< ⲒⲰⲀⲚⲚⲎⲚ 19 >
1 ⲁ̅ ⲧⲟⲧⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲁϥϭⲓ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ ⲁϥⲉⲣⲙⲁⲥⲧⲓⲅⲅⲟⲓⲛ ⳿ⲙⲙⲟϥ.
௧அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான்.
2 ⲃ̅ ⲟⲩⲟϩ ⲛⲓⲙⲁⲧⲟⲓ ⲁⲩϣⲱⲛⲧ ⳿ⲛⲟⲩ⳿ⲭⲗⲟⲙ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϩⲁⲛⲥⲟⲩⲣⲓ ⲁⲩⲧⲏⲓϥ ⳿ⲉϫⲉⲛ ⲧⲉϥ⳿ⲁⲫⲉ ⲟⲩⲟϩ ⲁⲩϫⲟⲗϩϥ ⳿ⲛⲟⲩ⳿ϩⲃⲟⲥ ⳿ⲛϭⲏϫⲓ.
௨படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி:
3 ⲅ̅ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲛⲏⲟⲩ ϩⲁⲣⲟϥ ⲡⲉ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲭⲉⲣⲉ ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲟⲩⲟϩ ⲛⲁⲩϯⲕⲟⲩⲣ ⲛⲁϥ ⲡⲉ.
௩யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
4 ⲇ̅ ⲡⲁⲗⲓⲛ ⲟⲛ ⲁϥ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ϩⲏⲡⲡⲉ ϯⲛⲁ⳿ⲉⲛϥ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲧⲉⲛ⳿ⲉⲙⲓ ϫⲉ ϯϫⲉⲙ ⳿ϩⲗⲓ ⳿ⲛ⳿ⲉⲧⲓ⳿ⲁ ⳿ⲉⲣⲟϥ ⲁⲛ.
௪பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான்.
5 ⲉ̅ ⲧⲟⲧⲉ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲉϥⲉⲣⲫⲟⲣⲓⲛ ⳿ⲙⲡⲓ⳿ⲭⲗⲟⲙ ⳿ⲛⲥⲟⲩⲣⲓ ⲛⲉⲙ ⲡⲓ⳿ϩⲃⲟⲥ ⳿ⲛ ϭⲏϫⲓ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲛⲱⲟⲩ ϫⲉ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲡⲓⲣⲱⲙⲓ.
௫இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான்.
6 ⲋ̅ ϩⲟⲧⲉ ⲟⲩⲛ ⲉⲧⲁⲩⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭ ⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓϩⲩⲡⲏⲣⲉⲧⲏⲥ ⲁⲩⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁϣϥ ⲁϣϥ ⲡⲉϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲙⲱⲓⲛⲓ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲁϣϥ ⳿ⲁⲛⲟⲕ ⲅⲁⲣ ⳿ⲛϯϫⲉⲙ ⳿ϩⲗⲓ ⳿ⲛ⳿ⲉⲧⲓ⳿ⲁ ϭⲓ ⳿ⲉⲣⲟϥ ⲁⲛ.
௬பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான்.
7 ⲍ̅ ⲁⲩⲉⲣⲟⲩⲱ ⲛⲁϥ ⳿ⲛϫⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ϫⲉ ⳿ⲁⲛⲟⲛ ⲟⲩⲟⲛ ⳿ⲛⲧⲁⲛ ⳿ⲛⲟⲩⲛⲟⲙⲟⲥ ⳿ⲙⲙⲁⲩ ⲟⲩⲟϩ ⲕⲁⲧⲁ ⲡⲉⲛⲛⲟⲙⲟⲥ ⳿ϥⲉⲙ⳿ⲡϣⲁ ⳿ⲙ⳿ⲫⲙⲟⲩ ϫⲉ ⲁϥⲁⲓϥ ⳿ⲛϣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
௭யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
8 ⲏ̅ ϩⲟⲧⲉ ⲟⲩⲛ ⲉⲧⲁϥⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲡⲁⲓⲥⲁϫⲓ ⳿ⲛϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲁϥⲉⲣϩⲟϯ ⳿ⲛϩⲟⲩ⳿ⲟ.
௮பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
9 ⲑ̅ ⲟⲩⲟϩ ⲁϥ⳿ⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲡⲓ⳿ⲡⲣⲉⲧⲱⲣⲓⲟⲛ ⲡⲉϫⲁϥ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ⲑⲱⲛ Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ⳿ⲙⲡⲉϥⲉⲣⲟⲩⲱ ⲛⲁϥ.
௯மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.
10 ⲓ̅ ⲡⲉϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲉⲑⲃⲉⲟⲩ ⳿ⲕⲥⲁϫⲓ ⲛⲉⲙⲏⲓ ⲁⲛ ϣⲁⲛ ⳿ⲕ⳿ⲉⲙⲓ ⲁⲛ ϫⲉ ⲟⲩⲟⲛϯ ⲉⲣϣⲓϣⲓ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲉⲁϣⲕ ⲟⲩⲟⲛϯ ⲉⲣϣⲓϣⲓ ⳿ⲙⲙⲁⲩ ⲟⲛ ⳿ⲉⲭⲁⲕ ⳿ⲉⲃⲟⲗ.
௧0அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
11 ⲓ̅ⲁ̅ ⲁϥⲉⲣⲟⲩⲱ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛⲧⲉⲕ ⳿ϩⲗⲓ ⳿ⲛⲉⲣϣⲓϣⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲣⲟⲓ ⲉⲛⲉ ⳿ⲙⲡⲟⲩⲧⲏⲓⲥ ⲛⲁⲕ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙ⳿ⲡϣⲱⲓ ⲉⲑⲃⲉⲫⲁⲓ ⲫⲏⲉⲧⲁϥⲧⲏⲓⲧ ⲛⲁⲕ ⲟⲩⲟⲛⲧⲉϥ ⲛⲓϣϯ ⳿ⲛⲛⲟⲃⲓ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛϩⲟⲩ⳿ⲟ.
௧௧இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார்.
12 ⲓ̅ⲃ̅ ⲉⲑⲃⲉⲫⲁⲓ ⲟⲩⲛ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲛⲁϥⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⲭⲁϥ ⳿ⲉⲃⲟⲗ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲟⲩⲛ ⲛⲁⲩⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲉϣⲱⲡ ⲁⲕϣⲁⲛⲭⲁ ⲫⲁⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲑⲟⲕ ⳿ⲡ⳿ϣⲫⲏⲣ ⳿ⲙ⳿ⲡⲟⲩⲣⲟ ⲁⲛ ⲟⲩⲟⲛ ⲅⲁⲣ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛⲟⲩⲣⲟ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲉϥϯ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉ⳿ϩⲣⲉⲛ ⳿ⲡⲟⲩⲣⲟ.
௧௨அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
13 ⲓ̅ⲅ̅ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲉⲧⲁϥⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲛⲁⲓⲥⲁϫⲓ ⲁϥ⳿ⲉⲛ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲟϩ ⲁϥϩⲉⲙⲥⲓ ϩⲓ ⲡⲓⲃⲏ ⲙⲁ ϧⲉⲛ ⲡⲓⲙⲁ ⲉⲧⲟⲩⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲓⲗⲓⲑⲟⲥⲧⲣⲱⲧⲟⲛ ⳿ⲙⲙⲉⲧϩⲉⲃⲣⲉⲟⲥ ⲇⲉ ϫⲉ ⲅⲁⲃⲃⲁⲑⲁ.
௧௩பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான்.
14 ⲓ̅ⲇ̅ ⲛⲉ ⳿ⲧⲡⲁⲣⲁⲥⲕⲉⲩⲏ ⲇⲉ ⲧⲉ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲡⲁⲥⲭ ⲁ ⲛⲉ ⳿ⲫⲛⲁⲩ ⲇⲉ ⳿ⲛⲁϫⲡ ⲡⲉ ⲟⲩⲟϩ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⳿ⲛⲛⲓⲟⲩⲇⲁⲓ ϫⲉ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲡⲉⲧⲉⲛⲟⲩⲣⲟ.
௧௪அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.
15 ⲓ̅ⲉ̅ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲁⲩⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ϫⲉ ⳿ⲁⲗⲓⲧϥ ⳿ⲁⲗⲓⲧϥ ⲁϣϥ ⲡⲉϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲛⲱⲟⲩ ⳿ⲛⲧⲁⲉϣ ⲡⲉⲧⲉⲛⲟⲩⲣⲟ ⲁⲩⲉⲣⲟⲩⲱ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭ ⲓⲉⲣⲉⲩⲥ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛⲧⲉⲛ ⲟⲩⲣⲟ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲉⲃⲏⲗ ⳿ⲉⲕⲉⲥⲁⲣ.
௧௫அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள்.
16 ⲓ̅ⲋ̅ ⲧⲟⲧⲉ ⲟⲩⲛ ⲁϥϯ ⲛⲱⲟⲩ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲟⲩⲁϣϥ ⲁⲩϭⲓ ⲟⲩⲛ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅.
௧௬அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
17 ⲓ̅ⲍ̅ ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟϥ ⲉϥϥⲁⲓ ⳿ⲙⲡⲉϥ⳿ⲥⲧⲁⲩⲣⲟⲥ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲡⲓⲙⲁ ⲉⲧⲟⲩⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲓ⳿ⲕⲣⲁⲛⲓⲟⲛ ⳿ⲙⲙⲉⲧϩⲉⲃⲣⲉⲟⲥ ⲇⲉ ϫⲉ ⲅⲟⲗⲅⲟⲑⲁ.
௧௭அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
18 ⲓ̅ⲏ̅ ⲡⲓⲙⲁ ⲉⲧⲁⲩⲁϣϥ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲓϣⲓ ⳿ⲛⲕⲉⲥⲟⲛⲓ ⲃ̅ ⲛⲉⲙⲁϥ ⲥⲁ⳿ⲙⲛⲁⲓ ⲛⲉⲙ ⲥⲁ⳿ⲙⲛⲁⲓ ⳿ⲙⲙⲟϥ Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ϧⲉⲛ ⳿ⲑⲙⲏϯ.
௧௮அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
19 ⲓ̅ⲑ̅ ⲁϥ⳿ⲥϧⲉ ⲕⲉⲧⲓⲧⲗⲟⲥ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲟⲩⲟϩ ⲁϥⲭⲁϥ ϩⲓϫⲉⲛ ⲡⲓ⳿ⲥⲧⲁⲩⲣⲟⲥ ⲛⲁϥ⳿ⲥϧⲏ ⲟⲩⲧ ⲇⲉ ⲡⲉ ϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲓⲛⲁⲍⲱⲣⲉⲟⲥ ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ.
௧௯பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது.
20 ⲕ̅ ⲟⲩⲙⲏϣ ⲇⲉ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲁⲩⲱϣ ⳿ⲙⲡⲓⲧⲓⲧⲗⲟⲥ ϫⲉ ⲛⲁϥϧⲉⲛⲧ ⲡⲉ ⳿ⲉϯⲃⲁⲕⲓ ⳿ⲛϫⲉ ⲡⲓⲙⲁ ⲉⲧⲁⲩⲉϣ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⲛⲁϥ⳿ⲥϧⲏ ⲟⲩⲧ ⲡⲉ ⳿ⲙⲙⲉⲧϩⲉⲃⲣⲉⲟⲥ ⳿ⲙⲙⲉⲧⲣⲱⲙⲉⲟⲥ ⳿ⲙⲙⲉⲧⲟⲩⲉⲓⲛⲓⲛ.
௨0இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது.
21 ⲕ̅ⲁ̅ ⲛⲁⲩϫⲱ ⲟⲩⲛ ⳿ⲙⲙⲟⲥ ⲡⲉ ⳿ⲙⲡⲓⲗⲁⲧⲟⲥ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ϫⲉ ⳿ⲙⲡⲉⲣ⳿ⲥϧⲁⲓ ϫⲉ ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲁⲗⲗⲁ ϫⲉ ⳿ⲛⲑⲟϥ ⲁϥϫⲟⲥ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉ ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ.
௨௧அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
22 ⲕ̅ⲃ̅ ⲁϥⲉⲣⲟⲩⲱ ⳿ⲛϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ϫⲉ ⲫⲏⲉⲧⲁⲓ⳿ⲥϧⲏⲧϥ ⲁⲓ⳿ⲥϧⲏⲧϥ.
௨௨பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
23 ⲕ̅ⲅ̅ ⲛⲓⲙⲁⲧⲟⲓ ⲟⲩⲛ ⲉⲧⲁⲩⲉϣ Ⲓⲏ̅ⲥ̅ ⲁⲩϭⲓ ⳿ⲛⲛⲉϥ⳿ϩⲃⲱⲥ ⲁⲩⲁⲓⲧⲟⲩ ⳿ⲛⲇ̅ ⳿ⲛⲧⲟⲓ ⲛⲉⲙ ϯⲕⲉ⳿ϣⲑⲏ ⲛ ϯ⳿ϣⲑⲏⲛ ⲇⲉ ⲛⲉ ⲟⲩⲁⲧⲑⲱⲣⲡ ⲧⲉ ⳿ⲛⲥⲱϧⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙ⳿ⲡϣⲱⲓ ⲧⲏⲣⲥ.
௨௩படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது.
24 ⲕ̅ⲇ̅ ⲡⲉϫⲱⲟⲩ ⲟⲩⲛ ⳿ⲛⲛⲟⲩⲉⲣⲏⲟⲩ ϫⲉ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉⲛⲫⲁϧⲥ ⲁⲗⲗⲁ ⲙⲁⲣⲉⲛϩⲓⲱⲡ ⳿ⲉⲣⲟⲥ ϫⲉ ⲁⲥⲛⲁⲉⲣ ⲑⲁ ⲛⲓⲙ ⳿ⲙⲙⲟⲛ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉ ϯ⳿ⲅⲣⲁⲫⲏ ϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲩⲫⲱϣ ⳿ⲛⲛⲁ⳿ϩⲃⲱⲥ ⳿ⲉ⳿ϩⲣⲁⲩ ⲟⲩⲟϩ ⲧⲁϩⲉⲃⲥⲱ ⲁⲩϩⲓⲱⲡ ⳿ⲉⲣⲟⲥ ⲛⲁⲓ ⲟⲩⲛ ⲉⲧⲁⲩⲁⲓⲧⲟⲩ ⳿ⲛϫⲉ ⲛⲓⲙⲁⲧⲟⲓ.
௨௪அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள்.
25 ⲕ̅ⲉ̅ ⲛⲁⲩⲟϩⲓ ⲇⲉ ⳿ⲉⲣⲁⲧⲟⲩ ⲡⲉ ϧⲁⲧⲉⲛ ⲡⲓ⳿ⲥⲧⲁⲩⲣⲟⲥ ⳿ⲛⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲛϫⲉ ⲧⲉϥⲙⲁⲩ ⲛⲉⲙ ⳿ⲧⲥⲱⲛⲓ ⳿ⲛⲧⲉϥⲙⲁⲩ ⲙⲁⲣⲓ⳿ⲁ ⲑⲏ ⳿ⲛⲧⲉ ⲕⲗⲉⲟⲡⲁ ⲛⲉⲙ ⲙⲁⲣⲓ⳿ⲁ ϯⲙⲁⲅⲇⲁⲗⲓⲛⲏ.
௨௫இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
26 ⲕ̅ⲋ̅ Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲧⲉϥⲙⲁⲩ ⲛⲉⲙ ⲡⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ⳿ⲉⲛⲁϥⲙⲉⲓ ⳿ⲙⲙⲟϥ ⲉϥⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧϥ ⲡⲉϫⲁϥ ⳿ⲛⲧⲉϥⲙⲁⲩ ϫⲉ ⲓⲥ ⲡⲉϣⲏⲣⲓ.
௨௬அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.
27 ⲕ̅ⲍ̅ ⳿ⲓⲧⲁ ⲡⲉϫⲁϥ ⳿ⲙⲡⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲧⲉⲕⲙⲁⲩ ⲟⲩⲟϩ ⲓⲥϫⲉⲛ ϯⲟⲩⲛⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁϥⲟⲗⲥ ⳿ⲛϫⲉ ⲡⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ⳿ⲉⲡⲉϥⲏⲓ.
௨௭பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான்.
28 ⲕ̅ⲏ̅ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲛⲁⲓ ⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ϫⲉ ϩⲏⲇⲏ ⲁ ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉ ϯ⳿ⲅⲣⲁⲫⲏ ϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ⲡⲉϫⲁϥ ϫⲉ ϯⲟⲃⲓ.
௨௮அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.
29 ⲕ̅ⲑ̅ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲙⲟⲕⲓ ⲇⲉ ⲡⲉ ⲉϥⲙⲉϩ ⳿ⲛϩⲉⲙϫ ⲉϥⲭⲏ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⲁⲩⲙⲟϩ ⳿ⲛⲟⲩ⳿ⲥⲫⲟⲅⲅⲟⲥ ⳿ⲛϩⲉⲙϫ ⲁⲩⲧⲁⲗⲟϥ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ⲟⲩϩⲩⲥⲥⲱⲡⲟⲥ ⲁⲩϩⲓⲧϥ ϧⲁⲧⲉⲛ ⲣⲱϥ.
௨௯காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
30 ⲗ̅ ϩⲟⲧⲉ ⲟⲩⲛ ⲉⲧⲁϥϫⲉⲙϯⲡⲓ ⳿ⲙⲡⲓϩⲉⲙϫ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲁϥϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲣⲉⲕ ϫⲱϥ ⲁϥϯ ⳿ⲙⲡⲓⲡ͞ⲛⲁ̅.
௩0இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
31 ⲗ̅ⲁ̅ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲟⲩⲛ ⲉⲡⲓⲇⲏ ⲛⲉ ϯⲡⲁⲣⲁⲥⲕⲉⲩⲏ ⲧⲉ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲟⲩ⳿ϣⲧⲉⲙⲟϩⲓ ⳿ⲛϫⲉ ⲛⲓⲥⲱⲙⲁ ϩⲓϫⲉⲛ ⲡⲓ⳿ⲥⲧⲁⲩⲣⲟⲥ ⳿ⲙ⳿ⲡⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⲛⲉ ⲟⲩⲛⲓϣϯ ⲅⲁⲣ ⲡⲉ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁⲩϯϩⲟ ⳿ⲉⲡⲓⲗⲁⲧⲟⲥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲟⲩⲕⲱϣ ⳿ⲛⲛⲟⲩⲕⲉⲗⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲟⲩⲟⲗⲟⲩ.
௩௧அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
32 ⲗ̅ⲃ̅ ⲁⲩ⳿ⲓ ⲟⲩⲛ ⳿ⲛϫⲉ ⲛⲓⲙⲁⲧⲟⲓ ⲟⲩⲟϩ ⲡⲓϩⲟⲩⲓⲧ ⲙⲉⲛ ⲁⲩⲕⲱϣ ⳿ⲛⲛⲉϥⲕⲉⲗⲓ ⲟⲩⲟϩ ⲁⲩⲕⲱϣ ⳿ⲛⲛⲁ ⲡⲓⲕⲉⲟⲩⲁⲓ ⲉⲧⲁⲩⲁϣϥ ⲛⲉⲙⲁϥ.
௩௨அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள்.
33 ⲗ̅ⲅ̅ ⲉⲧⲁⲩ⳿ⲓ ⲇⲉ ϩⲁ Ⲓⲏ̅ⲥ̅ ⲁⲩϫⲉⲙϥ ϩⲏⲇⲏ ⲁϥⲟⲩⲱ ⲉϥⲙⲟⲩ ⳿ⲙⲡⲟⲩⲕⲱϣ ⳿ⲛⲛⲉϥⲕⲉⲗⲓ ⳿ⲛⲑⲟϥ.
௩௩அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை.
34 ⲗ̅ⲇ̅ ⲁⲗⲗⲁ ⲟⲩⲁⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲙⲁⲧⲟⲓ ⲁϥⲑⲟⲩⲝ ⳿ⲙⲡⲉϥ⳿ⲥⲫⲓⲣ ⳿ⲛⲧⲉϥⲗⲟⲅⲭⲏ ⲟⲩⲟϩ ⲥⲁⲧⲟⲧϥ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲟⲩⲙⲱⲟⲩ ⲛⲉⲙ ⲟⲩ⳿ⲥⲛⲟϥ.
௩௪ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது.
35 ⲗ̅ⲉ̅ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲧⲁϥⲛⲁⲩ ⲁϥⲉⲣⲙⲉⲑⲣⲉ ⲟⲩⲟϩ ⲟⲩⲙⲏⲓ ⲧⲉ ⲧⲉϥⲙⲉⲧⲙⲉⲑⲣⲉ ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟϥ ϩⲱϥ ⲫⲏ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⳿ϥ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲁϥϫⲉ ⲙⲉⲑⲙⲏ ⲓ ϩⲓⲛⲁ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⳿ⲛⲧⲉⲧⲉⲛⲛⲁϩϯ.
௩௫அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான்.
36 ⲗ̅ⲋ̅ ⲛⲁⲓ ⲅⲁⲣ ⲁⲩϣⲱⲡⲓ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉ ϯ⳿ⲅⲣⲁⲫⲏ ϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ϫⲉ ⲟⲩⲕⲁⲥ ⳿ⲛⲧⲁϥ ⳿ⲛⲛⲟⲩⲕⲁϣϥ.
௩௬அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
37 ⲗ̅ⲍ̅ ⲟⲩⲟϩ ⲡⲁⲗⲓⲛ ϯ⳿ⲅⲣⲁⲫⲏ ϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲉⲩ⳿ⲉⲛⲁⲩ ⳿ⲉⲫⲏⲉⲧⲁⲩⲑⲟⲕⲥϥ.
௩௭அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
38 ⲗ̅ⲏ̅ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲛⲁⲓ ⲇⲉ ⲁϥ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲓⲱⲥⲏⲫ ⲡⲓⲣⲉⲙⲁⲣⲓⲙⲁⲑⲉⲁⲥ ⲁϥϯϩⲟ ⳿ⲉⲡⲓⲗⲁⲧⲟⲥ ⳿ⲉⲟⲩⲙⲁⲑⲏ ⲧⲏⲥ ϩⲱϥ ⲡⲉ ⳿ⲛⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲛⲁϥⲭⲏⲡ ⲇⲉ ⲡⲉ ⲉⲑⲃⲉ ⳿ⲧϩⲟϯ ⳿ⲛⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥⲱⲗⲓ ⳿ⲙⲡⲓⲥⲱⲙⲁ ⳿ⲛⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲟϩ ⲁϥⲟⲩⲁϩⲥⲁϩⲛⲓ ⳿ⲛϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⳿ⲉⲧⲏⲓϥ ⲁϥ⳿ⲓ ⲟⲩⲛ ⲟⲩⲟϩ ⲁϥⲱⲗⲓ ⳿ⲙⲡⲓⲥⲱⲙⲁ ⳿ⲛⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅.
௩௮இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான்.
39 ⲗ̅ⲑ̅ ⲁϥ⳿ⲓ ⲇⲉ ϩⲱϥ ⳿ⲛϫⲉ ⲛⲓⲕⲟⲇⲏⲙⲟⲥ ⲫⲏⲉⲧⲁϥ⳿ⲓ ϩⲁ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲛϫⲱⲣϩ ⳿ⲛϣⲟⲣⲡ ⳿ⲉⲟⲩⲟⲛ ⲟⲩⲙⲓⲅⲙⲁ ⳿ⲛⲧⲟⲧϥ ⲟⲩϣⲁⲗ ⲛⲉⲙ ⲟⲩ⳿ⲁⲗⲗⲟⲏ ⲛⲁⲩⲣ̅ ⳿ⲛⲗⲓⲧⲣⲁ.
௩௯ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான்.
40 ⲙ̅ ⲁⲩϭⲓ ⲟⲩⲛ ⳿ⲙⲡⲓⲥⲱⲙⲁ ⳿ⲛⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲟϩ ⲁⲩⲕⲟⲩⲗⲱⲗϥ ⳿ⲛϩⲁⲛϣⲉⲛⲧⲱ ⳿ⲛⲓⲁⲩ ⲛⲉⲙ ⲛⲓ⳿ⲥⲑⲟⲓ ⲕⲁⲧⲁ ϯⲕⲁϩⲥ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲉⲩⲕⲱⲥ.
௪0அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
41 ⲙ̅ⲁ̅ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩϭⲱⲙ ⲇⲉ ⲡⲉ ⳿ⲙⲡⲓⲙⲁ ⲉⲧⲁⲩⲁϣϥ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩ⳿ⲙϩⲁⲩ ⳿ⲙⲃⲉⲣⲓ ϧⲉⲛ ⲡⲓϭⲱⲙ ⳿ⲙⲡⲁⲧⲟⲩϩⲓ ⳿ϩⲗⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⲉⲛⲉϩ.
௪௧அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
42 ⲙ̅ⲃ̅ ⲉⲡⲓⲇⲏ ⲛⲁϥϧⲉⲛⲧ ⳿ⲉⲣⲱⲟⲩ ⳿ⲛϫⲉ ⲡⲓ⳿ⲙϩⲁⲩ ⲉⲑⲃⲉϫⲉ ⲛⲉ ϯⲡⲁⲣⲁⲥⲕⲉⲩⲏ ⲧⲉ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲁⲩⲭⲁ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲛϧⲏⲧϥ
௪௨யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.