< ⲚⲒⲔⲞⲢⲒⲚⲐⲒⲞⲤ Ⲁ ̅ 1 >
1 ⲁ̅ ⲡⲁⲩⲗⲟⲥ ⲡⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⲉⲧⲧⲁϩⲙ ⲙⲡⲉⲭⲥ ⲓⲏⲥ ϩⲓⲧⲙ ⲡⲟⲩⲱϣ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲙⲛ ⲥⲱⲥⲑⲉⲛⲏⲥ ⲡⲥⲟⲛ
இறைவனின் சித்தத்தின்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கும்படி அழைக்கப்பட்ட பவுலும், நமது சகோதரனாகிய சொஸ்தெனேயும் எழுதுகிறதாவது,
2 ⲃ̅ ⲉⲩⲥϩⲁⲓ ⲛⲧⲉⲕⲕⲗⲏⲥⲓⲁ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲧⲁⲓ ⲉⲧϣⲟⲟⲡ ϩⲛ ⲕⲟⲣⲓⲛⲑⲟⲥ ⲛⲉⲧⲧⲃⲃⲏⲩ ϩⲙ ⲡⲉⲭⲥ ⲓⲏⲥ ⲛⲉⲧⲧⲁϩⲙ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲙⲛ ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧⲉⲡⲓⲕⲁⲗⲉⲓ ⲙⲡⲣⲁⲛ ⲙⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲏⲥ ⲡⲉⲭⲥ ϩⲙ ⲙⲁ ⲛⲓⲙ ⲛⲧⲁⲩ ⲛⲙⲙⲁⲛ
கொரிந்துவில் இருக்கும் இறைவனுடைய திருச்சபைக்கு, கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டும் பரிசுத்தமாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரைச் சொல்லி ஒன்றிணைந்து எல்லா இடங்களிலும் ஆராதிக்கிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
3 ⲅ̅ ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲛⲏⲧⲛ ⲙⲛ ϯⲣⲏⲛⲏ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲛⲉⲓⲱⲧ ⲙⲛ ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲏⲥ ⲡⲉⲭⲥ
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4 ⲇ̅ ϯϣⲡϩⲙⲟⲧ ⲛⲧⲙ ⲡⲁⲛⲟⲩⲧⲉ ⲛⲟⲩⲟⲉⲓϣ ⲛⲓⲙ ϩⲁⲣⲱⲧⲛ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲛ ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲧⲁⲓ ⲉⲛⲧⲁⲩⲧⲁⲁⲥ ⲛⲏⲧⲛ ϩⲙ ⲡⲉⲭⲥ ⲓⲏⲥ
கிறிஸ்து இயேசுவில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
5 ⲉ̅ ϫⲉ ϩⲛ ϩⲱⲃ ⲛⲓⲙ ⲁⲧⲉⲧⲛⲣⲣⲙⲙⲁⲟ ⲛϩⲏⲧϥ ϩⲛ ϣⲁϫⲉ ⲛⲓⲙ ⲙⲛ ⲥⲟⲟⲩⲛ ⲛⲓⲙ
நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சுத்திறனிலும், எல்லா அறிவிலும், எல்லாவகையிலும் செல்வச் சிறப்புடையவர்களாய் விளங்குகிறீர்கள்.
6 ⲋ̅ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲛⲧⲁ ⲧⲙⲛⲧⲙⲛⲧⲣⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲧⲁϫⲣⲟ ⲛϩⲏⲧⲧⲏⲩⲧⲛ
ஏனெனில், கிறிஸ்துவைப்பற்றிய எங்களுடைய சாட்சி உங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7 ⲍ̅ ϩⲱⲥⲧⲉ ⲉⲧⲙⲧⲣⲉⲧⲛϣⲱⲱⲧ ⲛⲗⲁⲁⲩ ⲛϩⲙⲟⲧ ⲉⲧⲉⲧⲛϭⲱϣⲧ ϩⲏⲧϥ ⲙⲡϭⲱⲗⲡ ⲉⲃⲟⲗ ⲙⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲏⲥ ⲡⲉⲭⲥ
ஆகவே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், ஆவிக்குரிய வரம் யாதொன்றிலும் குறைவுபடாதிருக்கிறீர்கள்.
8 ⲏ̅ ⲡⲁⲓ ⲉⲧⲛⲁⲧⲁϫⲣⲉ ⲧⲏⲩⲧⲛ ⲉⲧⲉⲧⲛϫⲏⲕ ⲉⲃⲟⲗ ⲉⲙⲛ ⲛⲟⲃⲉ ϫⲓ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲱⲧⲛ ϣⲁ ⲡⲉϩⲟⲟⲩ ⲙⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲏⲥ ⲡⲉⲭⲥ
இறைவன் கடைசிமட்டும் உங்களைப் பலமுள்ளவர்களாய்க் காத்துக்கொள்வார். அதனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து திரும்பவரும் நாளில், நீங்கள் எந்தவித குற்றமும் சாட்டப்படாதவர்களாய் இருப்பீர்கள்.
9 ⲑ̅ ⲟⲩⲡⲓⲥⲧⲟⲥ ⲡⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲁⲓ ⲉⲛⲧⲁϥⲧⲉϩⲙ ⲧⲏⲩⲧⲛ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ ⲉⲧⲕⲟⲓⲛⲱⲛⲓⲁ ⲙⲡⲉϥϣⲏⲣⲉ ⲓⲏⲥ ⲡⲉⲭⲥ ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ
தமது மகனும், நமது கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு, உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர்.
10 ⲓ̅ ⲧⲛⲡⲁⲣⲁⲕⲁⲗⲉⲓ ⲇⲉ ⲙⲙⲱⲧⲛ ⲛⲉⲥⲛⲏⲩ ϩⲓⲧⲙ ⲡⲣⲁⲛ ⲙⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲏⲥ ⲡⲉⲭⲥ ϫⲉⲕⲁⲥ ⲉⲧⲉⲧⲛⲉϫⲱ ⲙⲡⲓϣⲁϫⲉ ⲛⲟⲩⲱⲧ ⲧⲏⲣⲧⲛ ⲛⲧⲉⲧⲙⲡⲱⲣϫ ϣⲱⲡⲉ ⲛϩⲏⲧⲧⲏⲩⲧⲛ ⲛⲧⲉⲧⲛϣⲱⲡⲉ ⲇⲉ ⲉⲧⲉⲧⲛⲥⲃⲧⲱⲧ ϩⲙ ⲡⲓϩⲏⲧ ⲛⲟⲩⲱⲧ ⲙⲛϯⲅⲛⲱⲙⲏ ⲛⲟⲩⲱⲧ
பிரியமானவர்களே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துப்போகிறவர்களாய் இருந்தால், உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்காது. அத்துடன் நீங்களும், உங்கள் மனதிலும் சிந்தனையிலும் முழுமையாக ஒருமைப்பட்டும் இருப்பீர்கள்.
11 ⲓ̅ⲁ̅ ⲁⲩⲧⲁⲙⲟⲓ ⲅⲁⲣ ⲉⲧⲃⲉ ⲧⲏⲩⲧⲛ ⲛⲁⲥⲛⲏⲩ ⲉⲃⲟⲗ ϩⲓ ⲧⲟⲟⲩⲧⲟⲩ ⲛⲛⲁⲭⲗⲟⲏ ϫⲉ ⲟⲩⲛ ϩⲉⲛϯⲧⲱⲛ ⲛϩⲏⲧⲧⲏⲩⲧⲛ
பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள்.
12 ⲓ̅ⲃ̅ ϯϫⲱ ⲇⲉ ⲙⲡⲁⲓ ϫⲉ ⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲙⲙⲱⲧⲛ ϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲙⲉⲛ ⲁⲛⲅ ⲡⲁ ⲡⲁⲩⲗⲟⲥ ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲁⲛⲅ ⲡⲁ ⲁⲡⲟⲗⲗⲱ ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲁⲛⲅ ⲡⲁ ⲕⲏⲫⲁ ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲁⲛⲅ ⲡⲁ ⲡⲉⲭⲥ
உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். இவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன்.
13 ⲓ̅ⲅ̅ ⲙⲏ ⲛⲧⲁⲩⲡⲱϣ ⲙⲡⲉⲭⲥ ⲙⲏ ⲛⲧⲁⲩⲥⲧⲁⲩⲣⲟⲩ ⲙⲡⲁⲩⲗⲟⲥ ϩⲁⲣⲱⲧⲛ ⲏ ⲛⲧⲁⲧⲉⲧⲛϫⲓ ⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ⲉⲡⲣⲁⲛ ⲙⲡⲁⲩⲗⲟⲥ
கிறிஸ்து பிளவுப்பட்டுள்ளாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா திருமுழுக்கைப் பெற்றீர்கள்?
14 ⲓ̅ⲇ̅ ϯϣⲡϩⲙⲟⲧ ϫⲉ ⲙⲡⲓⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲛⲗⲁⲁⲩ ⲙⲙⲱⲧⲛ ⲛⲥⲁ ⲕⲣⲓⲥⲡⲟⲥ ⲙⲛ ⲅⲁⲓⲟⲥ
கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் யாருக்காகிலும் நான் திருமுழுக்கு கொடுக்கவில்லையே. அதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
15 ⲓ̅ⲉ̅ ϫⲉⲕⲁⲥ ⲉⲛⲛⲉ ⲟⲩⲁ ϫⲟⲟⲥ ϫⲉ ⲛⲧⲁⲧⲉⲧⲛⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲉⲡⲁⲣⲁⲛ
ஆகவே, என் பெயரால் திருமுழுக்கு பெற்றதாக உங்களில் ஒருவனாகிலும் சொல்லமுடியாது.
16 ⲓ̅ⲋ̅ ⲁⲓⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲇⲉ ⲙⲡⲕⲉⲏⲉⲓ ⲛⲥⲧⲉⲫⲁⲛⲁ ⲙⲛⲛⲥⲱⲥ ϭⲉ ⲛϯⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ϫⲉ ⲁⲓⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲛϭⲉ
ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் திருமுழுக்கு கொடுத்தேன். அதற்கு மேலாக, வேறுயாருக்கும் நான் திருமுழுக்கு கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
17 ⲓ̅ⲍ̅ ⲛⲧⲁ ⲡⲉⲭⲥ ⲅⲁⲣ ⲧⲛⲛⲟⲟⲩⲧ ⲁⲛ ⲉⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲁⲗⲗⲁ ⲉⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲍⲉ ϩⲛ ⲟⲩⲥⲟⲫⲓⲁ ⲁⲛ ⲛϣⲁϫⲉ ϫⲉⲕⲁⲥ ⲉⲛⲛⲉϥϣⲱⲡⲉ ⲉϥϣⲟⲩⲉⲓⲧ ⲛϭⲓ ⲡⲉⲥⲧⲁⲩⲣⲟⲥ ⲙⲡⲉⲭⲥ
கிறிஸ்து என்னைத் திருமுழுக்கு கொடுக்க அனுப்பவில்லை, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். கிறிஸ்துவின் சிலுவை அதன் வல்லமையை இழந்து போகாதிருக்கும்படி, மனித ஞானத்தின் அடிப்படையிலான வார்த்தைகளை உபயோகிக்காமல் பிரசங்கிக்கவே அவர் என்னை அனுப்பினார்.
18 ⲓ̅ⲏ̅ ⲡϣⲁϫⲉ ⲅⲁⲣ ⲙⲡⲉⲥⲧⲁⲩⲣⲟⲥ ⲟⲩⲙⲛⲧⲥⲟϭ ⲙⲉⲛ ⲡⲉ ⲛⲛⲉⲧⲛⲁϩⲉ ⲉⲃⲟⲗ ⲛⲁⲛ ⲇⲉ ⲛⲉⲧⲛⲁⲟⲩϫⲁⲓ ⲟⲩϭⲟⲙ ⲛⲧⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉ
அழிவின் பாதையில் போகிறவர்களுக்கு சிலுவையின் செய்தி மூடத்தனமாகவே தோன்றுகிறது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது.
19 ⲓ̅ⲑ̅ ϥⲥⲏϩ ⲅⲁⲣ ϫⲉ ϯⲛⲁⲧⲁⲕⲟ ⲛⲧⲥⲟⲫⲓⲁ ⲛⲛⲥⲟⲫⲟⲥ ⲧⲁⲁⲑⲉⲧⲉⲓ ⲛⲧⲙⲛⲧⲥⲁⲃⲉ ⲛⲛⲥⲁⲃⲉⲉⲩ
ஆகவேதான், “நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து; அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்” என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
20 ⲕ̅ ⲉϥⲧⲱⲛ ⲥⲟⲫⲟⲥ ⲉϥⲧⲱⲛ ⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲉϥⲧⲱⲛ ⲥⲩⲛⲍⲏⲧⲏⲧⲏⲥ ⲛⲧⲉ ⲡⲉⲓⲁⲓⲱⲛ ⲙⲏ ⲙⲡⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲓⲣⲉ ⲛⲧⲥⲟⲫⲓⲁ ⲙⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲛⲥⲟϭ (aiōn )
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? (aiōn )
21 ⲕ̅ⲁ̅ ⲉⲡⲉⲓⲇⲏ ⲅⲁⲣ ϩⲛ ⲧⲥⲟⲫⲓⲁ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲙⲡⲉ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲥⲟⲩⲛ ⲡⲛⲟⲩⲧⲉ ϩⲓⲧⲛ ⲧⲥⲟⲫⲓⲁ ⲁϥⲣϩⲛⲁϥ ⲇⲉ ⲛϭⲓ ⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲧⲟⲩϫⲉ ⲛⲉⲧⲡⲓⲥⲧⲉⲩⲉ ϩⲓⲧⲛ ⲧⲙⲛⲧⲥⲟϭ ⲙⲡⲧⲁϣⲉⲟⲉⲓϣ
உலகம் தம் ஞானத்தால் இறைவனை அறியமுடியாதபடி, இறைவன் தமது ஞானத்தில் இதைச் செய்திருக்கிறார். எனவே மூடத்தனமாய்த் தோன்றுகிற எங்கள் பிரசங்கத்தினால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க இறைவன் விருப்பங்கொண்டார்.
22 ⲕ̅ⲃ̅ ⲉⲡⲉⲓⲇⲏ ⲛⲓⲟⲩⲇⲁⲓ ϩⲉⲛⲙⲁⲉⲓⲛ ⲛⲉⲧⲟⲩⲁⲓⲧⲓ ⲙⲙⲟⲟⲩ ⲛϩⲉⲗⲗⲏⲛ ⲇⲉ ⲉⲩϣⲓⲛⲉ ⲛⲥⲁ ⲟⲩⲥⲟⲫⲓⲁ
யூதர்கள் அற்புத அடையாளங்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
23 ⲕ̅ⲅ̅ ⲁⲛⲟⲛ ⲇⲉ ⲉⲛⲧⲁϣⲉⲟⲓϣ ⲙⲡⲉⲭⲥ ⲉⲁⲩⲥⲧⲁⲩⲣⲟⲩ ⲙⲙⲟϥ ⲛⲓⲟⲩⲇⲁⲓ ⲙⲉⲛ ⲟⲩⲥⲕⲁⲛⲇⲁⲗⲟⲛ ⲛⲁⲩ ⲡⲉ ⲟⲩⲙⲛⲧⲥⲟϭ ⲇⲉ ⲡⲉ ⲛⲛϩⲉⲑⲛⲟⲥ
ஆனால் நாங்களோ, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்: இது யூதருக்கு இடறச்செய்யும் தடையாயும், யூதரல்லாதவருக்கு மூடத்தனமாயும் இருக்கிறது.
24 ⲕ̅ⲇ̅ ⲛⲓⲟⲩⲇⲁⲓ ⲇⲉ ⲉⲧⲧⲁϩⲙ ⲙⲛ ⲛϩⲉⲗⲗⲏⲛ ⲡⲉⲭⲥ ⲟⲩϭⲟⲙ ⲛⲁⲩ ⲛⲧⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉ ⲁⲩⲱ ⲥⲟⲫⲓⲁ ⲛⲧⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉ
ஆனால், யூதரிலும் கிரேக்கரிலும் இறைவனால் அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும், இறைவனின் ஞானமுமாக இருக்கிறார்.
25 ⲕ̅ⲉ̅ ϫⲉ ⲧⲙⲛⲧⲥⲟϭ ⲛⲧⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲟⲩⲙⲛⲧⲥⲁⲃⲉ ⲧⲉ ⲛϩⲟⲩⲟ ⲉⲛⲣⲱⲙⲉ ⲁⲩⲱ ⲧⲙⲛⲧϭⲱⲃ ⲛⲧⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲥϫⲟⲟⲣ ⲛϩⲟⲩⲟ ⲉⲛⲣⲱⲙⲉ
ஏனெனில் இறைவனின் மூடத்தனமோ மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பெலவீனமோ மனித பெலத்திலும் மிகுந்த பெலனுள்ளதாயிருக்கிறது.
26 ⲕ̅ⲋ̅ ⲧⲉⲧⲛϭⲱϣⲧ ⲅⲁⲣ ⲉⲡⲉⲧⲛⲧⲱϩⲙ ⲛⲁⲥⲛⲏⲩ ϫⲉ ⲙⲛ ϩⲁϩ ⲛⲥⲟⲫⲟⲥ ⲛϩⲏⲧϥ ⲕⲁⲧⲁ ⲥⲁⲣⲝ ⲙⲛ ϩⲁϩ ⲛⲇⲩⲛⲁⲧⲟⲥ ⲙⲛ ϩⲁϩ ⲛⲉⲩⲅⲉⲛⲏⲥ
பிரியமானவர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபொழுது எப்படி இருந்தீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனித மதிப்பீட்டின்படி, உங்களில் ஞானிகள் அநேகரில்லை; செல்வாக்குடையவர்கள் அநேகரில்லை; உயர்குடிப் பிறந்தவர்களாய் அநேகரில்லை.
27 ⲕ̅ⲍ̅ ⲁⲗⲗⲁ ⲛⲥⲟϭ ⲛⲧⲉ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲛⲉⲛⲧⲁ ⲡⲛⲟⲩⲧⲉ ⲥⲟⲧⲡⲟⲩ ϫⲉⲕⲁⲥ ⲉϥⲉϯϣⲓⲡⲉ ⲛⲛⲥⲁⲃⲉⲉⲩ ⲁⲩⲱ ⲛϭⲱⲃ ⲛⲧⲉ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲛⲉⲛⲧⲁ ⲡⲛⲟⲩⲧⲉ ⲥⲟⲧⲡⲟⲩ ϫⲉⲕⲁⲥ ⲉϥⲉϯϣⲓⲡⲉ ⲛⲛϫⲱⲱⲣⲉ
ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, உலகின் மூடத்தனமானவற்றைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவர்களை வெட்கப்படுத்தும்படி, உலகின் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
28 ⲕ̅ⲏ̅ ⲁⲩⲱ ⲛϩⲏⲕⲉ ⲛⲧⲉ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲙⲛ ⲛⲉⲧⲥⲟϣϥ ⲛⲉⲛⲧⲁ ⲡⲛⲟⲩⲧⲉ ⲥⲟⲧⲡⲟⲩ ⲛⲉⲧⲉⲛⲥⲉϣⲟⲟⲡ ⲁⲛ ϫⲉⲕⲁⲥ ⲉϥⲉⲕⲁⲧⲁⲣⲅⲉⲓ ⲛⲛⲉⲧϣⲟⲟⲡ
உலகம் பொருட்டாகக் கருதுபவற்றை அவமாக்கும்படி, உலகத்தில் தாழ்ந்தவற்றையும், மக்களால் கீழ்த்தரமாக எண்ணப்பட்டவைகளையும், உலகத்தில் ஒன்றும் இல்லாதவைகளையும் அவர் தெரிந்துகொண்டார்.
29 ⲕ̅ⲑ̅ ϫⲉ ⲛⲛⲉ ⲗⲁⲁⲩ ⲛⲥⲁⲣⲝ ϣⲟⲩϣⲟⲩ ⲙⲙⲟϥ ⲙⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
இதனால், அவருக்கு முன்பாக ஒருவராலும் பெருமைபாராட்ட முடியாது.
30 ⲗ̅ ⲛⲧⲱⲧⲛ ⲇⲉ ⲛⲧⲉⲧⲛ ϩⲉⲛⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧϥ ϩⲙ ⲡⲉⲭⲥ ⲓⲏⲥ ⲡⲁⲓ ⲉⲛⲧⲁϥϣⲱⲡⲉ ⲛⲁⲛ ⲛⲥⲟⲫⲓⲁ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ ⲁⲩⲱ ⲛⲧⲃⲃⲟ ⲁⲩⲱ ⲛⲥⲱⲧⲉ
இறைவனாலேயே நீங்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறீர்கள். கிறிஸ்துவே இறைவனிடமிருந்து நமக்காக வந்த ஞானம். அவரே நம்முடைய நீதியும், பரிசுத்தமும், மீட்புமாயிருக்கிறார்.
31 ⲗ̅ⲁ̅ ϫⲉⲕⲁⲥ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲧⲥⲏϩ ϫⲉ ⲡⲉⲧϣⲟⲩϣⲟⲩ ⲙⲙⲟϥ ⲙⲁⲣⲉϥϣⲟⲩϣⲟⲩ ⲙⲙⲟϥ ϩⲙ ⲡϫⲟⲉⲓⲥ
ஆகவே எழுதியிருக்கிறபடி, “பெருமைபாராட்ட விரும்புகிறவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”