< Job 6 >

1 Saa tog Job til Orde og svarede:
யோபு மறுமொழியாக:
2 Gid man vejed min Harme og vejed min Ulykke mod den!
“என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும்.
3 Thi tungere er den end Havets Sand, derfor talte jeg over mig!
அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.
4 Thi i mig sidder den Almægtiges Pile, min Aand inddrikker deres Gift; Rædsler fra Gud forvirrer mig.
சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது.
5 Skriger et Vildæsel midt i Græsset, brøler en Okse ved sit Foder?
புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
6 Spiser man ferskt uden Salt, smager mon Æggehvide godt?
ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
7 Min Sjæl vil ej røre derved, de Ting er som Lugt af en Løve.
உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் வெறுப்பான உணவுபோல இருக்கிறது.
8 Ak, blev mit Ønske dog opfyldt, Gud give mig det, som jeg haaber;
ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து,
9 vilde Gud dog knuse mig, række Haanden ud og skære mig fra,
தேவன் என்னை நொறுக்க விரும்பி, தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்.
10 saa vilde det være min Trøst — jeg hopped af Glæde trods skaanselsløs Kval at jeg ikke har nægtet den Helliges Ord.
௧0அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால் உணர்வில்லாமல் இருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைக் கைவிடமாட்டார்.
11 Hvad er min Kraft, at jeg skal holde ud, min Udgang, at jeg skal være taalmodig?
௧௧நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது?
12 Er da min Kraft som Stenens, er da mit Legeme Kobber?
௧௨என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ?
13 Ak, for mig er der ingen Hjælp, hver Udvej lukker sig for mig.
௧௩எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே.
14 Den, der nægter sin Næste Godhed, han bryder med den Almægtiges Frygt.
௧௪உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான்.
15 Mine Brødre sveg mig som en Bæk, som Strømme, hvis Vand svandt bort,
௧௫என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
16 de, der var grumset af os, og som Sneen gemte sig i,
௧௬அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
17 men som svandt ved Solens Glød, tørredes sporløst ud i Hede;
௧௭வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன.
18 Karavaner bøjer af fra Vejen, drager op i Ørkenen og gaar til Grunde;
௧௮அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும்.
19 Temas Karavaner spejder, Sabas Rejsetog haaber paa dem,
௧௯தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
20 men de beskæmmes i deres Tillid, de kommer derhen og skuffes!
௨0தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள்.
21 Ja, slige Strømme er I mig nu, Rædselen saa I og grebes af Skræk!
௨௧அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
22 Har jeg mon sagt: »Giv mig Gaver, løs mig med eders Velstand,
௨௨எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், உங்கள் செல்வத்திலிருந்து எனக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்றும்;
23 red mig af Fjendens Haand, køb mig fri fra Voldsmænds Haand!«
௨௩அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள், கொடியவரின் கைக்கு என்னை தப்புவித்து காப்பாற்றிவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
24 Lær mig, saa vil jeg tie, vis mig, hvor jeg har fejlet!
௨௪எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
25 Redelig Tale, se, den gør Indtryk; men eders Revselse, hvad er den værd?
௨௫உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
26 Er det jer Hensigt at revse Ord? Den fortvivledes Ord er dog Mundsvejr!
௨௬கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
27 Selv om en faderløs kasted I Lod og købslog om eders Ven.
௨௭இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
28 Men vilde I nu dog se paa mig! Mon jeg lyver jer op i Ansigtet?
௨௮இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்.
29 Vend jer hid, lad der ikke ske Uret, vend jer, thi end har jeg Ret!
௨௯நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்; அநீதி காணப்படாதிருக்கும்; திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும்.
30 Er der Uret paa min Tunge, eller skelner min Gane ej, hvad der er ondt?
௩0என் நாவிலே அநீதி உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?

< Job 6 >