< ଜହନ୍‌ 2 >

1 ଦୁୟ୍‌ଦିନାର୍‌ ହଃଚେ ଗାଲିଲିର୍‌ କାନା ନାଉଁଆର୍‌ ଗଃଳେ ଗଟେକ୍‌ ବିବା ଅୟ୍‌ଲି । ଆର୍‌ ଜିସୁର୍‌ ଆୟ୍‌ସି ସେତି ରିଲି;
இவை நடந்து மூன்றாவது நாளிலே கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரிலே ஒரு திருமணம் நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கே இருந்தாள்.
2 ଜିସୁକେ ଆର୍‌ ତାର୍‌ ଚେଲାମଃନ୍‌କେ ହେଁ ବିବାତଃୟ୍‌ କୁଦି ରିଲାୟ୍‌ ।
இயேசுவும் அவருடைய சீடர்களுங்கூட அந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
3 ଅଙ୍ଗୁର୍‌ ରଃସ୍‌ ସଃର୍ଲାକ୍‌ ଜିସୁର୍‌ ଆୟ୍‌ସି ଜିସୁକେ କୟ୍‌ଲି, “ସେମଃନାର୍‌ ଅଙ୍ଗୁର୍‌ ରଃସ୍‌ ନାୟ୍‌ ।”
திராட்சைரசம் தீர்ந்துபோனபோது, இயேசுவின் தாய் அவரிடத்தில், “திராட்சைரசம் தீர்ந்துவிட்டது” என்று சொன்னாள்.
4 ସେତାକ୍‌ ଜିସୁ ତାକ୍‌ କୟ୍‌ଲା, “ଏଗା ଆୟା, ମକ୍‌ କାୟ୍‌ରି କଃରୁକେ ଅୟ୍‌ଦ୍‌? ଅଃବେ ହଃତେକ୍‌ ମର୍‌ ବେଳା ନାସେତା ।”
அப்பொழுது இயேசு, அம்மா, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? “என் நேரம் இன்னும் வரவில்லையா?” என்றார்.
5 ଜିସୁର୍‌ ଆୟ୍‌ସି ସେବାକାରିମଃନ୍‌କେ କୟ୍‌ଲି, “ଜିସୁ ତୁମିମଃନ୍‌କେ ଜାୟ୍‌ବଃଲି କୟ୍‌ଦ୍‌, ସେରି କଃରା ।”
இயேசுவின் தாயோ வேலைக்காரரைப் பார்த்து, “அவர் உங்களுக்கு எதைச் சொல்கிறாரோ அதைச் செய்யுங்கள்” என்றாள்.
6 ଆର୍‌ ସେଲଃଗେ ଜିଉଦିମଃନାର୍‌ ନିର୍ମୁଳ୍‌ ଅଃଉତା ବିଦି ହଃର୍କାରେ ହଃତି ଗୁନାୟ୍‌ ହାଁଚ୍‌କଳି ମୁତା ହାଣି ଦଃର୍‌ତାର୍‌ ଚଅଗଟ୍‌ ଟେଳାୟ୍‌ ତିଆର୍‌ ଅୟ୍‌ଲା ବଃଡ୍ ବଃଡ୍ ହାଣି ଗୁନା ରିଲି । ଗଟେକ୍‌ ଗଟେକ୍‌ ହାଣି ଗୁନାୟ୍‌ ହାଁଚ୍‌କଳି ମୁତା ହାଣି ଦଃର୍ତିରିଲି ।
அவ்விடத்தின் அருகில், தண்ணீர் வைக்கும் ஆறு கற்சாடிகள் இருந்தன. இவ்விதமான கற்சாடிகளையே யூதர்கள் சடங்காச்சாரச் சுத்திகரிப்புக்கு உபயோகித்தார்கள். ஒவ்வொரு கற்சாடியும் இருபதிலிருந்து முப்பது குடங்கள்வரைத் தண்ணீர் கொள்ளும்.
7 ଜିସୁ ଦଃଙ୍ଗ୍‌ଳାମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, “ଇ ଗୁନାୟ୍‌ମଃନ୍ ହାଣି ବଃର୍ତି କଃରା ।” ସେତାକ୍‌ ସେମଃନ୍ ହଃତିତଃୟ୍‌ ଗଃଳା ହଃତେକ୍‌ ବଃର୍ତି କଃଲାୟ୍‌ ।
இயேசு வேலைக்காரரிடம், “அந்தக் கற்சாடிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்றார்; அப்படியே அவர்கள் நிரம்பி வழியத்தக்கதாய் நிரப்பினார்கள்.
8 ଜିସୁ ସେମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, “ଅଃବେ ଇତିର୍‌ ହାଣି ଡୁବି ନଃୟ୍‌କଃରି ବଜିର୍‌ ବଃଣ୍ଡାର୍‌ ଗଃରିଆକ୍‌ ଦିଆସ୍‌ ।” ସେତାକ୍‌ ସେମଃନ୍ ତାର୍‌ ଲଃଗେ ନିଲାୟ୍‌ ।
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இதிலிருந்து மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடம் கொடுங்கள்” என்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.
9 ବଃଣ୍ଡାର୍‌ ଗଃରିଆ ସେ ଅଙ୍ଗୁର୍‌ ରଃସ୍‌ ଅୟ୍‌ରିଲା ହାଣିକ୍‌ ଚାକିକଃରି ସେରି କୁୟ୍‌ତିହୁଣି ଆୟ୍‌ଲି, ସେରି ଜାଣୁ ନଃହାର୍‌ଲା, ମଃତର୍‌ ଜୁୟ୍‌ମଃନ୍‌ ବଃଣ୍ଡାର୍‌ଗଃରିଆକ୍‌ ହାଣି ଡୁବି ଦିଲାୟ୍‌ ସେମଃନ୍ ଜାଣି ରିଲାୟ୍‌, ସେତାର୍‌ ଗିନେ ସେ ବଃରକ୍‌ କୁଦିକଃରି କୟ୍‌ଲା,
பந்தி விசாரிப்புக்காரன், திராட்சை இரசமாய் மாறியிருந்த அந்தத் தண்ணீரை ருசித்துப் பார்த்தான். அது எங்கேயிருந்து வந்தது என்று அவனுக்குத் தெரியாதிருந்தது; ஆனால் தண்ணீரை நிரப்பிய வேலைக்காரருக்கே அது தெரிந்திருந்தது. அப்பொழுது பந்தி விசாரிப்புக்காரன் மணமகனை ஒரு பக்கமாய் கூட்டிக்கொண்டுபோய்,
10 “ସଃବୁଲକ୍‌ ହଃର୍ତୁମ୍‌ ନିକ ଅଙ୍ଗୁର୍‌ ରଃସ୍‌ ଦେତି, ଆର୍‌ ଲକ୍‌ମଃନ୍ କାୟ୍‌କଃରି ମାତ୍‌ଲା ହଃଚେ ବଃର୍ନ୍‌ରି ଦେତି; ମଃତର୍‌ ତୁମି ଅଃବେ ହଃତେକ୍‌ ନିକ ଅଙ୍ଗୁର୍‌ ରଃସ୍‌ ସଃଙ୍ଗାୟ୍‌ ଆଚାସ୍‌ ।”
அவனிடம், “சிறந்த திராட்சை இரசத்தையே எல்லோரும் முதலில் கொடுப்பார்கள். விருந்தாளிகள் நிறைய குடித்த பின்பே தரம் குறைந்த இரசத்தைக் கொடுப்பார்கள். ஆனால் நீரோ சிறந்த இரசத்தை இவ்வளவு நேரமாய் வைத்திருந்திருக்கிறீரே” என்றான்.
11 ଜିସୁ ଇବାନ୍ୟା ହଃର୍ତୁମେ ଗାଲିଲିର୍‌ କାନା ଗଃଳେ କାବା ଅଃଉତା ଚିନ୍ ଆରୁମ୍‌ କଃରି ଅଃହ୍‌ଣାର୍‌ ଜଃଜ୍‌ମାନ୍‌ ଦଃକାୟ୍‌ଲା, ଆର୍‌ ତାର୍‌ ଚେଲାମଃନ୍ ତାର୍‌ତଃୟ୍‌ ବିସ୍ୱାସ୍‌ କଃଲାୟ୍‌ ।
இதுவே இயேசு செய்த அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஆகும். அதை அவர் கலிலேயாவிலுள்ள கானாவிலே செய்தார். இவ்விதமாய் இயேசு தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
12 ଇତାର୍‌ ହଃଚେ ଜିସୁ ଅଃହ୍‌ଣାର୍‌ ଆୟ୍‌ସି, ବାୟ୍‌ମଃନ୍ ଆର୍‌ ଚେଲାମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ କପୁର୍ନାହୁମ୍‌ ଗଃଳେ ଗଃଲାୟ୍‌; ଆରେକ୍‌ ସେମଃନ୍ ସେତି କଃତି ଦିନ୍ ରିଲାୟ୍‌ ।
இதற்குப் பின்பு இயேசு தம்முடைய தாயோடும், சகோதரரோடும், தம்முடைய சீடரோடும் கப்பர்நகூமுக்குச் சென்றார். அங்கே அவர்கள் சிலநாட்கள் தங்கினார்கள்.
13 ସଃଡେବଃଳ୍‌ ଜିଉଦିମଃନାର୍‌ ମୁକ୍ଳାଉଁଣି ହଃର୍ବ୍‌ ଚଃମେ ଅୟ୍‌ ଆସିରିଲି, ଆର୍‌ ଜିସୁ ଜିରୁସାଲମେ ଗଃଲା ।
யூதருடைய பஸ்கா என்ற பண்டிகைக்கான காலம் நெருங்கி வந்தபோது, இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
14 ଆରେକ୍‌, ଜିସୁ ମନ୍ଦିରେ ଗାୟ୍‌, ମେଣ୍ଡା, ହାଣ୍ଡ୍‌କା ବେବାରିମଃନ୍‌କେ ଆର୍‌ ଡାବୁ ବାଦ୍‌ଲାଉମଃନ୍‌ କେ ବଃସି ରିଲାର୍‌ ଦଃକ୍‌ଲା,
ஆலய முற்றத்திலே ஆடுமாடுகளையும், புறாக்களையும் விற்கிறவர்களை அவர் கண்டார். இன்னும் சிலர் அங்கே உட்கார்ந்து மேஜைகளிலே நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார்.
15 ସେତାକ୍‌ ସେ ଡର୍‌ଲଃଗେ ସାଟ୍‍ଣି ତିଆର୍‌ କଃରି ଗାୟ୍‌, ମେଣ୍ଡା ମଃନ୍‌କେ ମନ୍ଦିରେ ହୁଣି ବାର୍‌ କଃରି ଦିଲା । ଡାବୁ ବାଦ୍‌ଲାଉମଃନାର୍‌ ସଃବୁ ଟେବୁଲ୍‌ମଃନ୍‌କେ ଉଲ୍‌ଟାୟ୍‌ ଦଃୟ୍‌ ଟଃକା ବିଚ୍ରି ହଃକାୟ୍‌ଲା
எனவே இயேசு ஒரு கயிற்றைச் சவுக்கைப்போல் முறுக்கி எடுத்துக்கொண்டு, அவர்கள் எல்லோரையும் ஆலயப் பகுதியில் இருந்து துரத்தினார். ஆடுமாடுகளையும் துரத்தினார். நாணயம் மாற்றுவதில் ஈடுபட்டிருந்தவர்களின் நாணயங்களை எல்லாம் அவர் கொட்டிச் சிதறடித்து, அவர்களுடைய மேஜைகளைப் புரட்டித்தள்ளினார்.
16 ଆର୍‌ ଜିସୁ ହାରୁଆ ବେବାରିମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, “ଇ ସଃବୁକ୍‌ ଇତି ହୁଣି ଦଃରି ଜାହା, ମର୍‌ ଉବାର୍‌ ଗଃର୍‌କେ ବେବାର୍‌ ଗଃର୍‌ କଃରା ନାୟ୍‌ ।”
இயேசு புறாக்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “இவைகளை இங்கிருந்து அகற்றிவிடுங்கள். என்னுடைய பிதாவின் வீட்டைச் சந்தையாக மாற்ற எப்படித் துணிந்தீர்கள்!” என்றார்.
17 “ଏ ପବିତ୍ର ଇସ୍ୱର୍‌, ତର୍‌ ଗଃରାର୍‌ ଗିନେ ଗଃର୍ବେ ଜୟ୍‌ ଲାଗ୍‌ଲା ହର୍‌ ମକ୍‌ ଚିତା ମାଡି ବଃସେଦ୍‌ ।” ଇରି ଦଃର୍ମ୍‌ ସାସ୍ତରେ ଲେକା ଆଚେ ବଃଲି ତାର୍‌ ଚେଲାମଃନ୍‌କେ ମଃନେ ହଃଳ୍‌ଲି ।
அப்பொழுது இயேசுவினுடைய சீடர்களுக்கு, “உம்முடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் என்னைச் சுட்டெரித்தது” என்று எழுதப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது.
18 ସେତାକ୍‌ ଜିଉଦିମଃନାର୍‌ ମୁଳିକାମଃନ୍ ଜିସୁ ହାକ୍‌ ବାଉଳି ଆସି ଇରି ହଃଚାର୍ଲାୟ୍‌, ତୁୟ୍‌ ଇସଃବୁ କାମ୍‌ କଃରୁକେ “ଅଃଦିକାର୍‌ ହାୟ୍‌ ଆଚ୍‌ସି, ବଃଲି ଅଃମିମଃନ୍‌ କଃନ୍‌କଃରି ଜାଣୁନ୍ଦ୍‌ ଅଃମିମଃନ୍‌କ୍‌ କାୟ୍‌ ଚିନ୍ ଦଃକାଉଁହାର୍ସି?”
பின்பு யூதர்கள் அவரிடம், “இவைகளை எல்லாம் நீர் செய்கிறீரே, இதை எந்த அதிகாரத்தோடு செய்கிறீர் என்று நாங்கள் அறிவதற்கு, நீர் எங்களுக்கு என்ன அற்புத அடையாளத்தைச் செய்துகாட்டுவீர்?” என்று கேட்டார்கள்.
19 ଜିସୁ ସେମଃନ୍‌କେ ଉତୁର୍‌ ଦିଲା, “ତୁମିମଃନ୍ ଇ ମନ୍ଦିର୍‌କେ ନଃସ୍ଟ୍‌ କଃଲେକ୍‌, ତିନ୍ ଦିନ୍‌ ବିତ୍ରେ ମୁୟ୍‌ ସେରି ଆରେକ୍‌ ତିଆର୍‌ କଃରିନ୍ଦ୍‌ ।”
இயேசு அவர்களுக்குப் பதிலாக, “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள். நான் அதைத் திரும்பவும் மூன்று நாளில் எழுப்புவேன்” என்றார்.
20 ସେତାକ୍‌ ଜିଉଦିମଃନ୍ କୟ୍‌ଲାୟ୍‌, “ଇ ମନ୍ଦିର୍‌ ତିଆର୍‌ କଃରୁକେ ଦୁୟ୍‌କଳି ଚଅ ବଃର୍ସ୍‌ ଲାଗି ଆଚେ; ଆର୍‌ ତୁୟ୍‌ କାୟ୍‌ରି ସେରି ତିନିଦିନ୍ ବିତ୍ରେ ତିଆର୍‌ କଃର୍ସି?”
அதற்கு யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு நாற்பத்தாறு வருடங்கள் எடுத்தன. நீர் இதை மூன்று நாட்களில் எழுப்புவீரோ?” என்றார்கள்.
21 ମଃତର୍‌ ଜିସୁ ତାର୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ଗଃଗାଳ୍‌ ମନ୍ଦିର୍‌କେ ଦଃକାୟ୍‌ ଇ କଃତା କୟ୍‌ରିଲା ।
ஆனால் இயேசு குறிப்பிட்டுச் சொன்னதோ தமது உடலாகிய ஆலயத்தையே.
22 ଜିସୁ ମଃରି ଉଟ୍‌ଲା ହଃଚେ ତାର୍‌ ଚେଲାମଃନ୍ ମଃନେ ଏତାୟ୍‌ଲାୟ୍‌ ଜେ ସେ ଇରି କୟ୍‌ ରିଲା; ଆରେକ୍‌, ସେମଃନ୍ ଦଃର୍ମ୍‌ ସାସ୍ତର୍‌ ଆର୍‌ ଜିସୁର୍‌ କୟ୍‌ଲା କଃତାକ୍‌ ସଃତ୍‌ କଃଲାୟ୍‌ ।
இயேசு இப்படிச் சொல்லியது அவர் மரித்தவர்களில் இருந்து உயிரோடு எழுந்தபின், சீடர்களுடைய நினைவுக்கு வந்தது, அவர்கள் வேதவசனத்தையும் இயேசு பேசிய வார்த்தைகளையும் விசுவாசித்தார்கள்.
23 ମୁକ୍ଳାଉଁଣି ହଃର୍ବ୍‌ ବଃଳ୍‌ ଜିସୁ ଜିରୁସାଲମେ ରିଲାବଃଳ୍‌ ଗାଦେକ୍‌ ଲକ୍‌ ସେ କଃଲା କାବା ଅଃଉତା ଚିନ୍ ଦଃକି ତାକେ ସେମଃନ୍ ତାର୍‌ ନାଉଁଏ ବିସ୍ୱାସ୍‌ କଃଲାୟ୍‌ ।
பஸ்கா என்ற பண்டிகையின்போது இயேசு எருசலேமில் இருக்கையில், அநேக மக்கள் அவரால் செய்யப்பட்ட அடையாளங்களைக் கண்டு, அவருடைய பெயரிலே விசுவாசம் வைத்தார்கள்.
24 ମଃତର୍‌ ଜିସୁ ସେମଃନ୍‌କେ ସଃତ୍‌ ନଃକେରି ସେମଃନାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଅଃହ୍‌ଣାକ୍‌ ଅଃଲ୍‌ଗା କଃରିରିଲା, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଜିସୁ ସେ ସଃବ୍‌କେ ନିକ କଃରି ଜାଣିରିଲା,
ஆனால் இயேசுவோ எல்லா மனிதரையும் அறிந்திருந்தபடியால், அவர்களுக்கு இணங்கவில்லை.
25 ଆରେକ୍‌, କୁୟ୍‌ ମାନାୟ୍‌ ଜେ ନଃରାର୍‌ ହୟ୍‌ସି ବିସୟେ ସାକି ଦଃୟ୍‌ଦ୍‌, ଇରି ଜିସୁର୍‌ ଲଳା ନଃରିଲି, ବଃଲେକ ନଃର୍‌ମଃନାର୍‌ ମଃନେ କାୟ୍‌ରି ଆଚେ, ସେରି ସେ ନିଜେ ଜାଣୁହାର୍ତିରିଲା ।
மனிதனைக் குறித்து இயேசுவுக்கு யாரும் சாட்சி சொல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் அவர் மனிதனின் உள்ளத்தை அறிந்திருந்தார்.

< ଜହନ୍‌ 2 >