< ଜଅନ୍ 15 >
1 ୧ “ମୁଇ ଅଇଲିନି ସତ୍ ଅଙ୍ଗୁର୍ ମାଲ୍ ଆରି ମର୍ ବାବା ଅଇଲାନି ଚାସି ।
௧நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர்.
2 ୨ ମର୍ଟାନେ ରଇବା ପିଲ୍କା ମାଲେ ପଲ୍ ନ ଦାର୍ଲେ, ସେ କାଟି ପାକାଇସି । ଆରି ଜନ୍ ମାଲେ ପଲ୍ ଦାର୍ସି ସେ ମାଲ୍ ଅଦିକ୍ ପଲ୍ ଦାର୍ବାକେ ପରିଚଲ୍ କର୍ସି ।
௨என்னில் கனிகொடுக்காதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்செய்கிறார்.
3 ୩ ମର୍ତେଇ ଅନି ପାଇରଇବା ସିକିଆଇ ଅନି ତମେ ପରିଚଲ୍ ଅଇସାରି ଆଚାସ୍ ।
௩நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாக இருக்கிறீர்கள்.
4 ୪ ତମେ ମର୍ସଙ୍ଗ୍ ମିସିକରି ରୁଆ । ସେନ୍ତି ବଇଲେ ମୁଇ ମିସା ତମର୍ ସଙ୍ଗ୍ ରଇବି । କେନ୍ଦା ଜଦି ବୁନ୍ଦ୍ସଙ୍ଗ୍ ମିସିକରି ନ ରଇଲେ ନିଜେ ପଲ୍ ନ ଦାରେ, ସେନ୍ତି ତମେ ମିସା ମର୍ତେଇ ମିସି ନ ରଇଲେ, ପଲ୍ ଦାରିନାପାରାସ୍ ।”
௪என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனிகொடுக்காததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
5 ୫ “ମୁଇ ଅଇଲିନି ମୁଲ୍ ଅଙ୍ଗୁର୍ ମାଲ୍, ତମେ ଅଇଲାସ୍ନି ପିଲ୍କା ମାଲ୍ । ଜେ ମର୍ତେଇ ରଇସି ଆରି ମୁଇ ଜାର୍ତେଇ ରଇବି ସେ ବେସି ପଲ୍ ଦାର୍ସି, କାଇକେ ବଇଲେ ମକେ ଚାଡିକରି ତମେ କାଇଟା କରି ନାପାରାସ୍ ।
௫நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னை அல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.
6 ୬ ଜେ ମର୍ତେଇ ନ ରଏ, ତାକେ ଗଟେକ୍ ଗର୍ଣ୍ଡି କରି ପିଙ୍ଗ୍ଲା ମାଲ୍ପାରା ବାଇରେ ପିଙ୍ଗି ଦେବାଇ ଆରି ସେଟା ସୁକି ଜାଇସି । ଏନ୍ତାରି ମାଲ୍ମନ୍କେ ଟୁଲିଆଇ ଜଇତେଇ ପିଙ୍ଗି ଦେବାଇ ଆରି ସେଟା ପଡି ଜାଇସି ।
௬ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எரியப்பட்ட கொடியைப்போல அவன் எரியப்பட்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.
7 ୭ ଜଦି ତମେ ମର୍ସଙ୍ଗ୍ ମିସିକରି ରଇସା ଆରି ମର୍ ବାକିଅ ତମର୍ ମନେ ରଇସି, ତମେ ମନ୍କରି କାଇ ବିସଇ ମାଙ୍ଗ୍ସା ବଇଲେ ସେଟା ମିଲାଇସା ।
௭நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
8 ୮ ତମେ ବେସି ପଲ୍ ଦାର୍ଲେ, ମର୍ ବାବା ଡାକ୍ପୁଟା ପାଇସି, ଆରି ଇତିଅନି ତମେ ମର୍ ସତ୍ ସିସ୍ମନ୍ ବଲି ଜାନ୍ବାଇ ।
௮நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீடராக இருப்பீர்கள்.
9 ୯ ମର୍ ବାବା ଜେନ୍ତି ମକେ ଆଲାଦ୍ କଲା ଆଚେ, ସେନ୍ତି ମୁଇ ମିସା ତମ୍କେ ଆଲାଦ୍ କଲିନି । ମର୍ ଆଲାଦେ ତବିର୍ ଅଇରୁଆ ।
௯பிதா என்னில் அன்பாக இருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாக இருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
10 ୧୦ ମୁଇ ଜେନ୍ତି ମର୍ ବାବାର୍ ଆଦେସ୍ ମାନିକରି ତବିର୍ ଅଇଆଚି । ସେନ୍ତି ତମେ ମର୍ ଆଦେସ୍ ମାନ୍ସା ବଇଲେ ମର୍ ଆଲାଦେ ତବିର୍ ଅଇକରି ରଇସା ।”
௧0நான் என் பிதாவின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
11 ୧୧ “ଜେନ୍ତିକି ମର୍ ସାର୍ଦା ତମର୍ ଟାନେ ରଇକରି, ସେ ସାର୍ଦା ପୁରାପୁରୁନ୍ ଅଇବାକେ ତମ୍କେ ଏ ସବୁ କାତା କଇଲିଆଚି ।
௧௧என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
12 ୧୨ ମୁଇ ତମ୍କେ ଜେନ୍ତି ଆଲାଦ୍ କଲିଆଚି, ସମାନ୍ ସେନ୍ତି ତମେ ମିସା ନିଜର୍ ନିଜର୍ ବିତ୍ରେ ଆଲାଦ୍ ଅଇକରି ରୁଆ । ଏଟାସେ ମର୍ ଆଦେସ୍ ।
௧௨நான் உங்களில் அன்பாக இருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கட்டளையாக இருக்கிறது.
13 ୧୩ ନିଜର୍ ମଇତର୍ମନର୍ ଲାଗି ଜିବନ୍ ଦେବାଟା ଅଇଲାନି ସବୁର୍ଟାନେଅନି ବଡ୍ ଆଲାଦ୍ ।
௧௩ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.
14 ୧୪ ମୁଇ ତମ୍କେ ଜନ୍ ଆଦେସ୍ ଦେଇଆଚି, ସେଟା ମାନ୍ସା ବଇଲେ ତମେ ମର୍ ମଇତର୍ମନ୍ ।
௧௪நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் நண்பர்களாக இருப்பீர்கள்.
15 ୧୫ ଏବେ ମୁଇ ତମ୍କେ ଗତିଦାଙ୍ଗ୍ଡାମନ୍ ବଲି ନ ଡାକି, କାଇକେ ବଇଲେ, ଗତିଦାଙ୍ଗ୍ଡା ତାର୍ ସାଉକାର୍ କାଇଟା କର୍ସି ସେଟା ନାଜାନେ । ମାତର୍ ମୁଇ ତମ୍କେ ମଇତର୍ ବଲି ଡାକ୍ବି, କାଇକେ ବଇଲେ ମୁଇ ବାବାର୍ତେଇ ଅନି ଜନ୍ ଜନ୍ ବିସଇ ସୁନି ଆଚି, ସେଟା ତମ୍କେ କଇଦେଲିଆଚି ।
௧௫இனி நான் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லுகிறதில்லை, வேலைக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களை நண்பர்கள் என்றேன், ஏனென்றால், என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
16 ୧୬ ତମେ ମକେ ବାଚାସ୍ ନାଇ, ମାତର୍ ମୁଇ ତମ୍କେ ବାଚ୍ଲି ଆଚି । ଆରି ଜାଇକରି ଅଦିକ୍ ଅଦିକ୍ ପଲ୍ ଦାର୍ବାକେ ତମ୍କେ ଦାଇତ୍ ଦେଲି । ତମର୍ ପଲ୍ ସବୁ ଦିନର୍ ପାଇ ରଇସି । ତେବେ ତମେ ମର୍ ନାଉଁ ଦାରି ବାବାକେ କାଇଟା ମାଙ୍ଗ୍ଲେ ମିସା ସେ ତମ୍କେ ଦେଇସି ।
௧௬நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கும்படி நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்களுடைய கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
17 ୧୭ ତମର୍ ତମର୍ ବିତ୍ରେ ଆଲାଦ୍ କରା । ଏଟା ଅଇଲାନି ମର୍ ଆଦେସ୍ ।”
௧௭நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
18 ୧୮ “ଜାନିରୁଆ, ତମ୍କେ ଜଦି ଏ ଦୁନିଆ ଗିନ୍ କର୍ସି, ତେବେ ତମ୍କେ ଗିନ୍ କର୍ବା ଆଗ୍ତୁସେ ମକେ ଗିନ୍ କଲାଆଚେ ।
௧௮உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
19 ୧୯ ତମେ ଜଦି ଏ ଦୁନିଆର୍ ଲକ୍ମନ୍ ଅଇରଇତାସ୍ ଆଲେ ଏ ଦୁନିଆ ତମ୍କେ ନିଜର୍ ବାବି ଆଲାଦ୍ କର୍ତା, ମାତର୍ ମୁଇ ତମ୍କେ ବାଚି ଦୁନିଆଇଅନି ବେଗ୍ଲାଇ ଦେଇଆଚି । ସେଟାର୍ ପାଇ ଏ ଦୁନିଆ ତମ୍କେ ଗିନ୍କର୍ସି ।
௧௯நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
20 ୨୦ ମୁଇ ଜନ୍ଟା କଇରଇଲି ଏତାଇଦେକା, ଗତିଦାଙ୍ଗ୍ଡା ତାର୍ ସାଉକାର୍ତେଇଅନି ବଡ୍ ନଏଁ ବଲି ମୁଇ ତମ୍କେ କଇରଇଲି । ସେମନ୍ ମକେ ସାଦି ଆଚତ୍ ଆରି ତମ୍କେ ମିସା ସାଦ୍ବାଇ । ଜଦି ସେମନ୍ ମର୍ ସିକିଆ ମାନିଆଚତ୍ ବଇଲେ ତମର୍ କାତା ମିସା ମାନ୍ବାଇ ।
௨0வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்.
21 ୨୧ ମାତର୍ ତମେ ମର୍ ଲକ୍ ଅଇରଇବାର୍ ଲାଗି ସେମନ୍ ତମ୍କେ ଏନ୍ତାରି କର୍ବାଇ । କାଇକେ ବଇଲେ ମକେ ଜେ ପାଟାଇଲା ଆଚେ, ସେଟା ସେମନ୍ ନାଜାନତ୍ ।
௨௧அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.
22 ୨୨ ଜଦି ମୁଇ ଆସି ଏ ସବୁ ବିସଇ ସେମନ୍କେ ବୁଜାଇ ନ ରଇତି ବଇଲେ, ସେମନ୍ ଦସି ନ ଅଇତାଇ, ମାତର୍ ଏ ପାପର୍ ଚଲାଚଲ୍ତି ପାଇ କାଇ ଚାଲାକି ଦେକାଇ ନାପାରତ୍ ।
௨௨நான் வந்து அவர்களோடு பேசாதிருந்தால் அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுதோ தங்களுடைய பாவத்தைக்குறித்து சாக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
23 ୨୩ ଜେ ମକେ ଗିନ୍ କର୍ସି, ସେ ମର୍ ବାବା ପର୍ମେସର୍କେ ମିସା ଗିନ୍ କର୍ସି ।
௨௩என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
24 ୨୪ ଜଦି ମୁଇ ତାକର୍ ବିତ୍ରେ କାବା ଅଇଜିବା କାମ୍ ନ କରି ରଇଲେ, ସେମନ୍ ପାପି ବଲି ଦସି ନ ଅଇତାଇ । ମାତର୍ ସେମନ୍ ମୁଇ କଲା କାବାଅଇଜିବା କାମ୍ମନ୍ ଦେକ୍ଲାଇ ଆଚତ୍ । ଏନ୍ତି ବଇଲେ ମିସା ସେମନ୍ ମକେ ଆରି ମର୍ ବାବା ପର୍ମେସର୍କେ ଗିନ୍ କଲାଇ ଆଚତ୍ ।
௨௪வேறொருவரும் செய்யாத செயல்களை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தால், அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் பார்த்தும், பகைத்தும் இருக்கிறார்கள்.
25 ୨୫ ମାତର୍ ଏସବୁ ଗଟ୍ବାର୍ ରଇଲା । କାଇକେବଇଲେ ସେଟାର୍ ଲାଗି ସେମନର୍ ସାସ୍ତରେ ଜାଇଟା ଲେକାଅଇଲା ଆଚେ, ସେଟା ସିଦ୍ ଅଇଲା । କାଇ ଦସ୍ ନ ରଇତେ ସେମନ୍ ମକେ ଗିନ୍ କଲାଇ ।
௨௫காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது.
26 ୨୬ ସତଇସେ ସାଇଜକାରିଆ ଆତ୍ମା ଆଇସି । ସେ ବାବାର୍ତେଇ ଅନି ଆସି, ପର୍ମେସରର୍ ସବୁ ବିସଇର୍ ସତ୍ ଦେକାଇଦେଇସି । ମୁଇ ତାକେ ବାବାର୍ତେଇଅନି, ତମର୍ ଲଗେ ପାଟାଇବି । ଆରି ସେ ମର୍ ବିସଇ ତମ୍କେ କଇସି ।
௨௬பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
27 ୨୭ ଆରି ତମେ ମିସା ମର୍ ବିସଇସେ କଇସା, କାଇକେବଇଲେ ଆରାମେଅନି ତମେ ମର୍ ସଙ୍ଗ୍ ଆଚାସ୍ ।”
௨௭நீங்களும் ஆரம்பமுதல் என்னுடனே இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.