< 詩篇 73 >

1 阿撒夫的詩歌。
ஆசாபின் சங்கீதம். நிச்சயமாகவே, இருதயத்தில் சுத்தமுள்ள இஸ்ரயேலருக்கு, இறைவன் நல்லவராயிருக்கிறார்.
2 天主待正直的人多麼美善,上主對心裏潔淨的人亦然!
ஆனால் நானோ, என் கால்கள் சறுக்கி, என் காலடிகள் இடறி விழப்போனேன்.
3 我的腳幾乎要跌跤,我的腳險些要滑倒,
பெருமையுள்ளவர்களைக் குறித்துப் பொறாமை கொண்டேன்; கொடியவர்களின் வளமான வாழ்வை நான் கண்டேன்.
4 因我看見惡人安寧幸福,就對驕橫的人心生嫉妒。
அவர்களுக்கு சாகும்வரை வேதனைகளே இல்லை; அவர்களுடைய உடல்கள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கின்றன.
5 原來他們總沒有受過重創,所以他們的身體健康肥胖;
அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல துன்பப்படுவதில்லை; மனிதருக்கு வரும் நோய்களினாலும் அவர்கள் பீடிக்கப்படுவதில்லை.
6 他們沒有別人所受的憂傷,也沒有常人所遭遇的災殃。
ஆதலால் பெருமை அவர்களுடைய கழுத்துச் சங்கிலியாய் இருக்கிறது; அவர்கள் வன்முறையை உடையாகக் கொண்டிருக்கிறார்கள்.
7 故此,驕傲纏繞他們相似項鍊,殘暴遮蔽他們有如衣衫。
அவர்களுடைய இருதயம் கொழுப்பினால் புடைத்து அநியாயம் வெளியே வருகிறது; அவர்கள் மனதிலிருந்து எழும் தீமையான எண்ணங்களுக்கு அளவேயில்லை.
8 他們的邪惡,出自肥胖的心田,讓他們自己的惡念,肆意氾濫。
அவர்கள் ஏளனம் செய்து, தீமையானதைப் பேசுகிறார்கள்; அகங்காரத்தில் ஒடுக்கப்போவதாகப் பயமுறுத்துகிறார்கள்.
9 他們譏諷嘲弄,言惡語狂,他們欺壓恐嚇蠻橫倔強;
அவர்களுடைய வாயின் வார்த்தைகள் வானமட்டும் எட்டுகிறது; அவர்களுடைய நாவின் சொற்கள் பூமியெங்கும் சுற்றித்திரிகிறது.
10 用自己的口褻瀆上天,以自己的舌詆毀塵寰。
ஆகையால் மக்களும் அவர்களிடமாய்த் திரும்பி, அவர்களின் சொற்களைத் தண்ணீரைப்போல் குடிக்கிறார்கள்.
11 因此我的百姓向他們依歸,滿口啜飲由他們供給的水,
அவர்கள், “இறைவன் எப்படி அறிவார்? மகா உன்னதமானவருக்கு இவற்றைப் பற்றிய அறிவு உண்டோ?” என்கிறார்கள்.
12 且說:天主豈能知悉,難道至高者能理會?
கொடியவர்கள் எப்பொழுதும் சிந்தனை அற்றவர்களாகவும், செல்வத்தினால் பெருகுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
13 看,這些人為非作歹,常享平安,積存錢財,
உண்மையில், நான் வீணாகவே என் இருதயத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டேன்; வீணாகவே குற்றமற்றவனாய் என் கைகளைக் கழுவிக் கொண்டேன்.
14 的確,我白白清心寡欲,我徒然洗手表白無辜。
நாளெல்லாம் நான் பாதிக்கப்பட்டேன்; காலைதோறும் நான் கண்டிக்கப்பட்டேன்.
15 我時時遭受鞭擊,也天天遇到責斥。
இவ்வாறு பேசியிருந்தால், நான் உமது பிள்ளைகளுக்கு துரோகம் செய்திருப்பேன்.
16 我若想:我說話若與他們相同,就等於放棄與您子民為同宗。
இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ள நான் முயன்றபோது, அது எனக்குக் கடினமாய் இருந்தது.
17 我愈設法了解這事,我愈覺得神妙莫測。
ஆனால் நான் இறைவனின் பரிசுத்த இடத்திற்குள் நுழைந்த பின்புதான், நான் அவர்களுடைய இறுதிமுடிவை அறிந்துகொண்டேன்.
18 直到我接近天主的奧妙,直到我注意他們的結果。
நிச்சயமாகவே, நீர் அவர்களைச் சறுக்கலான நிலத்தில் நிறுத்துகிறீர்; நீர் அவர்களை சேதமடைந்து போகவிடுகிறீர்.
19 您的確將他們置於坡路,讓他們滑倒於消滅之途。
அவர்கள் சீக்கிரமாய் அழிந்துபோகிறார்கள்; திடீரென வரும் பயங்கரங்களால் முழுமையாக அழிந்துபோகிறார்கள்!
20 他們瞬息之間變得如此悽涼,他們因受驚過度而從此滅亡。
விழித்தெழுகிறவனின் கனவு கலைவதுபோல், யெகோவாவே, நீர் எழும்பும்போது, அவர்களை கற்பனைக் காட்சியென்று இகழ்வீர்.
21 上主,世人睡醒,怎樣了解夢境;您醒時,也怎樣看他們的幻影。
என் இருதயம் கசந்தது, என் உள்ளம் குத்தப்பட்டது.
22 幾時我的心靈遭受酸苦,刺痛也會進入我的肺腑。
நான் ஒன்றும் அறியாத மூடனானேன்; நான் உமக்கு முன்பாக விலங்கைப்போல நடந்துகொண்டேன்.
23 原來是我愚昧毫無理性,在您面前竟燃好像畜牲。
ஆனாலும், நான் எப்பொழுதும் உம்முடனே இருக்கிறேன்; நீர் என் வலதுகையை பிடித்துக்கொள்கிறீர்.
24 但以後,我要常與您同處,您已經握住了我的右手。
நீர் உமது ஆலோசனையினால் எனக்கு வழிகாட்டுகிறீர்; பின்பு நீர் என்னை உமது மகிமைக்குள் எடுத்துக்கொள்வீர்.
25 您要以您的聖訓來領導我,最後引我進入您的榮耀。
பரலோகத்தில் உம்மையன்றி எனக்கு யார் உண்டு? பூமியிலும் உம்மைத்தவிர எனக்கு வேறொரு விருப்பமில்லை.
26 在天上除您以外,為我還能有誰﹖在地上除您以外,為我一無所喜。
என் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயிற்று; ஆனால் இறைவனே என்றென்றைக்கும் நீரே என் இருதயத்தின் பெலனும் எனக்குரியவருமாய் இருக்கிறார்.
27 我的肉身和我的心靈,雖以憔瘁;天主卻永是我心的福分和磐石。
உம்மைவிட்டுத் தூரமாகிறவர்கள் அழிவார்கள்; உமக்கு உண்மையற்றவர்களை நீர் தண்டிப்பீர்.
28 看,遠離您的人必將趨於沉淪。您必消滅一切背棄您的人民。 親近天主對我是多麼的美好:只有上主天主是我的避難所。我要在熙雍女子門前,把您一切的工程宣傳。
ஆனால் என்னைப் பொறுத்தவரை, இறைவனுக்கு அருகில் இருப்பதே எனக்கு நலம்; ஆண்டவராகிய யெகோவாவை நான் என் புகலிடமாக்கிக் கொண்டேன்; உமது செயல்களையெல்லாம் நான் விவரிப்பேன்.

< 詩篇 73 >