< ⲦⲒⳘⲞⲐⲈⲞⲤ Ⲁ ̅ 6 >
1 ⲁ̅ ⲛⲓⲉⲃⲓⲁⲓⲕ ⲉⲧⲭⲏ ϧⲁ ⳿ⲫⲛⲁϩⲃⲉϥ ⲙⲁⲣⲟⲩⲭ ⲁ ⲛⲟⲩϭⲓⲥⲉⲩ ⳿ⲛⲧⲟⲧⲟⲩ ϧⲉⲛ ⲧⲁⲓⲟ ⲛⲓⲃⲉⲛ ϩⲓⲛⲁ ⳿ⲛⲥⲉ⳿ϣⲧⲉⲙϫⲉⲟⲩ⳿ⲁ ⳿ⲉ⳿ⲫⲣⲁⲛ ⳿ⲙⲫϯ ⲛⲉⲙ ϯ⳿ⲥⲃⲱ.
௧தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.
2 ⲃ̅ ⲛⲏ ⲇⲉ ⲉⲧⲉ ⲟⲩⲟⲛⲧⲱⲟⲩ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛϩⲁⲛϭ ⲓⲥⲉⲩ ⳿ⲙⲡⲓⲥⲧⲟⲥ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲟⲩⲉⲣⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲟⲛⲓⲛ ϫⲉ ϩⲁⲛ⳿ⲥⲛⲏⲟⲩ ⲛⲉ ⲁⲗⲗⲁ ⲙⲁⲗⲗⲟⲛ ⲙⲁⲣⲟⲩⲉⲣⲃⲱⲕ ϫⲉ ϩⲁⲛⲡⲓⲥⲧⲟⲥ ⲛⲉ ⲟⲩⲟϩ ϩⲁⲛⲙⲉⲛⲣⲁϯ ⲛⲏⲉⲧ⳿ⲁⲙⲟⲛⲓ ⳿ⲛⲧⲟⲧⲟⲩ ϧⲉⲛ ϯ ⲙⲉⲧⲣⲉϥⲉⲣϩⲉⲃⲛⲟⲩϥⲓ ⲛⲁⲓ ⲙⲁ⳿ⲥⲃⲱ ⲟⲩⲟϩ ⲙⲁⲛⲟⲙϯ ⳿ⲛϧⲏⲧⲟⲩ.
௨விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்களுடைய எஜமான்கள் சகோதரர்களாக இருப்பதினால் அவர்களை அசட்டைபண்ணாமல், நல்ல வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் விசுவாசிகளும், பிரியமுள்ளவர்களுமாக இருப்பதினால் அவர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்யுங்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.
3 ⲅ̅ ⲫⲏ ⲇⲉ ⲉⲧϯ ⳿ⲛⲕⲉ⳿ⲥⲃⲱ ⲟⲩⲟϩ ⲉⲧⲉ⳿ⲛ⳿ϥⲛⲏ ⲟⲩ ⲁⲛ ⳿ⲉϩⲁⲛⲥⲁϫⲓ ⲉⲑⲟⲩⲟϫ ⳿ⲛⲧⲉ ⲡⲉⲛ⳪ Ⲓⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅ ⲛⲉⲙ ϯ⳿ⲥⲃⲱ ⳿ⲛⲧⲉ ϯⲙⲉⲧⲉⲩⲥⲉⲃⲏⲥ.
௩ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
4 ⲇ̅ ⲁϥϭⲟⲥⲓ ⳿ⲛϩⲏⲧ ⳿ⲛ⳿ϥⲥⲱⲟⲩⲛ ⳿ⲛ⳿ϩⲗⲓ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⲁϥϣⲱⲛⲓ ⳿ⲙ⳿ⲡⲕⲱϯ ⳿ⲛϩⲁⲛⲍⲏⲧⲏⲥⲓⲥ ⲛⲉⲙ ϩⲁⲛⲥⲁϫⲓ ⳿ⲛ⳿ⲙⲗⲁϩ ⲛⲏ ⳿ⲉϣⲁⲣⲉ ϩⲁⲛⲫⲑⲟⲛⲟⲥ ϣⲱⲡⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲛⲉⲙ ϩⲁⲛϣⲟⲛⲧ ⲛⲉⲙ ϩⲁⲛϫⲉⲟⲩ⳿ⲁ ⲛⲉⲙ ϩⲁⲛⲙⲉⲩⲓ ⲉⲩϩⲱⲟⲩ.
௪அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி,
5 ⲉ̅ ⲛⲉⲙ ϩⲁⲛⲙⲉⲧⲣⲉϥϯⲑⲱϧ ϩⲁⲛⲣⲱⲙⲓ ⲉⲣⲉ ⲡⲟⲩϩⲏⲧ ⲧⲁⲕⲏⲟⲩⲧ ⲟⲩⲟϩ ⲉⲩϥⲏϫ ⳿ⲛ⳿ⲑⲙⲏⲓ ⲉⲩⲙⲉⲩⲓ ⳿ⲉϯⲙⲉⲧⲉⲩⲥⲉⲃⲏⲥ ϫⲉ ⲟⲩⲙⲉⲧⲣⲉϥ⳿ϫⲫⲉ ϩⲏⲟⲩ ⲧⲉ.
௫கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு.
6 ⲋ̅ ⲟⲩⲛⲓϣϯ ⲇⲉ ⳿ⲙⲙⲉⲧⲣⲉϥ⳿ϫⲫⲉ ϩⲏⲟⲩ ⲧⲉ ϯⲙⲉⲧⲉⲩⲥⲉⲃⲏⲥ ϧⲉⲛ ⲟⲩⲣⲱϣⲓ.
௬போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
7 ⲍ̅ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲉⲛ ⳿ϩⲗⲓ ⲅⲁⲣ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲟⲛ ⳿ⲉ⳿ⲉⲛ ⳿ϩⲗⲓ ⳿ⲉⲃⲟⲗ.
௭உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
8 ⲏ̅ ⳿ⲉⲟⲩⲟⲛⲧⲁⲛ ⲇⲉ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲟⲩ⳿ϧⲣⲉ ⲛⲉⲙ ⲟⲩϩⲉⲃⲥⲱ ⲛⲁⲓ ⲙⲁⲣⲟⲩⲣⲁϣⲉⲛ.
௮உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும்.
9 ⲑ̅ ⲛⲏ ⲇⲉ ⲉⲑⲟⲩⲱϣ ⳿ⲉⲉⲣⲣⲁⲙⲁ⳿ⲟ ϣⲁⲩϩⲉⲓ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿ⲉⲟⲩⲡⲓⲣⲁⲥⲙⲟⲥ ⲛⲉⲙ ⲟⲩⲫⲁϣ ⲛⲉⲙ ⲟⲩⲙⲏϣ ⳿ⲛⲉⲡⲓⲑⲩⲙⲓⲁ ⳿ⲙⲙⲉⲧⲁⲧϩⲏⲧ ⳿ⲛⲥⲉⲉⲣⲛⲟϥⲣⲓ ⲁⲛ ⲛⲏ ⳿ⲉϣⲁⲩⲱⲙⲥ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿ⲙ⳿ⲡϥⲱϯ ⳿ⲉⲃⲟⲗ ⲛⲉⲙ ⲡⲓⲧⲁⲕⲟ.
௯செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள்.
10 ⲓ̅ ⳿ⲑⲛⲟⲩⲛⲓ ⲅⲁⲣ ⳿ⲙⲡⲉⲧϩⲱⲟⲩ ⲛⲓⲃⲉⲛ ⲧⲉ ϯⲙⲉⲧⲙⲁⲓϩⲁⲧ ⲑⲏ ⲉⲧⲁ ϩⲁⲛⲟⲩⲟⲛ ⲙⲉⲛⲣⲓⲧⲥ ⲁⲩⲥⲱⲣⲉⲙ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁ ⳿ⲫⲛⲁϩϯ ⲟⲩⲟϩ ⲁⲩⲥⲱⲕ ⲛⲱⲟⲩ ⳿ⲙⲙⲁⲩⲁⲧⲟⲩ ⳿ⲛϩⲁⲛⲙⲏϣ ⳿ⲛⲉⲙⲕⲁϩ ⲛϩⲏⲧ.
௧0பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
11 ⲓ̅ⲁ̅ ⳿ⲛⲑⲟⲕ ⲇⲉ ⲱ ⳿ⲫⲣⲱⲙⲓ ⳿ⲙⲫϯ ⲫⲱⲧ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲛⲛⲁⲓ ϭⲟϫⲓ ⲇⲉ ⳿ⲛⲥⲁ ϯⲙⲉⲑⲙⲏⲓ ϯ ⲙⲉⲧⲉⲩⲥⲉⲃⲏⲥ ⲡⲓⲛⲁϩϯ ϯⲁⲅⲁⲡⲏ ϯϩⲩⲡⲟⲙⲟⲛⲏ ϯⲙⲉⲧⲣⲉϥϣⲉⲡ⳿ⲙⲕⲁϩ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧⲣⲉⲙⲣⲁⲩϣ.
௧௧நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.
12 ⲓ̅ⲃ̅ ⲁⲣⲓⲁⲅⲱⲛⲓⲍⲉⲥⲑⲉ ⳿ⲙⲡⲓⲁⲅⲱⲛ ⲉⲑⲛⲁⲛⲉϥ ⳿ⲛⲧⲉ ⳿ⲫⲛⲁϩϯ ⳿ⲁⲙⲟⲛⲓ ⳿ⲙⲡⲓⲱⲛϧ ⳿ⲛⲉⲛⲉϩ ⲫⲏⲉⲧⲁⲩⲑⲁϩⲙⲉⲕ ⳿ⲉⲣⲟϥ ⲟⲩⲟϩ ⲁⲕⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲡⲓⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲑⲛⲁⲛⲉϥ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲛⲟⲩⲙⲏϣ ⳿ⲙⲙⲉⲑⲣⲉ. (aiōnios )
௧௨விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios )
13 ⲓ̅ⲅ̅ ϯϩⲟⲛϩⲉⲛ ⲛⲁⲕ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫϯ ⲫⲁⲓ ⲉⲧⲧⲁⲛϧⲟ ⳿ⲛϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⲛⲉⲙ Ⲡⲭ̅ⲥ̅ Ⲓⲏ̅ⲥ̅ ⲫⲁⲓ ⲉⲧⲁϥⲉⲣⲙⲁⲣⲧⲩⲣⲟⲥ ϩⲓ ⲡⲟⲛⲧⲓⲟⲥ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲡⲓⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲑⲛⲁⲛⲉϥ.
௧௩நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி,
14 ⲓ̅ⲇ̅ ⲉⲑⲣⲉⲕⲁⲣⲉϩ ⳿ⲉⲧⲁⲓⲉⲛⲧⲟⲗⲏ ⲉⲕⲟⲓ ⳿ⲛⲁⲧⲁϭ ⲛⲓ ⲉⲕⲟⲓ ⳿ⲛⲁⲧⲣⲓⲕⲓ ϣⲁ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉ⳿ⲫⲟⲩⲟⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲡⲉⲛ⳪ Ⲓⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅.
௧௪எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
15 ⲓ̅ⲉ̅ ⲫⲁⲓ ⲉⲧⲉ⳿ϥⲛⲁⲟⲩⲟⲛϩϥ ϧⲉⲛ ⲛⲉϥⲥⲏⲟⲩ ⳿ⲛϫⲉ ⲡⲓⲙⲁⲕⲁⲣⲓⲟⲥ ⲉⲧⲉ ⲟⲩⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲟϥ ϧⲉⲛ ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲟⲩⲣⲱⲟⲩ ⲟⲩⲟϩ Ⲡ⳪ ⳿ⲛⲧⲉ ⲛⲓ⳪.
௧௫இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
16 ⲓ̅ⲋ̅ ⲡⲓⲟⲩⲁⲓ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲉⲧⲉ ϯⲙⲉⲧⲁⲧⲙⲟⲩ ⳿ⲛⲧⲁϥ ⲟⲩⲟϩ ⲉⲧϣⲟⲡ ϧⲉⲛ ⲡⲓⲟⲩⲱⲓⲛⲓ ⳿ⲛⲁⲧ⳿ϣϧⲱⲛⲧ ⳿ⲉⲣⲟϥ ⲫⲏⲉⲧⲉ ⳿ⲙⲡⲉ ⳿ϩⲗⲓ ⳿ⲛⲣⲱⲙⲓ ⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲛⲥⲉⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ⲫⲁⲓ ⲉⲧⲉ ⲫⲱϥ ⲡⲉ ⲡⲓⲧⲁⲓⲟ ⲛⲉⲙ ⲡⲓⲁⲙⲁϩⲓ ϣⲁ ⲉⲛⲉϩ ⲁⲙⲏⲛ. (aiōnios )
௧௬அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios )
17 ⲓ̅ⲍ̅ ⲛⲓⲣⲁⲙⲁ⳿ⲟ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓⲉⲛⲉϩ ⳿ⲛⲧⲉ ϯⲛⲟⲩ ϩⲟⲛϩⲉⲛ ⲛⲱⲟⲩ ⳿ⲛⲥⲉ⳿ϣⲧⲉⲙϭⲓⲥⲓ ⳿ⲛϩⲏⲧ ⲟⲩⲇⲉ ⳿ⲛⲥⲉ⳿ϣⲧⲉⲙⲉⲣϩⲉⲗⲡⲓⲥ ⳿ⲉⲧⲁⲓⲙⲉⲧⲣⲁⲙⲁ⳿ⲟ ⲉⲧⲉ⳿ⲛ⳿ⲥ⳿ⲥⲙⲟⲛⲧ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⳿ⲉⲉⲣϩⲉⲗⲡⲓⲥ ⳿ⲉⲫϯ ⲫⲁⲓ ⲉⲧϯ ⳿ⲛϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⲛⲁⲛ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧⲣⲁⲙⲁ⳿ⲟ ϫⲉ ⳿ⲛⲧⲉⲛϭⲓⲙⲉ. (aiōn )
௧௭இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn )
18 ⲓ̅ⲏ̅ ⳿ⲉⲉⲣ ϩⲱⲃ ⲉⲛⲁⲛⲉϥ ⳿ⲉⲉⲣⲣⲁⲙⲁ⳿ⲟ ϧⲉⲛ ϩⲁⲛ⳿ϩⲃⲏⲟⲩ⳿ⲓ ⳿ⲉⲛⲁⲛⲉⲩ ⳿ⲉⲉⲣⲣⲉϥⲥⲱⲟⲩⲧⲉⲛ ⳿ⲛⲣⲉϥⲉⲣ⳿ϣⲫⲏ ⲣ.
௧௮நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும்,
19 ⲓ̅ⲑ̅ ⲉⲩϩⲓⲟⲩⲓ ⲛⲱⲟⲩ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲟⲩⲥⲉⲛϯ ⳿ⲉⲛⲁⲛⲉⲥ ⳿ⲉⲡⲉⲑⲛⲏⲟⲩ ϩⲓⲛⲁ ⳿ⲛⲥⲉ⳿ⲁⲙⲟⲛⲓ ⳿ⲙⲡⲓⲱⲛϧ ⳿ⲛⲧⲁ⳿ⲫⲙⲏⲓ.
௧௯நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
20 ⲕ̅ ⲱ ⲧⲓⲙⲟⲑⲉⲟⲥ ⲁⲣⲉϩ ⳿ⲉϯⲡⲁⲣⲁⲑⲏⲕⲏ ⲉⲕⲣⲓⲕⲓ ⳿ⲙⲙⲟⲕ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲛⲛⲓ⳿ⲥⲙⲏ ⲉⲧⲥⲱϥ ⲟⲩⲟϩ ⲉⲧϣⲟⲩⲓⲧ ⲛⲉⲙ ϯⲙⲉⲧⲣⲉϥϯ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉ⳿ϩⲣⲁⲛ ⳿ⲛⲧⲉ ϯ⳿ⲅⲛⲱⲥⲓⲥ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲣⲁⲛ ⳿ⲙⲙⲉⲑⲛⲟⲩϫ.
௨0ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு.
21 ⲕ̅ⲁ̅ ⲑⲁⲓ ⲉⲧⲁ ϩⲁⲛⲟⲩⲟⲛ ⲱϣ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲙⲡⲟⲩϯ ⲙⲁϯ ϧⲉⲛ ⳿ⲫⲛⲁϩϯ ⳿ⲡ⳿ϩⲙⲟⲧ ⲛⲉⲙⲱⲧⲉⲛ ⲁⲩ⳿ⲥϧⲏⲧⲥ ϧⲉⲛ ⲗⲁⲟⲇⲓⲕⲓ⳿ⲁ.
௨௧சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென்.