< யோவான் 7 >
1 ௧ இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார்.
І ходив Ісус після сього по Галилеї; не хотів бо по Юдеї ходити, що шукали Його Жиди вбити.
2 ௨ யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது.
Було ж близько Жидівське сьвято кучок.
3 ௩ அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும்.
Казали ж до Него брати Його: Зійди звідсїля, та й іди в Юдею, щоб і ученики Твої виділи діла Твої, що робиш.
4 ௪ பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
Ніхто бо тайно нїчого не робить, шукаючи сам знаним бути. Коли таке робиш, то покажи себе сьвітові.
5 ௫ அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள்.
Бо й брати Його не вірували в Него.
6 ௬ இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது.
Рече тодї їм Ісус: Пора моя ще не прийшла; ваша ж пора всякого часу готова.
7 ௭ உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது.
Не може сьвіт ненавидіти вас, мене ж ненавидить; бо я сьвідкую про него, що діла його лихі.
8 ௮ நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
Ви йдїть на се сьвято; я ще не пійду на те сьвято, бо пора моя ще не сповнилась.
9 ௯ இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார்.
Се сказавши їм, зіставсь у Галилеї.
10 ௧0 அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார்.
Як же пійшли брати Його, тодї й Він пійшов на сьвято, не явно, а якби потай.
11 ௧௧ பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள்.
Жиди ж шукали Його в сьвято, й казали: Де Він?
12 ௧௨ மக்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டானது. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படி இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
І було багато говірки про Него в народі: инші казали, що Він добрий; инші ж казали: Ні, а зводить народ.
13 ௧௩ ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை.
Та ніхто явно не говорив про Него задля страху перед Жидами.
14 ௧௪ பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார்.
Як же було в половинї сьвята, ввійшов Ісус у церкву, та й навчав.
15 ௧௫ அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
І дивувались Жиди, кажучи: Як Він писання знає, не вчившись?
16 ௧௬ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது.
Озвав ся до них Ісус і рече: Моя наука не єсть моя, а Пославшого мене.
17 ௧௭ அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
Коли хто хоче волю Його чинити, знати ме про науку, чи від Бога вона, чи я від себе глаголи.
18 ௧௮ சொந்தமாக பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மை உள்ளவனாக இருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
Хто від себе говорить, слави своєї шукає; хто ж шукає слави Пославшого Його, Той правдивий, і неправди нема в Йому.
19 ௧௯ மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
Хиба не Мойсей дав вам закон? а ніхто з вас не чинить закону. Чого шукаєте мене вбити?
20 ௨0 மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
Озвавсь народ і каже: Біса маєш; хто шукає вбити Тебе?
21 ௨௧ இயேசு அவர்களைப் பார்த்து: ஒரே செயலை செய்தேன், அதைக்குறித்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
Відказав Ісус і рече їм: Одно діло зробив я, і всі дивуєтесь.
22 ௨௨ விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், முன்னோர்களால் உண்டானது; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனிதனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
Мойсей дав вам обрізаннє (не, що від Мойсея воно, а від батьків); то й у суботу обрізуєте чоловіка.
23 ௨௩ மோசேயின் நியாயப்பிரமாணம் மீறாமல் இருக்கும்படி ஓய்வுநாளில் மனிதன் விருத்தசேதனம் பெறலாம் என்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
Коли обрізаннє приймає чоловік у суботу, щоб не був зламаний закон Мойсеїв, чого на мене ремствуєте, що всього чоловіка уздоровив у суботу?
24 ௨௪ தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார்.
Не судіть по виду, а праведний суд судїть.
25 ௨௫ அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
Казали тодї деякі з Єрусалимців: Чи не се Той, що шукають убити Його?
26 ௨௬ இதோ, இவன் வெளிப்படையாக பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, உண்மையாக இவன் கிறிஸ்து தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?
ось явно говорить, і нїчого Йому не кажуть. Чи справді не взнали князі, що Він справді Христос?
27 ௨௭ இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவன் என்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவர் என்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
Тільки ж ми Його знаємо, звідкіля Він; Христос же, як прийде, ніхто не знати ме, звідкіля Він.
28 ௨௮ அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கும்போது சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் அறிவீர்கள்; நான் நானாகவே வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியம் உள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
Покликне тодї в церкві Ісус, навчаючи й глаголючи: І мене знаєте, й знаєте, звідкіля я! а від себе не прийшов я, єсть же правдивий Пославший мене, котрого ви не знаєте.
29 ௨௯ நான் அவரால் வந்திருக்கிறதினாலும், அவர் என்னை அனுப்பி இருக்கிறதினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
Я ж знаю Його, бо я від Него; й Той мене післав.
30 ௩0 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய நேரம் இன்னும் வராததினால் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
Шукали тодї, щоб схопити Його, та ніхто не зняв на Него руки, бо ще не прийшла година Його.
31 ௩௧ மக்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைவிட அதிகமாகச் செய்வாரோ என்றார்கள்.
Многі ж з народу увірували в Него, й казали: Що, як прийде Христос, чи більші сих ознак робити ме, які Сей зробив?
32 ௩௨ மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள்.
Почули Фарисеї, що народ поговорював таке про Него, й післали Фарисеї та архиєреї слуги, щоб схопили Його.
33 ௩௩ அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்.
Рече їм тодї Ісус: Ще малий час я з вами, й пійду до Пославшого мене.
34 ௩௪ நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார்.
Шукати мете мене, та й не знайдете; й де я, ви не зможете прийти.
35 ௩௫ அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ?
Казали тодї Жиди між собою: Куди Він хоче йти, що ми не знайдемо Його? Чи не між розсипаних Геленян хоче йти та навчати Геленян?
36 ௩௬ நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Що се за слово, що каже: Шукати мете мене, та й не знайдете? і: Де я, ви не можете прийти?
37 ௩௭ பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும்.
В останній же великий день сьвята став Ісус, та й покликнув, глаголючи: Коли хто жаждує, нехай прийде до мене, та й пє.
38 ௩௮ வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
Хто вірує в мене, як рече писаннє, ріки води живої з черева його потечуть.
39 ௩௯ தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை.
Се ж глаголав про Духа, що мають прийняти віруючі в Него; ще бо не був (на них) Дух сьвятий, бо Ісус ще не прославив ся.
40 ௪0 மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
Многі ж з народу, почувши се слово, сказали: Се справді пророк,
41 ௪௧ வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
инші казали: Чи з Галилеї ж Христу приходити?
42 ௪௨ தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
Чи не глаголе ж писаннє, що з насіння Давидового й з Витлеєма села, де був Давид, Христос прийде?
43 ௪௩ இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது.
Тодї повстало роздїленнє в народі через Него.
44 ௪௪ அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
Деякі ж з них хотіли схопити Його; тільки ж ніхто не зняв на Него рук.
45 ௪௫ பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள்.
Прийшли тодї слуги до архиєреїв та Фарисеїв, і казали їм вони: Чом не привели Його?
46 ௪௬ காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள்.
Відказали слуги: Ніколи так не говорив чоловік, як Сей чоловік.
47 ௪௭ அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா?
Відказали тодї їм Фарисеї: Чи й вас не зведено?
48 ௪௮ அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
Хиба хто з князїв увірував у Него, або з Фарисеїв?
49 ௪௯ வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
А сей народ, що не знає закону, проклятий.
50 ௫0 இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து:
Каже Никодим до них, котрий приходив у ночі до Него, бувши один з них:
51 ௫௧ ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
Чи закон наш судить чоловіка, коли не вислухає його перше й не знає, що робить?
52 ௫௨ அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள்.
Озвались вони й казали йому: Чи й ти з Галилеї єси? Пошукай і подивись, що пророк з Галилеї не встає.
53 ௫௩ பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
пійшов кожен до дому свого.