< Rom 11 >
1 Aab́ dab neen aatuna, Ik'o bí ashuwotsi juuwera? B́ jamon juweratse! taa ttookon Israe'el ash taane, Abraham naaro wotat Bíniyam jirots taane.
அப்படியானால் இறைவன் தன்னுடைய மக்களைப் புறக்கணித்துவிட்டாரா என்று நான் கேட்கிறேன். இல்லவே இல்லை! நானும் இஸ்ரயேலைச் சேர்ந்தவனே, நான் ஆபிரகாமின் சந்ததியில் பென்யமீன் கோத்திரத்தில் பிறந்தவன்.
2 Ik'o shini b́ marat'ts ashuwotsi juweratse, S'ayn mas'aafo Eliyas jangosh eeg bíettsok'o gawatsteya? Dab Eliyas Israe'el ashuwotsi Ik' shinatse awuk'o ett b́ s'aamitsok'o danatsteya?
தாம் முன்னறிந்த தம்முடைய மக்களை இறைவன் புறக்கணிக்கவில்லை. எலியாவைப்பற்றி சொல்கின்ற இடத்திலே, வேதவசனம் என்ன சொல்கிறது என்றும், அவன் எவ்விதம் இஸ்ரயேலுக்கு விரோதமாக இறைவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினான் என்றும் அறியாதிருக்கிறீர்களா?
3 Manoor Eliyas «Doonzono! nebiyiwotsi úd'rne wosh t'intseyiru t'arap'ezono gaakrne, ts'uziye oori, taano úd'oshe bogeyiri» etre b́ teshi.
அவன், “கர்த்தாவே அவர்கள் உம்முடைய இறைவாக்கினரைக் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரமே மீதியாயிருக்கிறேன். அவர்கள் என்னையும் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்” என்றான்.
4 Ernmó Ik'o eega ettniya bísh bíaani? «Ba'ali eteets dozets ik'osh tuk'umalerawo shawat kúm ashuwotsi ttokish ooridek're» etre bísha.
அதற்கு இறைவன், அவனுக்குக் கூறிய பதில் என்ன? “இல்லை, நீ மட்டுமல்ல; பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத, ஏழாயிரம் பேர்களை அவர்களுக்குள் நான் எனக்கென்று வைத்திருக்கிறேன்” என்றார்.
5 And dúranatse b́wotsiyal, s'aaton marat'ere ortsuwots muk' Israe'el ashuwots fa'ane.
அப்படியே தற்காலத்திலும் கிருபையினால் தெரிந்துகொள்ளப்பட்ட மீதியானவர்கள் இருக்கிறார்கள்.
6 Marat'onwere s'aaton b́ wotiyal finonaliye etee, finon b́ wotiyal, s'aato s'aat b́ woto orerere etee.
அவர்கள் கிருபையினால் தெரிந்துகொள்ளப்பட்டார்கள் என்றால், அது இனியும் நற்செயல்களினால் இராதே. அவர்களின் நற்செயல்களினால் தெரிந்துகொள்கிறார் என்றால், இறைவனின் கிருபை உண்மையான கிருபையாயிராதே.
7 Eahe b́ k'awuntso eebi b́wotiti? Esra'el ashuwots bogetso datsatsno, marat'etswotsmó bo geyiruwo daatsrne, oortsuwotsmó bo maac'o bokup'i.
ஆகையால் என்ன? இஸ்ரயேலர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தேடியதை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களில் இறைவன் தெரிந்துகொண்ட சிலரே அதைப் பெற்றுக்கொண்டார்கள். மற்றவர்களோ மனம் கடினப்பட்டவர்கள் ஆனார்கள்.
8 Hanuwere «Ik'o bo nibo b́ dúngiyi, mansh eshe hambetsish b́ borfetso bo ááwo be'atse, boowazonuwere shiyatse» ett guut'etsok'one.
இது வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “இறைவன் அவர்களுக்கு ஒரு மந்தமுள்ள ஆவியைக் கொடுத்தார். இதனால் இன்றுவரை அவர்கள் தங்களுடைய கண்களினால் காணமுடியாதவர்களாயும், காதுகளால் கேட்க முடியாதவர்களாயும் இருக்கிறார்கள்.”
9 Dawitwere, «Bomishi maronu detset kambo, dikit gop'o wotar boon kic'ituwe! bofiniru gond fino botokats boree!
தாவீது இவர்களைக்குறித்து: “அவர்களுடைய விருந்துகள், அவர்களுக்குக் கண்ணியாகவும், பொறியாகவும், தடுமாறும் கல்லாகவும், தங்களுக்குரிய தண்டனையாகவும் இருக்கட்டும்.
10 Bo ááwo b́ be'awok'o t'aluwowe, bojik'o gond bek'on jam aawo k'urowe» etre.
அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும், அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும்” என்கிறான்.
11 Aab́ aani neen aatuna, ayhudiyots bodihi aani boturawok'o wotatniya? Mank'owaliye! ernmó ayhudiyots gondo bo fintsi jangosh Ayhudi woterawwots kasho bodaatsi, han b́wotiye ayhudiyots Ayhudi woterawwotsi bo ookoritwok'o woshoshe.
நான் மீண்டும் கேட்கின்றேன்: இஸ்ரயேலர் விழுந்துபோவதற்காக இடறினார்களா? இல்லவே இல்லை, இஸ்ரயேலர்களுடைய மீறுதலினாலேயே, யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு வந்தது. இதைக்கண்டு இஸ்ரயேலர்கள் பொறாமைப்பட்டு இரட்சிப்பைத் தேடவேண்டுமென்பதே, இறைவனுடைய நோக்கமாயிருந்தது.
12 Ayhudiyots gond fino dats jamosh deero datsire, bodiho Ik' ash woterawotssh deero wotere, Ayhudi jamwots bookashink'ee deero awuk'o aye b́wotiyank'oni!
இஸ்ரயேலர்களுடைய மீறுதல் உலகத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொடுத்ததே; அவர்களுடைய இழப்பு யூதரல்லாத மக்களுக்கு ஆசீர்வாதமாயிற்று என்றால், அவர்கள் எல்லோரும் மீட்படைந்தால் இன்னும் எவ்வளவு பெரிதான ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.
13 And nokeewir itsh Ik' ash woterawwotsshe, Ik' ash woterawwotssh wosheetso twottsok'osh t finosh mango taash shiyeetuwe,
இப்பொழுது யூதரல்லாதவர்களாகிய உங்களோடு நான் பேசுகிறேன். நான் உங்களுக்கு அப்போஸ்தலனாய் இருப்பதனால், என்னுடைய ஊழியத்தைக்குறித்துப் பெருமிதம் அடைகிறேன்.
14 T meets jag wotts ayhudiwotsi okooriyoshe, mank'onowere daneraka ik ikuwotsi kashiyo falituwe etee.
யூதர்களாகிய என் மக்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரையாவது இரட்சிக்க விரும்புகிறேன்.
15 Ik'o boon b́ juwoor datsatsi ash k'oshuwots Ik'onton b́ manetka wotiyal Ik'o boon b́ dek'or eeg b́wotituwok'o arefa? Haniyere k'irotse tuwok'oyi etee!
ஏனெனில் இஸ்ரயேலர்களைப் புறக்கணிப்பட்டபோதே உலகம் இறைவனுடன் ஒப்புரவாகுமானால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்போது எப்படி இருக்கும்? அது மரித்தோருக்கு உயிர் கிடைப்பதுபோல் இருக்குமல்லவா?
16 Ik naari boot'otse shintsotsi kayo S'ayinka wotiyal boot' jamo S'ayinkee b́ wotiti, mank'o mit iko b́s'ap'o S'ayina wotiyal b́ jabwotswere S'ayine bowotiti.
பிசையப்பட்ட மாவிலிருந்து முதற்பலனாகக் கொடுக்கப்படும் பகுதி பரிசுத்தமாய் இருக்குமாயின், மீதியான பிசைந்தமாவு முழுவதுமே பரிசுத்தமானதே; மரத்தின் வேர் பரிசுத்தமானதாய் இருந்தால், அதன் கிளைகளும் பரிசுத்தமானவைகளே.
17 Worfitsi woyra eteyiru mit jaabo wotts ayhudiyots k'ut'eyar bodihitka wotiyal it boditsi woyiriy mit jaabo wotts Ik' ash woterawwots bo shegro shááto shegrshr weyiri zeyito bítse b́keshiru s'ap'ootse keshiru gaalonat deeron kaytsuwotsi itwotiyakon, b́ jaabwotsats ít'k'ayere.
நல்ல ஒலிவமரத்திலிருந்து சில கிளைகள் முறிக்கப்பட்டு, அவ்விடங்களில் காட்டு ஒலிவமரத்தின் கிளைகளாகிய நீங்கள் ஒட்டப்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது நல்ல ஒலிவமரத்தின் வேரிலிருந்து வரும் சாரத்திலே நீங்களும் பங்குபெறுகிறீர்கள்.
18 It Ik' ash woterawotso jaabwotsats ít'k'ayere, it it'alomó it jaab mec'ro it wottsosh s'ap'oni itn kuriti bako it b́ s'ap'o kurirwotsi itwoterawok'o dande'ere.
எனவே முறிக்கப்பட்ட அந்தக் கிளைகளைப் பார்த்து இகழ்ந்து, நீங்கள் பெருமைகொள்ள வேண்டாம். அப்படி நீங்கள் பெருமைப்பட்டால், நீங்கள் வேரைத் தாங்குகிறவர்கள் அல்ல, வேரே உங்களைத் தாங்குகிறது என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.
19 Ernmó «Jabúwots tishat bodihi, taa bo beyok tikinditwok'o» etaatne b́ teshi.
“நாங்கள் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்த கிளைகள் முறித்துப்போடப்பட்டன” என்று நீங்கள் சொல்லலாம்.
20 It ettso aree, ernmó bo k'ut'at bojuwe amano bok'aztsosh b́ wottsotse itwere k'up'at it ned'iye itamantsoshe, eshe, shata bako hit'o itn geyiratse.
உண்மைதான், ஆனால் அவர்கள் விசுவாசிக்காததினால்தான் முறித்துப்போடப்பட்டார்கள். நீங்களோ விசுவாசிக்கிறதினால் மட்டுமே இன்னும் நிலைத்து நிற்கிறீர்கள். எனவே நீங்கள் பெருமைகொள்ள வேண்டாம், பயபக்தியாயிருங்கள்.
21 Ik'o azeewon jaab wotts ayhudiyotssh maac'o k'ewo b́ k'aziyakon itsh maac'o k'eweratse.
ஏனெனில் இறைவன் இயற்கையாய் வளர்ந்த நல்ல ஒலிவமரத்தின் இயல்பான கிளைகளையே முறித்துப்போட்டாரே. அப்படியானால் ஒட்டப்பட்ட கிளையான உங்களை அவர் எப்படித் தப்பவிடுவார்.
22 Eshe Ik' doowonat Ik' shatiyon aab s'iilere, b́ shatiyonu b́kitsir dihitswotsats b́ wotor b́ doo wotonu b́ kitsir itshee, hanowere b́k'alir b́ dowon k'up'ar it betka wotiyalemó b́ doo itsh wotituwe, kup'o itk'azalomó itwere k'ut'eyarniye it dihiti.
ஆகவே இறைவனுடைய தயவையும் கண்டிப்பையும் குறித்து யோசித்துப் பாருங்கள்: கீழ்ப்படியாமையினால் விழுந்துபோனவர்களோடு அவர் கண்டிப்பாய் இருக்கிறார்; உங்களுக்கோ தயவு காட்டுகிறார். நீங்கள் தொடர்ந்து அவருடைய தயவைப் பெறும் விதத்தில் நடக்காவிட்டால், அவர் உங்களையும் வெட்டிப்போடுவார்.
23 Ayhudiyots bo amaniyal yoots bobeyok aanitune, Ik'o yoots bobeyok boon aaniyosh falituwe.
இஸ்ரயேலர்களும் தங்களுடைய அவிசுவாசத்தில் தொடர்ந்து நிற்காமல், அதை விட்டுவிட்டால், அவர்கள் மீண்டும் கிளைகளாக ஒட்டப்படுவார்கள். அவர்களைத் திரும்பவும் ஒட்டிவைக்க இறைவன் வல்லவராக இருக்கிறார்.
24 It Ik' ash woterawwotsmó azeyon boditsi woyiri miti jaabo wotat teshtsuwots it beyokalo worfotsi woyiri mitats tokeyo it faliyakon hanots bo azeyon worfitsi woyiri miti jaabo wotts ayhudiyotsmó yoots bobeyok aanar tokeyo aawuk'oneya boosh b́ maaweeti!
அதற்கும் மேலாக இயற்கையாய் வளர்ந்த ஒரு காட்டு ஒலிவமரத்திலிருந்து நீங்கள் வெட்டியெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட நல்ல ஒலிவ மரத்தில் இயற்கைக்கு மாறாக ஒட்டப்பட்டீர்கள். அப்படியானால் இயற்கையாகவே கிளைகளாய் இருக்கும் இஸ்ரயேலர்கள், தங்களது சொந்த ஒலிவ மரத்தோடு எவ்வளவு சுலபமாய் ஒட்டிவைக்கப்படுவார்கள்.
25 Ti eshuwotso! «Danfone» err it'k'ayere itsh tkeewitwo ááshts keewo fa'ee, bíwrer Israe'el ashuwots k'azts woto b́ jamosh b́woterawo Ik' ash Woteraw jamwots s'eenon Ik'ok bowafetsoshe.
பிரியமானவர்களே, நீங்கள் உங்களை அறிவாளிகள் என்று தற்பெருமை கொள்ளாதபடி, இந்த இரகசியத்தின் உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இஸ்ரயேலர்கள் இப்பொழுது பெரும்பாலும் கடினத்தன்மை உடையவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் யூதரல்லாத மக்களைச் சேர்ந்த முழு எண்ணிக்கையினரும் இரட்சிப்புக்கு உள்ளாகும் வரைக்குமே அப்படி கடினப்பட்டிருப்பார்கள்.
26 Eshe hank'on Israe'el asha ash jamwots kashitúne. Mansh hank'o ett guut'ere, «Kashituwo S'iyonn weetuwe, Yak'ob naar jamatse gondo wokiituwe,
இவ்விதமாய் எழுதியிருக்கிறபடி எல்லா இஸ்ரயேலரும் இரட்சிக்கப்படுவார்கள்: “மீட்கிறவர் சீயோனிலிருந்து வருவார்; அவர் யாக்கோபின் சந்ததிகளிலிருந்து, இறைவனை மறுதலிக்கும் தன்மையை நீக்கிப்போடுவார்.
27 Bomorro boosh t t'afiyor bonton tkindit taaro haniye.»
நான் அவர்களுடைய பாவங்களை நீக்கிப்போடும்போது, இதுவே நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை.”
28 Israe'el ashuwots doo shishiyosh aap'etso dek'o bok'aztsotse, itjangosh it Ik' ash woterawotssh b́dooyish Ik'osh balangaro bowoti, bomarat'ewonmó nihiwots jangats tuutson Ik'o boon shunknee.
நற்செய்தியைப் பொறுத்தவரையில், இஸ்ரயேலர்கள் இப்பொழுது உங்கள் நிமித்தமாக பகைவராய் இருக்கிறார்கள். ஆனால் தெரிந்துகொள்ளுதலைப் பொறுத்தவரையில், அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி இறைவன் இன்னும் அவர்களில் அன்பாயிருக்கிறார்.
29 Ik'o noon marat'de'er b́ deero bí imiyakon b́ k'alts keewumansh b́gawtso woniratse.
இறைவன் கொடுக்கும் வரங்களையும் அழைப்பையும் அவர் ஒருபோதும் எடுத்துவிடமாட்டார்.
30 It Ik' ash woterawwots shin Ik'osh alerawwotsiye it teshi, andomó ayhudiyots aleyo bok'aztsotse it Ik' maac' k'ewo it datsi.
முன்பு நீங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, இஸ்ரயேலரின் கீழ்ப்படியாமையின் பலனாய் இரக்கம் பெற்றிருக்கிறீர்கள்.
31 It maac' k'ewo it daatstsok'on boowere maac' k'ewo bodatsituwok'o boowere and Ik'osh alerawwotsi woterne.
அதுபோலவே இஸ்ரயேலரும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். இறைவன் உங்களுக்குக் காண்பித்த இரக்கத்தின் பலனாய், அவர்களும் இரக்கம் பெறுவார்கள்.
32 Ik'o b́ maac' k'ewo ash jamosh kitsosha ett ash jamwotsi ale k'azon is'k'reroshná. (eleēsē )
ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார். (eleēsē )
33 Ik' gaalona, dani teleefonat danoonúwere awuk'o eene! bí angsho fal bíats boderake, b́ werindonu danerake.
ஆ, இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் நிறைவு எவ்வளவு ஆழமானது! அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறியமுடியாதவை, அவருடைய வழிமுறைகளோ விளங்கிக்கொள்ள முடியாதவை.
34 «Ik' hasabiyo danetuwo kone? Bísh iztsi wotituwonmó kone?
“கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?”
35 Ik'osh gushituwonat b́ gushitsono dek'etuwo kone?»
“இறைவன் தனக்குப் பலனைக் கொடுக்கும்படி யார் முன்னதாகவே இறைவனுக்குக் கொடுத்திருக்கிறான்?”
36 Jam keewo b́ daatse bíyokne, jam keewo bíne b́beeti, jam keewo bíshe b́ beeyeti, dúre dúron mango bísh wotowe! Amen! (aiōn )
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )