< மத்தேயு 1 >

1 ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
ഇബ്രാഹീമഃ സന്താനോ ദായൂദ് തസ്യ സന്താനോ യീശുഖ്രീഷ്ടസ്തസ്യ പൂർവ്വപുരുഷവംശശ്രേണീ|
2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
ഇബ്രാഹീമഃ പുത്ര ഇസ്ഹാക് തസ്യ പുത്രോ യാകൂബ് തസ്യ പുത്രോ യിഹൂദാസ്തസ്യ ഭ്രാതരശ്ച|
3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
തസ്മാദ് യിഹൂദാതസ്താമരോ ഗർഭേ പേരസ്സേരഹൗ ജജ്ഞാതേ, തസ്യ പേരസഃ പുത്രോ ഹിഷ്രോൺ തസ്യ പുത്രോ ഽരാമ്|
4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
തസ്യ പുത്രോ ഽമ്മീനാദബ് തസ്യ പുത്രോ നഹശോൻ തസ്യ പുത്രഃ സൽമോൻ|
5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
തസ്മാദ് രാഹബോ ഗർഭേ ബോയമ് ജജ്ഞേ, തസ്മാദ് രൂതോ ഗർഭേ ഓബേദ് ജജ്ഞേ, തസ്യ പുത്രോ യിശയഃ|
6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
തസ്യ പുത്രോ ദായൂദ് രാജഃ തസ്മാദ് മൃതോരിയസ്യ ജായായാം സുലേമാൻ ജജ്ഞേ|
7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
തസ്യ പുത്രോ രിഹബിയാമ്, തസ്യ പുത്രോഽബിയഃ, തസ്യ പുത്ര ആസാ: |
8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
തസ്യ സുതോ യിഹോശാഫട് തസ്യ സുതോ യിഹോരാമ തസ്യ സുത ഉഷിയഃ|
9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
തസ്യ സുതോ യോഥമ് തസ്യ സുത ആഹമ് തസ്യ സുതോ ഹിഷ്കിയഃ|
10 ௧0 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
തസ്യ സുതോ മിനശിഃ, തസ്യ സുത ആമോൻ തസ്യ സുതോ യോശിയഃ|
11 ௧௧ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.
ബാബിൽനഗരേ പ്രവസനാത് പൂർവ്വം സ യോശിയോ യിഖനിയം തസ്യ ഭ്രാതൃംശ്ച ജനയാമാസ|
12 ௧௨ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்;
തതോ ബാബിലി പ്രവസനകാലേ യിഖനിയഃ ശൽതീയേലം ജനയാമാസ, തസ്യ സുതഃ സിരുബ്ബാവിൽ|
13 ௧௩ செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
തസ്യ സുതോ ഽബോഹുദ് തസ്യ സുത ഇലീയാകീമ് തസ്യ സുതോഽസോർ|
14 ௧௪ ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
അസോരഃ സുതഃ സാദോക് തസ്യ സുത ആഖീമ് തസ്യ സുത ഇലീഹൂദ്|
15 ௧௫ எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
തസ്യ സുത ഇലിയാസർ തസ്യ സുതോ മത്തൻ|
16 ௧௬ யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
തസ്യ സുതോ യാകൂബ് തസ്യ സുതോ യൂഷഫ് തസ്യ ജായാ മരിയമ്; തസ്യ ഗർഭേ യീശുരജനി, തമേവ ഖ്രീഷ്ടമ് (അർഥാദ് അഭിഷിക്തം) വദന്തി|
17 ௧௭ இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.
ഇത്ഥമ് ഇബ്രാഹീമോ ദായൂദം യാവത് സാകല്യേന ചതുർദശപുരുഷാഃ; ആ ദായൂദഃ കാലാദ് ബാബിലി പ്രവസനകാലം യാവത് ചതുർദശപുരുഷാ ഭവന്തി| ബാബിലി പ്രവാസനകാലാത് ഖ്രീഷ്ടസ്യ കാലം യാവത് ചതുർദശപുരുഷാ ഭവന്തി|
18 ௧௮ இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
യീശുഖ്രീഷ്ടസ്യ ജന്മ കഥ്ഥതേ| മരിയമ് നാമികാ കന്യാ യൂഷഫേ വാഗ്ദത്താസീത്, തദാ തയോഃ സങ്ഗമാത് പ്രാക് സാ കന്യാ പവിത്രേണാത്മനാ ഗർഭവതീ ബഭൂവ|
19 ௧௯ அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.
തത്ര തസ്യാഃ പതി ര്യൂഷഫ് സൗജന്യാത് തസ്യാഃ കലങ്ഗം പ്രകാശയിതുമ് അനിച്ഛൻ ഗോപനേനേ താം പാരിത്യക്തും മനശ്ചക്രേ|
20 ௨0 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
സ തഥൈവ ഭാവയതി, തദാനീം പരമേശ്വരസ്യ ദൂതഃ സ്വപ്നേ തം ദർശനം ദത്ത്വാ വ്യാജഹാര, ഹേ ദായൂദഃ സന്താന യൂഷഫ് ത്വം നിജാം ജായാം മരിയമമ് ആദാതും മാ ഭൈഷീഃ|
21 ௨௧ அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.
യതസ്തസ്യാ ഗർഭഃ പവിത്രാദാത്മനോഽഭവത്, സാ ച പുത്രം പ്രസവിഷ്യതേ, തദാ ത്വം തസ്യ നാമ യീശുമ് (അർഥാത് ത്രാതാരം) കരീഷ്യസേ, യസ്മാത് സ നിജമനുജാൻ തേഷാം കലുഷേഭ്യ ഉദ്ധരിഷ്യതി|
22 ௨௨ தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
ഇത്ഥം സതി, പശ്യ ഗർഭവതീ കന്യാ തനയം പ്രസവിഷ്യതേ| ഇമ്മാനൂയേൽ തദീയഞ്ച നാമധേയം ഭവിഷ്യതി|| ഇമ്മാനൂയേൽ അസ്മാകം സങ്ഗീശ്വരഇത്യർഥഃ|
23 ௨௩ அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
ഇതി യദ് വചനം പുർവ്വം ഭവിഷ്യദ്വക്ത്രാ ഈശ്വരഃ കഥായാമാസ, തത് തദാനീം സിദ്ധമഭവത്|
24 ௨௪ யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
അനന്തരം യൂഷഫ് നിദ്രാതോ ജാഗരിത ഉത്ഥായ പരമേശ്വരീയദൂതസ്യ നിദേശാനുസാരേണ നിജാം ജായാം ജഗ്രാഹ,
25 ௨௫ அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
കിന്തു യാവത് സാ നിജം പ്രഥമസുതം അ സുഷുവേ, താവത് താം നോപാഗച്ഛത്, തതഃ സുതസ്യ നാമ യീശും ചക്രേ|

< மத்தேயு 1 >