< Cingthuilawk 4 >

1 Ka canaw, na pa ni na cangkhainae hah thai awh nateh, thaipanueknae hah panue hanelah na hnâpakeng awh.
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
2 Bangkongtetpawiteh, cangkhainae kahawi hah na poe dawkvah, kaie kâlawk hah cettakhai hanh.
நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.
3 Apa e capa lah ka o navah, anu e capa a pahren e tawntoe e capa lah ka o.
நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
4 Pâtu hai na pâtu teh, na lungthin hoi ka lawknaw hah pâkuem haw. Kaie kâpoelawknaw hah tarawi nateh hring haw.
அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
5 Lungangnae hah tawn nateh, thaipanueknae hah tawn haw. Ka pahni dawk hoi ka tâcawt e lawknaw hah pahnim laipalah, kamlang takhai hanh.
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு.
6 Cettakhai hanh, na ring nakaima. Lungpataw haw na ngue han kaima.
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாக இரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
7 Lungangnae teh a lawkpui poung doeh.
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
8 Talue sak haw, na tawmrasang han. Tapam haw, barinae koe na ceikhai han.
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும்.
9 Na lû dawk lungmanae na kâmuk sak han, bawilennae bawilakhung hah na kâmuk sak han.
அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
10 Ka capa, ka dei e hah thai nateh, dâw haw. Na hringyung a saw sak han.
௧0என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும்.
11 Lungangnae lamthung na cangkhai teh, lamkalan dawk na hrawi.
௧௧ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
12 Na cei navah, na khok hanelah kamthuinae awm mahoeh, na yawng navah na tâlaw mahoeh.
௧௨நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
13 Na cangkhainae hah kacaklah kuen nateh, tha laipalah pou kuen haw. Bangkongtetpawiteh, na hringnae doeh.
௧௩புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.
14 Tamikathoutnaw e lamthung dawk kâen awh hanh. Tami kahawihoehnaw e lamthung dawn hanh.
௧௪துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
15 Roun nateh, khoeroe dawn hanh, kamlang takhai nateh, cettakhaih.
௧௫அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ.
16 Bangkongtetpawiteh, hno kathout sak hoeh pawiteh, ip thai awh hoeh niteh, tami buetbuet touh tâlaw sak hoehpawiteh, ihmu tho awh hoeh.
௧௬தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.
17 Bangkongtetpawiteh, thoenae vaiyei hah a ca awh teh, rektapnae yamu hah a nei awh.
௧௭அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
18 Hatei, tamikalannaw e lamthung teh, kanî raeng, kanî tuengtalueng a thunnae kanî ang patetlah ao.
௧௮நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.
19 Tamikathoutnaw e lamthung teh khohmo patetlah ao teh, tâlawnae akungcing hai panuek awh hoeh.
௧௯துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.
20 Ka capa, ka lawk kahawicalah thai haw, ka dei e hah atangcalah pouk.
௨0என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.
21 Na mit hoi kâhlat sak hanh, na lungthin dawk pâkuemh.
௨௧அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.
22 Bangkongtetpawiteh, kahmawtnaw hanelah hringnae lah ao teh, a takthai abuemlah hanelah damnae lah ao.
௨௨அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
23 Hno pueng hlak hoi na lungthin hah kahawicalah ring haw. Bangkongtetpawiteh, hringnae akungtuen lah ao.
௨௩எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.
24 Dumyennae pahni hah pahnawt nateh, payonnae pahni hah ahlanae koe takhoe haw.
௨௪வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
25 Na mit hoi hmalah kalan lah khen nateh, na hmalah kalan lah radoung haw.
௨௫உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
26 Na lamthung hah hmaloe rip nateh, na lamthung pueng hah cak sak.
௨௬உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும்.
27 Aranglah nakunghai, avoilah nakunghai phen hanh. Thoenae lamthung hah roun haw.
௨௭வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.

< Cingthuilawk 4 >