< ⳰ⳘⲠⲈⲦⲢⲞⲤ Ⲃ ̅ 1 >

1 ⲁ̅ ⲥⲓⲙⲱⲛ ⲡⲉⲧⲣⲟⲥ ⲡϩⲙ̅ϩⲁⲗ ⲁⲩⲱ ⲡⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⲛ̅ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅ ⲉϥⲥϩⲁⲓ ⲛ̅ⲛⲉⲛⲧⲁⲩϫⲓ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲙⲛ̅ⲡⲉⲓⲧⲁⲓⲟ ⲛ̅ⲟⲩⲱⲧ ⲛ̅ⲧⲉⲛϩⲉ. ϩⲛ̅ⲧⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ ⲙ̅ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅ ⲡⲉⲛⲥⲱⲧⲏⲣ.
இயேசுகிறிஸ்துவின் வேலைக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு, நம்முடைய இறைவனும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து ஏற்படுத்திய நீதியின் மூலமாய், எங்களுடைய விசுவாசத்தைப் போன்ற உயர்மதிப்புடைய விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
2 ⲃ̅ ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲙⲛ̅ϯⲣⲏⲛⲏ ⲉⲥⲉⲁϣⲁⲓ ⲛⲏⲧⲛ̅ ϩⲙ̅ⲡⲥⲟⲟⲩⲛ̅ ⲙ̅ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅.
இறைவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிவதன் மூலமாய் கிருபையும் சமாதானமும் நிறைவாய் உங்களுடன் இருப்பதாக.
3 ⲅ̅ ϩⲱⲥ ⲁϥⲭⲁⲣⲓⲍⲉ ⲛⲁⲛ ϩⲓⲧⲛ̅ⲧⲉϥϭⲟⲙ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲛ̅ϩⲱⲃ ⲛⲓⲙ. ⲉⲧϫⲓ ⲉⲑⲟⲩⲛ ⲉⲡⲱⲛϩ̅ ⲙⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲣⲉϥϣⲙ̅ϣⲉⲛⲟⲩⲧⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ̅ⲡⲥⲟⲟⲩⲛ̅ ⲙ̅ⲡⲉⲛⲧⲁϥⲧⲁϩⲙⲛ̅ ϩⲙ̅ⲡⲉϥⲉⲟⲟⲩ ⲙⲛ̅ⲧⲉϥⲁⲣⲉⲧⲏ.
நம்முடைய வாழ்க்கைக்கும் இறை பக்திக்கும் தேவையான எல்லாவற்றையும், அவருடைய இறைவல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. அவரைப்பற்றி எங்களுக்கு இருக்கும் அறிவின் மூலமாய் நமக்கு இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவரே தமது மகிமையினாலும் நன்மையினாலும் நம்மை அழைத்திருக்கிறார்.
4 ⲇ̅ ⲛⲁⲓ ⲛ̅ⲧⲁϥⲭⲁⲣⲓⲍⲉ ⲛⲁⲛ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧⲟⲩ ⲛ̅ⲛⲉⲓⲛⲟϭ ⲛ̅ⲉⲣⲏⲧ ⲉⲧⲧⲁⲓⲏⲩ. ϫⲉⲕⲁⲥ ϩⲓⲧⲛ̅ⲛⲁⲓ ⲉⲧⲉⲧⲛⲉϣⲱⲡⲉ ⲛ̅ⲕⲟⲓⲛⲱⲛⲟⲥ ⲛ̅ⲧⲉⲫⲩⲥⲓⲥ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲉⲁⲧⲉⲧⲛ̅ⲡⲱⲧ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲧⲉⲡⲓⲑⲩⲙⲓⲁ ⲙ̅ⲡⲧⲁⲕⲟ ⲉⲧϩⲙ̅ⲡⲕⲟⲥⲙⲟⲥ.
இவற்றின் மூலமாகவே இறைவனுடைய பெரிதான, உயர்மதிப்புடைய வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குத்தத்தங்களின் மூலமாய், அந்த இறை இயல்பில் நீங்களும் பங்குகொள்ளலாம், தீய ஆசைகளினால் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.
5 ⲉ̅ ⲁⲩⲱ ϩⲙ̅ⲡⲁⲓ ⲇⲉ ⲟⲛ ⲉⲁⲧⲉⲧⲛ̅ⲉⲓⲛⲉ ⲛ̅ⲥⲡⲟⲩⲇⲏ ⲛⲓⲙ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲭⲟⲣⲏⲅⲉⲓ ⲛ̅ⲧⲁⲣⲉⲧⲏ ϩⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ. ⲁⲩⲱ ⲡⲥⲟⲟⲩⲛ̅ ϩⲣⲁⲓ ϩⲛ̅ⲧⲁⲣⲉⲧⲏ.
இந்த காரணத்தினால் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பை வளர்த்துக்கொள்ள எல்லா முயற்சியையும் செய்யுங்கள்; நற்பண்புடன் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்;
6 ⲋ̅ ⲧⲉⲅⲕⲣⲁⲧⲓⲁ ⲇⲉ ϩⲣⲁⲓ ϩⲙ̅ⲡⲥⲟⲟⲩⲛ̅. ⲑⲩⲡⲟⲙⲟⲛⲏ ⲇⲉ ϩⲣⲁⲓ ϩⲛ̅ⲧⲉⲅⲕⲣⲁⲧⲓⲁ. ⲧⲙⲛ̅ⲧⲣⲉϥϣⲙ̅ϣⲉⲛⲟⲩⲧⲉ ⲇⲉ ϩⲛ̅ⲑⲩⲡⲟⲙⲟⲛⲏ.
அறிவுடன் சுயக்கட்டுப்பாட்டையும்; சுயக்கட்டுப்பாடுடன் விடாமுயற்சியையும்; விடாமுயற்சியுடன் இறை பக்தியையும்;
7 ⲍ̅ ⲧⲙⲛ̅ⲧⲙⲁⲓⲥⲟⲛ ⲇⲉ ϩⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲣⲉϥϣⲙ̅ϣⲉⲛⲟⲩⲧⲉ. ⲧⲁⲅⲁⲡⲏ ⲇⲉ ϩⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲙⲁⲓⲥⲟⲛ.
இறை பக்தியுடன் சகோதர பாசத்தையும்; சகோதர பாசத்துடன் அன்பையும் கூட்டிச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
8 ⲏ̅ ⲛⲁⲓ ⲇⲉ ⲉⲩϣⲟⲟⲡ ⲛⲏⲧⲛ̅ ⲁⲩⲱ ⲉⲩⲣ̅ϩⲟⲩⲟ ⲛ̅ⲛⲉⲩⲛⲁϫⲓⲧⲏⲩⲧⲛ̅ ⲁⲛ ⲁϫⲛ̅ϩⲱⲃ ⲟⲩⲇⲉ ⲁϫⲛ̅ⲕⲁⲣⲡⲟⲥ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲥⲟⲟⲩⲛ̅ ⲙ̅ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅.
ஏனெனில் இப்பண்புகள் உங்களில் வளர்ந்து பெருகும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி உங்களிடமிருக்கும் அறிவில் நீங்கள் பயனற்றவர்களாகவோ, பலன் கொடுக்காதவர்களாகவோ இருக்காதபடி, இவை உங்களைத் தடுத்துக்கொள்ளும்.
9 ⲑ̅ ⲡⲉⲧⲛ̅ⲛⲁⲓ ⲅⲁⲣ ϣⲟⲟⲡ ⲛⲁϥ ⲁⲛ ⲟⲩⲃⲗ̅ⲗⲉ ⲡⲉ. ⲛ̅ϥⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ⲁⲛ. ⲉⲁϥϫⲓ ⲛ̅ⲟⲩⲉⲃϣⲉ ⲙ̅ⲡⲧⲃ̅ⲃⲟ ⲛ̅ⲛⲉϥϣⲟⲣⲡ̅ ⲛ̅ⲛⲟⲃⲉ.
ஆனால் யாராவது இந்தப் பண்புகள் அற்றவனாயிருந்தால், அவன் தூரப்பார்வையற்றவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்; தனது முந்திய பாவங்களிலிருந்து, தான் சுத்திகரிக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான்.
10 ⲓ̅ ⲉⲧⲃⲉⲡⲁⲓ ⲛⲉⲥⲛⲏⲩ. ⲥⲡⲟⲩⲇⲁⲍⲉ ϫⲉⲕⲁⲥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ ⲉⲧⲛⲁⲛⲟⲩⲟⲩ ⲉⲧⲉⲧⲛⲉϫⲡⲟ ⲛⲏⲧⲛ̅ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲥⲧⲁϫⲣⲏⲩ ⲙⲛ̅ⲡⲉⲧⲛ̅ⲧⲱϩⲙ̅ ⲙⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲙⲛ̅ⲧⲥⲱⲧⲡ̅. ⲛⲁⲓ ⲅⲁⲣ ⲉⲧⲉⲧⲛ̅ⲉⲓⲣⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲛ̅ⲧⲉⲧⲛⲁϩⲉ ⲁⲛ ⲉⲛⲉϩ.
ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள அதிக ஆர்வம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் இவற்றை செய்வீர்களானால், ஒருபோதும் விழுந்துபோகமாட்டீர்கள்.
11 ⲓ̅ⲁ̅ ⲧⲁⲓ ⲅⲁⲣ ⲧⲉ ⲑⲉ ⲉⲧⲟⲩⲛⲁϯ ⲛⲏⲧⲛ̅ ϩⲛ̅ⲟⲩⲙⲛ̅ⲧⲣⲙ̅ⲙⲁⲟ ⲛ̅ⲧⲉϩⲓⲏ ⲛ̅ⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲧⲙⲛ̅ⲧⲉⲣⲟ ⲛ̅ϣⲁⲉⲛⲉϩ ⲙ̅ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅ ⲡⲉⲛⲥⲱⲧⲏⲣʾ (aiōnios g166)
நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். (aiōnios g166)
12 ⲓ̅ⲃ̅ ⲉⲧⲃⲉⲡⲁⲓ ϯⲛⲁϥⲓⲣⲟⲟⲩϣ̅ ⲛ̅ⲟⲩⲟⲉⲓϣ ⲛⲓⲙ ⲉⲧⲣⲉⲧⲛ̅ⲣ̅ⲡⲙⲉⲉⲩⲉ ⲉⲧⲃⲉⲛⲁⲓ. ⲕⲁⲓⲡⲉⲣ ⲛⲉⲧⲉⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ̅ ⲁⲩⲱ ⲛⲉⲧⲉⲧⲛ̅ⲧⲁϫⲣⲏⲩ ϩⲛ̅ⲧⲙⲉ ⲉⲧϣⲟⲟⲡ.
நான் இவற்றை உங்களுக்கு எப்பொழுதும் நினைப்பூட்டிக்கொண்டே இருப்பேன்; நீங்கள் இவற்றை அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது சத்தியத்தில் உறுதிப்படுத்தப்பட்டும் இருக்கிறீர்கள். ஆனால் மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
13 ⲓ̅ⲅ̅ ϯϫⲱ ⲇⲉ ⲙ̅ⲙⲟⲥ. ϫⲉ ⲟⲩⲇⲓⲕⲁⲓⲟⲛ ⲡⲉ. ⲉⲫⲟⲥⲟⲛ ⲉⲓϩⲙ̅ⲡⲉⲓⲙⲁ ⲛ̅ϣⲱⲡⲉ. ⲉⲧⲟⲩⲛⲉⲥⲧⲏⲩⲧⲛ̅ ϩⲙ̅ⲡⲣ̅ⲡⲙⲉⲉⲩⲉ.
இந்த உடலாகிய கூடாரத்தில் நான் வாழும் வரைக்கும், இவ்விதமாய் உங்கள் ஞாபகத்தைப் புதுப்பிப்பது சரியென்றே நான் எண்ணுகிறேன்.
14 ⲓ̅ⲇ̅ ⲉⲓⲥⲟⲟⲩⲛ ϫⲉ ϯⲛⲁⲕⲱ ⲉϩⲣⲁⲓ ⲙ̅ⲡⲁⲥⲱⲙⲁ ϩⲛ̅ⲟⲩϭⲉⲡⲏ. ⲕⲁⲧⲁⲑⲉ ⲛ̅ⲧⲁϥⲧⲁⲙⲟⲓ ⲛ̅ϭⲓⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅.
ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, சீக்கிரமாய் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்று அறிந்திருக்கிறேன்.
15 ⲓ̅ⲉ̅ ϯⲛⲁⲥⲡⲟⲩⲇⲁⲍⲉ ⲇⲉ ⲟⲛ ⲙⲛ̅ⲛ̅ⲥⲁⲧⲣⲁⲉⲓ ⲉⲃⲟⲗ. ⲉⲧⲣⲉⲧⲛ̅ⲕⲱ ⲛⲏⲧⲛ̅ ⲛ̅ⲟⲩⲟⲉⲓϣ ⲛⲓⲙ ⲙ̅ⲡⲣ̅ⲡⲙⲉⲉⲩⲉ ⲛ̅ⲛⲁⲓ.
ஆகவே நான் இறந்துபோன பின்பும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கதாய், என்னால் இயன்ற எல்லாவற்றையும் இப்பொழுது நான் செய்வேன்.
16 ⲓ̅ⲋ̅ ⲛ̅ⲧⲁⲛⲟⲩⲁϩⲛ̅ ⲅⲁⲣ ⲁⲛ ⲛ̅ⲥⲁϩⲉⲛϣⲁϫⲉ ⲉⲁⲩⲧⲃ̅ⲧⲱⲃⲟⲩ. ⲁⲛⲟⲩⲱⲛϩ̅ ⲛⲏⲧⲛ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲧϭⲟⲙ ⲙ̅ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅ ⲙⲛ̅ⲧⲉϥⲡⲁⲣⲟⲩⲥⲓⲁ. ⲁⲗⲗⲁ ⲉⲁⲛⲛⲁⲩ ⲉⲧⲙⲛ̅ⲧⲛⲟϭ ⲙ̅ⲡⲉⲧⲙ̅ⲙⲁⲩ.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையையும் அவருடைய வருகையையும் நாங்கள் உங்களுக்குச் சொன்னபோது, தந்திரமான கட்டுக்கதைகளை நாங்கள் கைக்கொள்ளவில்லை. நாங்களோ அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாயிருக்கிறோம்.
17 ⲓ̅ⲍ̅ ⲉⲁϥϫⲓ ⲛ̅ⲧⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲓⲱⲧ ⲛ̅ⲟⲩⲧⲁⲓⲟ ⲙⲛ̅ⲟⲩⲉⲟⲟⲩ. ⲉⲁⲩⲉⲓⲛⲉ ⲛⲁϥ ⲛ̅ⲟⲩⲥⲙⲏ ⲛ̅ⲧⲉⲓⲙⲓⲛⲉ ϩⲓⲧⲙ̅ⲡⲛⲟϭ ⲛ̅ⲉⲟⲟⲩ. ϫⲉ ⲡⲁⲓ ⲡⲉ ⲡⲁϣⲏⲣⲉ ⲡⲁⲙⲉⲣⲓⲧ. ⲡⲁⲓ ⲁⲛⲟⲕ ⲛ̅ⲧⲁⲡⲁⲟⲩⲱϣ ϣⲱⲡⲉ ϩⲣⲁⲓ ⲛ̅ϩⲏⲧϥ̅.
“இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொண்டார்.
18 ⲓ̅ⲏ̅ ⲁⲩⲱ ⲁⲛⲟⲛ ⲁⲛⲥⲱⲧⲙ̅ ⲉⲧⲉⲓⲥⲙⲏ ⲉⲁⲥⲉⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲉ. ⲉⲛϣⲟⲟⲡ ⲛⲙ̅ⲙⲁϥ ϩⲙ̅ⲡⲧⲟⲟⲩ ⲉⲧⲟⲩⲁⲁⲃ.
அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம்.
19 ⲓ̅ⲑ̅ ⲁⲩⲱ ⲟⲩⲛ̅ⲧⲁⲛ ⲙ̅ⲙⲁⲩ ⲙ̅ⲡϣⲁϫⲉ ⲙ̅ⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲉϥⲧⲁϫⲣⲏⲩ. ⲡⲁⲓ ⲕⲁⲗⲱⲥ ⲧⲉⲧⲛ̅ⲉⲓⲣⲉ ⲙ̅ⲙⲟϥ ⲉⲧⲉⲧⲛ̅ϯϩⲧⲏⲧⲛ̅ ⲉⲣⲟϥ ⲛ̅ⲑⲉ ⲛ̅ⲟⲩϩⲏⲃⲥ̅ ⲉϥⲙⲟⲩϩ ϩⲛ̅ⲟⲩⲙⲁ ⲛ̅ⲕⲁⲕⲉ. ϣⲁⲛⲧⲉⲡⲉϩⲟⲟⲩ ⲣ̅ⲟⲩⲟⲉⲓⲛ. ⲛ̅ⲧⲉⲡⲥⲟⲩ ⲛ̅ϩⲧⲟⲟⲩⲉ ϣⲁ ϩⲛ̅ⲛⲉⲧⲛ̅ϩⲏⲧ.
இவற்றையும்விட வெகு நிச்சயமான இறைவாக்கினர்களின் வார்த்தைகளையும் நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். பொழுது புலர்ந்து, உங்கள் இருதயங்களில் கிறிஸ்து விடிவெள்ளிபோல் உதிக்குமளவும், இருளான இடத்தில் ஒளிவீசும் வெளிச்சம்போன்ற அந்த இறைவார்த்தைக்குக் கவனம் செலுத்தினால், நீங்கள் நலன்பெறுவீர்கள்.
20 ⲕ̅ ⲡⲁⲓ ⲛ̅ϣⲟⲣⲡ̅ ⲉⲧⲉⲧⲛ̅ⲉⲓⲙⲉ ⲉⲣⲟϥ. ϫⲉ ⲡⲣⲟⲫⲏⲧⲉⲓⲁ ⲛⲓⲙ ⲛ̅ⲅⲣⲁⲫⲏ ⲙⲉⲣⲉⲡⲉⲥⲃⲱⲗ ϣⲱⲡⲉ ϩⲁⲣⲟⲥ ⲙⲁⲩⲁⲁⲥ.
எல்லாவற்றிற்கும் மேலாக, வேதவசனத்திலுள்ள எந்த இறைவாக்கும் இறைவாக்கினனுடைய சொந்த விளக்கத்தினால் உண்டானது அல்ல, இதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
21 ⲕ̅ⲁ̅ ⲛ̅ⲧⲁⲩⲉⲓⲛⲉ ⲅⲁⲣ ⲁⲛ ⲛ̅ⲧⲉⲡⲣⲟⲫⲏⲧⲉⲓⲁ ⲙ̅ⲡⲉⲓⲟⲩⲟⲉⲓϣ ϩⲛ̅ⲟⲩⲱϣ ⲛ̅ⲣⲱⲙⲉ. ⲁⲗⲗⲁ ⲛ̅ⲧⲁⲩϣⲁϫⲉ ⲛ̅ϭⲓⲛ̅ⲣⲱⲙⲉ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲉⲩⲕⲓⲙ ⲉⲣⲟⲟⲩ ϩⲓⲧⲙ̅ⲡⲉⲡⲛ̅ⲁ ⲉⲧⲟⲩⲁⲁⲃ.
ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதர்களின் சித்தப்படி உண்டானது அல்ல, இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு, இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டதையே மனிதர் பேசினார்கள்.

< ⳰ⳘⲠⲈⲦⲢⲞⲤ Ⲃ ̅ 1 >