< Žalmy 75 >

1 Přednímu z kantorů, jako: Nezahlazuj, žalm Azafův, a píseň. Oslavujeme tě, Bože, oslavujeme; nebo že jest blízké jméno tvé, vypravují to předivní skutkové tvoji.
“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.
2 Když přijde čas uložený, já právě souditi budu.
இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, நீதியாய் நியாயந்தீர்பேன்.
3 Rozplynula se země i všickni obyvatelé její, já utvrdím sloupy její. (Sélah)
பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன்.
4 Dím bláznům: Neblázněte, a bezbožným: Nevyzdvihujte rohů.
அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார்.
5 Nevyzdvihujte proti Nejvyššímu rohů svých, aniž mluvte tvrdošijně.
உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார்.”
6 Nebo ne od východu, ani západu, ani od pouště přichází zvýšení;
கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது.
7 Ale Bůh soudce jednoho ponižuje, a druhého povyšuje.
ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.
8 Kalich zajisté jest v rukou Hospodinových, a to vína kalného plný nalitý, z něhož nalévati bude, tak že i kvasnice jeho vyváží, a vypijí všickni bezbožníci země.
யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; அவர் அதை ஊற்றுகிறார்; பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள்.
9 Já pak zvěstovati budu skutky Páně na věčnost, žalmy zpívati budu Bohu Jákobovu.
நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
10 A všecky rohy bezbožníků srážím, rohové pak spravedlivého vyvýšeni budou.
“கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” என்று இறைவன் சொல்கிறார்.

< Žalmy 75 >