< ପେରିତ୍ 4 >
1 ୧ ପିତର୍ ଆରି ଜଅନ୍ ଲକ୍ମନ୍କେ ଏନ୍ତି ସିକିଆ ଦେଇତେ ରଇଲା ବେଲେ ମନ୍ଦିରର୍ କେତେଟା ପୁଜାରି ଆରି ଜାଗୁଆଲ୍ମନର୍ ସେନାପତି ଆରି କେତେଟା ସାଦୁକିମନ୍ ଆସି କେଟ୍ଲାଇ ।
பேதுருவும் யோவானும் மக்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும், ஆலயக்காவலர் தலைவனும், சதுசேயரும் அங்கு வந்தார்கள்.
2 ୨ ସେମନ୍ ରିସା ଅଇଗାଲାଇ କାଇକେ ବଇଲେ ପେରିତ୍ ସିସ୍ ଦୁଇଲକ୍ ଜିସୁ ମଲାତେଇଅନି ଉଟ୍ଲା ଆଚେ ବଲି ସିକାଇତେରଇଲାଇ । ଏନ୍ତି ସିକାଇଲେସରି ଲକ୍ମନ୍ ମଲାଟାନେଅନି ଉଟ୍ବାଇବଲି ପର୍ମାନ୍ କର୍ତେ ରଇଲାଇ ।
இயேசுவில் இறந்தோருக்கு உயிர்த்தெழுதல் உண்டென்று மக்களுக்கு அப்போஸ்தலர் போதித்து, அறிவித்ததினால் அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள்.
3 ୩ ସେଟାର୍ପାଇ ସେ ଦୁଇଟା ପେରିତ୍ ସିସ୍ମନ୍କେ ଦାରି ବାନ୍ଦ୍ଲାଇ । ଆରି ସେ ଦିନେ ବେସି ଅଲ୍ସମ୍ ଅଇଜାଇରଇଲାକେ ଆର୍କର୍ ଦିନ୍ ଜାକ ବନ୍ଦିଗରେ ରକିରଇଲାଇ ।
அவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்து, மாலை நேரமாய் இருந்ததால் அவர்களை மறுநாள் வரைக்கும் சிறையில் போட்டார்கள்.
4 ୪ ମାତର୍ ବେସି ଲକ୍ ସେମନର୍ ସିକିଆ ସୁନିକରି ବିସ୍ବାସ୍ କଲାଇ, ଆରି ତାକର୍ ବିତ୍ରେଅନି ମୁନୁସ୍ପିଲା ସେ ଅଦିକ୍ ଅଇକରି ପାକାପାକି ପାଁଚ୍ଅଜାର୍ ଅଇଲାଇ ।
ஆனால், வசனத்தைக் கேட்ட பலர் விசுவாசித்தார்கள். விசுவாசித்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
5 ୫ ତାର୍ ଆର୍କର୍ ଦିନେ ଜିଉଦି ନେତାମନ୍, ଆରି ପାର୍ଚିନ୍ମନ୍ ଆରି ନିୟମ୍ ସିକାଉମନ୍ ଜିରୁସାଲମେ ରୁଣ୍ଡ୍ଲାଇ ।
மறுநாளிலே ஆளுநர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள்.
6 ୬ ସେମନର୍ ବିତ୍ରେ ବଡ୍ପୁଜାରି ଆନାନ୍, କାୟାପା, ଜଅନ୍, ଆଲେକ୍ଜାଣ୍ଡାର୍ ଆରି ବଡ୍ ପୁଜାରିର୍ କୁଟୁମେ ରଇବା ବିନ୍ ଲକ୍ମନ୍ ମିସ୍ଲାଇ ।
பிரதான ஆசாரியனாகிய அன்னாவும் அங்கே இருந்தான். காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோருடன் பிரதான ஆசாரியனின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள்.
7 ୭ ପେରିତ୍ମନ୍କେ ସେମନର୍ ମୁଆଟେ ଡାକାଇ ପାଚାର୍ଲାଇ, “ତମେ ଏଟା ସବୁ କେନ୍ତାର୍ କଲାସ୍ନି? କାର୍ ବପୁସଙ୍ଗ୍ ନଇଲେ କାର୍ ନାଉଁଦାରି ଏଟା କଲାସ୍ନି?”
அவர்கள் பேதுருவையும் யோவானையும் தங்களுக்குமுன் கொண்டுவரும்படிச்செய்து, அவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்: “எந்த வல்லமையினால் அல்லது எந்தப் பெயரினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்றார்கள்.
8 ୮ ସେଟାର୍ପାଇ ପିତର୍ ସୁକଲ୍ଆତ୍ମାଇ ପୁରାପୁରୁନ୍ ଅଇ ସେମନ୍କେ କଇଲା, “ତମେ ଜେ କି ଆମର୍ ସାସନ୍କାରିଆମନ୍ ଆରି ପାର୍ଚିନ୍ମନ୍!
அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவர்களிடம்: “ஆளுநர்களே, யூதரின் தலைவர்களே,
9 ୯ ଜଦି ଆଜି ଏ ଚଟାର୍ ପାଇ କରିରଇଲା ନିମାନ୍ କାମର୍ଲାଗି ଆମ୍କେ ପର୍ସନ୍ କଲାସ୍ନି ଆରି ସେ କେନ୍ତାର୍ ନିମାନ୍ ଅଇଲା ବଲି ଜାନ୍ବାକେ ମନ୍ କଲାସ୍ନି,
ஒரு முடவனுக்குக் காண்பிக்கப்பட்ட ஒரு அனுதாபச் செயலுக்கு நாங்கள் இன்று காரணம் காட்டவேண்டுமென்றும், அவன் எப்படி சுகமானானென்றும் நாங்கள் விசாரிக்கப்படுகிறோம் என்றால்,
10 ୧୦ ତେବେ ତମେ ଆରି ଇସ୍ରାଏଲର୍ ସବୁ ଲକ୍ ଜାନ୍ବାର୍ ଦର୍କାର୍ ଜେ, ତମର୍ ମୁଆଟେ ଟିଆଅଇରଇଲା ଏ ଲକ୍ ଅବ୍କା ନାଜ୍ରିତ୍ ଗଡର୍ ଜିସୁକିରିସ୍ଟର୍ ବପୁସଙ୍ଗ୍ ପୁରାପୁରୁନ୍ ନିମାନ୍ ଅଇଲା ଆଚେ । ସେ ଜିସୁକେ ତମେ କୁର୍ସେ ମରାଇଲାସ୍ । ମାତର୍ ପର୍ମେସର୍ ତାକେ ମଲାତେଇଅନି ଆରି ତରେକ୍ ଉଟାଇଲା ଆଚେ ।”
நீங்களும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அறியவேண்டியது இதுவே: நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால், இந்த மனிதன் உங்களுக்கு முன்பாக சுகமடைந்தவனாய் நிற்கிறான். அந்த இயேசுவையே நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள், ஆனால் இறைவனோ இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்.
11 ୧୧ ଜିସୁର୍ ବିସଇ ଦରମ୍ ସାସ୍ତରେ ଲେକା ଅଇଲାଆଚେ, ଗର୍ ତିଆର୍କରୁମନ୍ ଜନ୍ ପାକ୍ନା ନଏଁ ବଲି ପିଙ୍ଗିଦେଇ ରଇଲାଇ, ସେଟାସେ କନର୍ ମୁକିଅ ପାକ୍ନା ଅଇଲା ।
அந்த இயேசுவே, “‘கட்டிடம் கட்டுகிறவர்களாகிய நீங்கள் புறக்கணித்த கல், அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’
12 ୧୨ ସେ ଆକା ଆମ୍କେ ମୁକ୍ତି ଦେଇସି । ଗୁଲାଇ ଜଗତର୍ପାଇ ପର୍ମେସର୍ ତାକେସେ ଦେଲା ଆଚେ । ଜେ କି ଆମ୍କେ ରକିଆ କର୍ସି ।
இயேசு அல்லாமல், வேறு எவரிலும் இரட்சிப்பு இல்லை. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின்கீழ், மனிதரிடையே அவருடைய பெயரின்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றான்.
13 ୧୩ ବଡ୍ସବାର୍ ଲକ୍ମନ୍ ପିତର୍ ଆରି ଜଅନର୍ ସାଆସ୍ ଦେକି କାବା ଅଇଗାଲାଇ । ସେମନ୍ ପାଟ୍ସାଟ୍ ନ ପଡି ଅବ୍କା ଲକ୍ମନ୍ସେ ବଲି ଜାନିରଇଲାଇ । ଆରି ସେମନ୍ ଦୁଇ ଲକ୍ ଜିସୁର୍ ସଙ୍ଗ୍ ରଇଲାଇ ବଲି ଚିନିରଇଲାଇ ।
பேதுரு, யோவான் ஆகிய இருவருடைய துணிச்சலையும், இவர்கள் கல்வியறிவு இல்லாத சாதாரண மனிதர் என்பதையும் தெரிந்துகொண்டபோது, அவர்கள் மலைத்துப்போனார்கள். இவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.
14 ୧୪ ମାତର୍ ତାକର୍ ବିରୁଦେ କାଇବଲି କଇନାପାର୍ଲାଇ, କାଇକେ ବଇଲେ ନିମାନ୍ ଅଇଲା ଲକ୍କେ ପିତର୍ ଆରି ଜଅନ୍ସଙ୍ଗ୍ ଟିଆଅଇରଇଲାଟା ଦେକ୍ଲାଇ ।
சுகமடைந்த மனிதன் இவர்கள் முன்பு நின்றுகொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள். அதனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.
15 ୧୫ ସେଟାର୍ ପାଇ ସେମନ୍ ସିସ୍ମନ୍କେ ସେ ସବାଇଅନି ବାର୍କରାଇଦେଇକରି ତାକର୍ ତାକର୍ ବିତ୍ରେ କାତାବାର୍ତା ଅଇବାର୍ ଦାର୍ଲାଇ ।
எனவே, ஆலோசனைச் சங்கத்திலிருந்து இவர்களை வெளியே போகும்படி உத்தரவிட்டபின், அவர்கள் இந்த விஷயத்தைக்குறித்து ஒருவரோடொருவர் கலந்து பேசினார்கள்:
16 ୧୬ ସେମନ୍ କାତା ଅଇଲାଇ, “ଆମେ ଏମନ୍କେ କାଇଟା କରୁ? ଏମନ୍ କରିରଇବା ଏ କାବା ଅଇଜିବା କାମ୍ ବିସଇ ଜିରୁସାଲମର୍ ସବୁ ଲକ୍ ଜାନିଗାଲାଇ ଆଚତ୍ । ଏ ସତ୍ ଗଟେନାଇ କି ନାଜାନୁ ବଲି କଇ ନାପାରୁ ।
“நாம் இவர்களுக்கு என்ன செய்யலாம்? ஏனென்றால், குறிப்பிடத்தக்க ஒரு பெரிய அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள் என்பது, எருசலேமில் வாழ்கிற அனைவருக்கும் தெரியும்; இதை நாமும் மறுக்க முடியாது.
17 ୧୭ ମାତର୍ ଏ କାତା ଲକ୍ମନର୍ ବିତ୍ରେ ଆରି ଅଦିକ୍ ଉଡ୍ରା ଅଇ ନ ଜାଅ, ଜିସୁର୍ ବିସଇ ଆରି କେବେ କାର୍ ମୁଆଟେ ନ କଇବାକେ ସେମନ୍କେ ଆମେ ଡାଟ୍ ସଙ୍ଗ୍ ଜାଗ୍ରତ୍ କରାଇଦେଉଁ ।”
ஆனால், இது தொடர்ந்து மக்களிடையே பரவாதபடி தடைசெய்வதற்கு, ‘இந்தப் பெயரிலே அவர்கள் இனிமேல் யாருடனும் பேசக்கூடாது’ என்று, நாம் அவர்களை எச்சரிக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
18 ୧୮ ସେଟାର୍ ପାଇ ସେମନ୍ ପିତର୍ ଆରି ଜଅନ୍କେ ଆରି ତରେକ୍ ବିତ୍ରେ ଡାକ୍ଲାଇ । ଆରି କେବେମିସା ଜିସୁର୍ ନାଉଁ ଦାରି କାଇମିସା କାତା ନ କଇବାକେ ଆରି ସିକିଆ ନ ଦେବାକେ ଜାଗ୍ରତ୍ କରାଇଦେଲାଇ ।
எனவே அவர்கள் மீண்டும் பேதுருவையும், யோவானையும் உள்ளே கூப்பிட்டு, “இயேசுவின் பெயரால் எதையும் பேசவோ, போதிக்கவோ கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
19 ୧୯ ମାତର୍ ପିତର୍ ଆରି ଜଅନ୍ କଇଲାଇ, “ତମର୍ ବାଦିଅ ଅଇବୁ, କି ପରମେସରର୍ ବାଦିଅ ଅଇବୁ, କନ୍ ବିସଇ ପରମେସରର୍ ମୁଆଟେ ଟିକ୍ ସେଟା ତମେ ବିଚାର୍ କରା ।
ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களிடம், “நாங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், உங்களுக்குக் கீழ்ப்படிவது இறைவனுடைய பார்வையில் சரியானதோ என்று? நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
20 ୨୦ କାଇକେ ବଇଲେ ଆମେ ଜାଇଟା ଦେକ୍ଲୁ ଆଚୁ ଆରି ସୁନ୍ଲୁ ଆଚୁ ସେଟା ନ କଇକରି ରଇନାପାରୁ ।”
நாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பேசாமல் இருக்க எங்களால் முடியாது” என்றார்கள்.
21 ୨୧ ମାତର୍ ବଡ୍ସବାର୍ ଲକ୍ ଆରି ଡାଟ୍ସଙ୍ଗ୍ ସେମନ୍କେ ଦମ୍କାଇକରି ଚାଡି ଦେଲାଇ । ସେମନ୍କେ ଡଣ୍ଡ୍ଦେବାଟା କସ୍ଟ ବଲି ସେମନ୍ ଜାନିପାର୍ଲାଇ । କାଇକେ ବଇଲେ ସେ କାବାଅଇଜିବା କାମର୍ ଲାଗି ଲକ୍ମନ୍ ପର୍ମେସର୍କେ ଜୁଆର୍ କର୍ତେ ରଇଲାଇ ।
அவர்கள் மீண்டும் பேதுருவையும் யோவானையும் பயமுறுத்தியபின், அனுப்பிவிட்டார்கள். எல்லா மக்களும் நடந்த அற்புதத்திற்காக இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தபடியால், இவர்களை எப்படிக் கண்டிப்பது என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை.
22 ୨୨ ଜନ୍ ଲକ୍ କାବା ଅଇଜିବା କାମର୍ଲାଗି ନିମାନ୍ ଅଇରଇଲା, ତାକେ ଚାଲିସ୍ ବରସେଅନି ଅଦିକ୍ ଅଇରଇଲା ।
ஏனெனில், அற்புதமாய் சுகமடைந்தவன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
23 ୨୩ ପିତର୍ ଆରି ଜଅନ୍ ମୁକଲ୍ଲା ଦାପ୍ରେ ନିଜର୍ ଦଲେ ବାଉଡିଗାଲାଇ ଆରି ମୁକିଅ ପୁଜାରିମନ୍ ଆରି ପାର୍ଚିନ୍ମନ୍ ଜାଇଟା କଇରଇଲାଇ, ସେଟା ସେମନ୍କେ ଜାନାଇଲାଇ ।
பேதுருவும் யோவானும் விடுதலை செய்யப்பட்டதும், தங்களைச் சேர்ந்த மக்களிடம் திரும்பிப்போய், ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
24 ୨୪ ବିସ୍ବାସିମନ୍ ସବୁ କାତା ସୁନ୍ଲା ପଚେ ଗଟେକ୍ ଅଇ ପର୍ମେସର୍କେ ଏ ପାର୍ତନା କଲାଇ, ଏ ମାପ୍ରୁ! ସରଗ୍, ଦର୍ତନି, ସମ୍ଦୁର୍ ଆରି ତେଇ ରଇବା ସବୁ ବିସଇ ତମେସେ ତିଆର୍ କଲାସ୍!
அவர்கள் இதைக் கேட்டதும், ஒன்றாக சத்தமிட்டு இறைவனிடம் மன்றாடினார்கள். அவர்கள், “எல்லாம் வல்ல கர்த்தாவே, நீரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர்.
25 ୨୫ ତମେ ସୁକଲ୍ ଆତ୍ମାଇଅନି ଆମର୍ ଆନିଦାଦିମନର୍ ଆରି ତମର୍ ଦାଙ୍ଗ୍ଡା ଦାଉଦର୍ ଟଣ୍ଡେଅନି ଏ କାତା ସୁନାଇ ରଇଲାସ୍ । ସେ କଇରଇଲା, ଜିଉଦି ନଇଲା ଲକ୍ମନ୍ କାଇକେ ରିସା ଅଇଲାଇ? ଲକ୍ମନ୍ କାଇକେ ଚୁଚାଇ ସଡ୍ଜଁତର୍ କଲାଇ?
நீர் பரிசுத்த ஆவியானவரால் உமது ஊழியனும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது: “‘நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? மக்கள் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?
26 ୨୬ ମାପ୍ରୁର୍ ବିରଦେ ଆରି ତାକର ମସିଆର୍ ବିରଦେ ଜଗତର୍ ରାଜାମନ୍ ଆରି ସାସନ୍କାରିଆମନ୍ ଜୁଜ୍ବାକେ ନିଜ୍କେ ତିଆର୍ ଅଇ ରୁଣ୍ଡ୍ଲାଇ ।
பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். ஆளுநர்களும் கர்த்தருக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடுகிறார்கள்.’
27 ୨୭ କାଇକେବଇଲେ ଏ ନଅରେ ଏରଦ୍ ଆରି ପନ୍ତିୟ ପିଲାତ୍ ଇସ୍ରାଏଲିୟମନର୍ ସଙ୍ଗ୍ ଆରି ଜିଉଦି ନ ଅଇରଇବା ଲକର୍ସଙ୍ଗ୍ ମିସି ଜିସୁର୍ ବିରଦେ ଜଜ୍ନା କଲାଇ । ସେ ସେ ତମର୍ ସୁକଲ୍ ଦାଙ୍ଗ୍ଡା ଆରି ତମେ ବାଚ୍ଲା ମସିଅ ।
நீர் அபிஷேகம் செய்த உமது பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதற்கென, இந்த நகரத்தில் ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் யூதரல்லாத மக்களுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் ஒன்றுசேர்ந்தார்களே.
28 ୨୮ ତମର୍ ବପୁ ଆରି ମନ୍ କଲାଟା ଇସାବେ ଜାଇଟା ସବୁ ଗଟାଇବାପାଇ ତମେ ଟିକ୍ କରି ରଇଲାସ୍, ସେମନ୍ ଗଟେକ୍ ଅଇ ସେ ସବୁ କର୍ବାକେ ଲାଗିପଡ୍ଲାଇ ।
என்ன நடக்கவேண்டும் என்று முன்னதாகவே உம்முடைய வல்லமையும் திட்டமும் தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள்.
29 ୨୯ “ଏ ମାପ୍ରୁ, ସେମନ୍ ଆମ୍କେ ଜନ୍ ଦମକ୍ ଦେଲାଇ ଆଚତ୍ ସେ ବିସଇ ସୁନା ଆରି ନ ଡର୍ତେ ତମର୍ କାତା ଜାନାଇବାକେ ତମର୍ ଏ ଦାଙ୍ଗ୍ଡାମନ୍କେ ଡାଟ୍ କରା ।
இப்பொழுதும் கர்த்தாவே, அவர்களுடைய பயமுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளும்; உமது வார்த்தையை அதிகத் துணிவுடன் பேசுவதற்கு, உமது ஊழியக்காரருக்கு ஆற்றலைக் கொடும்.
30 ୩୦ ନିମାନ୍ କର୍ବାକେ ତମର୍ ଆତ୍ ଲାମାଆ ଆରି ତମର୍ ସୁକଲ୍ ଦାଙ୍ଗ୍ଡା ଜିସୁର୍ ନାଏଁ ନ ଅଇବା କାମ୍ ଆରି କାବା ଅଇଜିବା କାମ୍ମନ୍ ସାଦନ୍ କରାଆ ।”
உமது பரிசுத்த ஊழியரான இயேசுவின் பெயரினால் சுகப்படுத்துவதற்கும், அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதற்கும் உமது கரத்தை நீட்டும்” என்று மன்றாடினார்கள்.
31 ୩୧ ସେମନ୍ ପାର୍ତନା କରିସାରାଇଲା ପଚେ ଜନ୍ ଜାଗାଇ ରୁଣ୍ଡିରଇଲାଇ, ସେଟା ଚୁଲ୍ବୁଲିଗାଲା । ସେମନ୍ ସବୁ ସୁକଲ୍ଆତ୍ମାଇ ପୁରାପୁରୁନ୍ ଅଇଲା । ଆରି ନ ଡର୍ତେ ପର୍ମେସରର୍ କାତା ଜାନାଇବାର୍ ଦାର୍ଲାଇ ।
அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையை பயமின்றிப் பேசினார்கள்.
32 ୩୨ ସବୁ ବିସ୍ବାସିମନ୍ ଗଟେକ୍ ବିସଇ ଚିନ୍ତା କରି ମନ୍ କଲାଇ । କେ ମିସା ନିଜର୍ ସଁମ୍ପତି ନିଜର୍ ବଲି ଦାବି ନ କର୍ତେ ରଇଲାଇ । ତାକର୍ଟାନେ ଜେତ୍କି ରଇଲା ସେଟା ସବୁଲକ୍ ସମାନ୍ କରି ବାଟାସାଟା କର୍ତେ ରଇଲାଇ ।
விசுவாசிகள் அனைவரும், இருதயத்திலும் மனதிலும் ஒன்றாய் இருந்தார்கள். ஒருவருமே தங்களுடைய சொத்துக்களைத் தங்களுடையது என்று உரிமை கருதவில்லை. ஆனால் அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாய்ப் பகிர்ந்துகொண்டார்கள்.
33 ୩୩ ପେରିତ୍ ସିସ୍ମନ୍ ବପୁସଙ୍ଗ୍ ସାକି ଦେବାର୍ ଦାର୍ଲାଇ । ପର୍ମେସର୍ ମାପ୍ରୁ ଜିସୁକେ କେନ୍ତିକରି ମଲାଟାନେଅନି ଉଟାଇଲା ବଲି । ଆରି ପର୍ମେସର୍ ସବୁ ବିସ୍ବାସିମନ୍କେ ଅଦିକ୍ ଅଦିକ୍ ଜିବନ୍ ଦୁକାଇଲା ।
கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர் மிகுந்த வல்லமையுடன் சாட்சி கொடுத்தார்கள். அவர்கள் எல்லோர்மேலும் மிகுந்த கிருபை இருந்தது.
34 ୩୪ ତାକର୍ ଦଲେ ଜିଇବା କାଇବାକେ କାକେ ମିସା ଅବାବ୍ ନ ରଇଲା । ଜନ୍ ଲକ୍ମନ୍କେ ଗର୍ ଆରି ଜମିରଇଲା, ସେମନ୍ ସେଟା ବିକିକରି ଡାବୁ ଆନି,
அவர்களுக்குள்ளே குறையுள்ளவர் யாரும் இருக்கவில்லை. ஏனெனில், காலத்திற்குக் காலம் சொந்த நிலங்களும் வீடுகளும் இருந்தவர்கள் அவற்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து,
35 ୩୫ ପେରିତ୍ମନ୍କେ ସର୍ପିଦେଇରଇଲା । ସେ ଡାବୁ, ପେରିତ୍ ମନ୍ ଅବାବେ ରଇଲା ଲକ୍ମନ୍କେ ବାଟାକରି ଦେଇତେରଇଲାଇ ।
அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தார்கள். அது தேவையுள்ள எல்லோருக்கும் தேவைக்கு ஏற்றபடி பகிர்ந்துகொடுக்கப்பட்டது.
36 ୩୬ ସାଇପରସ୍ ନାଉଁର୍ ଗଟେକ୍ ଜାଗାଇ ଜନମ୍ କରିରଇବା ଲେବି କୁଟୁମର୍ ଜସେପ୍, ଜାକେ ପେରିତ୍ ସିସ୍ମନ୍ ବର୍ନବା ବଲି ନାଉଁ ଦେଇ ରଇଲାଇ । ବର୍ନବାର୍ ଅରତ୍ ଦୁକ୍ ସାରାଇବା ପିଲା । ସେ ତାର୍ ଜମି ବିକ୍ଲା ଆରି
சீப்புரு தீவைச்சேர்ந்த யோசேப்பு என்னும் ஒரு லேவியன் இருந்தான். அப்போஸ்தலர் அவனைப் பர்னபா என அழைத்தார்கள். பர்னபா என்றால், “ஆறுதலின் மகன்” என்று அர்த்தமாகும்.
37 ୩୭ ଡାବୁ ପେରିତ୍ ସିସ୍ମନ୍କେ ସର୍ପିଦେଲା ।
இவன் தனக்குச் சொந்தமான வயலை விற்று, பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான்.