< ପେରିତ୍ 23 >
1 ୧ ପାଉଲ୍ ବଡ୍ସବାର୍ ଲକ୍ମନ୍କେ ସିଦା ଦେକି କଇଲା, “ଏ ଇସ୍ରାଏଲର୍ ବାଇମନ୍! ଆଜିକେ ଜାକ ମୁଇ ପରମେସରର୍ ମୁଆଟେ କେନ୍ତାର୍ ଜିବନ୍ ବିତାଇ ଆଚି, ସେ ବିସଇଟାନେ ମନ୍ ପୁରାପୁରୁନ୍ ନିର୍ମଲ୍ ଆଚେ ।”
௧பவுல் ஆலோசனைச் சங்கத்தினரை உற்றுப்பார்த்து: சகோதரர்களே, இந்தநாள்வரை எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடு தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.
2 ୨ ଏ କାତା ସୁନିକରି ଅନନିଅ ନାଉଁର୍ ବଡ୍ ପୁଜାରି ପାଉଲର୍ ଲଗେ ଟିଆଅଇରଇବା ଲକ୍ମନ୍କେ, ତାର୍ ଗାଲେ ଚାପଡ୍ ମାରା ବଲି ତିଆର୍ଲା ।
௨அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்கு அருகில் நின்றவர்களைப் பார்த்து: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.
3 ୩ ପାଉଲ୍ ତାକେ କଇଲା, “ଏ ଚୁନ୍ ମାରିଅଇଲା ଦବ୍ଲା ଉଆଁରି କତି, ପର୍ମେସର୍ ତକେ ଡଣ୍ଡ୍ ଦେଇସି ଆକା । ନିୟମ୍ ଇସାବେ ମର୍ ବିଚାର୍ କର୍ବାକେ, ତୁଇ ତେଇ ବସିଆଚୁସ୍ । ଏଲେ ମିସା, ନିୟମ୍ ବାଙ୍ଗିକରି ମକେ ମାର୍ବାକେ ତିଆର୍ଲୁସ୍ନି!”
௩அப்பொழுது பவுல் அவனைப் பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்க உட்கார்ந்திருக்கிற நீர் நியாயபிரமாணத்திற்கு விரோதமாக என்னை அடிக்கச்சொல்லலாமா என்றான்.
4 ୪ ଲଗେ ରଇବା ଲକ୍ମନ୍ ପାଉଲ୍କେ କଇଲାଇ, “ପର୍ମେସର୍ ବାଚିରଇବା ବଡ୍ ପୁଜାରିକେ ତୁଇ ନିନ୍ଦା କଲୁସ୍ନି!”
௪அருகில் நின்றவர்கள்: தேவனுடைய பிரதான ஆசாரியரை அவமதித்துப் பேசலாமா என்றார்கள்.
5 ୫ ପାଉଲ୍ କଇଲା, “ଏ ଇସ୍ରାଏଲର୍ ବାଇମନ୍, ସେ ବଡ୍ ପୁଜାରି ବଲି ମୁଇ ନାଜାନିରଇଲି । ସାସ୍ତରେ ଲେକାଆଚେ, ତମେ ନିଜର୍ ଜାତିର୍ ସାସନ୍କାରିଆକେ କରାପ୍ କାତା କଇବାର୍ନାଇ ।”
௫அதற்குப் பவுல்: சகோதரர்களே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் மக்களின் தலைவரை குற்றம் சொல்லாதே” என்று எழுதியிருக்கிறதே என்றான்.
6 ୬ ବଡ୍ ସବାର୍ ମେମର୍ମନର୍ ବିତ୍ରେ କେତେଟା ପାରୁସି ଆରି କେତେଟା ସାଦୁକିମନ୍ ରଇଲାଟା ଦେକି ପାଉଲ୍ ବଡ୍ ସବାର୍ ଲକ୍ମନ୍କେ ଦେକାଇ ଆଉଲି ଅଇକରି କଇଲା, “ଏ ଇସ୍ରାଏଲର୍ ବାଇମନ୍, ମୁଇ ଗଟେକ୍ ପାରୁସି ଲକ୍, ମର୍ ଆୟା ବାବା ମିସା ପାରୁସି । ମଲା ଲକ୍ମନ୍ ଆରିତରେକ୍ ଉଟ୍ବାଟା ମର୍ ଆସା ଆଚେ ବଲି, ଇତି ମର୍ ବିଚାର୍ନା ଅଇଲାନି ।”
௬பின்பு அவர்களில், சதுசேயர்கள் ஒரு பகுதியும் பரிசேயர்கள் ஒரு பகுதியுமாக இருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரர்களே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாக இருக்கிறேன். மரித்தவர்களுடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக்குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான்.
7 ୭ ପାଉଲ୍ ଏ କାତା କଇଲା ଦାପ୍ରେ, ପାରୁସି ଆରି ସାଦୁକିମନର୍ ବିତ୍ରେ ଲାଗାଜଡା ଅଇଗାଲାଇ ଆରି ସେମନ୍ ବେଗ୍ଲି ଗାଲାଇ ।
௭அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் வாக்குவாதமுண்டாகி; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.
8 ୮ କାଇକେବଇଲେ ସାଦୁକିମନର୍ ବିସ୍ବାସ୍ ଇସାବେ ମଲା ଲକ୍ମନ୍ ନ ଉଟତ୍ । ସରଗର୍ ଦୁତ୍ କି ଆତ୍ମା ମିସା ନାଇ ବଲି, ବିସ୍ବାସ୍ କର୍ବାଇ, ମାତର୍ ପାରୁସିମନ୍ ଏ ତିନ୍ଟା ଜାକ ବିସ୍ବାସ୍ କର୍ତେରଇଲାଇ ।
௮ஏனென்றால், சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயர்களோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
9 ୯ ସେମନର୍ କିରଜାଟି ଅଇବାଟା ଅଦିକ୍ ଅଦିକ୍ ଅଇଆଇଲା । ପାରୁସି ଦଲର୍ କେତେଟା ଦରମ୍ ଗୁରୁ ଉଟିକରି ଡାଟ୍ ସଙ୍ଗ୍ କଇଲାଇ, “ଆମେ ଏ ଲକର୍ ଟାନେଅନି କାଇ ଦସ୍ ମିସା ମିଲାଉ ନାଇ । କେଜାନେ ଆକେ ଗଟେକ୍ ସରଗର୍ ଦୁତ୍ କି ଆତ୍ମା କାତା କଇରଇସି ।”
௯இதனாலே மிகுந்த இரைச்சல் உண்டானது. பரிசேய சமயத்தாரான வேதபண்டிதர்களில் சிலர் எழுந்து: இந்த மனிதனிடத்தில் ஒரு தவறையும் காணவில்லை; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே சண்டையிடுவது தகாது என்று வாதாடினார்கள்.
10 ୧୦ ତାକର୍ ଦଦାପେଲା ଅଦିକ୍ ଅଦିକ୍ ଅଇଗାଲାକେ ଲକ୍ମନ୍ ପାଉଲ୍କେ ଗନ୍ଦାଗନ୍ଦା କରି ଚିରି ପାକାଇବାଇ ବଲି ସନିଅମନର୍ ମୁକିଅ ଡର୍ଲା । ତେବେ ସେ ଗଣ୍ଡ୍ଗଲ୍ ଅଇବା ଲକ୍ମନର୍ ବିତ୍ରେଅନି ପାଉଲ୍କେ ରକିଆ କରି ଗଡ୍ ବିତ୍ରେ ଦାରି ଜିବାକେ ସନିଅମନ୍କେ ତିଆର୍ଲା ।
௧0அதிகமாக கலவரம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று ரோம அதிபதி பயந்து, போர்வீரர்கள்போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து அகற்றி கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
11 ୧୧ ସେ ରାତି ମାପ୍ରୁ ପାଉଲର୍ ଲଗେ ଟିଆଅଇ କଇଲା, “ଡର୍ ନାଇ! ମର୍ ପାଇ ଇତି ଜିରୁସାଲାମେ ତୁଇ ସାକି ଦେଇ ଆଚୁସ୍ । ରମ୍ ଦେସେ ମିସା ତୁଇ ସେନ୍ତାରି କର୍ବାର୍ ଆଚେ ।”
௧௧அன்று இரவிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, தைரியமாக இரு; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சி கொடுக்கவேண்டும் என்றார்.
12 ୧୨ ଆରକର୍ ଦିନର୍ ସାକାଲେ କେତେଟା ଜିଉଦିମନ୍ ଗଟେକ୍ଟାନେ ରୁଣ୍ଡି ଜଜ୍ନା କଲାଇ । ପାଉଲ୍କେ ନ ମରାଇବା ଜାକ ସେମନ୍ ଅରନ୍ପାନି ନ ଚିଉ ବଲି ସପତ୍ କଲାଇ ।
௧௨விடியற்காலமானபோது, யூதர்களில் சிலர் கூடி, தாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரைக்கும் புசிப்பதும் குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.
13 ୧୩ ଚାଲିସ୍ତେଇଅନି ଅଦିକ୍ ଲକ୍ ଏ ଜଜ୍ନା କଲାଇ ।
௧௩இப்படிச் சபதம்பண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாக இருந்தார்கள்.
14 ୧୪ ସେମନ୍ ଜାଇକରି ମୁକିଅ ପୁଜାରିମନ୍କେ ଆରି ପାର୍ଚିନ୍ମନ୍ କେ କଇଲାଇ, “ପାଉଲ୍କେ ନ ମରାଇବା ଜାକ ଅରନ୍ପାନି ନ ଚିଉ ବଲି ଆମେ ସପତ୍ କରିଆଚୁ ।
௧௪அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும்போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரைக்கும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம் செய்துகொண்டோம்.
15 ୧୫ ତମେ ଆରି ବଡ୍ସବାର୍ ଲକ୍ମନ୍ ରମିୟ ନେତା ପାଉଲ୍କେ ଇତି ଆରିତରେକ୍ ଆନା ବଲି କବର୍ ପାଟାଆ । ତାର୍ ବିସଇର୍ ଟିକିନିକି ଜାନ୍ବାର୍ ଆଚେ ବଲି ମିଚ୍ କଇକରି ଆନାଆ । ସେ ବଡ୍ ସବାଇ ଆଇବା ବେଲେ ତାକେ ବାଟେ ଜାଗି ମାରି ମରାଇଦେବୁ ।”
௧௫ஆகவே, நீங்கள் ஆலோசனைச் சங்கத்தினரோடு கூடப்போய், அவனுடைய காரியத்தை மிக சரியாக விசாரிக்க விருப்பமுள்ளவர்கள்போல ரோம அதிபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடம் அழைத்துக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் அருகில் வருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாக இருப்போம் என்றார்கள்.
16 ୧୬ ପାଉଲର୍ ବାନ୍ଜା ଏମନର୍ କୁଟ୍ କାତା ସୁନିକରି ଗଡ୍ ବିତ୍ରେ ଗାଲା ଆରି ସବୁ କାତା ପାଉଲ୍କେ କଇଦେଲା ।
௧௬இந்த சதித்திட்டத்தை பவுலினுடைய சகோதரியின் மகன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளேபோய், பவுலுக்குத் தெரிவித்தான்.
17 ୧୭ ପାଉଲ୍ ଗଟେକ୍ ରମିୟ ଅଦିକାରିକେ ଡାକାଇ କରି କଇଲା, “ଏ ଦାଙ୍ଗ୍ଡାକେ ସନିଅମନର୍ ମୁକିଅ ଲଗେ ଦାରି ଜାଅତ୍ । ସେ ତାକେ କାଇଟାକି କଇବାର୍ ଆଚେ ।”
௧௭அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனை ரோம அதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் சொல்லவேண்டிய ஒரு செய்தி உண்டு என்றான்.
18 ୧୮ ସନିଅ ତାକେ ମୁକିଆର୍ ଲଗେ ନେଇ କଇଲା, “ବନ୍ଦି ରଇବା ପାଉଲ୍ ମକେ ଡାକି ଏ ଦାଙ୍ଗ୍ଡାକେ ତମର୍ ଲଗେ ଆନ୍ବାକେ କଇଲା । ତମ୍କେ ପନି ସେ କାଇଟା କଇବାର୍ ଆଚେ ।”
௧௮அப்படியே அவன் இவனை ரோம அதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய்: காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு செய்தியைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான்.
19 ୧୯ ସନିଅମନର୍ ମୁକିଅ ତାର୍ ଆତ୍ ଦାରିକରି ଗଟେକ୍ ପାଲିକେ ଡାକିନେଲା ଆରି ପାଚାର୍ଲା, “କାଇଟା କଇବାର୍ ଆଚେ କଅ!”
௧௯அப்பொழுது ரோம அதிபதி அவனுடைய கையைப்பிடித்துத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: நீ என்னிடத்தில் சொல்லவேண்டிய செய்தி என்ன? என்று கேட்டான்.
20 ୨୦ ଦାଙ୍ଗ୍ଡା କଇଲା, “ପାଉଲର୍ ଟିକିନିକି ବିସଇ ଜାନ୍ବାର୍ ଆଚେ ବଲି ନାଡାଇକରି ତାକେ ଜିଉଦିମନ୍ ବଡ୍ ସବାଇ ନେବାକେ, ତମ୍କେ ଗୁଆରି କର୍ବାଇ ।
௨0அதற்கு அவன்: யூதர்கள் பவுலின் காரியத்தை மிகச் சரியாக விசாரிக்க விருப்பமுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனைச் சங்கத்தினரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள தீர்மானித்திருக்கிறார்கள்.
21 ୨୧ ମାତର୍ ତମେ ତାକର୍ କାତା ସୁନା ନାଇ । କାଇକେ ବଇଲେ ଚାଲିସ୍ତେଇଅନି ଅଦିକ୍ ଲକ୍ ଲୁଚିକରି ପାଉଲ୍କେ ମରାଇବାକେ ଜାଗିଆଚତ୍ । ‘ତାକେ ନ ମରାଇବା ଜାକ ଅରନ୍ପାନି ନ କାଉଁ’ ବଲି ସପତ୍ କଲାଇ ଆଚତ୍ । ଏବେ ସେମନ୍ ତମର୍ ଆଦେସ୍ ଦେବାଟାକେ ଜାଗିକରି ଆଚତ୍ ।”
௨௧நீர் அவர்களுக்குச் சம்மதிக்கவேண்டாம்; அவர்களில் நாற்பதுபேருக்கு அதிகமானவர்கள் அவனைக் கொலைசெய்யும்வரைக்கும் தாங்கள் உண்பதும் குடிப்பதுமில்லையென்று சபதம்செய்துகொண்டு, உம்முடைய உத்தரவுக்காக இப்பொழுது காத்துக்கொண்டு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்றான்.
22 ୨୨ ସନିଅମନର୍ ମୁକିଅ କଇଲା, “ତୁଇ ମକେ ଏ କାତା ଜାନାଇ ଆଚି ବଲି କାକେ କଅ ନାଇ ।” ଏନ୍ତାରି କଇକରି ଦାଙ୍ଗ୍ଡାକେ ପାଟାଇ ଦେଲା ।
௨௨அப்பொழுது ரோம அதிபதி: நீ இவைகளை எனக்குத் தெரிவித்ததாக ஒருவருக்கும் சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான்.
23 ୨୩ ସନିଅମନର୍ ମୁକିଅ ତାର୍ ତଲେ ରଇଲା ଦୁଇଟା ସନିଅକେ ଡାକାଇ କଇଲା, “ଆଜି ରାତି ନଅଟା ବିତ୍ରେ ସିସେରିଆ ଜିବାକେ ଦୁଇସ ସନିଅକେ ତିଆର୍, ଆରି ସତୁରିଟା ଗଡାଇ ଚଗୁମନ୍ ଆରି ଦୁଇ ସଅ ବର୍ଚି ଦାରୁମନ୍କେ ଟିକ୍ କର୍ ।
௨௩பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியா பட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரை வீரரையும், இருநூறு ஈட்டிக்காரர்களையும், இரவில் மூன்று மணியளவிலே, ஆயத்தம் செய்யுங்கள் என்றும்;
24 ୨୪ ପାଉଲ୍ ଜିବା ପାଇ କେତେଟା ଗଡା ଦିଆସ୍ ଆରି ନିକ ସଙ୍ଗେ ତାକେ ସାସନ୍କାରିଆ ପେଲିକ୍ସ୍ ଲଗେ ଦାରି ଜାଆ ।”
௨௪பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாகக் கொண்டுபோகும்படிக்கு குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,
25 ୨୫ ସନିଅମନର୍ ମୁକିଅ ପେଲିକ୍ସ୍କେ ଏନ୍ତି ଗଟେକ୍ ଚିଟି ଲେକ୍ଲା,
௨௫ஒரு கடிதத்தையும் எழுதினான்; அதின் விபரமாவது:
26 ୨୬ “ଏ ଚିଟି ମୁଇ କାଲାଡିଆକେ ଲିସିଆର୍ ସବୁର୍ଟାନେଅନି ଡାକ୍ପୁଟା ରଇବା ସନ୍ମାନର୍ ସାସନ୍କାରିଆ ପେଲିକ୍ସ୍କେ ଲେକ୍ଲିନି, ଜୁଆର୍!
௨௬கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி தெரிவிப்பது என்னவென்றால்:
27 ୨୭ ଆଗିଆ, ଜିଉଦିମନ୍ ଏ ଲକ୍କେ ଦାରି ତାକେ ମର୍ତେ ମାରିଦେବାକେ ଚେସ୍ଟା କର୍ତେ ରଇଲାଇ । ସେ ଗଟେକ୍ ରମିୟ ଲକ୍ ବଲି ଜାନ୍ଲା ପଚେ, ମୁଇ ତାକେ ମର୍ ସନିଅମନ୍ ସଙ୍ଗେ ତାକେ ରକିଆ କଲି ।
௨௭இந்த மனிதனை யூதர்கள் பிடித்துக் கொலைசெய்யப்போகிற நேரத்தில், நான் போர்வீரர்களோடு கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.
28 ୨୮ ସେମନର୍ ବିରଦେ ସେ କାଇ ଦସ୍ କଲା ଆଚେ, ସେଟା ଜାନ୍ବାକେ ତାକେ ମୁଇ ସେମନର୍ ବଡ୍ସବାଇ ଦାରିଗାଲି ।
௨௮அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குமுன் கொண்டுபோனேன்.
29 ୨୯ ମାତର୍ ସେ ମରନର୍ କି ବନ୍ଦି ଡଣ୍ଡ୍ ପାଇବା ପାରା କାଇମିସା ବୁଲ୍ କାମ୍ କରେ ନାଇ ବଲି ମୁଇ ଜାନିପାର୍ଲି । ତାର୍ ବିରଦେ ଅଇଲା ଦାବା ସବୁ, ତାକର୍ ନିଜର୍ ଦରମ୍ ବିସଇ ।
௨௯இவன் அவர்களுடைய வேதத்திற்கு அடுத்த காரியங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று அறிந்ததேயல்லாமல், மரணத்திற்காவது கைதுசெய்வதற்காவது ஏற்ற குற்றம் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன்.
30 ୩୦ ଆରି ତାର୍ ବିରଦେ ଗଟେକ୍ କୁଟ୍ ଜଜ୍ନା ଅଇଲାନି ବଲି କବର୍ ସୁନି, ବେଗି ବେଗି ତମର୍ ଲଗେ ପାଟାଇ ଦେବାକେ ଟିକ୍ କଲି, ତାର୍ ବିରଦେ ରଇଲା ଦାବା, ତର୍ ମୁଆଟେ ଜାନାଇବାକେ ତାର୍ ଦାବାଦାରିମନ୍କେ ମୁଇ କଇଲିଆଚି ।”
௩0யூதர்கள் இவனுக்கு விரோதமாக சதியோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாகச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாக இருப்பீராக என்றெழுதினான்.
31 ୩୧ ସନିଅମନ୍ ସେ ଆଦେସ୍ ଇସାବେ ପାଉଲ୍କେ ସେ ରାତି ଆନ୍ତିପଟ୍ରିସେ କେଟାଇଦେଲାଇ ।
௩௧போர்வீரர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலை அழைத்துக்கொண்டு, இரவிலே அந்திப்பத்திரி ஊருக்குப்போய்,
32 ୩୨ ତାର୍ ଆର୍କର୍ ଦିନେ ଇଣ୍ଡିଜିବା ସନିଅମନ୍ ଗଡେ ବାଉଡିଗାଲାଇ ଆରି ଗଡାଇ ଜାଉ ସନିଅମନ୍କେ ଜିବାକେ କଇଲାଇ ।
௩௨அடுத்தநாளில் குதிரைவீரர்களை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
33 ୩୩ ସନିଅମନ୍ ପାଉଲ୍କେ ଦାରି ସିସେରିଆଇ କେଟ୍ଲାଇ । ତେଇ ସନିଅମନର୍ ମୁକିଅର୍ ଚିଟି ସଙ୍ଗେ ପାଉଲ୍କେ ସାସନ୍କାରିଆର୍ ଆତେ ଜିମାଦେଇଦେଲାଇ ।
௩௩அவர்கள் செசரியா பட்டணத்தை அடைந்து, கடிதத்தை தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
34 ୩୪ ସାସନ୍କାରିଆ ଚିଟି ପଡି ପାଉଲ୍କେ କନ୍ ରାଇଜେଅନି ଆସିଆଚୁସ୍? ବଲି ପାଚାର୍ଲା । ପାଉଲ୍ ସିଲିସିଆଇଅନି, ବଲି ଜାନ୍ଲା ।
௩௪தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:
35 ୩୫ ସେ କଇଲା, “ତମର୍ ଦାବାଦାରିମନ୍ ଆସି କେଟ୍ଲା ପଚେ, ମୁଇ ତର୍ କାତା ସୁନ୍ବି ।” ତାର୍ ପଚେ ପାଉଲ୍କେ ଏରଦ୍ ରାଜାର୍ ନଅରେ ବନ୍ଦି କରି ସଙ୍ଗଇବାକେ ଆଦେସ୍ ଦେଲା ।
௩௫உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வரும்போது உன் காரியத்தைத் திட்டமாகக் கேட்பேன் என்று சொல்லி, ஏரோதின் அரண்மனையிலே அவனைக் காவல்பண்ணும்படி ஆணையிட்டான்.