< யோவான் 1 >
1 ௧ ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.
ආදෞ වාද ආසීත් ස ච වාද ඊශ්වරේණ සාර්ධමාසීත් ස වාදඃ ස්වයමීශ්වර ඒව|
2 ௨ அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார்.
ස ආදාවීශ්වරේණ සහාසීත්|
3 ௩ எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை.
තේන සර්ව්වං වස්තු සසෘජේ සර්ව්වේෂු සෘෂ්ටවස්තුෂු කිමපි වස්තු තේනාසෘෂ්ටං නාස්ති|
4 ௪ அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.
ස ජීවනස්යාකාරඃ, තච්ච ජීවනං මනුෂ්යාණාං ජ්යෝතිඃ
5 ௫ அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.
තජ්ජ්යෝතිරන්ධකාරේ ප්රචකාශේ කින්ත්වන්ධකාරස්තන්න ජග්රාහ|
6 ௬ தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
යෝහන් නාමක ඒකෝ මනුජ ඊශ්වරේණ ප්රේෂයාඤ්චක්රේ|
7 ௭ அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
තද්වාරා යථා සර්ව්වේ විශ්වසන්ති තදර්ථං ස තජ්ජ්යෝතිෂි ප්රමාණං දාතුං සාක්ෂිස්වරූපෝ භූත්වාගමත්,
8 ௮ அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான்.
ස ස්වයං තජ්ජ්යෝති ර්න කින්තු තජ්ජ්යෝතිෂි ප්රමාණං දාතුමාගමත්|
9 ௯ உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
ජගත්යාගත්ය යඃ සර්ව්වමනුජේභ්යෝ දීප්තිං දදාති තදේව සත්යජ්යෝතිඃ|
10 ௧0 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை.
ස යජ්ජගදසෘජත් තන්මද්ය ඒව ස ආසීත් කින්තු ජගතෝ ලෝකාස්තං නාජානන්|
11 ௧௧ அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
නිජාධිකාරං ස ආගච්ඡත් කින්තු ප්රජාස්තං නාගෘහ්ලන්|
12 ௧௨ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
තථාපි යේ යේ තමගෘහ්ලන් අර්ථාත් තස්ය නාම්නි ව්යශ්වසන් තේභ්ය ඊශ්වරස්ය පුත්රා භවිතුම් අධිකාරම් අදදාත්|
13 ௧௩ அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள்.
තේෂාං ජනිඃ ශෝණිතාන්න ශාරීරිකාභිලාෂාන්න මානවානාමිච්ඡාතෝ න කින්ත්වීශ්වරාදභවත්|
14 ௧௪ அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
ස වාදෝ මනුෂ්යරූපේණාවතීර්ය්ය සත්යතානුග්රහාභ්යාං පරිපූර්ණඃ සන් සාර්ධම් අස්මාභි ර්න්යවසත් තතඃ පිතුරද්විතීයපුත්රස්ය යෝග්යෝ යෝ මහිමා තං මහිමානං තස්යාපශ්යාම|
15 ௧௫ யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான்.
තතෝ යෝහනපි ප්රචාර්ය්ය සාක්ෂ්යමිදං දත්තවාන් යෝ මම පශ්චාද් ආගමිෂ්යති ස මත්තෝ ගුරුතරඃ; යතෝ මත්පූර්ව්වං ස විද්යමාන ආසීත්; යදර්ථම් අහං සාක්ෂ්යමිදම් අදාං ස ඒෂඃ|
16 ௧௬ அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
අපරඤ්ච තස්ය පූර්ණතායා වයං සර්ව්වේ ක්රමශඃ ක්රමශෝනුග්රහං ප්රාප්තාඃ|
17 ௧௭ ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது.
මූසාද්වාරා ව්යවස්ථා දත්තා කින්ත්වනුග්රහඃ සත්යත්වඤ්ච යීශුඛ්රීෂ්ටද්වාරා සමුපාතිෂ්ඨතාං|
18 ௧௮ தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
කෝපි මනුජ ඊශ්වරං කදාපි නාපශ්යත් කින්තු පිතුඃ ක්රෝඩස්ථෝ(අ)ද්විතීයඃ පුත්රස්තං ප්රකාශයත්|
19 ௧௯ எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
ත්වං කඃ? ඉති වාක්යං ප්රේෂ්ටුං යදා යිහූදීයලෝකා යාජකාන් ලේවිලෝකාංශ්ච යිරූශාලමෝ යෝහනඃ සමීපේ ප්රේෂයාමාසුඃ,
20 ௨0 அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.
තදා ස ස්වීකෘතවාන් නාපහ්නූතවාන් නාහම් අභිෂික්ත ඉත්යඞ්ගීකෘතවාන්|
21 ௨௧ அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான்.
තදා තේ(අ)පෘච්ඡන් තර්හි කෝ භවාන්? කිං ඒලියඃ? සෝවදත් න; තතස්තේ(අ)පෘච්ඡන් තර්හි භවාන් ස භවිෂ්යද්වාදී? සෝවදත් නාහං සඃ|
22 ௨௨ அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
තදා තේ(අ)පෘච්ඡන් තර්හි භවාන් කඃ? වයං ගත්වා ප්රේරකාන් ත්වයි කිං වක්ෂ්යාමඃ? ස්වස්මින් කිං වදසි?
23 ௨௩ அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.
තදා සෝවදත්| පරමේශස්ය පන්ථානං පරිෂ්කුරුත සර්ව්වතඃ| ඉතීදං ප්රාන්තරේ වාක්යං වදතඃ කස්යචිද්රවඃ| කථාමිමාං යස්මින් යිශයියෝ භවිෂ්යද්වාදී ලිඛිතවාන් සෝහම්|
24 ௨௪ அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.
යේ ප්රේෂිතාස්තේ ඵිරූශිලෝකාඃ|
25 ௨௫ அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
තදා තේ(අ)පෘච්ඡන් යදි නාභිෂික්තෝසි ඒලියෝසි න ස භවිෂ්යද්වාද්යපි නාසි ච, තර්හි ලෝකාන් මජ්ජයසි කුතඃ?
26 ௨௬ யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.
තතෝ යෝහන් ප්රත්යවෝචත්, තෝයේ(අ)හං මජ්ජයාමීති සත්යං කින්තු යං යූයං න ජානීථ තාදෘශ ඒකෝ ජනෝ යුෂ්මාකං මධ්ය උපතිෂ්ඨති|
27 ௨௭ அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.
ස මත්පශ්චාද් ආගතෝපි මත්පූර්ව්වං වර්ත්තමාන ආසීත් තස්ය පාදුකාබන්ධනං මෝචයිතුමපි නාහං යෝග්යෝස්මි|
28 ௨௮ இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது.
යර්ද්දනනද්යාඃ පාරස්ථබෛථබාරායාං යස්මින්ස්ථානේ යෝහනමජ්ජයත් තස්මින ස්ථානේ සර්ව්වමේතද් අඝටත|
29 ௨௯ மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
පරේ(අ)හනි යෝහන් ස්වනිකටමාගච්ඡන්තං යිශුං විලෝක්ය ප්රාවෝචත් ජගතඃ පාපමෝචකම් ඊශ්වරස්ය මේෂශාවකං පශ්යත|
30 ௩0 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்பே இருந்தபடியால் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
යෝ මම පශ්චාදාගමිෂ්යති ස මත්තෝ ගුරුතරඃ, යතෝ හේතෝර්මත්පූර්ව්වං සෝ(අ)වර්ත්තත යස්මින්නහං කථාමිමාං කථිතවාන් ස ඒවායං|
31 ௩௧ நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படுவதற்காகவே, நான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான்.
අපරං නාහමේනං ප්රත්යභිඥාතවාන් කින්තු ඉස්රායේල්ලෝකා ඒනං යථා පරිචින්වන්ති තදභිප්රායේණාහං ජලේ මජ්ජයිතුමාගච්ඡම්|
32 ௩௨ பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் இருக்கிறதைப் பார்த்தேன்.
පුනශ්ච යෝහනපරමේකං ප්රමාණං දත්වා කථිතවාන් විහායසඃ කපෝතවද් අවතරන්තමාත්මානම් අස්යෝපර්ය්යවතිෂ්ඨන්තං ච දෘෂ්ටවානහම්|
33 ௩௩ நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
නාහමේනං ප්රත්යභිඥාතවාන් ඉති සත්යං කින්තු යෝ ජලේ මජ්ජයිතුං මාං ප්රෛරයත් ස ඒවේමාං කථාමකථයත් යස්යෝපර්ය්යාත්මානම් අවතරන්තම් අවතිෂ්ඨන්තඤ්ච ද්රක්ෂයසි සඒව පවිත්රේ ආත්මනි මජ්ජයිෂ්යති|
34 ௩௪ அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான்.
අවස්තන්නිරීක්ෂ්යායම් ඊශ්වරස්ය තනය ඉති ප්රමාණං දදාමි|
35 ௩௫ மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது,
පරේ(අ)හනි යෝහන් ද්වාභ්යාං ශිෂ්යාභ්යාං සාර්ද්ධේං තිෂ්ඨන්
36 ௩௬ இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
යිශුං ගච්ඡන්තං විලෝක්ය ගදිතවාන්, ඊශ්වරස්ය මේෂශාවකං පශ්යතං|
37 ௩௭ அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள்.
ඉමාං කථාං ශ්රුත්වා ද්වෞ ශිෂ්යෞ යීශෝඃ පශ්චාද් ඊයතුඃ|
38 ௩௮ இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம்.
තතෝ යීශුඃ පරාවෘත්ය තෞ පශ්චාද් ආගච්ඡන්තෞ දෘෂ්ට්වා පෘෂ්ටවාන් යුවාං කිං ගවේශයථඃ? තාවපෘච්ඡතාං හේ රබ්බි අර්ථාත් හේ ගුරෝ භවාන් කුත්ර තිෂ්ඨති?
39 ௩௯ அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி.
තතඃ සෝවාදිත් ඒත්ය පශ්යතං| තතෝ දිවසස්ය තෘතීයප්රහරස්ය ගතත්වාත් තෞ තද්දිනං තස්ය සඞ්ගේ(අ)ස්ථාතාං|
40 ௪0 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
යෞ ද්වෞ යෝහනෝ වාක්යං ශ්රුත්වා යිශෝඃ පශ්චාද් ආගමතාං තයෝඃ ශිමෝන්පිතරස්ය භ්රාතා ආන්ද්රියඃ
41 ௪௧ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
ස ඉත්වා ප්රථමං නිජසෝදරං ශිමෝනං සාක්ෂාත්ප්රාප්ය කථිතවාන් වයං ඛ්රීෂ්ටම් අර්ථාත් අභිෂික්තපුරුෂං සාක්ෂාත්කෘතවන්තඃ|
42 ௪௨ பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.
පශ්චාත් ස තං යිශෝඃ සමීපම් ආනයත්| තදා යීශුස්තං දෘෂ්ට්වාවදත් ත්වං යූනසඃ පුත්රඃ ශිමෝන් කින්තු ත්වන්නාමධේයං කෛඵාඃ වා පිතරඃ අර්ථාත් ප්රස්තරෝ භවිෂ්යති|
43 ௪௩ மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார்.
පරේ(අ)හනි යීශෞ ගාලීලං ගන්තුං නිශ්චිතචේතසි සති ඵිලිපනාමානං ජනං සාක්ෂාත්ප්රාප්යාවෝචත් මම පශ්චාද් ආගච්ඡ|
44 ௪௪ பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன்.
බෛත්සෛදානාම්නි යස්මින් ග්රාමේ පිතරාන්ද්රියයෝර්වාස ආසීත් තස්මින් ග්රාමේ තස්ය ඵිලිපස්ය වසතිරාසීත්|
45 ௪௫ பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான்.
පශ්චාත් ඵිලිපෝ නිථනේලං සාක්ෂාත්ප්රාප්යාවදත් මූසා ව්යවස්ථා ග්රන්ථේ භවිෂ්යද්වාදිනාං ග්රන්ථේෂු ච යස්යාඛ්යානං ලිඛිතමාස්තේ තං යූෂඵඃ පුත්රං නාසරතීයං යීශුං සාක්ෂාද් අකාර්ෂ්ම වයං|
46 ௪௬ அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
තදා නිථනේල් කථිතවාන් නාසරන්නගරාත කිං කශ්චිදුත්තම උත්පන්තුං ශක්නෝති? තතඃ ඵිලිපෝ (අ)වෝචත් ඒත්ය පශ්ය|
47 ௪௭ இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார்.
අපරඤ්ච යීශුඃ ස්වස්ය සමීපං තම් ආගච්ඡන්තං දෘෂ්ට්වා ව්යාහෘතවාන්, පශ්යායං නිෂ්කපටඃ සත්ය ඉස්රායේල්ලෝකඃ|
48 ௪௮ அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார்.
තතඃ සෝවදද්, භවාන් මාං කථං ප්රත්යභිජානාති? යීශුරවාදීත් ඵිලිපස්ය ආහ්වානාත් පූර්ව්වං යදා ත්වමුඩුම්බරස්ය තරෝර්මූලේ(අ)ස්ථාස්තදා ත්වාමදර්ශම්|
49 ௪௯ அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
නිථනේල් අචකථත්, හේ ගුරෝ භවාන් නිතාන්තම් ඊශ්වරස්ය පුත්රෝසි, භවාන් ඉස්රායේල්වංශස්ය රාජා|
50 ௫0 இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார்.
තතෝ යීශු ර්ව්යාහරත්, ත්වාමුඩුම්බරස්ය පාදපස්ය මූලේ දෘෂ්ටවානාහං මමෛතස්මාද්වාක්යාත් කිං ත්වං ව්යශ්වසීඃ? ඒතස්මාදප්යාශ්චර්ය්යාණි කාර්ය්යාණි ද්රක්ෂ්යසි|
51 ௫௧ பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
අන්යච්චාවාදීද් යුෂ්මානහං යථාර්ථං වදාමි, ඉතඃ පරං මෝචිතේ මේඝද්වාරේ තස්මාන්මනුජසූනුනා ඊශ්වරස්ය දූතගණම් අවරෝහන්තමාරෝහන්තඤ්ච ද්රක්ෂ්යථ|