁକିଜାଇରଇଲା ।
௬வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான்.
7 ୭ ଆରି ଜିସୁ ବିସ୍ରାମ୍ବାରେ ମିସା କେ ଜାନେ ନିକ କର୍ସି, ଏଟା ଦେକୁ ବଲି ପାରୁସି ଲକ୍ମନ୍ ଆରି ସାସ୍ତର୍ ସିକାଉମନ୍ ତାକେସେ ଦେକି ଦେକି ରଇଲାଇ, କାଇକେବଇଲେ ତାର୍ ବିରୁଦେ ଦସ୍ ଦାର୍ବାକେ ।
௭அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
8 ୮ ମାତର୍ ଜିସୁ ତାକର୍ ମନେ ବାବ୍ଲାଟା ଜାନିକରି, ଜନ୍ ଲକର୍ ଆତ୍ ସୁକିଜାଇରଇଲା, ତାକେ କଇଲା, “ଉଟ୍ ଆରି ସବୁଲକର୍ ମୁଆଟେ ଟିଆ ଅ ।” ଆରି ସେଲକ୍ ଉଟି ଟିଆଅଇଲା ।
௮அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
9 ୯ ତେଇ ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ମୁଇ ତମ୍କେ ପାଚାର୍ଲିନି, ବିସ୍ରାମ୍ବାରେ ବିଦି ଇସାବେ କାଇଟା କର୍ବାର୍? ନିକ କର୍ବାର୍ କି କାରାପ୍ କର୍ବାର୍? ଜିବନ୍ ବଁଚାଇବାର୍ କି ମରାଇବାର୍?”
௯அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு,
10 ୧୦ ଆରି ସେ ଚାରିବେଡ୍ତି ସବୁକେ ଦେକି ସେ ଲକ୍କେ କଇଲା, “ତମର୍ ଆତ୍ ଲାମାଆ ।” ତେଇ ସେ ସେନ୍ତାର୍ କଲା, ଆରି ତାର୍ ଆତ୍ ପୁରାପୁରୁନ୍ ନିକ ଅଇଗାଲା ।
௧0அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.
11 ୧୧ ମାତର୍ ପାରୁସିମନ୍ ଆରି ସାସ୍ତର୍ ସିକାଉମନ୍ ବେସି ରିସା ଅଇଗାଲାଇ ଆରି ଜିସୁର୍ ବିରୁଦେ “କାଇଟା କରୁ?” ବଲି ତାକର୍ ତାକର୍ ବିତ୍ରେ ନିଆଇ କଲାଇ ।
௧௧அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.
12 ୧୨ ସେବେଲେ ଦିନେକ୍ ଜିସୁ ପାର୍ତନା କର୍ବାକେ ବାରଇ, ପର୍ବତେ ଗାଲା ଆରି ଗୁଲାଇରାତି ପର୍ମେସର୍କେ ପାର୍ତନା କରି କରି ରଇଲା ।
௧௨அந்த நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
13 ୧୩ ସାକାଲ୍ ପାଇଲାକେ, ଜିସୁ ସିସ୍ମନ୍କେ ଲଗେ ଡାକି ସେମନର୍ ବିତ୍ରେଅନି ବାର ଲକ୍କେ ବାଚ୍ଲା, ଆରି ସେମନ୍କେ ପେରିତ୍ ବଲି ନାଉଁ ଦେଲା ।
௧௩பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயரிட்டார்.
14 ୧୪ ସେମନ୍ ରଇଲା, ସିମନ୍ ଜାକେ କି ସେ ପିତର୍ ବଲି ମିସା ନାଉଁ ଦେଲା, ଆରି ସିମନର୍ ବାଇ ଆନ୍ଦ୍ରିୟ, ଜାକୁବ୍ ଆରି ଜଅନ୍, ପିଲିପ୍ ଆରି ବାର୍ତଲମି ।
௧௪அவர்கள் யாரென்றால், பேதுரு என்று தாம் பெயரிட்ட சீமோன், அவனுடைய சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
15 ୧୫ ମାତିଉ ଆରି ତମା, ଆଲ୍ପିର୍ ପ ଜାକୁବ୍ ଆରି ସିମନ୍, ଜାକେ କି କାଇ କାମ୍ କର୍ବାକେ ମିସା ଆଗ୍ତୁ ଅଇସି ବଲି କଇବାଇ ।
௧௫மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்பட்ட சீமோன்,
16 ୧୬ ଜାକୁବର୍ ପ ଜିଉଦା ଆରି ଇସ୍କାରିତ ଜିଉଦା, ଜେ କି ଜିସୁକେ ସତ୍ରୁମନ୍କେ ସର୍ପିଦେଇ ରଇଲା ।
௧௬யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
17 ୧୭ ଆରି ଜିସୁ ପେରିତ୍ମନର୍ ସଙ୍ଗ୍ ଉତ୍ରିକରି, ଗଟେକ୍ ସଦ୍ରମ୍ ରଇଲା ଜାଗାଇ ଟିଆଅଇଲା । ଆରି ତେଇ ତାର୍ ବେସି ସିସ୍ମନ୍, ଜିଉଦା ରାଇଜର୍ ବେସି ଲକ୍, ଜିରୁସାଲାମ୍ ଆରି ସମ୍ଦୁର୍ ପାଲି ରଇବା ସର ଆରି ସିଦନ୍ ସଅରେଅନି ବେସି ଲକ୍ମନ୍ ରୁଣ୍ଡିରଇଲାଇ ।
௧௭பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள்.
18 ୧୮ ଲକ୍ମନ୍ ତାର୍ ବାକିଅ ସୁନ୍ବାକେ ଆରି ନିଜର୍ ନିଜର୍ ରଗେଅନି ନିକ ଅଇବାକେ ଆସିରଇଲାଇ । ଜନ୍ ଲକ୍ମନ୍ ଡୁମା ଦାରାଇଅଇ ଦୁକ୍ କସ୍ଟ ପାଇତେରଇଲାଇ, ସେମନ୍କେ ଜିସୁ ନିକ କଲା ।
௧௮அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
19 ୧୯ ସବୁଲକ୍ମନ୍ ଜିସୁକେ ଚିଇବାକେ ଚେସ୍ଟା କର୍ତେରଇଲାଇ । କାଇକେବଇଲେ ତାର୍ ଗାଗ୍ଡେଅନି ମାପ୍ରୁର୍ ବପୁ ବାରଇତେରଇଲା ଆରି ସବୁଲକ୍ମନ୍କେ ନିକ କରତେରଇଲା ।
௧௯அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள்.
20 ୨୦ ସେବେଲେ ଜିସୁ ନିଜର୍ ସିସ୍ମନର୍ ବାଟେ ଦେକି କଇଲା, “ତମେ ଏବେ କାକୁର୍ତି ଅଇଆଚାସ୍ ତମର୍ କେଡେକ୍ ନିକ କରମ୍, କାଇକେବଇଲେ ପର୍ମେସରର୍ ରାଇଜ୍ ତମର୍ଟା ।
௨0அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: “தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது.
21 ୨୧ ତମେମନ୍ ଏବେ ବୁକେ ଆଚାସ୍, ତମର୍ କେଡେକ୍ ନିକ କରମ୍, କାଇକେବଇଲେ, ତମ୍କେ ପର୍ମେସର୍ ପୁରାପୁରୁନ୍ ଦେଇସି । ତମେମନ୍ ଏବେ କାନ୍ଦ୍ଲାସ୍ନି, ତମର୍ କେଡେକ୍ ନିକ କରମ୍, କାଇକେବଇଲେ ତମେମନ୍ ସାର୍ଦା ଅଇକରି ଆଁସ୍ସା ।”
௨௧இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி சிரிப்பீர்கள்.
22 ୨୨ ଲକ୍ମନ୍ ଜେବେ ପର୍ମେସର୍ ପାଟାଇରଇବା ନର୍ପିଲା ମର୍ ଲାଗି ତମ୍କେ ଇନ୍ କର୍ବାଇ, ଆରି ବେଗ୍ଲାଇ ଦେବାଇ, ନିନ୍ଦାକରି ତମର୍ ନାଉଁ ମନ୍ଦ୍ ବଲି ଦାର୍ବାଇ, ତମର୍ କେଡେକ୍ ନିକ କରମ୍ ।
௨௨மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து, உங்களை நிராகரித்து, உங்களை அவமதித்து, உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
23 ୨୩ ସେ ଦିନେ ସାର୍ଦା ଅଇ ନାଟ୍ କର୍ସା । କାଇକେବଇଲେ ଦେକା, ସର୍ଗେ ତମର୍ ପୁରୁସ୍କାର୍ ଅଦିକ୍ ଆରି ସେନ୍ତାରି ତା ସେମନର୍ ଆନିଦାଦିମନ୍, ବବିସତ୍ବକ୍ତାମନ୍କେ କର୍ତେରଇଲାଇ ।
௨௩“அந்த நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; அவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படித்தான் செய்தார்கள்.
24 ୨୪ ମାତର୍ ଏ ଡଣ୍ଡ୍ ପାଉମନ୍, ତମେମନ୍ ଏବେ ସାଉକାର୍ ଆଚାସ୍, କାଇକେବଇଲେ ତମେ ନିଜେ ନିଜେ ସୁକ୍ ପାଇଲାସ୍ବେ ।
௨௪செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள்.
25 ୨୫ ଏ ଡଣ୍ଡ୍ପାଉମନ୍, ଏବେ ତମେ ନିକସଙ୍ଗ୍ କାଇଲାସ୍ନି, କାଇକେବଇଲେ, ତମେ ବୁକେସେ ରଇସା । ଏ ଡଣ୍ଡ୍ପାଉମନ୍, ତମେମନ୍ ଏବେ ଆଁସ୍ଲାସ୍ନି, କାଇକେବଇଲେ ପଚେ ଦୁକେ ରଇକରି କାନ୍ଦ୍ସା ।
௨௫திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ; நீங்கள் பசியாக இருப்பீர்கள். இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவீர்கள்.
26 ୨୬ “ଜେଡେବେଲେ ତମ୍କେ ଲକ୍ମନ୍ ବଲ୍ ବଲିକରି ବାବ୍ଲାଇନି, ଏ ଡଣ୍ଡ୍ପାଉମନ୍, ତାକର୍ ଆନିଦାଦି ତା ମାପ୍ରୁର୍ କାତା ବୁଲ୍କାଉମନର୍ପାଇ ସେନ୍ତାରି କର୍ତେରଇଲାଇ ।”
௨௬எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாகப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்களுடைய முற்பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்தும் அப்படித்தான் பேசினார்கள்.
27 ୨୭ “ମାତର୍ ତମେମନ୍ ସୁନି ଆଚାସ୍ଜେ ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, ତମର୍ ସତ୍ରୁମନ୍କେ ଆଲାଦ୍ କରା, ଜନ୍ ଲକ୍ମନ୍ ତମ୍କେ ଇନ୍ କର୍ବାଇ, ସେମନର୍ ମଙ୍ଗଲ୍ କରା ।
௨௭“என் வார்த்தைகளைக் கேட்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
28 ୨୮ ଜନ୍ ଲକ୍ମନ୍ ତମ୍କେ ସାଇପ୍ ଦେବାଇ, ସେମନ୍କେ ଆସିର୍ବାଦ୍ କରା । ଜନ୍ ଲକ୍ମନ୍ ତମ୍କେ ଇଜତ୍ ଜିକ୍ବାଇ, ସେମନର୍ପାଇ ପାର୍ତନା କରା ।
௨௮உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை அவமதிக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
29 ୨୯ ଜେ ତମ୍କେ ଗଟେକ୍ ଗାଲେ ଚାପଡ୍ ମାର୍ସି, ତାକେ ଆରିଗଟେକ୍ ଗାଲ୍ ମିସା ଦେକାଇଦିଆସ୍ । ଜେ ତମର୍ ଚାଦର୍ ଦାରିଜାଇସି, ତାକେ ତମର୍ ପିନ୍ଦ୍ଲାଟା ନେବାକେ ମିସା ମନା କରାନାଇ ।
௨௯உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
30 ୩୦ ଜେ ତମ୍କେ ମାଙ୍ଗ୍ସି, ତାକେ ଦିଆସ୍ । ଆରି ଜେ ତମର୍ ଦନ୍ ସଁମ୍ପତି ଉଦାର୍ ନେଇସି, ତାର୍ଟାନେଅନି ସେଟା ଆରିତରେକ୍ ମାଙ୍ଗାନାଇ ।
௩0உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே.
31 ୩୧ ଲକ୍ମନ୍ ତମ୍କେ ଜେନ୍ତି କରତ୍ ବଲି ମନ୍ କଲାସ୍ନି, ତମେମିସା ସେମନର୍ଟାନେ ସେନ୍ତାର୍ କରା ।”
௩௧மனிதர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
32 ୩୨ “ଆରି ଜନ୍ ଲକ୍ମନ୍ ତମ୍କେ ଆଲାଦ୍ କଲାଇନି, ଜଦି ସେମନ୍କେସେ ତମେ ଆଲାଦ୍ କର୍ସା ବଇଲେ କାଇ ଆସିର୍ବାଦ୍ ପାଇସା? କାଇକେବଇଲେ ପାପିମନ୍ ମିସା ସେନ୍ତାରି କର୍ବାଇ ।
௩௨உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே.
33 ୩୩ ଜଦି ଜନ୍ ଲକ୍ମନ୍ ତମର୍ ମଙ୍ଗଲ୍ କଲାଇନି, ସେମନ୍କେସେ ମଙ୍ଗଲ୍ କର୍ସା ବଇଲେ, କାଇ ଆସିର୍ବାଦ୍ ପାଇସା? କାଇକେବଇଲେ ପାପିମନ୍ ମିସା ସେନ୍ତାରି କର୍ବାଇ ।
௩௩உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
34 ୩୪ ଆରି ଜନ୍ ଲକ୍ମନର୍ଟାନେଅନି ତମର୍ ମିଲାଇବାର୍ ଆସା ରଇସି, ଜଦି ସେମନ୍କେସେ ଉଦାର୍ ଦେଇସା ବଇଲେ, ତମେ କାଇ ଆସିର୍ବାଦ୍ ପାଇସା? ପାପିମନ୍ ମିସା ସମାନ୍ ଇସାବେ ବାନ୍ଦ୍ଲାଟା ମିଲବଲି, ରୁନ୍ ଦେବାଇ ।
௩௪திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
35 ୩୫ ମାତର୍ ତମର୍ ସତ୍ରୁମନ୍କେ ଆଲାଦ୍ କରା । ଆରି ସେମନର୍ ମଙ୍ଗଲ୍ କରା । ରୁନ୍ ବାନ୍ଦ ବଲି ଆସା ନ କରି, ରୁନ୍ ଦିଆସ୍ । ସେନ୍ତାର୍କଲେ ତମର୍ ପୁରୁସ୍କାର୍ ଅଦିକ୍ ଅଇସି । ଆରି ତମେ ପର୍ମେସରର୍ ପ ଅଇସା । କାଇକେବଇଲେ ସେ ନ ମାନ୍ବା ଲକର୍ ଆରି କରାପ୍ ଲକର୍ ମିସା ଦୟାକାରିଆ ।
௩௫உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
36 ୩୬ ତମର୍ ସରଗର୍ ବାବା ଜେନ୍ତାରି ଦୟା କଲାନି, ସେନ୍ତାରି ତମେ ମିସା ଦୟା କରା ।”
௩௬எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
37 ୩୭ “ବିନ୍ଲକର୍ ବିଚାର୍ କରାନାଇ, ସେନ୍ତାର୍କଲେ ପର୍ମେସର୍ ତମ୍କେ ବିଚାର୍ କର୍ସି । ଦସ୍ ନ ଦିଆସ୍, ସେନ୍ତାର୍କଲେ ପର୍ମେସର୍ ତମ୍କେ ଦସ୍ ନ ଦାରେ । କେମା କରା, ସେନ୍ତାର୍କଲେ ତମ୍କେ କେମା ମିଲ୍ସି ।
௩௭மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
38 ୩୮ ବିନ୍ ଲକ୍କେ ଦାନ୍ କରା, ସେନ୍ତାର୍କଲେ ପର୍ମେସର୍ ତମ୍କେ ଦାନ୍ ଦେଇସି, ଲକ୍ମନ୍ ମାନ୍ଟାନେ କାଦି ପୁରୁନ୍କରି ତାକେ ଚାପି ଜୁଲାଇ, ଉଚ୍ଲାଇକରି, ତମର୍ ଅଁଟିତେଇ ଦେବାଇ, କାଇକେବଇଲେ ଜନ୍ ଇସାବେ ତମେ ନାପ୍ସା, ସେ ଇସାବେ ସେ ତମ୍କେ ନାପି ଦିଆଅଇସି ।”
௩௮கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
39 ୩୯ ଜିସୁ ସେମନ୍କେ ଉଦାଅରନ୍ ଦେଇ କଇଲା, “କାଣା କାଇ କାଣାକେ ବାଟ୍ ଦେକାଇପାରେକି? ନାଇ, ନାପାରେ । ଜଦି ସେମନ୍ ସେନ୍ତାରି କର୍ବାଇ ବଇଲେ ଦୁଇଲକ୍ଜାକ କାଲେ ନ ଅଦ୍ରତ୍ କି?
௩௯பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பார்வையற்றவனுக்கு பார்வையற்றவன் வழிகாட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
40 ୪୦ ଗୁରୁର୍ଟାନେଅନି ସିସ୍ ବଡ୍ ନାଇ । ମାତର୍ ସିସ୍ମନ୍ ସିକିଆ ପାଇ ସାରାଇଲେ ସିଦ୍ଅଇ ଗୁରୁର୍ ସମାନ୍ ଅଇବାଇ ।”
௪0சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான்.
41 ୪୧ “ଆରି କାଇକେ ତମର୍ ବାଇର୍ ଆଁକିଟାନେ ରଇବା ସାନ୍ କାଚ୍ରା ଦେକ୍ଲାସ୍ନି? ମାତର୍ ତମର୍ ନିଜର୍ ଆଁକିଟାନେ ଜନ୍ ବଡ୍ କାଚ୍ରା ଆଚେ, ସେଟା ବାବିଦେକାସ୍ନାଇ ।
௪௧நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன?
42 ୪୨ ତମେ ନିଜର୍ ଆଁକିଟାନେ ରଇବା ବଡ୍ଟା କାଚ୍ରା ନ ଦେକିକରି, ନିଜର୍ ବାଇର୍ ଆଁକି ଟାନେ ରଇବା ସାନ୍ କାଚ୍ରା ଦେକି କେନ୍ତି କଇପାରାସ୍, ଆଉ ବାଇ ତମର୍ ଆଁକିଅନି କାଚ୍ରା ବାର୍କରାଇଦେବି? ଏ କୁଟିଆଲ୍ମନ୍, ପର୍ତୁମ୍ ନିଜର୍ ଆଁକିଅନି କାଚ୍ରା ବାର୍କରାଇପାକା, ତାର୍ପଚେ ନିଜର୍ ବାଇର୍ ଆଁକିଟାନେ ରଇବା କାଚ୍ରା ସବୁ ବାର୍କରାଇବାକେ, ନିକକରି ଦେକିପାରାସ୍ ।”
௪௨அல்லது நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடுகிறேன் என்று நீ சொல்வது எப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணில் இருக்கிற மரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடும் வழியைப் பார்ப்பாய்.
43 ୪୩ “ନିକ ଗଚେ କାରାପ୍ ପଲ୍ ନ ପଲେ, କାରାପ୍ ଗଚେ ନିକ ପଲ୍ ନ ପଲେ ।
௪௩நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது.
44 ୪୪ କାଇକେବଇଲେ ଗଚ୍ମନ୍କେ ତାର୍ ପଲର୍ଲାଗି ଜାନିଅଇସି । କାଟା ଗଚେଅନି ଲକ୍ମନ୍ ଡୁମ୍ରି ପଲ୍ ନ ତଲତ୍, କି କାଟା ବୁଟାଇଅନି ଅଙ୍ଗୁର୍ ପଲ୍ ନ ତଲତ୍ ।
௪௪ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
45 ୪୫ ନିକ ଲକ୍ ନିଜର୍ ମନ୍ ବିତ୍ରର୍ ଗରବ୍ବିତ୍ରେ ଅନି ନିକଟା ବାର୍କରାଇସି । ଆରି କାରାପ୍ ଲକ୍ମନ୍ ନିଜର୍ ମନ୍ ବିତ୍ରର୍ ଗରବ୍ଟାନେ ଅନି କାରାପ୍ଟା ବାର୍କରାଇବାଇ । କାଇକେବଇଲେ, ମନ୍ବିତ୍ରେ ଚିନ୍ତା କର୍ବାଟା, ଟଣ୍ଡ୍ କାତା କଇସି ।”
௪௫நல்ல மனிதன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக்காட்டுகிறான்; பொல்லாத மனிதன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவனுடைய வாய் பேசும்.
46 ୪୬ “ଆରି ତମେ କାଇକେ ମକେ ଏ ମାପ୍ରୁ ଏ ମାପ୍ରୁ, ବଲି ଡାକିକରି ମର୍ ଆଦେସ୍ ମାନାସ୍ ନାଇ?
௪௬என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன?
47 ୪୭ ଜେ ମିସା ମର୍ଲଗେ ଆସି, ମର୍ କାତା ସୁନି, ସେଟା ସବୁ ମାନ୍ସି, ସେ କାର୍ ସମାନ୍ ରଇସି, ସେଟା ମୁଇ ତମ୍କେ ଦେକାଇବି ।
௪௭என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக்கேட்டு, அதின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
48 ୪୮ ସେ ଏନ୍ତାରି ଗଟେକ୍ ଗର୍ ଉଟାଇବା ଲକର୍ପାରା । ଜେ ଗଇର୍ କରି କୁନି, କୁନାଦି ପାକ୍ନା ଉପ୍ରେ ବସାଇଲା । ବନିଆ ପାନି ଆସି ସେଟା ଉଲ୍କା ମାର୍ଲା ମିସା ସେଟା ବସ୍ଲାଇ ନାପାର୍ଲା । କାଇକେବଇଲେ ସେଟା ନିମାନ୍କରି ଉଟାଇରଇଲା ।
௪௮ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
49 ୪୯ ମାତର୍ ଜନ୍ ଲକ୍ମନ୍ ମର୍କାତା ସୁନିକରି ମିସା ସେ ଇସାବେ ଚଲାଚଲ୍ତି ନ କରତ୍, ସେ କୁନାଦି ନ କରି, ବାଲି ଉପ୍ରେ ଗର୍କଲା ଲକର୍ପାରା । ଜବର୍ ଅଇତେ ଉଦ୍କାମାର୍ଲା ଦାପ୍ରେ ସେ ଗର୍ ବସ୍ଲିଗାଲା ଆରି ସେଟା ଅପର୍ବଲ୍ ବିନାସ୍ ଅଇଲା ।”
௪௯என் வார்த்தைகளைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் எவனோ, அவன் அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதினவுடனே அது விழுந்து முழுவதும் அழிந்துபோனது” என்றார்.