< ஒபதியா 1 >

1 ஒபதியாவின் தரிசனம்; யெகோவாகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக போரிட எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க, பிரதிநிதி மக்களிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் யெகோவா சொல்லக்கேட்டோம்.
ओबदियाले देखेको दर्शन। प्रभु याहवेहले एदोमको बारेमा यसो भन्‍नुहुन्छ— हामीले याहवेहबाट एउटा सन्देश सुनेका छौँ: एउटा राजदूतलाई राष्ट्रहरूकहाँ यसो भन्‍न पठाइएको थियो, “उठ, हामी त्यसको विरुद्धमा लडाइँ गर्नलाई जाऔँ।”
2 இதோ, நான் உன்னை தேசங்களில் சிறுகும்படிச் செய்தேன்; நீ மிகவும் அசட்டை செய்யப்பட்டிருக்கிறாய்.
“हेर्, म तँलाई अरू राष्ट्रहरूका बीचमा सानो तुल्याउनेछु; तँलाई ज्यादै घृणा गरिनेछ।
3 கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த பகுதியிலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை ஏமாற்றுகிறது.
तेरो हृदयको अहङ्कारले तँलाई धोका दिएको छ। तँ चट्टानका धाँदाहरूमा बास बस्छस्, र आफ्ना घर अल्गा-अल्गा स्थानहरूमा बनाउँछस्। तैँले मनमनै आफूलाई भन्छस्, ‘मलाई भुइँमा कसले झार्न सक्छ?’
4 நீ கழுகைப்போல உயரத்திற்குப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
तँ चीलझैँ माथि उडेर गइस् भने पनि, र ताराहरूका बीचमा आफ्नो गुँड बनाइस् भने पनि, त्यहाँबाट म तँलाई तल झार्नेछु,” याहवेह घोषणा गर्नुहुन्छ।
5 நீ எவ்வளவாகச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! திருடர்களோ, இரவில் கொள்ளையடிக்கிறவர்களோ உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானஅளவு திருடுவார்கள் அல்லவோ? திராட்சைப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?
“यदि चोरहरू तँकहाँ आए भने, यदि रातमा डाँकुहरू आए भने, ओह! तँलाई कस्तो विपत्तिले पर्खिरहेको हुन्छ— के तिनीहरूले आफूलाई चाहिए जति मात्र चोर्दैनन् र? यदि अङ्‌गुर टिप्नेहरू तँकहाँ आए भने, के तिनीहरूले सिला-अङ्‌गुरहरू छोड्दैनन् र?
6 ஏசாவினுடையவைகள் எவ்வளவாகத் கொள்ளையடிக்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாக ஆராய்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.
तर एसाव कसरी लुटिनेछ, त्यसका लुकाएर राखिएका गाडधनहरू कसरी लुटिनेछ!
7 உன்னுடன் உடன்படிக்கை செய்த எல்லா மனிதர்களும் உன்னை எல்லைவரை துரத்திவிட்டார்கள்; உன்னுடன் சமாதானமாயிருந்த மனிதர்கள் உன்னை ஏமாற்றி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை.
तेरा सबै मित्र राष्ट्रहरूले तँलाई सिमानासम्म नै खेद्नेछन्; तेरा साथीहरूले तँलाई धोका दिनेछन्, र तँलाई अधीनमा पार्नेछन्; जसले तेरो रोटी खान्छन्, उनीहरूले नै तेरो निम्ति पासो थाप्नेछन्; तर तैँले यस कुराको बारेमा थाहै पाउनेछैनस्।
8 அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் மலையிலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
“त्यस दिन,” याहवेह घोषणा गर्नुहुन्छ, “के म एदोमका ज्ञानी मानिसहरूलाई, एसावका पर्वतहरूमा बस्‍ने समझदार मानिसहरूलाई नाश पार्नेछैनँ र?
9 தேமானே, ஏசாவின் மலையிலுள்ள மனிதர்கள் அனைவரும் கொலையினால் அழிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்.
हे तेमान, तेरा वीर योद्धाहरू भयभीत हुनेछन्, र एसावका पर्वतहरूमा रहने सबै मानिसहरू काटेर ढालिनेछन्।
10 ௧0 நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையின் காரணமாக வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப்போவாய்.
तेरो भाइ याकोबको विरुद्धमा भएको हिंसाको कारणले गर्दा तँलाई शर्मले ढाक्नेछ; तँ सदाको निम्ति नष्‍ट पारिनेछस्।
11 ௧௧ நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர்கள் அவனுடைய படையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார்கள் அவனுடைய வாசல்களுக்குள் நுழைந்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய்.
जुन दिन तँ टाढै उभिएर हेरिरहेको थिइस्, त्यसै बेला विदेशीहरू त्यसको ढोकाभित्र पसे; अनि विदेशीहरूले त्यसका धनसम्पत्तिहरू खोसेर लगे र यरूशलेमको निम्ति चिट्ठा हाले; त्यस दिन तँ पनि तिनीहरूमध्ये एउटाजस्तै थिइस्।
12 ௧௨ உன் சகோதரன் அந்நியர்கள்வசமான அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பார்க்காமலும், யூதா மக்களுடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாகப் பேசாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
तैँले आफ्नो भाइलाई त्यसको दुर्दशाको समयमा तुच्छ ठान्‍नु हुँदैनथ्यो; यहूदाका मानिसहरूका सर्वनाशको दिनमा रमाउनु हुँदैनथ्यो, र तिनीहरूका सङ्कष्‍टको दिनमा यति धेरै घमण्ड गर्नु हुँदैनथ्यो।
13 ௧௩ என் மக்களின் ஆபத்து நாளிலே நீ அவர்களுடைய வாசல்களுக்குள் நுழையாமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ விருப்பத்துடன் பார்க்காமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்களுடைய சொத்தில் கைவைக்காமலும்,
तिनीहरूको विपत्तिको दिनमा मेरा मानिसहरूका ढोकाहरूबाट पसेर तैँले खुशी मनाउनु हुँदैनथ्यो; अनि तिनीहरूको सर्वनाशको दिनमा तिनीहरूको दुर्दशामा तिनीहरूको अवहेलना गर्नु हुँदैनथ्यो, न त तिनीहरूका सर्वनाशको दिनमा तिनीहरूको धनसम्पत्ति खोसेर लैजानुहुन्थ्यो।
14 ௧௪ அவர்களில் தப்பினவர்களை அழிக்க வழிச்சந்திப்புகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடுக்காமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
तैँले तिनीहरूका भाग्नेहरूलाई काटेर ढाल्न चौबाटोमा ढुकेर बसिरहनु हुँदैनथ्यो, न त तिनीहरूका सङ्कटको दिनमा तिनीहरूका बाँचेकाहरूलाई पक्राइदिनु नै हुन्थ्यो।
15 ௧௫ எல்லா தேசங்களுக்கும் விரோதமான நாளாகிய யெகோவாவுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
“याहवेहको दिन सबै राष्ट्रहरूका निम्ति नजिकै आइपुगेको छ। तैँले जस्तो गरेको छस्, तँलाई पनि त्यस्तै गरिनेछ; तैँले गरेको कामको प्रतिफल तेरो आफ्नै शिरमाथि फर्केर आउनेछ।
16 ௧௬ நீங்கள் என் பரிசுத்தமலையின்மேல் மதுபானம் குடித்ததுபோலவே எல்லா மக்களும் எப்பொழுதும் மதுபானம் குடிப்பார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள், இல்லாதவர்களைப்போல் இருப்பார்கள்.
जसरी यहूदाका मानिसहरूले मेरो पवित्र पर्वतमा तितो कचौरा पिए, त्यसरी नै सबै राष्ट्रहरूले तितो कचौरा पिइरहनेछन्। तिनीहरूले निरन्तर पिउनेछन्, र पिइरहनेछन्; अनि तिनीहरू कहिल्यै नभएझैँ गरेर लोप हुनेछन्।
17 ௧௭ ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பவர்கள் உண்டு, அவர்கள் பரிசுத்தமாக இருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார்கள் தங்களுடைய சொத்துக்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
तर सियोनको पर्वतमा छुटकारा हुनेछ; यो पवित्र रहनेछ, र याकोबले आफ्नै सम्पत्तिमाथि अधिकार गर्नेछ।
18 ௧௮ யாக்கோபு வம்சத்தார்கள் நெருப்பும், யோசேப்பு வம்சத்தார்கள் நெருப்புத்தழலுமாக இருப்பார்கள்; ஏசா வம்சத்தார்களோ வைக்கோல் துரும்பாக இருப்பார்கள்; அவர்கள் இவர்களைக்கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியாக இல்லாமல் இவர்களை சுட்டெரிப்பார்கள்; யெகோவா இதைச் சொன்னார்.
याकोबको घराना आगोजस्तै हुनेछ, र योसेफको घराना ज्वालाजस्तै हुनेछ; एसावको घराना डाँठको ठोसाजस्तै हुनेछ; अनि तिनीहरूले यसमा आगो लगाउनेछन्, र यसलाई भस्म पार्नेछन्। एसावको घरानाबाट एउटै पनि जीवित रहनेछैन।” याहवेहले यसो भन्‍नुभएको छ।
19 ௧௯ தென்தேசத்தார்கள் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார்கள் பெலிஸ்தரின் தேசத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பென்யமீன் மனிதர்கள் கீலேயாத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
दक्षिणका मानिसहरूले एसावका पर्वतहरू कब्जा गर्नेछन्, र पहाडको फेदीमा बसेका मानिसहरूले पलिश्तीहरूका देशलाई अधिकार गर्नेछन्। तिनीहरूले एफ्राइम र सामरियाका भूमिहरू कब्जा गर्नेछन्; अनि बेन्यामीनले गिलादमाथि अधिकार गर्नेछ।
20 ௨0 சாரிபாத்வரை கானானியர்களுக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் மக்களாகிய இந்தப் படையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தார்களும் தெற்குதிசைப் பட்டணங்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
कैदमा रहेका इस्राएली दल, जो कनानमा छन्, तिनीहरूले सारपतसम्मको भूमिमाथि अधिकार गर्नेछन्; यरूशलेमबाट लगिएका निर्वासितहरू, जो सपारादमा छन्, तिनीहरूले दक्षिणका सहरहरूमाथि अधिकार गर्नेछन्।
21 ௨௧ ஏசாவின் மலையை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் மலையில் வந்துசேர்வார்கள்; அப்பொழுது இராஜ்யம் யெகோவாவுடையதாக இருக்கும்.
छुटकारा दिनेहरू सियोन पर्वतमाथि जानेछन् र एसावका पर्वतहरूमाथि शासन गर्नेछन्। अनि राज्य याहवेहको हुनेछ।

< ஒபதியா 1 >