< Ndu Manzaniba 26 >

1 Niki Agrippa a tre ni Bulus, “Wu ka tre kime.” Nikima Bulus a nmerju ni woma nda lu tre wu kpa tuma chuwo.
அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “உன் வழக்கை எடுத்துரைக்க உனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றான். எனவே பவுல் தனது கையினால் சைகை காட்டி தனது சார்பாகப் பேசத் தொடங்கினான்:
2 “Mi ban ndi mi ngyiri ni kpamu, Ichu Agrippa, ni wa mi nji tre mu niye ni shishime luwa, nitu wawu kpi meme wa Yahudawa ba nji ye nha nimu niwuu;
“அகிரிப்பா அரசனே, யூதருடைய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றிற்கும் எதிராக, நான் எனது சார்பாக பேசும்படி, இன்று உமக்கு முன்பாக நிற்பது, ஒரு வாய்ப்பு என கருதுகிறேன்.
3 kima me nitu wu to zan tu ni tu nkon zren Yahudawa rhini sen. Niki, mi bre du u wome ni kru sron.
ஏனெனில், யூதருடைய எல்லா முறைகளைக் குறித்தும், கருத்து முரண்பாடுகளைக் குறித்தும், நீர் நன்றாய் அறிந்திருக்கிறீர். எனவே, நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்.
4 Njanji, Yahudawa wawu ba to zren son mu rhini wa mi vren nze ni meme mu mba ni Urushelima.
“நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்து, என் வாழ்க்கையின் ஆரம்பத்தில் என் நாட்டிலும், பின்பு எருசலேமிலும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதை எல்லா யூதரும் அறிவார்கள்.
5 Ba to nitumu rhini ni mumla, batini son nyme niki, nitu mison na Farasii, grji bi kri gbangban ni nkon hu Irji mbu.
நீண்டகாலமாக அவர்கள் என்னை அறிந்திருக்கிறார்கள். அதனால் நான் எப்படி எங்கள் சமயத்திலுள்ள கண்டிப்பான பிரிவின்படி, ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதை, அவர்கள் விரும்பினால் சாட்சியாகச் சொல்லலாம்.
6 Zizan mi kri ni wayi du ba gaatre nimu nitu yo sron mu ni yo sron kpe ni shishi wa Irji a ti ni ba titi mbu.
எங்கள் தந்தையருக்கு இறைவன் வாக்குத்தத்தம் பண்ணியதில், நான் கொண்டிருக்கும் நம்பிக்கை காரணமாகவே, இன்று நான் இங்கே விசாரணை செய்யப்படுகிறேன்.
7 A he nitu yo sron kpe ni shishi wa ba grji wlon don ha ba ba yo sron wu kpa niwa ba nzu nde Irji hon ni chu mba ni virhi. Wa a he nitu yo sron a, Ichu Yahudawa ba ban nha me.
இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதைக் காணும் எதிர்பார்ப்புடனேயே, எங்கள் பன்னிரண்டு கோத்திரத்தினரும், இரவும் பகலுமாய் இறைவனுக்கு ஆர்வத்துடன் பணிசெய்கிறார்கள். அரசே, அந்த எதிர்பார்ப்பின் காரணமாகவே, யூதர்கள் என்மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.
8 A ngye nizu du mla ya ni kpanyme ndi Irji ni nzu indji lu rjini kwu?
இறந்தவர்களை இறைவன் உயிருடன் எழுப்புவது நம்பமுடியாத செயல் என்று நீங்கள் கருதுவது ஏன்?
9 Zizan, a toki, Ime me mina ta mren ndi mi ti kpi gbugbuwu nitu ka nde Yesu wu Nazarat su.
“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராக இயன்றதையெல்லாம் செய்யவேண்டும் என்று நானும் எண்ணியிருந்தேன்.
10 Mi ti kpi biyi ni Urushelima, Mi vu loyo ni mi tratro gbugbu indji tsatsra wu Irji, ni vunvu kpanyme wa mi kpa rhini ninkon Prist, mba niwa ba sia wuuba, mi yo wo nyime mu nitu kima.
அதையே நான் எருசலேமில் செய்தேன். தலைமை ஆசாரியரின் அதிகாரத்தைப் பெற்று, பரிசுத்தவான்களில் பலரைச் சிறையில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது, அவர்களுக்கு எதிராக நானும் என் ஒப்புதலை வழங்கியிருந்தேன்.
11 Mi ti ba ya, nton gbugbuwu ni mi Sinagog, mba ni ta tsra yoba ni gbengblen du ba tre meme ntiu Irji. Mi ta vra ni nfu nitumba, mba nini tiba ya ka rhini igbu wu meme bari.
பலமுறை அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்தும்படி, ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போனேன். இறைவனை அவமதித்துப் பேசும்படி அவர்களை வற்புறுத்தினேன். நான் அவர்களுக்கு எதிராகக் கடுங்கோபம் கொண்டிருந்ததால், அவர்களைத் துன்புறுத்தும்படி வெளிநாட்டின் பட்டணங்களுக்கும் போனேன்.
12 Niwa mi sia ti toyi, mi hini Damaskus ni yawo kpanyme mba nu nkon rhini kikle Prist;
“இப்படியாக ஒருமுறை நான் தலைமை ஆசாரியரின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்கு போய்க்கொண்டிருந்தேன்.
13 mba ni nkon, hiki, ni tsutsu irji, ichu, mi to kpan lu rjini shulu wa a kpan zan irji, nda bwu kpan kagon me baba indji biwa bana si zren hume.
அரசே, நான் போகும் வழியில், மத்தியான வேளையில், வானத்திலிருந்து ஒரு ஒளியைக் கண்டேன். அது சூரியனைவிடப் பிரகாசமுடையதாய், என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது.
14 Niwa wawumbu ki kurjoku ni meme mi wo ilan ni tre ni me ni ilbe Ibraniyawa ndi Shawulu, Shawulu, u i tie me ya nitu ngye? A ni he ni ya ni du chuza too kpe wu ntsen nyu.
நாங்கள் அனைவரும் தரையில் விழுந்தோம். ஒரு குரல் எபிரெய மொழியில் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அது, ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முட்களை உதைப்பது உனக்குக் கடினமே’ என்றது.
15 Niki mi tre ndi, “Wu nha, Bachi?” I Bachi a sa mu ndi, 'A hi me Yesu wa wu si tiwu ya.
“அப்பொழுது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “‘ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய்.
16 Zizan lu kri ni zande; anitu ndu yi mi tsro kpamu niwu, nitu youyo ni tindu vrenko, mba wa wu vu bla nitu kpi wa wuto nitumu zizan mba kpi wa mi tsro ni ko shishi;
இப்பொழுது நீ எழுந்து காலூன்றி நில். நான் உன்னை என் ஊழியனாகவும், சாட்சியாகவும் நியமிப்பதற்கே, உனக்குக் காட்சியளித்தேன். என்னைக் கண்டது குறித்தும், நான் உனக்குக் காண்பிக்கப் போகிறவற்றிற்கும், நீ சாட்சியாய் இருக்கவேண்டும்.
17 i mi kpau chuwo rhini wo indji ba mba rjini Bikora wa mi si ton ni hi niba,
நான் உன்னை உன் சொந்த மக்களிடமிருந்தும், யூதரல்லாதவர்களிடமிருந்தும் காப்பாற்றுவேன்.
18 ni du hi bwu shishi mba, ndi kma ba sran rjini bwu hini kpan mba rjini son niwobrji shango hini Irji, ni du ba kpa rjini Irji, kpa wru latre mba (gado) wa mi nu ibiwa ba kri bi nitu kpanyme ni me.
நீ அவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து இறைவனிடத்திற்கும் திரும்பும்படி அவர்களுடைய கண்களைத் திறக்கவும், அவர்கள் தங்களுடைய பாவமன்னிப்பைப் பெற்று, என்மேலுள்ள விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடன் இடத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாகவே, நான் உன்னை அனுப்புகிறேன்’ என்றார்.
19 Ni tu kima, Ichu Agrippa, mina kamu ni hutre ira wa a rjini shulu na;
“அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை.
20 Mi hi ni bi Damaskus guchi, nda ka ri ni Urushelima, nda ka kagon gbungblu Judiya, mba ni bikora ngame, mi nu ba tondua, nitu du ba kma sran nda kma ye ni Irji, nda ti ndu wa a bi tsra ni kma sran sron mba.
எனவே முதலாவது தமஸ்குவில் இருந்தவர்களுக்கும், பின்பு எருசலேமிலும் முழு யூதேயாவில் இருந்தவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும்கூட நான் பிரசங்கித்தேன். அவர்கள் மனந்திரும்பி இறைவனிடம் திரும்பவேண்டும் என்றும், தங்களுடைய மனந்திரும்புதலை அவர்கள் தங்கள் செயல்களினால் நிரூபிக்கவேண்டும் என்றும் அறிவித்தேன்.
21 Nitu kima Yahudawa ba vu me lo nimi hekali nda ta son wuu me.
இதனாலேயே யூதர்கள், ஆலய முற்றத்தில் இருந்த என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சித்தார்கள்.
22 Ni kima, me kpa zo wa a ye rji ni Irji, ye ni vi wu luwa, ndi ni kri ni nran hla ni bi tsitsa baba bi kikle ana kpe nkan na, hama niwa anabawa mba Musa ba tre ndi naiye he toki -
ஆனால், இன்றுவரை, நான் இறைவனுடைய உதவியைப் பெற்றவனாய், இங்கே நின்று சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் சாட்சி கொடுக்கிறேன். இறைவாக்கினரும், மோசேயும் என்ன நடக்கும் என்று சொன்னார்களோ, அதையேதான் நானும் சொல்கிறேன். வேறு எதையும் நான் சொல்லவில்லை.
23 ndi Kristi niye ti ya, nitu wawuyi ni guchi tashme rjini kwu, ndani bwuhla ikpan ni indji mbu mba ni bi kora.”
கிறிஸ்து வேதனைகள் அனுபவித்து, பின் இறந்தவர்களிலிருந்து முதலாவதாய் எழுந்திருப்பவராய், தனது சொந்த மக்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் ஒளியைப் பிரசித்தப்படுத்துவார் என்றே அவர்களும் சொன்னார்கள்” என்றார்.
24 Niwa Bulus akle ngla kpama a, Festus a tre ni kikle lan, “Bulus, wu sran; to gbugbu tsro me du ni sran.”
அந்நேரத்தில் பெஸ்து குறுக்கிட்டு பவுலிடம், “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!” உனது அதிக படிப்பினால் “உனக்கு மூளை குழம்பிவிட்டது” என்று சத்தமிட்டுச் சொன்னான்.
25 I Bulus a tre ndi, “Mina sran na, wa azan bi Festus, mi si dbu bla lan tre wu njanji mba wu gaatre ndindi.
அதற்குப் பவுல், “மதிப்புக்குரிய பெஸ்து அவர்களே, எனக்கு மூளை குழம்பவில்லை. நான் சொல்வது உண்மையும், நியாயமானதுமாய் இருக்கிறது.
26 Nitu Ichu to kpi biyi; niki mi tre ni gbengblen sron niwu, nitu mi nyme pempe ndi kpi biyi bana he ni bwu ni wu na, nitu ikpe biyi bana tiba ni kosan na.
அரசர் இவற்றையெல்லாம் அறிந்திருக்கிறார். அதனால்தான் நான் அவருடன் தாராளமாய் பேசுகிறேன். நான் பேசும் இவை ஒன்றும் அவருக்குத் தெரியாமல் நடந்தவை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், இவை மூலைமுடுக்கில் நடந்தவை அல்ல.
27 Wu kpanyme ni anabawa ba, Ichu Agrippa? Mi to ndi wu kpanyme.”
அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்கினரை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்று எனக்குத் தெரியும்” என்றான்.
28 Agrippa hla ni Bulus nid, ni nton fiime toyi, wu son gbronmeyo dumi kma ti Krista?”
அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “என்ன! இந்தக் கொஞ்ச நேரத்திலே, நீ என்னைக் கிறிஸ்துவை பின்பற்றுகிறவனாக்க நினைக்கிறாயா?” என்றான்.
29 Bulus tre ndi, “Mi bre Irji ndi, anita nton fiime ka wu gbron me ana wu megen na, mba wawu biwa ba wo me luwa, du ba he too me, hama ni rjiri ij'bo wu ko tro yi.”
அதற்குப் பவுல், “கொஞ்ச நேரமோ, அதிக நேரமோ, நீர் மட்டுமல்ல, இன்று நான் சொல்வதைக் கேட்கும் அனைவரும், என்னைப்போல் ஆகவேண்டும்; ஆனால் இவ்விதம் சங்கிலிகளால் மட்டும் கட்டப்படக்கூடாது என்றே இறைவனிடம் மன்றாடுகிறேன்” என்றான்.
30 Niki Ichua lunde kri, i gomna mba Bernice ngame, baba biwa bana ki niba.
அரசன் தன் இடத்தைவிட்டு எழுந்தான். அவனுடன் ஆளுநரும், பெர்னிக்கேயாளும், அவர்களுடன் இருந்தவர்களுங்கூட இருக்கைகளை விட்டு எழுந்தார்கள்.
31 Niwa ba rju don kikle tra u son mba, ba si tre ni kpamba ndi, “Igu yi na ti kpe wa ani tsra u kwu ko ka u lo zi na.”
அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போகையில் ஒருவரோடொருவர், “இவன் மரணதண்டனையையோ, சிறைத் தண்டனையையோ பெறுவதற்கான எதையும் செய்யவில்லை” என்று பேசிக்கொண்டார்கள்.
32 Agrippa a tre ni Festus ndi, kinina chu Iguyi chuwo hama wa ana bre hi to Kaisar.”
அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவிடம், “இவன் ரோமப் பேரரசனுக்கு மேல்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால், இவனை விடுவித்திருக்கலாம்” என்றான்.

< Ndu Manzaniba 26 >