< Izaiáš 25 >

1 Hospodine, ty jsi Bůh můj, vyvyšovati tě budu, a oslavovati budu jméno tvé; nebo jsi učinil předivné věci. Rady tvé zdávna uložené jsou věrná pravda.
யெகோவாவே, நீரே என் இறைவன்; நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன். அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்; நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி, பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர்.
2 Nebo jsi obrátil město v hromadu, město hrazené v zříceninu, paláce cizozemců, aby nebyli městem, a na věky aby nebyli zase staveni.
நீர் அந்நியரின் பட்டணத்தை இடிபாடுகளின் குவியலாக்கினீர்; அரணான பட்டணத்தைப் பாழாக்கினீர். அந்நியரின் அரண் இனிமேலும் ஒரு பட்டணமாயிராது; அது இனியொருபோதும் திரும்பக் கட்டப்படுவதுமில்லை.
3 Protož ctíti tě budou lid silný, města národů hrozných báti se tebe budou.
ஆகவே வலிமையுள்ள மக்கள் கூட்டங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; இரக்கமற்ற நாடுகளின் பட்டணங்கள் உம்மைக் கனம்பண்ணும்.
4 Nebo jsi byl hradem chudému, hradem nuznému v úzkosti jeho, útočištěm před povodní, zastíněním před horkem; (nebo vzteklost ukrutníků podvrátila by zed).
நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்; வறுமையுற்றோரின் துயரில் அவர்களுக்கு அடைக்கலமாயிருந்தீர். புயலிலிருந்து காக்கும் புகலிடமாகவும், வெயிலிலிருந்து காக்கும் நிழலாகவும் இருந்தீர். முரடர்களின் மூச்சு, ஒரு மதிலுக்கு எதிராக வீசும் புயலைப்போல் இருக்கிறது.
5 Hlučení cizozemců jsi přetrhl jako horkost v sucho, horkost stínem oblaku; zhouba ukrutných přetržena.
அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது. அந்நியரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடக்குகிறீர்; மேகத்தின் நிழலால் வெப்பம் தணிவதுபோல, இரக்கமற்றோரின் பாடலும் அடங்கிப் போகிறது.
6 I učiní Hospodin zástupů všechněm národům na hoře této hody z věcí tučných, hody z vína vystálého, z věcí tučných, mozk v sobě majících, z vína vystálého a učištěného.
சேனைகளின் யெகோவா இந்த மலைமேல் எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் சிறப்பான விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுவார். நன்றாகப் பதப்படுத்தப்பட்ட பழைய திராட்சை இரசமும், சிறந்த இறைச்சிகளும், உயர்வகை திராட்சை இரசமும் நிறைந்த விருந்தாக அது இருக்கும்.
7 A zkazí na hoře této zastření, kteréž zastírá všecky lidi, a přikrytí, jímž přikryti jsou všickni národové.
இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும் மூடியிருந்த மூடுதிரையை அவர் இந்த மலையில் அழிப்பார்; இதுவே எல்லா நாடுகளையும் மூடியிருந்த திரைச்சீலையாகும்.
8 Sehltí i smrt u vítězství, a setře Panovník Hospodin slzu s všeliké tváři, a pohanění lidu svého odejme ze vší země; (nebo Hospodin mluvil).
மரணம் என்றென்றும் இல்லாதபடி அவர் அதை விழுங்கிவிடுவார். ஆண்டவராகிய யெகோவா எல்லா முகங்களிலுமுள்ள கண்ணீரைத் துடைத்துவிடுவார். அவர் பூமியெங்குமுள்ள தன் மக்களின் அவமானத்தை நீக்கிவிடுவார். யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார்.
9 Pročež řekne v ten den: Aj, Bůh náš tento jest, očekávaliť jsme na něj, a vysvobodil nás. Onť jest Hospodin, jehož jsme očekávali; plésati a veseliti se budeme v spasení jeho.
அந்த நாளிலே மக்கள் கூட்டங்கள், “நிச்சயமாக இவரே நம் இறைவன்; நாம் இவரில் நம்பிக்கை வைத்தோம், இவர் எங்களை மீட்டார். இவரே யெகோவா, இவரில் நாம் நம்பிக்கை வைத்தோம்; இவர் கொடுக்கும் இரட்சிப்பில் நாம் மகிழ்ந்து களிகூருவோம்” என்பார்கள்.
10 Nebo odpočine ruka Hospodinova na hoře této, a mlácen bude Moáb na místě svém, jako vymlacována bývá pleva do hnoje.
யெகோவாவின் கரம் இந்த சீயோன் மலையில் தங்கும்; வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல், மோவாபியர் அவரின்கீழ் மிதிக்கப்படுவார்கள்.
11 A roztáhneť ruce své u prostřed něho, jako roztahuje ten, kterýž plyne k plování, a poníží pýchy jeho rameny rukou svých.
நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல், மோவாபியர் தங்கள் கைகளை விரிப்பார்கள்; அவர்களுடைய கைகளில் திறமை இருந்தபோதிலும், இறைவன் அவர்களுடைய பெருமையைச் சிறுமைப்படுத்துவார்.
12 A tak pevnost i výsost zdí tvých sehne, poníží a srazí na zem až do prachu.
மோவாபின் உயரமான அரண்செய்யப்பட்ட மதில்களை அவர் கீழே தள்ளி விழ்த்துவார். அவைகளை அவர் நிலத்தின் புழுதியில் கீழே தள்ளிப் போடுவார்.

< Izaiáš 25 >