< Yuhanna 3 >
1 la ni dinglime kange wi wo den cero Nicodemu, nii dur Yahuda.
௧யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
2 nii wo bow Yeecu nin ki kume la yico, “Rabbi, nyin nyumom mwin nii merangka wo bou kwama nine, wori nii kange mani wo ama diker nyimangkako mwi mane ri no kwama mani kange cori.”
௨அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
3 Yeecu ciya cinen, “bilenke, no cii bo nii takri, mani ci to liyar kwama ti”
௩இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
4 Nicodimu yi co “ciya boten nii nyi ki kwama ci cirame? mani ca do mor fwiye nee ce ti kiritti yob naci bo ten co, can do wa?
௪அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.
5 Yeecu ciya,”bilenke, bilenke, no ci bo bo nii ki mwem kangi yuwa tangberi mani ci do liyar kwamak ti.
௫இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
6 wo cii bo mor nange ri nange, la wo cii bo mor yuwatangberi, yuwatenbe.
௬சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.
7 Niyimangde wori min yi nen miki tam nyo cia fulongum boka mweko.
௭நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
8 yiwako ki cui fiye ci fobi, mwan nuwa diir cero, dila mwi nyombo fte cibow wiyeu kaka fiye ci yaken tiyeu. nyo kange nubo gwam wo ci bo co mor yiwu tangbeke.”
௮காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
9 Nicodimu ciya lan yi co “dikero wo a manyi?
௯அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
10 Yeecu ciya lan yi co “mwin nii meranka Icirailari durwal mwi nyombo digero wa?
௧0இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
11 bilenke, bilengke ma yinenti tok ike nyi nyomeu, nyi nee to-e. di duwal kom yo bo warke nyeu.
௧௧உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை.
12 no min yi nen diker dor kalere mwi ne bo bilenke ri, mwa nee bilenke nyi no yinen dor diker dii kwama ri?
௧௨பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
13 nii kange mani wo kwiken dii kwama no cum co wo yirau dii kwamari bi bwe nii fiye.
௧௩பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
14 na wo ci yam kung bi bwe nii fiye dii,
௧௪பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும்,
15 ri la gwam wo nee bilenke atin fiye dume di riye. (aiōnios )
௧௫தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios )
16 kwama ciu kale wo ri cin neken bibwe ce wiin cuar, la wo ne bilenke cineneri mani a bwiya ti la wi ki lai dume diriri. (aiōnios )
௧௬தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios )
17 kwama tungu bo bwew mor kalewo na kume dor bitinero dila na dor bitinero fiya fuloka fiye ci wiye
௧௭உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
18 wo ne bilenke cine neri mani a bwiya ti, wo nebo bilenke cine neri, kweri bwiyam bwiya wiro ci nebo bilenke ki den bi bwe kwama ro wiin cuwareu.”
௧௮அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.
19 Won co dike bwi bolang filang ko bou dor bitiner, nubo cwi kuntacile la filang ko, wori nangen cero cile.
௧௯ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
20 No wo ma bwirang keri ko filang ko, bou bo filang nin wori nangen cero nungi yanglang.
௨0தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21 Bwen dwal nyiri, niwo ma bilenkeu, bou filang ko nin na nungi yang lang, nangen cero na kwama ce co mane.
௨௧சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
22 Bwikowo Yeesu kange bibei tomange ceu cuu biten Yahudiya, co yim wi lenger kange ci kange yuka mwengek kwamak.
௨௨இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
23 Yuwanna yuu mwem ti Ainon bidom kange Salima wori mwembo bidom wi. Nubo bouti cinen con yuu cinen mwembo.
௨௩சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
24 Fiya Yuwana ci tung bo furcuna bwiri.
௨௪அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
25 Kwalkang ke kweni tiber bibei tomange Yuwana kange Yahudawa, ker maka duklumek.
௨௫அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
26 Cin ya Yuwana nin cin yi co ki, “nii merangka, nii wuro kange mweu dinge kon caji Jordaneu dor we? mo ware, too, co yuu mwem ti, takeu gwam ci yaken ti ci nin.
௨௬அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
27 Yuwana kari, “Nii mani a yoo kange diger ti, tano ci ne co dii kwamari.”
௨௭யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.
28 Mo ki bwimi mwan wari, man toki ma kebo Kiristi', dila cin twomou ye nimde co.
௨௮நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
29 Bine ki nii bine, dila fakuwe nii bineu wo ti nuwa ceu, bilange ducce ki dir nii binero, wuro, co bilangtum mimbo kambo ken.
௨௯மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
30 Ca yokten miu man yiram.
௩0அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
31 Nii wo bou diyeu, la gwam. Nii wo dor bitenereu, ki no dorbitinerer, tok diger ti dor, dorbitinere. Nii wo bou dii kwamau la gwam.
௩௧உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.
32 Co war kerti dor digero co toweu kange co nuwau, dila kange man wo ciya warke ceu.
௩௨தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
33 Nii wo ciya warkeceu, co nungi kwama nii bilenker.
௩௩அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.
34 La nii wo kwama tun ceu tok ker kwamar ti. Co nebo yuwa tangbe ki cuwaka.
௩௪தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
35 Tee cwi bi bwece, neken co digero gwam kang cak.
௩௫பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
36 Nii wo ne bilenke ki bweri, dume na ce, nii wo nuwabo bweri mani ca to dume ti, cwika kwama ko a yii kange co. (aiōnios )
௩௬குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios )