< Mikas 3 >

1 Da sagde jeg: Hør dog, I Jakobs Høvdinger, I Dommere af Israels Hus! Kan Kendskab til Ret ej ventes af eder,
நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ உரியது.
2 I, som hader det gode og elsker. det onde, I, som flår Huden af Folk. og Kødet af deres Ben,
ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும், அவர்களுடைய எலும்புகள்மேல் இருக்கிற சதையையும் பிடுங்கி,
3 æder mit Folks Kød og flænger dem Huden af Kroppen, sønderbryder deres Ben. og breder dem som Kød i en Gryde, som Suppekød i en Kedel?
என் மக்களின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, எலும்புகளை முறித்து, பானையிலே போடுவதுபோலவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடுவதுபோலவும் அவைகளை வெட்டுகிறார்கள்.
4 Engang skal de råbe til HERREN, han lader dem uden Svar; da skjuler han sit Åsyn for. dem, fordi deres Gerninger er onde.
அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் செயல்களில் பொல்லாதவர்களாக இருப்பதினால், அவர் அவர்களுக்கு மறுமொழி கொடுக்காமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.
5 Så siger HERREN om Profeterne, de, som vildleder mit Folk, de, som råber om Fred, når kun de får noget at tygge, men ypper Krig med den, der intet giver dem i Munden:
தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடுக்காதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தமாகி, என் மக்களை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்:
6 Derfor skal I opleve Nat uden. Syner, Mørke, som ej bringer Spådom; Solen skal gå ned for Profeterne, Dagen skal sortne for dem.
தரிசனம் காணமுடியாத இரவும், குறிசொல்லமுடியாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் மறைந்து, அவர்கள்மேல் பகல் மிகவும் இருளாகப்போகும்.
7 Til Skamme skal Seeren blive, blues skal de, som spår; alle skal tilhylle Skægget, thi Svar er der ikke fra Gud.
தரிசனம்பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டு, குறிசொல்லுகிறவர்கள் நாணமடைந்து, உத்திரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் அனைவரும் தங்கள் வாயை மூடிக்கொள்வார்கள்.
8 Jeg derimod er ved HERRENs Ånd fuld af Styrke, af Ret og af Kraft til at forkynde Jakob dets Brøde, Israel, hvad det har syndet.
நானோ, யாக்கோபுக்கு அவனுடைய மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவனுடைய பாவத்தையும் அறிவிப்பதற்காக, யெகோவாவுடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
9 Hør det, I Jakobs Huses Høvdinger, I Dommere af Israels Hus, I, som afskyr Ret og gør alt, som er lige, kroget,
நியாயத்தை வெறுத்து, ஒழுங்கானவைகளையெல்லாம் கோணலாக்கி,
10 som bygger Zion med Blod. og Jerusalem med Uret.
௧0சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுகிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.
11 Dets Høvdinger dømmer for Gave, dets Præster kender Ret for Løn; dets Profeter spår for Sølv og støtter sig dog til HERREN: "Er HERREN ej i vor Midte? Over os kommer intet ondt."
௧௧அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
12 For eders, Skyld skal derfor Zion pløjes som en Mark, Jerusalem blive til Grushobe, Tempelbjerget til Krathøj.
௧௨ஆகையால் உங்களால் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகப்போகும், ஆலயத்தின் மலை, காட்டு மேடுகளைப்போலாகும்.

< Mikas 3 >