< गलातियों 1 >

1 अवं पौलुस ई चिट्ठी तुसन लिखताईं, अवं अक प्रेरिताई, अवं न मैन्हु केरे तरफां, ते न केन्ची मैनेरे ज़िरिये प्रेरित भोनेरे लेइ च़ुनोरोईं, बल्के यीशु मसीह ते बाजी परमेशरेरे ज़िरिये, ज़ैनी यीशु मुड़दन मरां ज़ींतो कियो।
மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும்,
2 ते सारे ढ्लां केरे तरफां, ज़ैना मीं सेइं साथिन; गलातिया इलाकेरे कलीसियां केरे लेइ ई चिट्ठी लिखताईं।
என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லோரும், கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:
3 बाजी परमेशर, ते इश्शे प्रभु यीशु मसीहेरे तरफां तुसन अनुग्रह ते शान्ति मैलती राए।
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக;
4 इश्शे परमेशर ते बाजी केरि मेर्ज़ी सेइं यीशु मसीहे अपनो आप इश्शे पापां केरे लेइ बलिदान कियो, ताके असन इस मौजूद बुरे दुनियाई करां छुटकारो दे। (aiōn g165)
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn g165)
5 तैसेरी महिमा हमेशा भोती राए। आमीन। (aiōn g165)
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
6 अवं हैरान भोताईं, कि परमेशरे तुस मसीहेरे अनुग्रहे मां ज़ींनेरे लेइ कुजाए; ते तुस तैस करां एत्रे जल्दी फिरतां होरि किसमेरी खुशखबरी मन्ने लाए।
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
7 पन सिर्फ एक्के सच़्च़ी खुशखबरी आए, गल ईए, कि किछ लोक एरेन, ज़ैना तुसन धोखो देतन, ते मसीहेरी खुशखबरी बगाड़ने चातन।
வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள்.
8 पन अगर असन मरां कोई या कोई स्वर्गदूत भी तुसन कोई तैस खुशखेबरारे अलावा ज़ै असेईं तुसन शुनोरी, शुनाए त लानती भोए।
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
9 ज़ेन्च़रे असेईं पेइलू ज़ोवरूए, तेन्च़रे अवं हुना फिरी ज़ोताईं, कि तैस खुशखेबरारे अलावा ज़ै तुसेईं कबूल कियोरोए, अगर कोई होरो खुशखबरी शुनाए, त लानती भोए।
முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
10 हुनी कुन अवं मैन्हु केरि मन्ज़ूरी हासिल केरनेरी कोशिश केरताईं या परमेशरेरी? कुन अवं लोकन खुश केरनेरी कोशिश केरने लोरोईं? बिलकुल भी नईं, अगर हेजू तगर लोकन खुश केरतो राताईं, त मसीहेरो दास न भोथो।
௧0இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே.
11 हे ढ्लाव ते बेइनव, अवं तुसन ज़ोताईं, कि ज़ै खुशखबरी मीं तुसन शुनाई, ई मैन्हु केरि बनोरी नईं।
௧௧மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
12 किजोकि तै मीं न केन्ची मैन्हु करां मैलोरी, ते न मीं कोन्ची उस्तादे करां शिखोरी, बल्के यीशु मसीहे मीं पुड़ बांदी की।
௧௨நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
13 तुसेईं शुनोरूए यहूदी धर्मे मां पेइलो ज़ै मेरो चालचलन थियो तै केरो थियो, कि अवं परमेशरेरी कलीसियाई बड़ी सतातो थियो, ते नाश केरनेरी कोशिश केरतो थियो।
௧௩நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
14 ते अवं अपने धर्मे मां तैस वक्ते बड़े मेरे उमरारे यहूदन करां अग्रोवं थियो। ते अपने बुज़ुर्गां केरे रीतन मां जोशे मां थियो।
௧௪என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
15 पन परमेशरेरी ज़ैखन इच्छा भोइ, तैनी अवं मेरे ज़रमने करां पेइलो च़ुनो ते अपने अनुग्रह सेइं कुजाव,
௧௫அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
16 कि मीं मां अपने मट्ठू बांदू केरे कि अवं गैर कौमन मां तैसेरी खुशखबरी शुनेईं; ते मीं समझ़नेरे लेइ होरि कोन्ची करां सलाह नी।
௧௬தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்;
17 ते न यरूशलेम नगरे मां तैन कां जेव ज़ैना मीं करां पेइले प्रेरितन, पन अरब मुल्खे जो च़लो जेव, ते फिरी किछ च़िरेरां बाद तैट्ठां दमिश्क नगरे जो वापस अव।
௧௭எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
18 फिरी ट्लाई सालना पत्ती अवं कैफा (यानी पतरस प्रेरिते) सेइं मिलने यरूशलेम नगरे जो जेव, ते 15 दिहाड़े तैड़ी राव।
௧௮மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன்.
19 पन प्रेरितन मरां प्रभुएरे ढ्ला याकूबेरे अलावा होरि कोन्ची सेइं न मिलो।
௧௯கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை.
20 ज़ैना गल्लां अवं तुसन लिखताईं, हेरा परमेशरे हाज़र सेमझ़तां ज़ोताईं, कि तैना झूठी नईं।
௨0நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய் இல்லை என்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
21 यरूशलेम नगर शारनेरां पत्ती, अवं सीरिया ते किलिकियारे मुलखे मां जेव।
௨௧பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன்.
22 पन यहूदिया इलाकेरे कलीसियां केरे लोक ज़ैना मसीह मां थिये, ज़ैना मीं सेइं कधे न थिये मिलोरे।
௨௨மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன்.
23 पन इन्ने शुन्ते रहते थिये, कि ज़ै असन पेइलो सतातो थियो, तैए तैस्से विश्वासेरी खुशखबरी शुनाते, ज़ैस पेइलो नाश केरतो थियो।
௨௩முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கப்பார்த்த விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமட்டும் அவர்கள் கேள்விப்பட்டு,
24 ते ज़ैन परमेशरे मेरे ज़िन्दगी मां कियूं तैल्हेरेलेइ तैना परमेशरेरी बडीयाई केरते रहते थिये।
௨௪எனக்காக தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

< गलातियों 1 >