< ᎪᎵᏂᏗᏱ ᎠᏁᎯ ᏔᎵᏁ ᎨᎪᏪᎳᏁᎸᎯ 5 >
1 ᎣᏥᎦᏔᎭᏰᏃ ᎾᏍᎩ ᎢᏳᏃ ᎡᎶᎯ ᎡᎯ ᎣᏥᏁᎸ ᎣᎩᎵᏦᏛ ᏳᏲᏨ, ᎣᎩᎭ ᎠᏓᏁᎸ ᎤᏁᎳᏅᎯ ᏅᏓᏳᏓᎴᏅᎯ, ᎠᏓᏁᎸ ᏧᏬᏱ ᏗᎬᏔᏅᎯ ᏂᎨᏒᎾ ᎠᏁᏍᎨᎲᎯ, ᎠᏲᎩ ᏂᎨᏒᎾ ᎦᎸᎶᎢ ᏗᏓᏁᎸ. (aiōnios )
௧பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios )
2 ᎠᏂᏰᏃ ᎣᏥᏯᎥ ᎣᎩᎵᏰᏗᎭ, ᎤᏣᏘ ᎣᎦᏚᎵᎭ ᎣᎦᏄᏬᏍᏙᏗᏱ ᎣᏥᏁᎸ ᎾᏍᎩ Ꮎ ᎦᎸᎶ ᏅᏓᏳᏓᎴᏅᎯ;
௨ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்;
3 ᎢᏳᏃ ᎰᏩ ᏱᏙᎦᏄᏩᎥ, ᎥᏝ ᏦᎩᏰᎸᎭ ᏱᎦᎨᏎᏍᏗ.
௩அணிந்துகொண்டவர்களானால், நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம்.
4 ᎠᏴᏰᏃ ᎯᎠ ᎠᏂ ᎦᎵᏦᏛ ᏦᏥᏯᎠ ᎣᎩᎵᏰᏗᎭ, ᏂᎦᎵᏍᏙᏗᎭ ᎦᎨᏛ ᏃᎦᏛᎿᎭᏕᎬᎢ; ᎥᏝ ᏦᎩᏄᏪᏍᏗᏱ ᎣᎦᏚᎵᏍᎬ ᏱᏅᏗᎦᎵᏍᏙᏗᎭ; ᏦᎩᏄᏬᏍᏗᏱᏍᎩᏂ; ᎾᏍᎩ ᎠᏲᎱᏍᎩ ᎨᏒ ᎠᏥᎩᏍᏗᏱ ᎬᏂᏛ ᎤᎩᏐᎲᏍᏗᏱ.
௪இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் சுமை சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்து போடவேண்டும் என்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக போர்வை தரித்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.
5 ᎾᏍᎩᏃ Ꮎ ᎢᎪᏢᏅᎯ ᎯᎠ ᎾᏍᎩ ᎤᎬᏩᎵ ᎨᏒ ᎾᏍᎩ ᎤᏁᎳᏅᎯ, ᎾᏍᎩ ᎾᏍᏉ ᏦᎩᏁᎸ ᎠᏓᏅᏙ ᎠᎦᏗᏗᏍᏙᏗ ᎨᏒᎢ.
௫இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவி என்னும் உத்திரவாதத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
6 ᎾᏍᎩ ᎢᏳᏍᏗ ᏂᎪᎯᎸ ᎤᎦᎵᏍᏗ ᎣᎦᏓᏅᏔᏩᏕᎪᎢ, ᎠᎴ ᎣᏥᎦᏔᎭ ᎾᏍᎩ ᏂᎪᎯᎸ ᎣᏥᏁᎸ ᎠᏂ ᏦᏥᏰᎸᎢ, ᎤᎬᏫᏳᎯ ᎡᎲ ᎣᎩᎪᏁᎸᎢ;
௬நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம்.
7 ᎪᎯᏳᏗᏰᏃ ᎨᏒ ᎣᏨᏗᎭ ᎣᏤᏙᎲᎢ, ᎥᏝᏃ ᎠᎪᏩᏛᏗ ᎨᏒᎢ.
௭இந்த சரீரத்தில் குடியிருக்கும்போது கர்த்தரிடம் குடியில்லாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிந்தும், எப்பொழுதும் தைரியமாக இருக்கிறோம்.
8 ᎠᎴ ᎤᎦᎵᏍᏗ ᎣᎦᏓᏅᏔᏩᏕᎪᎢ, ᎠᎴ ᎤᏟ ᎦᏲᎩᏰᎸᏗ ᎠᏰᎸ ᎣᎩᎪᏁᎶᎢᏍᏗᏱ, ᎠᎴ ᎤᎬᏫᏳᎯ ᎡᎲ ᏬᎦᏁᎳᏗᏍᏗᏱ.
௮நாம் தைரியமாகவே இருந்து, இந்த சரீரத்தைவிட்டுப் போகவும் கர்த்தரிடம் குடியிருக்கவும் அதிகமாக விரும்புகிறோம்.
9 ᎾᏍᎩ ᎢᏳᏍᏗ ᎣᏣᎵᏂᎬᏁᎭ, ᎾᏍᏉ ᎾᎿᎭᏱᏬᏥᏁᎳ, ᎠᎴ ᏲᎩᎪᏁᎳ, ᏦᎦᏓᏂᎸᎢᏍᏗᏱ ᎢᏳᎵᏍᏙᏗᏱ.
௯அதினாலேயே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியில்லாமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவிரும்புகிறோம்.
10 ᎠᏴᏰᏃ ᏂᏗᎥ ᎢᎬᏱᏗᏢ ᏫᎩᎾᏄᎪᎢᏍᏗ ᎨᏎᏍᏗ ᎦᎶᏁᏛ ᏧᏭᎪᏙᏗᏱ ᎦᏍᎩᎸᎢ; ᎾᏍᎩ ᏂᏗᎥ ᎢᏗᏏᏴᏫᎭ ᎡᎩᏁᏗᏱ ᏄᏍᏛ ᏕᎩᎸᏫᏍᏓᏁᎸ ᏗᏗᏰᎸ ᎬᏗ, ᎾᏍᎩᏯ ᏂᎦᏛᏁᎵᏙᎸᎢ, ᎣᏏᏳ ᏱᎾᎩ, ᎠᎴ ᎤᏲ ᏱᎾᎩ.
௧0ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும்.
11 ᎾᏍᎩᏃ ᏦᏥᎦᏔᎭ ᎦᎾᏰᎢᏍᏗ ᎨᏒ ᎤᎬᏫᏳᎯ, ᏙᏥᏍᏗᏰᏗ ᏴᏫ; ᎠᎴ ᎬᏂᎨᏒ ᏃᏣᎵᏍᏗᎭ ᎤᏁᎳᏅᎯ ᎠᎦᏔᎲᎢ; ᎠᎴ ᎤᏚᎩ ᎠᏋᎭ ᎬᏂᎨᏒ ᎢᏯᏆᎵᏍᏙᏗᏱ ᎾᏍᏉ ᏂᎯ ᏕᏣᏓᏅᏛᎢ.
௧௧எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன்.
12 ᎥᏝᏰᏃ ᏂᎯ ᏍᎩᎸᏉᏗᏳ ᎢᏳᎵᏍᏙᏗᏱ ᏲᏥᏂᎳᏗᎭ; ᎢᏨᏁᎭᏍᎩᏂ ᏍᎩᎸᏉᏙᏗᏱ, ᎾᏍᎩ ᎪᎱᏍᏗ ᏳᏂᎭ ᏧᎾᏬᎯᎵᏴᏍᏓᏁᏗ, ᎢᏨᏰᎵᏎᎭ, ᎾᏍᎩ ᎦᏚᏉ ᎡᎯ ᎠᎾᏢᏉᏙᏗᏍᎩ ᏥᎩ, ᏙᏧᎾᏓᏅᏛᏃ ᎠᎾᏢᏉᏙᏗᏍᎩ ᏂᎨᏒᎾ.
௧௨இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மீண்டும் பெருமைப்படுத்திக்கொள்ளாமல், இருதயத்தில் இல்லை, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே, எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படி வாய்ப்பை உண்டாக்குகிறோம்.
13 ᎢᏳᏰᏃ ᏱᏙᎩᎸᏃᏗᎭ, ᎤᏁᎳᏅᎯᏉ ᏅᏗᎦᎵᏍᏙᏗᎭ; ᎢᏳ ᎠᎴ ᏙᎯ ᏱᏙᎦᏓᏅᏔ, ᏂᎯᏉ ᏅᏗᎦᎵᏍᏙᏗᎭ.
௧௩நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம்.
14 ᎦᎶᏁᏛᏰᏃ ᎤᏓᎨᏳᏗ ᎨᏒ ᏙᎦᏘᏁᎦ; ᎯᎠᏰᏃ ᏄᏍᏗ ᏙᏧᎪᏗᎭ, ᎾᏍᎩ, ᎢᏳᏃ ᎠᏏᏴᏫ ᎾᏂᎥ ᏱᏚᏲᎱᎯᏎᎸ, ᎿᎭᏉ ᎾᏍᎩ ᎾᏂᎥ ᏚᏂᏲᎱᏒᎩ;
௧௪கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்;
15 ᎾᏍᎩᏃ ᎾᏂᎥ ᏚᏲᎱᎯᏎᎴᎢ, ᎾᏍᎩ Ꮎ ᏗᏅᏃᏛ ᏥᎩ ᎪᎯ ᎨᏒ ᎢᏳᏓᎴᏅᏛ ᎤᏅᏒᏉ ᎤᎾᏤᎵ ᎤᎬᏩᎵ ᎤᎾᎴᏂᏓᏍᏗᏱ ᏂᎨᏒᎾ, ᎾᏍᎩᏍᎩᏂ Ꮎ ᎤᏤᎵ ᎤᎬᏩᎵ ᏧᏲᎱᎯᏎᎸᎯ ᎠᎴ ᏧᎴᎯᏌᏅᎯ ᏥᎩ.
௧௫வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று வாழாமல், தங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தவருக்கென்று வாழ்வதற்காக, அவர் எல்லோருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம்.
16 ᎾᏍᎩ ᎢᏳᏏᏗ ᎪᎯ ᎨᏒ ᎢᏳᏓᎴᏅᏛ ᎥᏝ ᎩᎶ ᏲᏥᎦᏔᎭ ᎾᏍᎩᏯ ᎤᏇᏓᎵ ᎠᎦᏔᎲᎢ. ᎠᎴ ᎾᏍᏉ ᎢᏳ ᎦᎶᏁᏛ ᎣᏥᎦᏙᎥᏒᎯ ᏱᎩ ᎤᏇᏓᎵ ᎠᎦᏔᎲ ᎾᏍᎩᏯᎢ, ᎠᏎᏃ ᎪᎯ ᎨᏒ ᎢᏳᏓᎴᏅᏛ ᎥᏝ ᎿᎭᏉ ᏲᏥᎦᏔᎭ.
௧௬எனவே, இனிமேல், நாங்கள் ஒருவனையும் சரீரத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் சரீரத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை சரீரத்தின்படி அறியோம்.
17 ᎾᏍᎩ ᎢᏳᏏᏗ, ᎢᏳᏃ ᎩᎶ ᎦᎶᏁᏛᏱ ᎠᏯᎡᏍᏗ ᎾᏍᎩ ᎢᏤ ᎾᎬᏁᎸ; ᏧᏓᎴᏅᏛ ᎤᏪᏘ ᎨᏒ ᎤᎶᏐᏅ; ᎬᏂᏳᏉ, ᏂᎦᏗᏳ ᏧᏓᎴᏅᏛ ᎢᏤ ᏄᎵᏍᏔᏅ.
௧௭இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது.
18 ᎠᎴ ᏂᎦᏗᏳ ᏧᏓᎴᏅᏛ ᎤᏁᎳᏅᎯ ᎢᏳᏩᏂᏌᏛ, ᎾᏍᎩ ᏙᎯ ᏥᏄᏩᏁᎸ ᎡᏗᏍᎦᎩ ᎨᏒ ᏥᏌ ᎦᎶᏁᏛ ᎠᎬᏗᏍᎬᎢ, ᎠᎴ ᎠᏴ ᎣᎦᏒᎦᎶᏔᏅ ᏙᎯ ᎢᎬᏁᎯ ᏗᎦᎸᏫᏍᏓᏁᏗ;
௧௮இவைகளெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
19 ᎯᎠ ᎾᏍᎩ ᎤᏁᎳᏅᎯ ᏙᎯ ᏂᎬᏁᎲᎩ ᎡᎶᎯ ᎬᏩᏍᎦᎩ ᎨᏒ ᎦᎶᏁᏛ ᎬᏗᏍᎬᎩ, ᎤᏂᏍᎦᏅᏨ ᎤᏂᏍᎦᏅᏨᎯ ᏂᏓᏰᎸᎾᏁᎲᎾ; ᎠᎴ ᎠᏴ ᎣᎦᏒᎶᏔᏅ ᎧᏃᎮᏛ ᏙᎯ ᎢᎬᏁᎯ.
௧௯அது என்னவென்றால், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவிற்குள் அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடம் ஒப்புவித்தார்.
20 ᎾᏍᎩᏃ ᎠᏴ ᎣᎩᏅᏏᏛ ᎦᎶᏁᏛ ᎣᏣᏓᏁᏟᏴᏍᏔᏁᎸᎯ; ᎾᏍᎩᏯᏉ ᎤᏁᎳᏅᎯ ᏥᏥᏍᏗᏰᏗᏍᎪ ᎠᏴ ᏦᎬᏗᏍᎪᎢ, ᎦᎶᏁᏛ ᎣᏣᏓᏁᏟᏴᏍᏓᏁᎭ, ᎢᏨᏔᏲᏎᎭ ᎤᏁᎳᏅᎯ ᏙᎯ ᎢᏨᏁᏗᏱ.
௨0ஆகவே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்து, தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினால் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.
21 ᎾᏍᎩᏰᏃ ᎠᏍᎦᏂ ᎾᎦᏔᎲᎾ ᏥᎨᏎᎢ, ᎾᏍᎩ ᎠᏍᎦᎾ ᎤᏰᎸᏅ ᎠᏴ ᎨᏒ ᏅᏧᎵᏍᏙᏔᏅ, ᎾᏍᎩ ᎢᏳᏩᏂᏐᏗᏱ ᎠᏴ ᏂᏗᏍᎦᏅᎾ ᎢᎩᏰᎸᏗᏱ ᎤᏁᎳᏅᎯ ᏕᎦᎧᏂᏍᎬᎢ.
௨௧நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக இருப்பதற்காக, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.