< ⲚⲒⲠⲢⲀⲜⲒⲤ 18 >

1 ⲁ̅ ⲙⲛⲛⲥⲁ ⲛⲁⲓ ⲁϥⲉⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲁⲑⲏⲛⲁⲓⲥ ⲁϥⲃⲱⲕ ⲉⲕⲟⲣⲓⲛⲑⲟⲥ
இதற்குப் பின்பு, பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்குப் போனான்.
2 ⲃ̅ ⲁⲩⲱ ⲁϥϩⲉ ⲉⲩⲓⲟⲩⲇⲁⲓ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲁⲕⲩⲗⲁⲥ ⲟⲩⲡⲟⲛⲧⲓⲕⲟⲥ ϩⲙ ⲡⲉϥⲅⲉⲛⲟⲥ ⲉⲁϥⲉⲓ ϩⲛ ⲛⲉϩⲟⲟⲩ ⲉⲧⲙⲙⲁⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲑⲓⲧⲁⲗⲓⲁ ⲙⲛ ⲡⲣⲓⲥⲕⲓⲗⲗⲁ ⲧⲉϥⲥϩⲓⲙⲉ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲁⲕⲗⲁⲩⲇⲓⲟⲥ ⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲉⲧⲣⲉⲛⲓⲟⲩⲇⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ⲃⲱⲕ ⲉⲃⲟⲗ ϩⲛ ϩⲣⲱⲙⲏ ⲁϥϯ ⲡⲉϥⲟⲩⲟⲉⲓ ⲉⲣⲟⲟⲩ
அங்கே அவன் ஆக்கில்லா என்னும் பெயருடைய ஒரு யூதனைச் சந்தித்தான். பொந்து பட்டணத்தைச் சேர்ந்தவனாகிய இவன், தனது மனைவி பிரிஸ்கில்லாளுடன் சமீபத்தில் இத்தாலியிலிருந்து வந்திருந்தான். ஏனெனில், கிலவுதியு என்னும் ரோம பேரரசன் எல்லா யூதரும் ரோமை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டிருந்தான். பவுல் அவர்களைப் பார்க்கப்போனான்.
3 ⲅ̅ ⲁⲩⲱ ⲁϥϭⲱ ϩⲁⲧⲏⲩ ⲁϥⲣϩⲱⲃ ϫⲉ ⲛⲉⲧⲉϥⲉⲓⲟⲡⲉ ⲅⲁⲣ ⲧⲱⲟⲩ ⲧⲉ ⲛⲉⲧⲉⲩⲧⲉⲭⲛⲏ ⲅⲁⲣ ⲡⲉⲣⲉϥⲧⲁⲙⲓⲉ ⲥⲕⲩⲛⲏ
அவர்களைப் போலவே, தானும் ஒரு கூடாரத் தொழிலாளியானபடியால், பவுலும் அவர்களுடன் தங்கி வேலைசெய்தான்.
4 ⲇ̅ ⲁⲩⲱ ⲛⲉϥϣⲁϫⲉ ⲉⲣⲟⲟⲩ ⲡⲉ ϩⲛ ⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲕⲁⲧⲁ ⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⲛⲓⲙ ⲉϥⲡⲓⲑⲉ ⲛⲛⲓⲟⲩⲇⲁⲓ ⲙⲛ ⲛϩⲉⲗⲗⲏⲛ
ஒவ்வொரு ஓய்வுநாளிலும் அவன் ஜெப ஆலயத்திலே ஆதாரத்துடன் விவாதித்து, யூதர்களையும் கிரேக்கரையும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி முயற்சித்தான்.
5 ⲉ̅ ⲛⲧⲉⲣⲉⲥⲓⲗⲁⲥ ⲇⲉ ⲉⲓ ⲙⲛ ⲧⲓⲙⲟⲑⲉⲟⲥ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲙⲁⲕⲉⲇⲟⲛⲓⲁ ⲛⲉⲣⲉⲡⲁⲩⲗⲟⲥ ⲙⲏⲛ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡϣⲁϫⲉ ⲉϥⲣⲙⲛⲧⲣⲉ ⲛⲛⲓⲟⲩⲇⲁⲓ ϫⲉ ⲓⲥ ⲡⲉ ⲡⲉⲭⲥ
சீலாவும், தீமோத்தேயுவும் மக்கெதோனியாவிலிருந்து வந்ததும், பவுல் நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமே ஈடுபட்டான். இயேசுவே கிறிஸ்து என்று அவன் யூதருக்குச் சாட்சி கூறினான்.
6 ⲋ̅ ⲛⲧⲉⲣⲟⲩϯ ⲇⲉ ⲟⲩⲃⲏϥ ⲉⲩϫⲓⲟⲩⲁ ⲁϥⲛⲉϩ ⲛⲉϥϩⲟⲓⲧⲉ ⲉⲃⲟⲗ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲉⲧⲛⲥⲛⲟϥ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲛⲧⲉⲧⲛⲁⲡⲉ ϯⲟⲩⲁⲁⲃ ⲁⲛⲟⲕ ϫⲓⲛ ⲧⲉⲛⲟⲩ ⲉⲓⲛⲁⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ ⲉⲛϩⲉⲑⲛⲟⲥ
ஆனால் யூதர்கள் பவுலை எதிர்த்து அவனை நிந்தித்தபோது, அவர்களுக்கு எதிராக அவன் தன் உடைகளை உதறி, அவர்களைப் பார்த்து, “உங்கள் அழிவின் இரத்தப்பழி உங்கள் தலைகளின் மேலேயே இருக்கட்டும்! எனது கடமையிலிருந்து நான் நீங்கலாயிருக்கிறேன். இப்பொழுதிலிருந்து நான் யூதரல்லாத மக்களிடம் போகிறேன்” என்றான்.
7 ⲍ̅ ⲁϥⲡⲱⲱⲛⲉ ⲇⲉ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲙⲁ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁϥⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲏⲓ ⲛⲟⲩⲥⲟⲛ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲧⲓⲧⲟⲥ ⲉϥϣⲙϣⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲁⲓ ⲉⲣⲉⲡⲉϥⲏⲓ ϩⲏⲛ ⲉϩⲟⲩⲛ ⲉⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ
பின்பு பவுல் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, பக்கத்திலுள்ள தீத்து யுஸ்து என்பவனுடைய வீட்டுக்குப் போனான். அவன் இறைவனை ஆராதிக்கிறவனாய் இருந்தான்.
8 ⲏ̅ ⲕⲣⲓⲥⲡⲟⲥ ⲇⲉ ⲡⲁⲣⲭⲏⲥⲩⲛⲁⲅⲱⲅⲟⲥ ⲁϥⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡϫⲟⲉⲓⲥ ⲙⲛ ⲡⲉϥⲏⲓ ⲧⲏⲣϥ ⲁⲩⲱ ϩⲁϩ ϩⲛ ⲛⲕⲟⲣⲓⲛⲑⲟⲥ ⲉⲩⲥⲱⲧⲙ ⲁⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲁⲩⲱ ⲁⲩϫⲓ ⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ
ஜெப ஆலயத் தலைவனான கிறிஸ்புவும், அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்; பவுல் சொன்னதைக் கேட்ட அநேக கொரிந்தியரும் விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றார்கள்.
9 ⲑ̅ ⲡⲉϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲇⲉ ⲙⲡⲁⲩⲗⲟⲥ ϩⲛ ⲟⲩϩⲟⲣⲟⲙⲁ ⲛⲧⲉⲩϣⲏ ϫⲉ ⲙⲡⲣⲣ ϩⲟⲧⲉ ⲁⲗⲗⲁ ϣⲁϫⲉ ⲁⲩⲱ ⲙⲡⲣⲕⲁⲣⲱⲕ
ஒரு இரவில் கர்த்தர் பவுலுடன் தரிசனத்தின் மூலம் பேசினார். அவர் அவனிடம்: “பயப்படாதே, பேசிக்கொண்டேயிரு, மவுனமாயிராதே.
10 ⲓ̅ ϫⲉ ⲁⲛⲟⲕ ϯϣⲟⲟⲡ ⲛⲙⲙⲁⲕ ⲁⲩⲱ ⲙⲛⲗⲁⲁⲩ ⲛⲁϣϭⲙϭⲟⲙ ⲉⲣⲡⲉⲑⲟⲟⲩ ⲛⲁⲕ ϫⲉ ⲟⲩⲛ ⲟⲩⲗⲁⲟⲥ ⲉⲛⲁϣⲱϥ ϣⲟⲟⲡ ⲛⲁⲓ ϩⲛ ⲧⲉⲓⲡⲟⲗⲓⲥ
ஏனெனில், நான் உன்னுடனேகூட இருக்கிறேன். ஒருவனும் உன்னைத் தாக்கப்போவதுமில்லை, உனக்குத் தீங்கு செய்யப்போவதுமில்லை. ஏனெனில் இந்தப் பட்டணத்தில் எனக்குரிய அநேக மக்கள் இருக்கிறார்கள்” என்றார்.
11 ⲓ̅ⲁ̅ ⲁϥϩⲙⲟⲟⲥ ⲇⲉ ⲙⲙⲁⲩ ⲛⲟⲩⲣⲟⲙⲡⲉ ⲙⲛ ⲥⲟⲟⲩ ⲛⲉⲃⲟⲧ ⲉϥϯ ⲥⲃⲱ ⲛϩⲏⲧⲟⲩ ⲙⲡϣⲁϫⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
எனவே, பவுல் அங்கே ஒன்றரை வருடமாகத் தங்கியிருந்து, அவர்களுக்கு இறைவனுடைய வார்த்தையைப் போதித்தான்.
12 ⲓ̅ⲃ̅ ⲅⲁⲗⲗⲓⲱⲛ ⲇⲉ ⲉϥⲟ ⲛⲁⲛⲑⲩⲡⲁⲧⲟⲥ ⲉϫⲛ ⲧⲁⲭⲁⲓⲁ ⲁⲛⲓⲟⲩⲇⲁⲓ ⲧⲱⲟⲩⲛ ϩⲓ ⲟⲩⲥⲟⲡ ⲉϫⲙ ⲡⲁⲩⲗⲟⲥⲁⲩⲛ ⲛⲉⲩϭⲓϫ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲱϥ ⲁⲩϫⲓⲧϥ ⲉⲡⲃⲏⲙⲁ
அகாயா நாட்டிற்கு கல்லியோன் என்பவன் அதிபதியாய் இருக்கையில், யூதர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து பவுலைத் தாக்கி, அவனை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோய்:
13 ⲓ̅ⲅ̅ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲁⲣⲁ ⲡⲛⲟⲙⲟⲥ ⲡⲁⲓ ⲡⲓⲑⲉ ⲛⲛⲣⲱⲙⲉ ⲉϣⲙϣⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
“இந்த மனிதன் மோசேயின் சட்டத்திற்கு முரணான வழிகளில் இறைவனை ஆராதிக்கும்படி மக்களைத் தூண்டுகிறான்” என்று குற்றம் சாட்டினார்கள்.
14 ⲓ̅ⲇ̅ ⲛⲧⲉⲣⲉⲡⲁⲩⲗⲟⲥ ⲇⲉ ⲉⲓ ⲉϥⲛⲁⲟⲩⲱⲛ ⲛⲣⲱϥ ⲡⲉϫⲉ ⲅⲁⲗⲗⲓⲱⲛ ⲛⲛⲓⲟⲩⲇⲁⲓ ϫⲉ ⲉⲛⲉ ⲟⲩϫⲓ ⲛϭⲟⲛⲥ ⲏ ⲟⲩϩⲱⲃ ⲉϥϩⲟⲟⲩ ⲡⲉⲛⲧⲁϥϣⲱⲡⲉ ⲱ ⲛⲓⲟⲩⲇⲁⲓ ⲛⲉⲓⲛⲁⲁⲛⲉⲭⲉ ⲡⲉ ⲙⲙⲱⲧⲛ ⲉⲩⲗⲟⲅⲱⲥ
பவுல் பேச முயலுகையில், கல்லியோன் யூதரைப் பார்த்து, “நீங்கள் சொல்வது ஒரு குற்றச் செயலாகவோ அல்லது ஒரு பாதகமான குற்றமாகவோ இருந்தால், யூதராகிய உங்களுடைய முறையிடுதலுக்கு நான் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.
15 ⲓ̅ⲉ̅ ⲧⲉⲛⲟⲩ ϭⲉ ⲉϣϫⲉ ϩⲉⲛⲍⲏⲧⲏⲙⲁ ⲛⲉ ⲉⲧⲃⲉ ⲟⲩϣⲁϫⲉ ⲏ ϩⲉⲛⲣⲁⲛ ⲉⲧⲃⲉ ⲡⲉⲧⲛⲛⲟⲙⲟⲥ ⲧⲉⲧⲛⲣⲱϣⲉ ⲛⲧⲱⲧⲛ ⲁⲛⲟⲕ ⲅⲁⲣ ⲛϯⲟⲩⲱϣ ⲁⲛ ⲉϯ ϩⲁⲡ ⲉϩⲱⲃ ⲛⲧⲉⲓⲙⲓⲛⲉ
ஆனால் இதுவோ சொற்கள், பெயர்கள், உங்களுடைய திருச்சட்டம் ஆகியவற்றைக் குறித்த பிரச்சனைகளாய் இருப்பதால், இதை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களுக்கு நான் நீதிபதியாய் இருக்க விரும்பவில்லை” என்றான்.
16 ⲓ̅ⲋ̅ ⲁⲩⲱ ⲁϥⲛⲟϫⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲃⲏⲙⲁ
எனவே அவன் நீதிமன்றத்திலிருந்து அவர்களை வெளியேற்றினான்.
17 ⲓ̅ⲍ̅ ⲁⲛϩⲗⲗⲏⲛ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲁⲙⲁϩⲧⲉ ⲛⲥⲱⲥⲑⲉⲛⲏⲥ ⲡⲁⲣⲭⲏⲥⲩⲛⲁⲅⲱⲅⲟⲥ ⲁⲩϩⲓⲟⲩⲉ ⲉⲣⲟϥ ⲙⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙⲡⲃⲏⲙⲁ ⲁⲩⲱ ⲙⲡⲉⲅⲁⲗⲗⲓⲱⲛ ⲡⲣⲟⲥⲉⲭⲉ ⲉⲣⲟⲟⲩ
அப்பொழுது அனைவரும் ஜெப ஆலயத் தலைவனான சொஸ்தேனைப் பிடித்து நீதிமன்றத்தின் முன்னாக அடித்தார்கள். ஆனால் கல்லியோனோ அதைக்குறித்து எவ்வித அக்கறையையும் காட்டவில்லை.
18 ⲓ̅ⲏ̅ ⲡⲁⲩⲗⲟⲥ ⲇⲉ ⲟⲛ ⲁϥϭⲱ ⲛϩⲉⲛⲕⲉⲙⲏⲏϣⲉ ⲛϩⲟⲟⲩ ϩⲁⲧⲛ ⲛⲉⲥⲛⲏⲩ ⲙⲛⲛⲥⲁ ⲛⲁⲓ ⲁϥⲁⲡⲟⲧⲁⲥⲥⲉ ⲛⲁⲩ ⲁϥⲥϭⲏⲣ ⲉⲧⲥⲩⲣⲓⲁ ⲙⲛ ⲡⲣⲓⲥⲕⲓⲗⲗⲁ ⲁⲩⲱ ⲁⲕⲩⲗⲁⲥ ⲁϥϩⲉⲕⲉ ⲧⲉϥⲁⲡⲉ ϩⲛ ⲕⲉⲛⲭⲣⲁⲓⲁⲓⲥ ⲛⲉⲩⲛⲧⲁϥ ⲅⲁⲣ ⲙⲙⲁⲩ ⲛⲟⲩⲉⲣⲏⲧ
பவுல் கொரிந்து பட்டணத்தில் தொடர்ந்து, சிலகாலம் தங்கியிருந்தான். பின்பு அவன் அங்குள்ள சகோதரர்களை விட்டு, கப்பல் மூலம் சீரியாவுக்குப் போனான். பிரிஸ்கில்லாளும், ஆக்கில்லாவும் அவனுடனேகூடச் சென்றார்கள். பவுல் ஒரு நேர்த்திக்கடனைச் செய்திருந்தபடியால், கப்பலேறும் முன்பு கெங்கிரேயாவிலே யூத வழக்கத்தின்படி தன் தலையை மொட்டையடித்துக் கொண்டான்.
19 ⲓ̅ⲑ̅ ⲛⲧⲉⲣⲟⲩⲡⲱϩ ⲇⲉ ⲉⲉⲫⲉⲥⲟⲥ ⲙⲡⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⲉⲧⲛⲏⲩ ⲁⲡⲁⲩⲗⲟⲥ ⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲁϥϣⲁϫⲉ ⲙⲛ ⲛⲓⲟⲩⲇⲁⲓ
பின்பு அவர்கள் எபேசு பட்டணத்தை வந்தடைந்தார்கள். பவுல் பிரிஸ்கில்லாவையும், ஆக்கில்லாவையும் அங்கேயே இருக்கும்படி சொன்னான். பவுலோ அங்குள்ள ஜெப ஆலயத்திற்குப்போய், யூதருடன் ஆதாரம் காட்டி விவாதித்தான்.
20 ⲕ̅ ⲛⲧⲉⲣⲟⲩⲥⲉⲡⲥⲱⲡϥ ⲇⲉ ⲉⲣⲟⲩⲛⲟϭ ⲛⲟⲩⲟⲉⲓϣ ⲙⲙⲁⲩ ⲙⲡϥϭⲱ
அவர்கள் அவனை அங்கு இன்னும் நீண்டகாலம் தங்கும்படி கேட்டபோது, அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.
21 ⲕ̅ⲁ̅ ⲁⲗⲗⲁ ⲁϥⲕⲁ ⲛⲏ ⲙⲡⲙⲁ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁϥⲁⲡⲟⲧⲁⲥⲥⲉ ⲛⲁⲩ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ϯⲛⲁⲕⲧⲟⲓ ⲟⲛϣⲁⲣⲱⲧⲛ ⲉϣⲱⲡⲉ ⲡⲟⲩⲱϣ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉ ⲁϥⲃⲱⲕ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲉⲫⲉⲥⲟⲥ
ஆனால் அவன் அவர்களைவிட்டுப் புறப்படுகையில், “இறைவனின் சித்தமானால் நான் திரும்பிவருவேன்” என்று வாக்களித்தான். அதற்குப் பின்பு அவன் எபேசுவிலிருந்து கப்பலேறிப் போனான்.
22 ⲕ̅ⲃ̅ ⲁϥⲥϭⲏⲣ ⲉϩⲣⲁⲓ ⲉⲕⲁⲓⲥⲁⲣⲓⲁ ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ ⲁϥⲁⲥⲡⲁⲍⲉ ⲛⲧⲉⲕⲕⲗⲏⲥⲓⲁ ⲁϥⲉⲓ ⲉⲡⲉⲥⲏⲧ ⲉⲧⲁⲛⲧⲓⲟⲭⲓⲁ
அவன் செசரியாவைச் சென்றடைந்து, அங்கிருந்து எருசலேமிலுள்ள திருச்சபைக்குப் போய், அவர்களை வாழ்த்தினான். பின்பு அங்கிருந்து, அந்தியோகியாவுக்குப் போனான்.
23 ⲕ̅ⲅ̅ ⲛⲧⲉⲣⲉϥⲣ ⲟⲩⲟⲉⲓϣ ⲇⲉ ⲙⲙⲁⲩ ⲁϥⲉⲓ ⲉⲃⲟⲗ ⲉϥⲙⲟⲩϣⲧ ⲛⲧⲉⲭⲱⲣⲁ ⲛⲧⲅⲁⲗⲁⲧⲓⲁ ⲙⲛ ⲧⲉⲫⲣⲩⲅⲓⲁ ⲉϥⲧⲁϫⲣⲟ ⲛⲙⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲧⲏⲣⲟⲩ
சிலகாலம் அந்தியோகியாவில் தங்கிய பின்பு, அவன் புறப்பட்டு கலாத்தியா, பிரிகியா பகுதிகள் வழியாக ஒவ்வொரு இடமாக சென்று, எல்லா சீடர்களையும் தைரியப்படுத்தினான்.
24 ⲕ̅ⲇ̅ ⲟⲩⲓⲟⲩⲇⲁⲓ ⲇⲉ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲁⲡⲟⲗⲗⲱ ⲁϥⲉⲓ ⲉⲧⲉⲫⲉⲥⲟⲥ ⲟⲩⲁⲗⲉⲝⲁⲛⲇⲣⲉⲩⲥ ϩⲙ ⲡⲉϥⲅⲉⲛⲟⲥ ⲟⲩⲣⲱⲙⲉ ⲉⲩⲛⲧϥ ⲡϣⲁϫⲉ ⲉⲩⲛϭⲟⲙ ⲙⲙⲟϥ ϩⲛ ⲛⲉⲅⲣⲁⲫⲏ
இதற்கிடையில், அலெக்சந்திரியாவைச் சேர்ந்த அப்பொல்லோ என்னும் பெயருடைய ஒரு யூதன் எபேசுவிற்கு வந்தான். அவன் ஒரு கல்விமானும், வேதவசனங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவனுமாய் இருந்தான்.
25 ⲕ̅ⲉ̅ ⲡⲁⲓ ⲇⲉ ⲛⲉⲁⲩⲕⲁⲑⲏⲕⲉⲓ ⲙⲙⲟϥ ⲡⲉ ϩⲛ ⲧⲉϩⲓⲏ ⲙⲡϫⲟⲉⲓⲥ ⲁⲩⲱ ⲉϥⲃⲣⲃⲣ ϩⲙ ⲡⲉⲡⲛⲁ ⲛⲉϥϣⲁϫⲉ ⲁⲩⲱ ⲛⲉϥϯ ⲥⲃⲱ ϩⲛ ⲟⲩⲱⲣϫ ⲉⲧⲃⲉ ⲓⲥ ⲉϥⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲁⲧⲉ ⲙⲡⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ⲛⲓⲱϩⲁⲛⲛⲏⲥ
கர்த்தருடைய வழியைக் குறித்த அறிவுறுத்தலை அவன் பெற்றிருந்தான். அவன் இயேசுவைக்குறித்த காரியங்களை மிகுந்த ஆர்வத்துடன் பிழையின்றி போதித்தான். ஆனால் அவன், யோவானுடைய திருமுழுக்கைப் பற்றி மாத்திரமே அறிந்திருந்தான்.
26 ⲕ̅ⲋ̅ ⲡⲁⲓ ⲁϥⲁⲣⲭⲉⲓ ⲙⲡⲁⲣⲣⲏⲥⲓⲁⲍⲉ ⲙⲙⲟϥ ϩⲛ ⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲛⲧⲉⲣⲟⲩⲥⲱⲧⲙ ⲇⲉ ⲉⲣⲟϥⲛϭⲓ ⲁⲕⲩⲗⲁⲥ ⲙⲛ ⲡⲣⲓⲥⲕⲓⲗⲗⲁ ⲁⲩϣⲟⲡϥ ⲉⲣⲟⲟⲩ ⲁⲩⲱ ⲁⲩⲧⲁⲙⲟϥ ϩⲛ ⲟⲩⲱⲣϫ ⲉⲧⲉϩⲓⲏ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
அவன் ஜெப ஆலயத்திலே துணிவுடன் பேச ஆரம்பித்தான். பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் அவன் பேசுவதைக் கேட்டபொழுது, அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், இறைவனுடைய வழியை அவனுக்கு இன்னும் அதிகத் தெளிவாய் விளக்கிக் கூறினார்கள்.
27 ⲕ̅ⲍ̅ ⲁⲛⲉⲥⲛⲏⲩ ⲇⲉ ⲡⲣⲟⲧⲣⲉⲡⲉ ⲙⲙⲟϥ ⲉϩⲛⲁϥ ⲉⲃⲱⲕ ⲉⲧⲁⲭⲁⲓⲁ ⲁⲩⲱ ⲁⲩⲥϩⲁⲓ ⲛⲛⲉⲥⲛⲏⲩ ⲉϣⲟⲡϥⲉⲣⲟⲟⲩ ⲛⲧⲉⲣⲉϥⲉⲓ ⲇⲉ ⲉⲙⲁⲩ ⲁϥⲧⲁⲁϥ ⲉⲡⲉϩⲟⲩⲟ ⲛⲛⲉⲛⲧⲁⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ ϩⲛ ⲧⲉⲭⲁⲣⲓⲥ
அப்பொல்லோ அகாயாவுக்குப் போக விரும்பியபோது, சகோதரர்கள் அவனுக்கு உற்சாகமூட்டி, அங்குள்ள சீடர் அவனை வரவேற்கும்படி, அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்கள். அவன் அங்கு வந்துசேர்ந்து, கிருபையின் மூலம் விசுவாசிகளான அவர்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தான்.
28 ⲕ̅ⲏ̅ ⲛⲉϥϫⲡⲓⲟ ⲅⲁⲣ ⲛⲛⲓⲟⲩⲇⲁⲓ ⲉⲙⲁⲧⲉ ϩⲛ ⲟⲩⲡⲁⲣⲣⲏⲥⲓⲁ ⲉϥⲧⲁⲙⲟ ⲙⲙⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲉⲅⲣⲁⲫⲏ ϫⲉ ⲓⲥ ⲡⲉ ⲡⲉⲭⲥ
அவன் வேதவசனங்களிலிருந்து இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்து, வெளிப்படையான விவாதங்களில் யூதர்களுடன் பலமாய் வாதாடினான்.

< ⲚⲒⲠⲢⲀⲜⲒⲤ 18 >