< மாற்கு 5 >

1 பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள்.
मंग येशु अनी त्याना शिष्य गालील समुद्रना पलिकडला गरसेकरसना प्रदेशमा वनात.
2 அவர் படகில் இருந்து இறங்கினவுடனே, அசுத்தஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராகவந்தான்.
येशु नावमातीन उतरना, तवय एक दुष्ट आत्मा लागेल माणुस कब्रस्तान माईन ईसन त्याले भेटना.
3 அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை.
तो कब्रस्तानमाच राहे अनं साखळ्याघाई बांधीनसुध्दा तो कोनाचघाई आवराये नही;
4 அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை.
कारण त्याले बराचदाव बेड्यासघाई अनी साखळ्याघाई बांध तरी तो साखळ्या तोडी टाके अनं बेड्यासना चुराडा करे, त्याले आवरानी ताकद कोनामाच नव्हती.
5 அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
तो रातदिन कब्रस्तानमा अनं डोंगरंसमा वरडत फिरे, स्वतःले दगडसघाई ठेचीले.
6 அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு:
जवय त्यानी येशुले दुरतीन दखं, तवय तो पयत ईसन त्याना समोर पाया पडीन;
7 இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தவேண்டாம் என்று தேவனுடைய பெயரில் உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
अनी जोरमा वरडीन बोलना, “हे येशु, परमप्रधान देवना पोऱ्या! तुले मनाकडतीन काय तरास शे? मी तुले देवनी शपथ घालस, तू माले शिक्षा देऊ नको!”
8 ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார்.
कारण येशु त्याले बोलना व्हता, “हे दुष्ट आत्मा, ह्या माणुस माईन निंघी जाय!”
9 அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகர் இருப்பதினால் என் பெயர் லேகியோன் என்று சொல்லி,
येशुनी त्याले ईचारं, “तुनं नाव काय शे?” तो बोलना, “मनं नाव ‘सैन्य’ शे, कारण आम्हीन बराच शेतस!”
10 ௧0 தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.
अनी आमले ह्या प्रदेशमाईन काढु नको; अशा ईनंत्या दुष्ट आत्मासनी येशुले कऱ्यात.
11 ௧௧ அப்பொழுது, அந்த இடத்தில் மலையின் அருகில் அநேக பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.
तठेच डोंगरजोडे डूकरंसना मोठा कळप चरी राहींता.
12 ௧௨ அந்தப் பிசாசுகள் அவரைப் பார்த்து: பன்றிகளுக்குள்ளே போக, அவைகளுக்குள் எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
दुष्ट आत्मासनी त्याले ईनंती करी की, “आमले त्या डुकरंसमा घुसू दे.”
13 ௧௩ இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்தஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போனது; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்துபோனது.
त्यानी त्यासले परवानगी दिधी. मंग त्या दुष्ट आत्मा त्या माणुस मातीन निंघीसन डुकरंसमा घुसनात अनी त्या जवळपास दोन हजार डुकरे व्हतात. त्या पयत जाईसन कडावरतीन समुद्रमा पडीसन मरनात.
14 ௧௪ பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு;
मंग डुकरं चारनारासनी पयत जाईसन हाई बातमी गावमा अनं वावरंसमा लोकसले सांगी. तवय काय व्हयनं हाई दखाकरता लोके तठे वनात.
15 ௧௫ இயேசுவிடம் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் புத்தி தெளிந்து, உடை அணிந்து, உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பயந்தார்கள்.
तवय त्या येशु जोडे वनात, अनी त्यासनी ज्यानामा दुष्ट आत्मा व्हतात म्हणजेच सैन्य व्हतं. त्याले शुध्दीवर येल अनं कपडा घालेल दखं, तवय त्यासले भिती वाटनी.
16 ௧௬ பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் நடந்தவைகளைப் பார்த்தவர்களும் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள்.
ज्यासनी डोयासघाई दुष्ट आत्मा लागेल माणुसनी अनी डुकरंसनी हकीकत दखेल व्हती ती त्यासले सांगी.
17 ௧௭ அப்பொழுது தங்களுடைய எல்லைகளைவிட்டுப் போகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
तवय त्या ईनंती करीसन येशुले सांगु लागनात, तुम्हीन आमना प्रदेशमातीन निंघी जा.
18 ௧௮ அப்படியே அவர் படகில் ஏறும்பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், இயேசுவோடு வருவதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
मंग तो नावमा बसताच, बरा व्हयेल माणुस त्याले ईनंती करीसन बोलना, “मालेपण तुमनासंगे लयी चला!”
19 ௧௯ இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்காமல்: நீ உன் குடும்பத்தாரிடம் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு மனமிறங்கி, உனக்குச் செய்தவைகளை எல்லாம் அவர்களுக்குச் சொல் என்று சொன்னார்.
पण त्यानी त्याले येऊ दिधं नही. तर त्याले सांगं, तु घर जाय, आपला लोकसले सांगं, तुनावर दया करीसन प्रभुने तुनाकरता कितलं मोठं कार्य करेल शे.
20 ௨0 அப்படியே அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
मंग दुष्ट आत्मा लागेल माणुसनी घडेल सर्व कार्य येशुनी जे त्यानाकरता करेल व्हतं, ते तो सर्व दकापलीस म्हणजे दहा गावसना शहरमा जाईसन सांगाले लागना, तवय सर्व लोकसले आश्चर्य वाटनं.
21 ௨௧ இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள்.
मंग येशु नावमा बशीसन परत पलीकडला काठवर गया. तठे त्यानाजोडे लोकसनी मोठी गर्दी जमनी तवय तो समुद्रजोडेच व्हता.
22 ௨௨ அப்பொழுது, ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து:
याईर नावना एक सभास्थानना अधिकारी तठे वना अनं येशुले दखीसन त्याना पाया पडना.
23 ௨௩ என் மகள் மரணவேதனைப்படுகிறாள், அவள் சுகமடைய, நீர் வந்து, அவள்மேல் உமது கரங்களை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.
तवय तो येशुले कळकळ करीसन ईनंती करू लागना की, “मनी धाकली पोर मराले टेकेल शे. ती वाचाले पाहिजे म्हणीसन तुम्हीन ईसन तिना डोकावर हात ठेवा!”
24 ௨௪ அவர் அவனோடுகூட போனார். அநேக மக்கள் அவருக்குப் பின்னேசென்று, அவரை நெருக்கினார்கள்.
मंग येशु त्यानासंगे जावाले निंघना तवय लोकसनी मोठी गर्दी बी त्याना मांगे निंघनी. अनी त्यासनी त्याना आजुबाजू गर्दी करी.
25 ௨௫ அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண்,
ती गर्दीमा एक बाई व्हती तिले बारा वरीस पाईन रक्तस्रावना आजार व्हता,
26 ௨௬ அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது,
तिनाजोडे व्हतं नव्हतं तितलं सगळंच खर्चाई जायल व्हतं. तिले बराच तरास व्हता म्हणीन तिनी वैद्यसकडतीन ईलाज करा तरी फरक पडना नही, उलटा आजार जास्तीज वाढी जायेल व्हता.
27 ௨௭ இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி;
ती येशु बद्दलन्या गोष्टी ऐकीसन त्या गर्दीमा घुसनी अनी त्यानाकडे ईसन त्याना कपडासले हात लाया,
28 ௨௮ மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள்.
कारण ती सांगे, “मी याना कपडासले जरी हात लावसु तरी बरी व्हसु.”
29 ௨௯ உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
तवय लगेच तिना रक्तस्राव बंद व्हई गया अनं तिना शरिरले जानवणं मी या आजारपाईन मुक्त व्हई जायल शे.
30 ௩0 உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார்.
तवय येशुनी हाई लगेच वळखं की, आपलामातीन शक्ती निंघनी, तवय त्यानी मांगे वळीन गर्दीमा ईचारं, “मना कपडासले कोणी हात लाया?”
31 ௩௧ அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
पण त्याना शिष्य त्याले बोलनात, “लोकसनी गर्दी आपला आजुबाजूले शे हाई तुम्हीन दखी राहीनात; तरी माले कोणी हात लाया, हाई कसं काय ईचारी राहीनात?”
32 ௩௨ இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார்.
तरी बी हाई कोणी करं, हाई दखाकरता येशुनी चारीबाजुले नजर फिराई.
33 ௩௩ தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள்.
तवय ती बाई तिनासंगे जे काही घडेल व्हतं. तिनी ते वळखं अनी घाबरीसन अनं थरथर कापत त्यानापुढे वनी अनी गुडघा टेकिन त्यानापुढे पडीसन तिनी त्याले घडेल सर्वकाही खरंखरं सांगं.
34 ௩௪ அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி, சுகமாக இரு என்றார்.
येशु तिले बोलना, “बाई, तुना ईश्वासनी तुले बरं करेल शे. सुखरूप जाय, तुना आजारपाईन तु मुक्त शे.”
35 ௩௫ அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய மகள் மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள்.
येशु हाई बोली राहींता ईतलामा तठे सभास्थानना अधिकारीना घरतीन काही लोकसनी ईसन अधिकारीले सांगं की, “तुमनी पोर मरी गई. आत्ते गुरजीले कशाले तरास देतस.”
36 ௩௬ அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத்தலைவனைப் பார்த்து: பயப்படாதே, விசுவாசம் உள்ளவனாக இரு என்று சொல்லி;
तवय येशुनी त्यासनं बोलनं ऐकं, पण त्यासनाकडे ध्यान नही देता तो सभास्थानना अधिकारीले बोलना, “घाबरू नको, ईश्वास ठेव.”
37 ௩௭ வேறுயாரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல், பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோனார்;
तवय त्यानी पेत्र, याकोब, अनं याकोबना भाऊ योहान यासना शिवाय त्यानी आपलासंगे कोणलेच येऊ दिधं नही.
38 ௩௮ ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து, அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,
अनी त्या अधिकारीना घरना जोडे येताच येशुनी हंबरडा फोडीन रडणारासना अनं शोक करणारसना गोंधळ व्हयेल दखा.
39 ௩௯ உள்ளே சென்று: நீங்கள் சத்தமிட்டு அழுகிறது ஏன்? பிள்ளை மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார்.
तो मजार जाईसन त्यासले बोलना, “तुम्हीन कसाले रडतस अनी गोंधळ करतस? पोर मरेल नही, झोपेल शे!”
40 ௪0 அதற்காக அவரைப் பார்த்து சிரித்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடு வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளை இருந்த அறைக்குள் சென்று,
तवय त्यासनी त्यानी थट्टा करी, पण त्यानी त्या सर्वासले बाहेर काढी दिधं अनी पोरना माय बापले अनी आपला तिन शिष्यसले लिसन पोर व्हती त्या खोलीमा गया.
41 ௪௧ பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம்.
मंग त्या पोरना हात धरीसन तो बोलना, “तलिथा कुम” याना अर्थ, “पोरी, मी तुले सांगस ऊठ!”
42 ௪௨ உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
ती बारा वरीसनी पोर लगेच ऊठीसन चालाले लागनी त्या हाई दखीसन चमकाईनात.
43 ௪௩ அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார்.
हाई बात कोणलेच सांगु नका अस येशुनी त्यासले बजाईन सांगं, अनी “हिले काहीतरी खावाले द्या” अस तो त्यासले बोलना.

< மாற்கு 5 >