< Job 25 >

1 Saa tog Sjuhiten Bildad til Orde og sagde:
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
2 Hos ham er der Vælde og Rædsel, han skaber Fred i sin høje Bolig.
“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.
3 Er der mon Tal paa hans Skarer? Mod hvem staar ikke hans Baghold op?
அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
4 Hvor kan en Mand have Ret imod Gud, hvor kan en kvindefødt være ren?
அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
5 Selv Maanen er ikke klar i hans Øjne og Stjernerne ikke rene,
அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,
6 endsige en Mand, det Kryb, et Menneskebarn, den Orm!
பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”

< Job 25 >