< 詩篇 120 >

1 上行(或譯登階,下同)之詩。 我在急難中求告耶和華, 他就應允我。
ஆரோகண பாடல். என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2 耶和華啊,求你救我脫離說謊的嘴唇和詭詐的舌頭!
யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.
3 詭詐的舌頭啊,要給你甚麼呢? 要拿甚麼加給你呢?
வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
4 就是勇士的利箭和羅騰木 的炭火。
பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
5 我寄居在米設, 住在基達帳棚之中,有禍了!
ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும், கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!
6 我與那恨惡和睦的人許久同住。
சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
7 我願和睦, 但我發言,他們就要爭戰。
நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.

< 詩篇 120 >