< யூதா 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
યીશુખ્રીષ્ટસ્ય દાસો યાકૂબો ભ્રાતા યિહૂદાસ્તાતેનેશ્વરેણ પવિત્રીકૃતાન્ યીશુખ્રીષ્ટેન રક્ષિતાંશ્ચાહૂતાન્ લોકાન્ પ્રતિ પત્રં લિખતિ|
2 ௨ உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.
કૃપા શાન્તિઃ પ્રેમ ચ બાહુલ્યરૂપેણ યુષ્માસ્વધિતિષ્ઠતુ|
3 ௩ பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.
હે પ્રિયાઃ, સાધારણપરિત્રાણમધિ યુષ્માન્ પ્રતિ લેખિતું મમ બહુયત્ને જાતે પૂર્વ્વકાલે પવિત્રલોકેષુ સમર્પિતો યો ધર્મ્મસ્તદર્થં યૂયં પ્રાણવ્યયેનાપિ સચેષ્ટા ભવતેતિ વિનયાર્થં યુષ્માન્ પ્રતિ પત્રલેખનમાવશ્યકમ્ અમન્યે|
4 ௪ ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
યસ્માદ્ એતદ્રૂપદણ્ડપ્રાપ્તયે પૂર્વ્વં લિખિતાઃ કેચિજ્જના અસ્માન્ ઉપસૃપ્તવન્તઃ, તે ઽધાર્મ્મિકલોકા અસ્માકમ્ ઈશ્વરસ્યાનુગ્રહં ધ્વજીકૃત્ય લમ્પટતામ્ આચરન્તિ, અદ્વિતીયો ઽધિપતિ ર્યો ઽસ્માકં પ્રભુ ર્યીશુખ્રીષ્ટસ્તં નાઙ્ગીકુર્વ્વન્તિ|
5 ௫ நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.
તસ્માદ્ યૂયં પુરા યદ્ અવગતાસ્તત્ પુન ર્યુષ્માન્ સ્મારયિતુમ્ ઇચ્છામિ, ફલતઃ પ્રભુરેકકૃત્વઃ સ્વપ્રજા મિસરદેશાદ્ ઉદધાર યત્ તતઃ પરમ્ અવિશ્વાસિનો વ્યનાશયત્|
6 ௬ தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios )
યે ચ સ્વર્ગદૂતાઃ સ્વીયકર્તૃત્વપદે ન સ્થિત્વા સ્વવાસસ્થાનં પરિત્યક્તવન્તસ્તાન્ સ મહાદિનસ્ય વિચારાર્થમ્ અન્ધકારમયે ઽધઃસ્થાને સદાસ્થાયિભિ ર્બન્ધનૈરબધ્નાત્| (aïdios )
7 ௭ அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
અપરં સિદોમમ્ અમોરા તન્નિકટસ્થનગરાણિ ચૈતેષાં નિવાસિનસ્તત્સમરૂપં વ્યભિચારં કૃતવન્તો વિષમમૈથુનસ્ય ચેષ્ટયા વિપથં ગતવન્તશ્ચ તસ્માત્ તાન્યપિ દૃષ્ટાન્તસ્વરૂપાણિ ભૂત્વા સદાતનવહ્નિના દણ્ડં ભુઞ્જતે| (aiōnios )
8 ௮ அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
તથૈવેમે સ્વપ્નાચારિણોઽપિ સ્વશરીરાણિ કલઙ્કયન્તિ રાજાધીનતાં ન સ્વીકુર્વ્વન્ત્યુચ્ચપદસ્થાન્ નિન્દન્તિ ચ|
9 ௯ பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
કિન્તુ પ્રધાનદિવ્યદૂતો મીખાયેલો યદા મૂસસો દેહે શયતાનેન વિવદમાનઃ સમભાષત તદા તિસ્મન્ નિન્દારૂપં દણ્ડં સમર્પયિતું સાહસં ન કૃત્વાકથયત્ પ્રભુસ્ત્વાં ભર્ત્સયતાં|
10 ௧0 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
કિન્ત્વિમે યન્ન બુધ્યન્તે તન્નિન્દન્તિ યચ્ચ નિર્બ્બોધપશવ ઇવેન્દ્રિયૈરવગચ્છન્તિ તેન નશ્યન્તિ|
11 ௧௧ இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
તાન્ ધિક્, તે કાબિલો માર્ગે ચરન્તિ પારિતોષિકસ્યાશાતો બિલિયમો ભ્રાન્તિમનુધાવન્તિ કોરહસ્ય દુર્મ્મુખત્વેન વિનશ્યન્તિ ચ|
12 ௧௨ இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,
યુષ્માકં પ્રેમભોજ્યેષુ તે વિઘ્નજનકા ભવન્તિ, આત્મમ્ભરયશ્ચ ભૂત્વા નિર્લજ્જયા યુષ્માભિઃ સાર્દ્ધં ભુઞ્જતે| તે વાયુભિશ્ચાલિતા નિસ્તોયમેઘા હેમન્તકાલિકા નિષ્ફલા દ્વિ ર્મૃતા ઉન્મૂલિતા વૃક્ષાઃ,
13 ௧௩ தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
સ્વકીયલજ્જાફેણોદ્વમકાઃ પ્રચણ્ડાઃ સામુદ્રતરઙ્ગાઃ સદાકાલં યાવત્ ઘોરતિમિરભાગીનિ ભ્રમણકારીણિ નક્ષત્રાણિ ચ ભવન્તિ| (aiōn )
14 ௧௪ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,
આદમતઃ સપ્તમઃ પુરુષો યો હનોકઃ સ તાનુદ્દિશ્ય ભવિષ્યદ્વાક્યમિદં કથિતવાન્, યથા, પશ્ય સ્વકીયપુણ્યાનામ્ અયુતૈ ર્વેષ્ટિતઃ પ્રભુઃ|
15 ௧௫ தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
સર્વ્વાન્ પ્રતિ વિચારાજ્ઞાસાધનાયાગમિષ્યતિ| તદા ચાધાર્મ્મિકાઃ સર્વ્વે જાતા યૈરપરાધિનઃ| વિધર્મ્મકર્મ્મણાં તેષાં સર્વ્વેષામેવ કારણાત્| તથા તદ્વૈપરીત્યેનાપ્યધર્મ્માચારિપાપિનાં| ઉક્તકઠોરવાક્યાનાં સર્વ્વેષામપિ કારણાત્| પરમેશેન દોષિત્વં તેષાં પ્રકાશયિષ્યતે||
16 ௧௬ இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.
તે વાક્કલહકારિણઃ સ્વભાગ્યનિન્દકાઃ સ્વેચ્છાચારિણો દર્પવાદિમુખવિશિષ્ટા લાભાર્થં મનુષ્યસ્તાવકાશ્ચ સન્તિ|
17 ௧௭ நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.
કિન્તુ હે પ્રિયતમાઃ, અસ્માકં પ્રભો ર્યીશુખ્રીષ્ટસ્ય પ્રેરિતૈ ર્યદ્ વાક્યં પૂર્વ્વં યુષ્મભ્યં કથિતં તત્ સ્મરત,
18 ௧௮ கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
ફલતઃ શેષસમયે સ્વેચ્છાતો ઽધર્મ્માચારિણો નિન્દકા ઉપસ્થાસ્યન્તીતિ|
19 ௧௯ இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.
એતે લોકાઃ સ્વાન્ પૃથક્ કુર્વ્વન્તઃ સાંસારિકા આત્મહીનાશ્ચ સન્તિ|
20 ௨0 நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
કિન્તુ હે પ્રિયતમાઃ, યૂયં સ્વેષામ્ અતિપવિત્રવિશ્વાસે નિચીયમાનાઃ પવિત્રેણાત્મના પ્રાર્થનાં કુર્વ્વન્ત
21 ௨௧ தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios )
ઈશ્વરસ્ય પ્રેમ્ના સ્વાન્ રક્ષત, અનન્તજીવનાય ચાસ્માકં પ્રભો ર્યીશુખ્રીષ્ટસ્ય કૃપાં પ્રતીક્ષધ્વં| (aiōnios )
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,
અપરં યૂયં વિવિચ્ય કાંશ્ચિદ્ અનુકમ્પધ્વં
23 ௨௩ பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
કાંશ્ચિદ્ અગ્નિત ઉદ્ધૃત્ય ભયં પ્રદર્શ્ય રક્ષત, શારીરિકભાવેન કલઙ્કિતં વસ્ત્રમપિ ઋતીયધ્વં|
24 ௨௪ உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
અપરઞ્ચ યુષ્માન્ સ્ખલનાદ્ રક્ષિતુમ્ ઉલ્લાસેન સ્વીયતેજસઃ સાક્ષાત્ નિર્દ્દોષાન્ સ્થાપયિતુઞ્ચ સમર્થો
25 ௨௫ தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn )
યો ઽસ્માકમ્ અદ્વિતીયસ્ત્રાણકર્ત્તા સર્વ્વજ્ઞ ઈશ્વરસ્તસ્ય ગૌરવં મહિમા પરાક્રમઃ કર્તૃત્વઞ્ચેદાનીમ્ અનન્તકાલં યાવદ્ ભૂયાત્| આમેન્| (aiōn )