< मत्ती 22 >

1 यीशु फिरी मसाल देइतां ज़ोने लगो।
இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
2 “स्वर्गेरू राज़ एक्की राज़ेरू ज़ेरूए, ज़ैनी अपने मट्ठेरे ड्ला बनाव।
பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
3 ते अपने नौकर भेज़े कि तैना लोकन ज़ैन जेई ड्लाएरी धाम बनोरी थी, तैन कुजान पन तैना न आए।
அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள்.
4 तैखन तैनी अपने नौकर एन ज़ोइतां भेज़े, कि ज़ैन जेई ड्लाएरी धाम बनेवरीए, तैन ज़ोथ, रोट्टी बनोरीए ते मीं बडे-बडे जानवर कट्टोरन, ते सब किछ तियार भोरूए, ते ड्लाएरी धामी मां शामल भोथ।
அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
5 पन तैनेईं ध्यान न दित्तू ते कोई परवाह न की, कोई अपने ऊडारे मां च़लो जेव, ते कोई अपने कारोबारे मां लगो ते कोई कोरां च़लो जेव।
அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள்.
6 किछेईं तैसेरे नौकर ट्लेइतां तैन तैना बेइज़त किये, ते जानां भी मैरी छ़ड्डे।
மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.
7 ज़ैखन राज़े एन शुनू त राज़े बड़ी सरक आई, ते तैनी अपनि फौज भेज़तां तैना कातली मैरी छ़ड्डे ते तैन केरां नगरां फुके।
ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
8 तैखन तैनी अपने नौकरन सेइं ज़ोवं, ड्लाएरी धाम तियार आए, पन ज़ैन कुजोरे थिये तैन एस काबल नईं।
அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள்.
9 एल्हेरेलेइ तुस हर पासे गाथ ते ज़ेत्रे तुसन मैलतन, तैना सब इरां कुजाथ।
ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
10 तैखन तैना नौकर च़ले जे ते हर पासे गेइतां ज़ेत्रे खरे बुरे तैन मैल्ले, सब अकोट्ठे ड्लाए मां आने ते मेहमानेइं सेइं घर भेरतां भोवं।
௧0அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது.
11 “ते राज़ो मेहमान सेइं मिलने अन्तर अव, त तैसेरी नज़र एक्की मैन्हु पुड़ पेई ज़ै ड्लाए मां ड्लेरां लिगड़ां लेइतां न थियो ओरो।”
௧௧விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து:
12 राज़े तैस पुच़्छ़ू, हे दोस्त, तू ड्लाएरे लिगड़न मां की नईं ओरो? पन तैने किछ न ज़ोवं।
௧௨நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
13 “एस गल्ली पुड़ राज़े अपने नौकरन सेइं ज़ोवं, ‘एसेरे हथ पाव बेंधतां बेइर आंधरे मां छ़ड्डा ज़ैड़ी ए लेरां देंतो राए, ते दंत च़ापतो राए।’
௧௩அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
14 किजोकि परमेशरे हमेशारे ज़िन्दगरे लेइ त बड़े कुजोरेन पन च़ुनोरे थोड़ेन।”
௧௪அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
15 तैखन फरीसी लोक तैट्ठां च़ले जे, ते एप्पू मांमेइं मुशोरो केरने लग्गे एस केन्च़रे गल्लन मां फसाम।
௧௫அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து,
16 एल्हेरेलेइ तैनेईं अपने किछ चेले हेरोदेस राज़ेरे लोकन सेइं साथी यीशु कां भेज़े, ते तैनेईं ज़ोवं, “हे गुरू अस ज़ानतम कि तू सच़्चोस, ते परमेशरेरी बत सच़्च़ैइं सेइं शिखालतस ते कोन्चेरी परवाह न केरस किजोकि तू मैन्हु केरू तुतर हेरतां गल्लां न केरस।
௧௬தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
17 एल्हेरेलेइ असन ज़ो, तू कुन सोचतस? महाराज़े जो चुंगी देनी जेइज़े की नईं?”
௧௭ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
18 यीशु तैन केरि चाल सेमझ़तां ज़ोवं, “हे पाखंडी लोकव मीं किजो अज़मातथ?
௧௮இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
19 ज़ै सिको चुंगरे लेइ देतथ तैस मीं हिराथ, तैनेईं अक दीनार तैस कां आनो।
௧௯வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
20 यीशुए तैन पुच़्छ़ू, इस पुड़ कसेरी शकल ते कसेरू नवं लिखोरूए?”
௨0அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
21 तैनेईं जुवाब दित्तो महाज़ेरू, तैखन तैनी तैन सेइं ज़ोवं, “ज़ैन महाराज़ेरूए तैन महारज़े जो देथ, ते ज़ैन परमेशरेरू ए तैन परमेशरे जो देथ।”
௨௧இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
22 तैना एन शुन्तां हैरान रेइजे, ते तैस तैड़ी छ़ेडतां च़ले जे।
௨௨அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
23 तैस्से दिहैड़ी किछ सदूकी लोक ज़ैना ज़ोते थिये कि मरनेरां बाद कोई ज़ींतो नईं भोनो, तैनेईं तैस पुच़्छ़ू,
௨௩உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து:
24 “हे गुरू मूसे ज़ोरूए कि, ‘अगर कोई मैन्हु बेऔलाद मेरि गाए, त तैसेरो ढ्ला तैसेरी कुआन्शी सेइं ड्ला बनाए ताके अपने ढ्लाएरे लेइ औलाद पैदा केरे।’
௨௪போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
25 इश्शे इड़ी सत ढ्ला थिये, पेइले ड्ला बनेइतां मेरि जेव, तैस औलाद न थी तैनी अपनि कुआन्श अपने ढ्लाएरे लेइ छ़ेड्डी दित्ती।
௨௫எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான்.
26 ए वजा आए तैसेरे दुइयोवं ते ट्लेइयोवं भी एन्च़रे कियूं बल्के सत्ते ढ्लान सेइं एन्ने भोतू राऊं।
௨௬அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
27 आखर्कार तै कुआन्श भी मेरि जेई।
௨௭எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
28 हुनी ज़ो तै कुआन्श मुड़दन मरां ज़ींते भोनेरे दिहाड़े तैन सत्ते ढ्लान मरां कसेरी कुआन्श भोली? किजोकि तै सेब्भी केरि कुआन्श बनोरी थी।”
௨௮ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
29 यीशुए तैन जुवाब दित्तो, “तुस न पवित्रशास्त्र ते न परमेशरेरी शक्ति ज़ानथ, ते एस्से वजाई सेइं तुस टेपलोरेथ।
௨௯இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.
30 किजोकि ज़ींते भोनेरां पत्ती तैना ड्ला न बनाले, पन तैना स्वर्गे मां परमेशरेरे स्वर्गदूतां केरे ज़ेरे भोनेन।”
௩0உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்;
31 “पन मुड़दन मरां ज़ींते भोनेरे बारे मां कुन तुसेईं इन वचन नईं पढ़ेरू ज़ैन परमेशर तुसन सेइं ज़ोवं,
௩௧மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
32 ‘अवं अब्राहमेरो परमेशर, ते इसहाकेरो परमेशर ते याकूबेरो परमेशर आई?’ तै मुवोरां केरो नईं बल्के ज़ींतां केरो परमेशरे।”
௩௨தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.
33 लोक तैसेरी ए शिक्षा शुन्तां हैरान रेइजे।
௩௩மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
34 ज़ैखन फरीसी लोकेईं एन शुनू कि तैनी सदूकी केरू आशी बंद कियोरूए, त तैना तैस कां सब अकोट्ठे भोए।
௩௪அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
35 तैन मरां अक शास्त्री तैस अज़मानेरे लेइ यीशुए पुच़्छ़ू।
௩௫அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
36 “हे गुरू, मूसेरे कानूने मां सेब्भन करां बड्डो हुक्म कौ आए?”
௩௬போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான்.
37 तैनी ज़ोवं, “तू परमेशरे अपने प्रभु सेइं अपने सारे दिले सेइं ते अपनि सैरी जानी सेइं ते अपनि सैरी अक्ली सेइं प्यार केरा।
௩௭இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;
38 सेब्भन करां बड्डो ते खास हुक्म ईए।
௩௮இது முதலாம் பெரிய கட்டளை.
39 एसेरो ज़ेरो ईए, ‘अपने पड़ोसी सेइं अपने बराबर प्यार केर।’
௩௯இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே.
40 इन्ना दूई हुक्म मूसेरे कानून ते नेबी केरो आधारे।”
௪0இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
41 ज़ैखन फरीसी लोक भी तैड़ी जम्हां भोइजेइ, त यीशुए तैन पुच़्छ़ू।
௪௧பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
42 “मसीहेरे बारे मां तुश्शो कुन खियाले, कि तैन केसेरू मट्ठूए?” तैनेईं जुवाब दित्तो, “दाऊदेरू मट्ठू।”
௪௨கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
43 यीशुए तैन सेइं ज़ोवं, “फिरी दाऊद आत्माई मां तैस जो प्रभु किजो ज़ोते?”
௪௩அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
44 “प्रभुए मेरे प्रभु सेइं ज़ोवं, मेरे देइने पासे बिश ज़ां तगर अवं तेरे दुश्मन तेरे पावन हैठ न ढ्लेन्च़ेईं।
௪௪நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
45 बस्सा, अगर दाऊद तैस जो प्रभु ज़ोते त तैन तैसेरू मट्ठू केन्च़रे सेइं भोइ सकते?”
௪௫தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார்.
46 तैन मरां केन्चे भी एक्की गल्लरो जुवाब न देइ बटो। पन तैस वक्तेरे बाद फिरी कोन्ची तैस पुच़्छ़नेरी हिम्मत न भोइ।
௪௬அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

< मत्ती 22 >